கல்விச் செல்வம் தருவார் கல்லுக்குழி ஆஞ்சநேயர்! ரயில்வே பணிகளுக்காக, சிறிய கோயி லாக இருந்த இடத்தில் இருந்து வேறொரு இடத்துக்கு மாற்றப்பட்டார் ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர். ஆனால் அடுத்தடுத்த வேலைகள் தடைபட்டன. என்ன ஏது என்று புரியாமல் குழம்பினார்கள் ஆங்கிலேயர்கள். பிறகு 'பழைய இடத்தில் குடியமரவே விருப்பம்’ என்று அசரீரி கேட்டதை அடுத்து, மறுவருடமே பழையபடி கோயில் கொண்டு அருள்பாலிக்கத் துவங்கினார் ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர் என்கிறது கோயிலின் ஸ்தல வரலாறு. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்குப் பின்புறம் உள்ளது கல்லுக்குழி. ரயில்வே குடியிருப்புகள் கொண்ட இந்தப் பகுதியில் இருந்தபடி, இன்றைக்கும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர். மிகுந்த வரப்பிரசாதி இவர். அதேபோல், அழகும் கருணையும் ததும்பும் இவரின் திருமுகத்தை ஒருமுறை தரிசித்து விட்டால், பிறகு நாமே அடிக்கடி வந்து தரிசிப்போம் எனச் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர். ஆரம்பத்தில் மிகச் சிறிய கோயிலாக இருந்தது. பிறகு இவரைத் தரிசித்துப். . .
COMMENT(S): 1
ஓம் நமோ ஆஞ்ஞனேயா....