நினைத்ததை நிறைவேற்றும் ‘பஞ்ச நரசிம்ம’ திருத்தலங்கள்! நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகில், பஞ்ச நரசிம்மர்களும் அருள்பாலிக்கும் க்ஷேத்திரங்கள் உள்ளன. அடுத்தடுத்த ஊர்களில் உள்ள இந்த ஆலயங்களை ஒரே நாளில் தரிசிக்கலாம். ஸ்ரீஉக்கிர நரசிம்மர், ஸ்ரீவீர நரசிம்மர், ஸ்ரீஹிரண்ய நரசிம்மர், ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் என திருக்காட்சி தந்தருளும் பஞ்ச நரசிம்மர்களையும் தரிசிப்போமா? திருக்குறையலூர் ஸ்ரீஉக்கிரநரசிம்மர் சீர்காழியில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலும் திருவெண்காட்டில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது திருக்குறையலூர். குறைகளை அகற்றும் ஊர் என்பதே மருவி, திருக்குறையலூர் என்றானது. பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரத்தின் முதல் திருத்தலம் இது. இந்தத் தலத்தின் மூலவர் - ஸ்ரீஉக்கிர நரசிம்மர். ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தரும் இந்தத் தலத்தின் தாயார் - ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார். திருமங்கை ஆழ்வாரின் அவதாரத் தலம் எனப் பெருமை கொண்ட இந்தத் திருத்தலத்தில், அவருக்கும் குலசேகராழ்வாருக்கும் சந்நிதிகள் உள்ளன. இங்கே... அமாவாசை, சுவாதி. . .
COMMENT(S): 8
Nice article. Thanks for sharing
narasimha just looking at ur temples u have given me mental strength and devotion. bless me to visit u also. thank u vikatan for this edition
பக்கத்திலிருந்தும் பார்க்காத பாவிக்கு வழிகாட்டிய விகடனுக்கு நன்றி பல....
Thanks a lot
தமிழகத்தில் எங்கோ சிறு கிராமங்களில் அருள்பாலித்துக்கோண்டிருக்கும் நரசிம்மரை எங்களிக்குக் காட்டிக்கொடுத்த சக்தி விகடனுக்கு நன்றி !
Can anybody furnish the 5 temples of Narasimha in google maps please.
Very informative. Thank you
நன்றிகள் பல!