நாட்டு நடப்பு
Published:Updated:

தண்டோரா

தண்டோரா

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

இயற்கைக் கருத்தரங்கு!

திருவாரூர் மாவட்டம், குளக்குடி, நெல்லையார் அங்கக வேளாண்மைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், அக்டோபர் 4-ம் தேதி ‘இயற்கை விவசாயக் கருத்தரங்கம்’ நடைபெற உள்ளது. திருவாரூர் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முன்பதிவு அவசியம். ஏற்பாடு: பாரதிய கிசான் சங்கம், திருவாரூர்.

தொடர்புக்கு, செல்போன்: 95786-66870, 94432-43135

தண்டோரா

வெள்ளாடு வளர்ப்பு!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், செப்டம்பர் 30-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்புத் தொழில்நுட்பப் பயிற்சி’ நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285-241626

தண்டோரா

செடிமுருங்கை!

நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில், அக்டோபர் 5-ம் தேதியில் ‘நேரடி நெல் விதைப்பு மற்றும் திருந்திய நெல் சாகுபடித் தொழில்நுட்பங்கள்’ 6-ம் தேதி ‘மழைக்காலங்களில் வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகள் பராமரிப்பு’ 12-ம் தேதி ‘செடிமுருங்கை, செடிஅவரை மற்றும் வெண்டை சாகுபடித் தொழில்நுட்பங்கள்’ 13-ம் தேதி ‘தாய்ப்பன்றிகள் பராமரிப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286-266345, 266244.

கறவை மாடு வளர்ப்பு!

சேலம் மாவட்டம், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், செப்டம்பர் 29-ம் தேதி, ‘கறவை மாடு வளர்ப்பு பயிற்சி’ நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு,தொலைபேசி: 0427-2410408

தண்டோரா

‘இயற்கை உணவுத் திருவிழா’

புதுச்சேரி, முத்தியால்பேட்டை, அம்மா சமூக சேவா மையத்தில், செப்டம்பர் 27-ம் தேதி, ‘இயற்கை உணவுத் திருவிழா’ நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 94436-01439, 94438-01439.

கட்டணப் பயிற்சிகள்

இயற்கை உரம்!

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தா கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், செப்டம்பர் 26-ம் தேதி, ‘வியாபார நோக்கில் அங்கக (இயற்கை) உரம் தயாரித்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.100 முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு,தொலைபேசி: 04652-246296.

தண்டோரா

மூலிகைக் கருத்தரங்கு!

நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவில், கனகதுர்கா திருமண மண்டபத்தில், செப்டம்பர் 30-ம் தேதி, ‘மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கான ‘மூலிகைக் கருத்தரங்கு’, நடைபெற உள்ளது. இதில் மனிதர்களின் உடல்நலனுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கான மருத்துவ சிகிச்சை முறைகளைப் பற்றியும் பல்வேறு கருத்துக்கள் உரைவீச்சுக்களாக இடம் பெறுகின்றன.

முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ.200.

தொடர்புக்கு, செல்போன்: 94867-17297

அறிவிப்பு

தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044-66802927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.

பசுமைக் குழு