• சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி
  • பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம்
  • இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி
  • கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல்
  • வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை
  • ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல்
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
26 May, 2013
தீர்த்தவாரியில் தரிசித்தால் பாவமெல்லாம் கரைந்துவிடும்!
தீர்த்தவாரியில் தரிசித்தால் பாவமெல்லாம் கரைந்துவிடும்! நாகை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது பொறையார். இங்கே சுமார் 650 வருடம் பழைமை வாய்ந்த அற்புதமான ஸ்ரீகோதண்டராமர் ஆலயம் உள்ளது. ஸ்ரீசீதாதேவி, ஸ்ரீலட்சுமணர், ஸ்ரீஆஞ்சநேயர் சமேதராக திருக்காட்சி தரும் மூலவர் ஸ்ரீகோதண்டராமரைப் பார்த்தாலே, நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும். ஆலயத்தில், சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீரங்க நாதரும் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஸ்ரீவரதராஜ பெருமாளும் தனிச் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீபஞ்ச முக ஆஞ்சநேயர், ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் (இங்கு இரண்டு அனுமன் சந்நிதிகள் உள்ளன), ஸ்ரீராமானுஜர், ஸ்ரீமணவாள மாமுனிகள், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரும் இங்கே திருக்காட்சி தருகின்றனர். திருக்கார்த்திகையில் விஷ்ணு தீபம், சித்திரை மாத பௌர்ணமி, புரட்டாசி மாதம், ஸ்ரீராம நவமி ஆகிய நாட்களில் இங்கே சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சிறப்புற நடைபெறும். மாசி மக நன்னாளில், இங்கு நடைபெறும் தீர்த்தவாரி திருவிழா வெகு பிரபலம். அந்த நாளில், பொறையார்,. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 3

மூர்த்தி அவர்கள் கருத்து மிகமிக சரி. அவ்வப்போது நடக்கும் புனித நீராட்டுக்கள், தரிசனங்கள் மற்றும் பல அவ்வப்போது செய்யும் பாவங்களை கரைத்து அடுத்த பாவச்செயல்களுக்கு இடம்போட்டு கொடுக்குமா என்ன! வரி மற்றும் நிலுவை செலுத்தாதோருக்கு அரசு கொடுக்கும் சமரச, சலுகை திட்டங்கள் மாதிரியா என்ன!! நன்மையுண்டு. செயலுக்கான பலன்களை நாம் அனுபவித்தே தீரவேண்டும். இது ஆண்டவனுக்கும் பொருந்தும். சிவனார் கங்காளநாதராக திருவோட்டுடன் அலையவில்லையா!!! நன்மைகள் உன்டு. ஒன்று நமக்கு. மற்றொன்று நாட்டுக்கு. துன்பப் படும்போது நமக்கு அதை தாங்கும் சக்தியை இறை நம்பிக்கையைத் தவிர வேறு எதுவும் கொடுக்காது. இதுவே நம் வாழ்வை நகர்த்திச் செல்லும். அடுத்து பொருளாதார நன்மை. இது போன்ற விழாக்காலங்களினால் பலரது பைகள் நிரம்பி பொருளாதார சுழற்சியை மேம்படுத்தும்.

மூர்த்தி அவர்கள் சொன்னது மிகமிகச் சரி. அவ்வப்போது செய்யும் பாவங்கள் அவ்வப்போது நிகழும் தீர்த்தவாரிகளாலும், தரிசனங்களாலும் கரைந்து போய் அடுத்த

தீர்த்தவாரியில் தரிசித்தால் பாவமெல்லாம் கரையும்... கங்கையில் குளித்தால் பாவமெல்லாம் போகும்... போன்ற கப்ஸாக்கள் இனி வேண்டாம்... புறத்தில் உள்ள அழுக்கு வேண்டுமானால் போகலாம்... பாவங்கள் செய்யக் காரணமாக இருந்த அக அழுக்குகளை நீக்கினால் மேற்கொண்டு பாவங்கள் செய்யாமல் இருக்க உதவும்... செய்த பாவங்களுக்கு பலனை அனுபவித்தே ஆகவேண்டும். இது போன்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று இறைவனை நினைப்பது, அப்பலன்களை எதிர்கொள்ளும் மனதிடத்தையும், அனுபவிக்கும்போது, ஆத்திரப்பட்டு, அறிவிழந்து மெலும் பாவங்களை செய்யாமல் பாதுகாக்கும்...

Displaying 1 - 3 of 3
Only Subscriber Can Post Comments

சக்தி விகடன்
< 06 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook