|  | | மனிதனின் இறைவழிபாட்டில், மலைகளுக்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு. அதிலும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சைப் போர்வையைப் போத்திக்கொண்டு, பார்ப்பவர்களுக்குள் பரவசத்தை ஏற்படுத்தும் கொல்லிமலையை ‘சித்தர்களின் சொர்க்க பூமி!’ என்றால், அது மிகையல்ல.
உலக வாழ்க்கையை, ஏழு வகையான கோட்பாடுகளின் அடிப்படையில் வாழ்ந்து, மனித வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் தன் நிலையை மறவாது, அறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, மண்ணுலக உயிர்களுக்கு உதவிகள் பல புரிபவர்கள்தான் சித்தர்கள்.
கொல்லிமலையை இறுக தழுவியபடி காட்சி அளிக்கும் வனத்தில் வாழ்ந்த அகத்திய சித்தர், பாம்பாட்டிச் சித்தர், கடுவெளி சித்தர்... போன்ற பல்வேறு சித்தர்களின் வரலாறு, அவர்களின் ரசவாத சிறப்புகள், அற்புத நிகழ்வுகள், மக்கள், இயற்கை சக்திகளின் வழியில் வாழ்வதற்கான நெறிமுறைகள்... என சித்தர்களின் பல்வேறு சிறப்புகளும் இந்த நூலில் காட்சிகளாக விரிகின்றன. மேலும், கொல்லிமலைக்குச் செல்வோர் அங்கு காண வேண்டிய இடங்கள், கோயில்கள், படகுத் துறை, அதற்கான பயணக் குறிப்புகள், மலைவாழ் மக்களின் பழக்கவழக்கங்கள்... என கொல்லிமலையின் அற்புத அமைப்பையும் எளிமையான நடையில் தொகுத்துள்ளார் நூலாசிரியர் ராஜாதிருவேங்கடம்.
அற்பத்தனமான செயல்களுக்காக ஆத்ம அமைதியை விற்றுவிட்டு, அனுதினமும் ஆண்டவனை தேடுகிறது இன்றைய உலகம். ஆம்! புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொண்டு பொக்கிஷ வாழ்க்கையைத் தொலைத்தபடி நிற்கும் மக்களை, தெளிவான பாதையில் அழைத்துச் செல்கிறது இந்த நூல்.
சித்தர்கள், ஆராய்ச்சி அடிப்படையில் அனுபவபூர்வமாக உணர்ந்த விஷயங்களையே மருத்துவக் குறிப்புகளாக கொடுத்திருப்பது, இந்த நூலுக்கே உரிய தனிச்சிறப்பு. |
|
|  | | நம் பாரம்பரியத்தில் பெண்களுக்குத் தனி மரியாதை கொடுக்கிறோம். அதற்குக் காரணம், ஒரு குடும்பத்தின் அருமை, பெருமை, இன்பம், உற்சாகம் எதுவாக இருந்தாலும் அதில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. எனவேதான், பெண்களுக்குத் தனி அந்தஸ்தைக் கொடுக்கிறோம்; முன்னுரிமை அளிக்கிறோம். பெண்களை, சக்தியின் சொரூபமாகவே பார்க்கிறோம். வழிபாட்டிலும் அதைக் கடைப்பிடிக்கிறோம்.
சக்திக்கு நம் தேசம் முழுவதும் எண்ணற்ற தலங்கள் அமைந்துள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை தேவி, காளி, துர்கா, கௌமாரி, முத்துமாரி என பல்வேறு பெயர்களில், பல ஊர்களில் அம்மனுக்கு ஆலயங்கள் உள்ளன. திருமண வரம் வேண்டும், குழந்தை வரம் வேண்டும், தீராத நோய் தீர வேண்டும், எண்ணிய செயல் ஈடேற வேண்டும்... என்று பல கவலைகளோடு வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அம்மன் ஆலயங்கள் ஏராளம். அவற்றில், மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட, மிகவும் பழமை வாய்ந்த, சிறப்பு வாய்ந்த கோயில்கள் பல பிரசித்தமானவை.
அப்படிப்பட்ட ஆலயங்களில் வீற்றிருக்கும் தேவியரின் சிறப்புகளையும், தலபுராணம், ஆலயத்தின் அமைப்பு, ஆலயம் இருக்கும் இடம், நேர்த்திக்கடன் செய்வது... போன்ற தெளிவான தகவல்களோடு, சக்தி விகடனில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.
பூச்சொரிதல், காப்புக்கட்டுதல், தேரோட்டம், தீர்த்தவாரித் திருவிழா போன்ற வைபவங்கள் குறித்த தகவல்களும் விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நூல் படிப்பதற்கு மட்டுமல்ல, நேரில் சென்று தரிசிக்கவும் வழிகாட்டக்கூடிய அற்புதமான நூல். |
|
|  | | பக்தியின் மூலம் முக்தியடைய விரும்பும் அனைத்து அன்பர்களுக்கும், இன்முகம் காட்டி நிறைவான அன்பு செலுத்தி, அவர்களை வழிநடத்திச் சென்ற மகான் ரமண பகவான்.
பரம்பொருளின் சொரூபமாக விளங்கும் ‘திருச்சுழி வேங்கடராமன்’ என்று அழைக்கப்படும் ஸ்ரீ ரமண மகரிஷி, ‘நான் யார் என்ற கேள்வியை நமக்குள் கேட்க வேண்டும். இந்தக் கேள்வியே தேவையற்ற எண்ணங்களை எழவிடாமல், மனதை அடக்கும். அதுவே ஆத்ம தரிசனம்’ என்கிறார்.
