‘பூஜை முடிஞ்சுது... வேலையும் கிடைச்சுது!’ சக்தி விகடன் மற்றும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனம் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, வேலூர் மாவட்டம், பொன்னை-ஓட்டனேரி ஸ்ரீநவசித்தி சுயம்பு விநாயகர் கோயிலில் நடைபெற்றது. சக்தி விகடனின் 85-வது திருவிளக்கு பூஜை இது! சென்னை, திருவள்ளூர், திருத்தணி எனப் பல ஊர்களில் இருந்தும் எண்ணற்ற வாசகிகள் கலந்துகொண்டனர். ''சக்தி விகடன் நடத்தற விளக்கு பூஜைல கலந்துக்கறது இதுதான் முதல் முறை. சமீப காலமா மனசுல ஏதோவொரு சோகம் அழுத்திக்கிட்டே இருந்துச்சு. பூஜையில கலந்துக் கிட்டதுல, அந்த சோகம் மொத்தமும் காணாமப் போயிருச்சு'' என்றார் வேலூர் பங்களாதெரு வாசகி சித்ரா. ''படிப்பு முடிச்சு ரெண்டு வருஷமாச்சு. ஆனா நல்லதா ஒரு வேலை கிடைக்கலை. இந்த ஏழ்மையிலேருந்து எப்ப விடுதலை கிடைக்கும்னு நினைச்சு வேண்டாத நாள் இல்லை. சக்தி விகடன் நடத்தற பூஜைன்னதும் கலந்துக்கிட்டேன். பூஜை முடிஞ்சதும் வீட்லேருந்து அம்மா போன் பண்ணி, 'உனக்கு அக்கவுன்ட்ஸ் டிபார்ட்மென்ட்ல. . .
COMMENT(S):