தேவகுருவை பணிந்திட குரு பலம் கூடும்! நாகை மாவட்டம் கீவளூர் வட்டம் தேவூரில் குடிகொண்டிருக்கிறார் ஸ்ரீதேன்மொழி அம்பாள் சமேத ஸ்ரீதேவபுரீஸ்வரர். நாகப்பட்டினம் - திருவாரூர் இடையே உள்ளது கீவளூர். இந்த ஊரிலிருந்து, சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் திருக்கோயில். தேவர்கள் இந்தத் தலத்தில் தங்கி, தவமிருந்து சிவனாரை வழிபட்ட திருத்தலம் ஆதலால், ஸ்வாமிக்கு ஸ்ரீதேவபுரீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது. கதலீவனம், விராடபுரம், அரசங்காடு, தேவனூர் எனப் பல பெயர்கள் உண்டு இந்தத் தலத்துக்கு. தற்போது தேவூர் எனப்படுகிறது. அம்பாளின் திருநாமம் - ஸ்ரீமதுரபாஷினி. தூய தமிழில், ஸ்ரீதேன்மொழி அம்பாள். இங்கேயுள்ள ஸ்ரீவலம்புரி விநாயகர், அழகிய மூர்த்தமாகக் காட்சி தருகிறார். காவிரியின் தென்கரைத் திருத்தலங்களில், 85-வது தலம் இது! அறுபத்துமூவர், திருநந்தி தேவர், ஸ்ரீவிஷ்ணு துர்கை, ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீசூரியனார், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீஆத்மநாதர் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். இந்தத் தலத்தில், ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு நடுவே ஸ்ரீசுப்ரமணியரின் திருச்சந்நிதி. . .
COMMENT(S):