சூரிய பலமும் குரு பலமும்! அதிகார வரம்புகளை மீறியதில் நவக்கிரகங்களுக்கும் இடம் உண்டு. இஷ்டத்துக்கு வரங்களைக் கொடுத்ததால், அதுவே சாபமாகிப் போக... இறுதியில், நவக்கிரகங்களும் சிவ வழிபாட்டில் ஈடுபட்டு, நாடி வருவோருக்கு நன்மைகள் செய்யும் வரத்தைப் பெற்றன என்பது சூரியனார் கோயிலின் ஸ்தல புராணத் தகவல்! சிவாலயங்களில், நவக்கிரக சந்நிதிகள் இருப்பதை அறிவோம். ஆனால் இங்கே, தம்மைத் தரிசிக்க வருகிற பக்தர்களுக்கு தனித்தனிச் சந்நிதிகளில் காட்சி தருகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு! தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை. இங்கிருந்து சுமார் 5 கி.மீ. பயணித்தால் சூரியனார்கோவிலை அடையலாம். ஸ்ரீஉஷாதேவி ஸ்ரீசாயாதேவியுடன் சிவசூரியபெருமான் காட்சி தந்தருளும் ஒப்பற்ற திருத்தலம் இது! சூரியன் முதலான நவக்கிரகங்கள், தங்களின் வாகனங்களுடன் ஆயுதம் ஏதுமின்றி, சாந்தமான திருமுகத்துடன் அனுக்கிரக மூர்த்திகளாக இங்கே அருள்பாலிக்கின்றனர். குரு பார்க்க கோடி புண்ணியம் என்பார்கள். இங்கே சூரியனை நோக்கியபடி, குரு பகவான் தனிச்சந்நிதியில். . .
COMMENT(S):