சைவ நெறிகளைப் பறைசாற்றும் தலைசிறந்த கோயில்களின் சிறப்புகளை எடுத்துக்கூறி, அதனோடு ஸ்ரீ ரமணர் கொண்டுள்ள பிணைப்புகளையும், அங்கு அவருக்குக் கிடைத்த ஆன்மிக அனுபவங்களையும் அழகு தமிழில், எளிய நடையில் தொகுத்து எழுதியிருக்கிறார் நூலாசிரியர் பி.ஆர்.குமார்.
பகவான் ரமணரின் ஆன்மிகப் பின்னணி
தெரிந்த பெரும்பாலோருக்கு, அவருடைய அற்புத நிகழ்வுகளின் பின்னணி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதுபோன்ற நிகழ்வுகளின் சாராம்சத்தை விளக்கியிருப்பதோடு சொல் எனும் செங்கல்லினால், பக்தி எனும் பரவசத்தை கலந்து அமைதியின் உருவமாகத் திகழும் ரமணருக்கு, ஒரு நூற்கோயிலைக் கட்டியிருக்கிறார் நூலாசிரியர்.
பகவான் ரமணர் அங்கிங்கில்லாதபடி எங்கும் நிறைந் |
|
|  | | புத்தகத் தலைப்பு: தினம் தினம் திருநாளே (பாகம் 2) | | எழுத்தாளர் பெயர்: மஹாரண்யம் ஸ்ரீ`ஸ்ரீ`முரளீதர`ஸ்வாமிஜி | | விலை: Rs. 190 | மேலதிக தகவலுக்கு.. Add to Cart |
| வாழ்க்கையை இனிதே வாழ வேண்டும்; ஒவ்வொரு நாளையும் கொண்டாட வேண்டும்; வாழ்வில் வரும் சிக்கல்களை நீக்க வேண்டும்; சிறுமைகளைச் சீராக்கிட வேண்டும்... இதற்கு என்ன செய்ய வேண்டும்?
இறையருள் பெற வேண்டும்.
எல்லோருக்கும் இறையருள் கிடைக்குமா? நிச்சயம் கிடைக்கும். கடவுளின் அருள் என்பது தினமும் கடவுளுக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்வதால் மட்டும்தான் கிடைக்கும் என்பதில்லை. சாதாரண ஏழை_பாழைகள், வறுமையால் வாடுபவர்கள், செல்வம் இல்லாதோர், பசிப் பிணியால் அவதிப்படுவோர் இவர்களின் குறைகளைத் தீர்ப்பதாலும், இவர்களின் வாழ்கையில் பசுமை தீபம் ஏற்றுவதாலும்கூட இறைவனின் அருளைப் பெற முடியும்.
‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்ற மொழிகூட உணர்ந்து சொல்லப்பட்டதுதான். அதனால், அந்த நல்மொழியின்படி இறைவனை நல்வழியால்தான் தரிசிக்க முடியும். சான்றோர்கள், சாதுக்கள், ஞானிகளின் வழிகாட்டுதல்கள் நம்மை நல்வழிப்படுத்தும். அப்படி இறையருள் பெற்று, வாழ்வின் ஒவ்வொரு நாளையும் இனிய நாள் ஆக்கிக்கொள்ள, இந்த நூலில் வழிகாட்டுகிறார் மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி.
சக்தி விகடன் இதழ்களில் ‘தினம் தினம் திருநாளே!’ என்ற தலைப்பில், ஸ்வாமிஜி |
|
|  | | கதை சொல்வது என்பதைவிட கதை கேட்பது என்பதுதான் பெரும்பாலோருக்கும் பிடிக்கும். அதிலும் ஆன்மிகக் கதைகளில் அதிகப்படியான அபூர்வ, வியக்கத்தக்க சம்பவங்கள் நிறைந்திருப்பதால், சிறுவர் முதல் பெரியவர்கள் வரையில் அதன்மீதான ஆர்வம் அதிகப்படியாகவே இருக்கும்.
உண்மை, ஒழுக்கம், பக்தி, நேர்மை, புறம்கூறாமை, மரியாதை, நல்ல பழக்கங்கள் இவற்றை அடிப்படையாக வைத்து ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதைகள் இந்த சிறிய நூலை அலங்கரித்துள்ளன.
யாசகனிடம் யாசகமா?, வாழ்வே ஒரு கனவு!, ஆண்டவனின் குழந்தை!, இறைவன் விரும்பும் உள்ளம்!, போலி வாழ்க்கை! என 54 தலைப்புகளில், மனித வாழ்க்கையை நெறிப்படுத்தும் ருசிகரமான கதைகளை தொகுத்திருக்கிறார் நூலாசிரியர் செவல்குளம் ‘ஆச்சா’.
நாம் படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், நம்முடைய சந்ததிக்கும் இந்தக் கதைகளின் சாரத்தை எடுத்துச் சொல்லி, அவர்களின் வாழ்க்கையை முறைப்படுத்தி, அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல, இந்தப் புத்தகம் உங்களோடு துணை நிற்கும். |
|
| |
1 2 3 4 5 ... 8 9   | Displaying 1 - 5 of 44 |
|
|
|
You have 0 item in your cart
|
குறிப்பு : தங்களால் ஒரே நேரத்தில் வெவ்வேறு (உள்நாடு, வெளிநாடு) இடங்களுக்கான புத்தகங்களையோ , வெவ்வேறு வகையான (மின்மலர், மின்பிரசுரம், பிரிண்ட் சந்தா, பிரசுரங்கள்) புத்தங்களையோ வாங்க இயலாது. |