கேரளாவில்... மதுரை மீனாட்சி! கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது பல்லசேனா கிராமம். (கோயம்புத்தூரில் இருந்து சுமார் 78 கி.மீ. தொலைவு). இங்கேயுள்ள மீன் குளத்தி பகவதி அம்மன் மிகவும் பிரசித்தி பெற்ற தேவியாகத் திகழ்கிறாள். இந்தக் கோயிலை, ஸ்ரீபழைய காவில் பகவதி கோயில் என்றும் அழைக்கின்றனர் பக்தர்கள். கோயிலும், கோயிலையட்டி உள்ள பெரிய தீர்த்தக் குளமும் கொள்ளை அழகு! மீன் குளத்தி பகவதி வேறு யாருமில்லை... சாட்சாத் மதுரை மீனாட்சியேதானாம்! முன்னொரு காலத்தில் சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளில் வசித்த மூன்று வீர சைவ மன்னாடியார் (தமிழ்நாட்டில் மன்றாடியார்) இனத்துக் குடும்பங்கள் கடும் பஞ்சத்தில் இருந்து தப்ப, பசுமையான இடம் தேடிக் கிளம்பின. அவர்கள் செய்து வந்த வைர வியாபாரத்துக்கும் பஞ்சப் பிரதேசத்தில் வழியில்லாமலிருந்தது. அவர்கள் கேரளாவைச் சேர்ந்த பாலக்காடு மாவட்டத்தின் கிழக்குப் பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள். அங்குள்ள செழிப்பால், அவர்களது வணிகமும் செழித்தது.. . .
COMMENT(S): 1
I visited this temple in February'12. It is beautiful place with divinity.The Kulam is also full of water and beautiful colorful fishes..