வளம் பெருகும் திருநாள்! அட்சய (அக்ஷய) என்றால் எடுக்க எடுக்கக் குறையாதது என்று பொருள். சித்திரை மாதம் அமாவாசை கழிந்து 3-ஆம் நாள் வருவது அட்சய திருதியை. இந்தத் திருநாளில் துவங்கப்படும் சுப காரியங்களும், முதலீடுகளும் நல்லதொரு விளை வைக் காணும் என்பது நம்பிக்கை. நாலு யுகங்களில் முதல் யுகமான சத்ய யுகத்தின் முதல் நாள் அட்சய திருதியை என்கின்றன ஞான நூல்கள். புராண முனிவராம் வேத வியாசர், விநாயகரின் துணையுடன் மகாபாரதம் எழுதத் துவங்கியதும் இந்தத் திருநாளில்தான். பகீரதன் பிரயத்தனத்தால் கங்கை பூமிக்கு வந்ததும் அக்ஷய திருதியை அன்றுதான். அரக்கர்களாகிய சும்ப- நிசும்பனை அம்பாள் வதம் செய்ததும் அட்சய திருதியை தினத்தில்தான். ஸ்ரீபரசுராம அவதாரம் நிகழ்ந்தது அட்சய திருதியை அன்றே. தன்னுடைய நண்பன் குசேலனுக்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா குபேர சம்பத்து அருளியதும் அட்சய திருதியையில்தான். அடுத்த பிறவியில் குசேலன் குஷாவந்தி தேசத்தின் மன்னரானார். ஜைன மதத்தைச் சேர்ந்த முதல் தீர்த்தங்கர். . .
COMMENT(S):