| திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 2007, நவம்பர் 21-ஆம் தேதி பின்னிரவு 5.09 மணிக்கு, இதுவரையிலும் விருச்சிக ராசியில் உலவிக் கொண்டிருந்த குரு தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார்.
தனுசு குருவின் சொந்த வீடாகும். மூலத் திரிகோண ராசியும் ஆகும். இதனால் குருவுக்குப் பலம் கூடும்.
பொதுவாக குரு ராசிக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்களில் உலவும்போது பொருளாதார முன்னேற்றம், தொழில் விருத்தி, சுப காரியங்கள் நிகழ்தல், புதிய பொருள்கள் சேருதல், தெய்வப் பணிகள் ஈடேறுதல், மகப்பேறு, மக்கள் நல முன்னேற்றம் போன்ற பலவிதமான சுபபலன்களைத் தருவார்.
1, 3, 4, 6, 8, 10, 12-ஆம் இடங்களில் உலவும்போது பொருளாதாரப் பிரச்னை, சுபகாரியங்கள் நிகழத் தடை, மக்கள் நலக்குறைவு, புத்தி மந்தம், தொழில் முன்னேற்றத்திற்குக் குறுக்கீடு, பெரியவர்களின் அபவாதம், தெய்வப் பணிகள் ஈடேறத் தாமதமாதல் போன்ற பல கெடுபலன்களைத் தருவார்.
குரு கோசாரப்படி உங்கள் ராசிக்கு எத்தனையாவது ராசியில் உலவுகிறார், குருப் பெயர்ச்சிக் காலத்தில் உங்கள் ஜாதகப்படி என்ன தசை, என்ன புக்தி நடக்கிறது என்பதைத் திருக்கணித முறைப்படிக் கணக்கிட்டு, இந்தக் குருப் பெயர்ச்சிக் காலத்தில் கோசாரப்படியும், உங்கள் ஜனன கால ஜாதக தசா, புக்தி அடிப்படையிலும் 21-11-2007 முதல் 9-12-2008 வரையிலும் உங்களுக்கு என்னென்ன பலன்கள் நடக்கும் என்பதை அறியலாம்.

|