ரம்பை - ஊர்வசி வழிபட்ட தலம் மஞ்சள் நகரம் எனப் புகழப்படும் ஈரோடு மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோயில். அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த ஆலயத்துக்கு வந்து ஒருமுறை வணங்கினால் போதும்... நம் வாழ்க்கையையே ஒளிமயமாக மாற்றிவிடுவார், சிவனார் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். ஆருத்ரம் என்றால் ஈரம் என்றும், கபாலம் என்றால் ஓடு என்றும், அதுவே பின்னாளில் ஈரோடு என்று இந்தத் தலத்தின் பெயராக அமைந்தது எனச் சொல்கிறது ஸ்தல புராணம். தேவலோக நங்கையரான ரம்பையும் ஊர்வசியும் ஒருமுறை நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த தேவகுரு பிரகஸ்பதியைக் கண்டுகொள்ளாமல் அவர்கள்பாட்டுக்கு ஆடிக்கொண்டிருந்தார்கள். இதைக் கண்டு கோபாவேசமானார் பிரகஸ்பதி. ரம்பை மற்றும் ஊர்வசி ஆகிய இருவரும் பூமியில் பிறக்கக்கடவது என்று சபித்தார். இதைக் கேட்டு இருவரும் துடித்தார்கள். 'குருவை நிந்தித்தது தவறு’ என்பதை உணர்ந்து, தேவகுருவிடம் மன்னிப்புக் கேட்டார்கள். ''பூலோகத்தில் பூந்துறை எனும் தலத்தில் பிறந்து, சிவ-. . .
COMMENT(S):