வாசகர் தகவல்கள்தெய்வப் பிரசாதங்கள்! திருக்கதைகள், விருட்சங்கள், தீர்த்தங்கள் மட்டுமின்றி சில திருத்தலங்களின் தெய்வப் பிரசாதங்களுக்கும் தனிச்சிறப்பு உண்டு. ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் அக்கார அடிசில் பிரசாதம்! மதுரை கள்ளழகர் கோயிலில், ஸ்வாமிக்கு தோசை நைவேத்தியம் செய்வார்கள். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டத்தில் உள்ள திருத்தலம் ஸ்ரீமுஷ்ணம். ஸ்யம்வக்த திருத்தலங்களில் ஒன்றான இங்கு, ஸ்ரீபூவராக மூர்த்தியாக அருள்கிறார் பகவான். வராக அவதாரத்தினராக அருளும் இந்த ஸ்வாமிக்கு கோரைக்கிழங்கு பிரசாதம் சமர்ப்பிக்கிறார்கள். அருள்மிகு உப்பிலியப்பன் கோயிலில் ஸ்வாமிக்கு உப்பில்லாத பதார்த்தங்களே நைவேத்தியம் ஆகின்றன! நாகை மாவட்டம்- ஸ்ரீவைத்தீஸ்வரன் கோயிலில் அருளும் ஸ்ரீமுத்துக்குமார ஸ்வாமிக்கு தினைமாவு, அப்பம், லட்டு ஆகியவற்றைச் சமர்ப்பிக்கிறார்கள். திருவாருர் அருள்மிகு தியாகராஜ ஸ்வாமிக்கு புளியோதரை, பொங்கல், தேன்குழல் பிரசாதம்! - ந.க.பரமசிவம், சென்னை-7 அரச மரமும் அற்புதத் தீர்த்தமும்! ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள திருத் தலம் திருப்புல்லாணி. இங்கு, அருள்மிகு ஆதிஜெகநாதப் பெருமாள் திருக்கோயிலில், இரண்டாம் பிராகாரத்தில், தாயார் சந்நிதிக்கு அருகில் ஓர் அரச. . .
COMMENT(S):