முதல் வணக்கம் முதல்வனுக்கே! முத்தமிழ் தெய்வ புலமையிற் சான்ற முதிய ஒளவை சித்த மகிழ்ந்து விரைந்து செய் பூசைத் திறங்கருதா மத்த மிலைந்த மகேசன் கயிலைக்கண் மா இவர்ந்தே உத்தமச் சேரன் வருமுனர்ச் சேர்த்தருள் ஒண்களிறே - விநாயகர் அலங்காரம் ஒளவை- சிறுவயது முதல் விநாயகரை இடைவிடாது தொழுது வந்தவர். இளமையிலேயே தெய்வீக ஞானம் பெற்றவர். சுகபோகங்களையும், இல்லற வாழ்வையும் கடந்து, முதுமையையும் துறவையும் விநாயகரிடம் வேண்டிப் பெற்றவர். உடம்பினைப் பக்குவம் செய்யவே முதுமையைக் கேட்டுப் பெற்றவர். 'என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து’ என்பதற்கு ஏற்ப, குருவாக வந்த விநாயகரே அவரை வழிநடத்திச் சென்றார். நாள்தோறும், நறுமணம் கொண்ட மலர்களால் கணபதிக்கு அர்ச்சனை புரிவார் ஒளவையார். செந்தமிழ்ப் பாடல்களால் பிள்ளையாரைத் துதி செய்வார். இவ்வாறு அவர் பூஜித்து வரும் நாளில், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அவருடைய நண்பர் சேரமான்பெருமாள் நாயனாரும் கயிலை மலைக்குச் செல்ல விரும்புவதாக ஒரு செய்தி வந்து சேர்ந்தது.. . .
COMMENT(S): 2
ஆஹா சூப்பர்