பக்தி கதை சொல்லும் வெள்ளை கோபுரம்! வருடம் 365 நாட்களும் ஏதேனும் ஒரு விழா, ஒரு உத்ஸவம், என எப்போதும் களை கட்டியிருக்கும் திருத்தலம் எது என்று தெரியுமா? தமிழகத்தில் உள்ள பிரமாண்டமான ஆலயத்துக்கு, தினந்தோறும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்கிற திருவிடம் தெரியுமா உங்களுக்கு? இந்தப் பக்கம் அகண்ட காவிரி, அந்தப் பக்கம் அகண்ட கொள்ளிடம் என இரண்டு ஆறுகளுக்கு நடுவே அமைந்துள்ள அற்புதத் திருத்தலமான ஸ்ரீரங்கம்தான் அது. கோயில், மதில், பிராகாரம் அவ்வளவு ஏன்... கருவறையில் காட்சி தரும் அரங்கனின் திருமேனி என அத்தனையும் பிரமாண்டம்தான் இங்கே! கோயிலின் கோபுரத்தைப் பார்த்தால், அதன் அழகிலும் கலைநுட்பத்திலும் வியந்து நிற்போம். சுமார் 216 அடி உயரத்தில் நெடிதுயர்ந்து நிற்கிற கோபுரம், ஒன்பது நிலைகளைக் கொண்ட அடுக்குகளுடன் அழகு மிளிரக் காட்சி தருகிறது. சுமார் 1310- ஆம் வருடத்தில், அரங்கன் திருவீதியுலா. . .
COMMENT(S):