மரகதவல்லியின் மணக்கோலம்! திருமணப்பேறு வாய்க்கவும், மாங்கல்ய பலம் வேண்டியும், குழந்தைப் பேறுக்காகவும் கயல்விழியாள் மதுரை ஸ்ரீமீனாட்சியம்மையின் கருணை கடாட்சத்தைப் பிரார்த்திக்கும் பக்தர்கள், ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் புண்ணிய காலம்- சித்திரை. ஆமாம்... ஸ்ரீமீனாட்சி திருக் கல்யாணம் நிகழும் அற்புத மாதம் இது! மதுரை சித்திரைப் பெருவிழாவில் கலந்து கொண்டு அம்மையப்பனின் கல்யாணக் கோலத்தை கண்ணாரத் தரிசிக்க, மேற்சொன்ன வரங்கள் யாவும் தடையின்றி கிடைக்கும் என்பது பக்தர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை. சூழலின் காரணமாக மதுரைக்கு அன்று வர இயலாதவர்களும், அன்னையின் திருக் கல்யாணக் கதையைக் கேட்டு மகிழ்வர். இதனால், திருக்கல்யாணத்தை நேரில் தரிசித்த புண்ணியத்தைப் பெறலாம் என்பது பெரியோர் வாக்கு! மலையத்துவஜ பாண்டியனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. பெரியோர் ஆலோசனைப்படி எண்ணற்ற யாகம் நிகழ்த்தினான்; தவம் செய்தான்; சாட்சாத் பராசக்தியே தனக்கு மகளாகப் பிறக்கும் வரம் வேண்டினான். வேண்டு தல் பலித்தது. புத்திரகாமேஷ்டி யாகத்தின் பலனாக, ஆதிசக்தியே பெண் குழந்தையாய் அவதரித்தாள். மன்னன். . .
COMMENT(S):