மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையும்... முத்தான பலன்களும்!
- கழுதை வளர்க்கலாம் வாங்க!அழைக்கும் கால்நடை பல்கலைக்கழகம்!
- மண்புழு மன்னாரு: கைவிட்ட பழப்பயிர்கள்.. கைகொடுத்த மரப்பயிர்கள்! இது தோற்று ஜெயித்தவரின் கதை!
- மண்புழு மன்னாரு: உலகை உலுக்கிய விவசாயிகள் போராட்டம்! - இது ‘ரஷ்யா’வின் கதை!
- மண்புழு மன்னாரு : உழவே ‘தலை’... உழவர்களைக் கொண்டாடுவோம்!
- மண்புழு மன்னாரு : நம்மாழ்வார் சொல்லிய அந்த ‘இயற்கை’ ரகசியம்!
- மண்புழு மன்னாரு : உலகம் போற்றிய பட்டு வளர்ப்பு... சூரரைப் போற்று சொல்ல மறந்த கதை!
- மண்புழு மன்னாரு : இயற்கை விவசாயத்தைப் போற்று! ‘சூரரைப் போற்று’ சொல்ல மறந்த கதை!
- மண்புழு மன்னாரு : வேளாண்மைப் படிப்பும் விந்தையான விதிகளும்!
- மண்புழு மன்னாரு : அடிமாடுகள் கொடுக்கும் ஒரு கோடி வருமானம்!
- பாலில் பல லட்சங்கள் சம்பாதிக்கும் பெண்களும் சாக்லேட் செய்து சாதிக்கும் ஸ்விட்சர்லாந்தும்!
- மண்புழு மன்னாரு : கூட்டுப்பண்ணையும் இயற்கை வேளாண்மையின் குருபீடமும்!
- மண்புழு மன்னாரு : சர்க்கரை நோய்க்கு ரேஷன் அரிசியும் கரும்பு ரகம் கண்டுபிடித்த விவசாயியும்!
- மண்புழு மன்னாரு : அரசு திட்டங்கள் வேண்டாம்; மரம் வளர்ப்பு போதும்!
- மண்புழு மன்னாரு : சினிமா கொடுத்த விருந்தும் எம்.ஜி.ஆர் ஓட்டிய டிராக்டரும்!
- மண்புழு மன்னாரு : அஜ்வா பேரீச்சையும் அறிவு கொள்முதலும்!
- மண்புழு மன்னாரு : ஒரு லட்சம் பவுனும்... மேட்டூர் அணை கட்டிய கதையும்!
- மண்புழு மன்னாரு: கால்வாய்த் தொழில்நுட்ப சிற்பி காலிங்கராயன்!
- மண்புழு மன்னாரு : தமிழ்நாட்டை விரும்பிய தலைக்காவிரி… கைப்பற்றிக்கொண்ட கர்நாடகம்!
- மண்புழு மன்னாரு : ஒரு சிறுதானிய மனிதரின் கதை!
- மண்புழு மன்னாரு : பி.பி.டி நெல்லும் பி.எம்.டபுள்யூ விவசாயிகளும்!
- மண்புழு மன்னாரு : சீன மீனும் சென்னைப்பட்டினமும்!
- மண்புழு மன்னாரு : பாரம்பர்ய மீன்களை பயமுறுத்தும் ஆப்பிரிக்க மீன்!
- மண்புழு மன்னாரு : சந்தனப் பொட்டு வைக்காத சந்தன மலைமக்கள்!
- கவரிமாவுக்கும் கவரிமானுக்கும் என்ன சம்பந்தம்?
- சீனாவை மிஞ்சும் சேலம் வெண்பட்டு... கருணை பொங்கும் காஞ்சிப் பட்டு!
- கடப்பாரை கேட்ட கால்நடை மருத்துவர்!
- மண்புழு மன்னாரு: பட்டறிவுப் பாடம் சொன்ன விவசாயி!
- மண்புழு மன்னாரு: பிரமிடு கட்டிய விவசாயிகளும் பிரமிடு விவசாய முறையும்!
- மண்புழு மன்னாரு : விரைவில்... இயற்கை வேளாண் கொள்கை!
- மண்புழு மன்னாரு : மரம் வளர்ப்புக் கலையும் 10 நாள் மழைப் பொழிவும்!
- மண்புழு மன்னாரு : கவுனி அரிசியை ருசித்த சீன அதிபரும் தவளை வளர்க்கும் சீன விவசாயியும்!
- மண்புழு மன்னாரு: புற்றுநோய்க்குச் சவால் விடும் சாம்பார் சாதம்!
- மண்புழு மன்னாரு: மரங்களைக் காத்த - பழந்தமிழர்களும் ஆப்பிரிக்க தேவதையும்!
- மண்புழு மன்னாரு: எம்.எஸ்.சுவாமிநாதன் தமிழ்நாட்டுக்கு ஏன் வந்தார்?
- மண்புழு மன்னாரு: முளைப்பாரியும் தொடிப்புழுதியும்!
- மண்புழு மன்னாரு: ஆகாவலியும் அப்பள வாழையும்!
- மண்புழு மன்னாரு: சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜி.டி. நாயுடு!
- மண்புழு மன்னாரு: சுய உதவிக்குழு உருவான கதை!
- மண்புழு மன்னாரு: சந்தன மரங்களைப் பாதுகாக்கும் சிலிக்கான் சிப்!
- மண்புழு மன்னாரு: சந்தன மரம் டன் ரூ.50,00,000; செம்மரம் டன் ரூ.27,00,000
- மண்புழு மன்னாரு: நாட்டுக்கு வழிகாட்டும் மாதிரி கிராமம்!
- மண்புழு மன்னாரு: பீனிக்ஸ் பறவையும் பனை விதையும்!
- மண்புழு மன்னாரு: பஞ்சாப் புத்தாண்டும் பாஸ்மதி அரிசி வந்த கதையும்!
- மண்புழு மன்னாரு: உணவு மருத்துவமும் தரமான சம்பவங்களும்!
- மண்புழு மன்னாரு: ‘வாட்ஸ்அப்’ சித்தர்களும் உணவு மருத்துவமும்!
- மண்புழு மன்னாரு: ‘உப்பு’ யானையும் வெள்ளை யானையும்!
- மண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்!
- மண்புழு மன்னாரு: மழை பெய்வதை அறிவிக்கும் ‘அறிவாளி’ எலிகள்!
- மண்புழு மன்னாரு: நீரோட்டம் காட்டிய பசுங்கன்றும் பால் சுரக்கும் சுரைக்காயும்!
- மண்புழு மன்னாரு: தீங்கில்லாத மழையும் தீங்கான தேயிலை மலையும்!
- மண்புழு மன்னாரு: பெட்ரோல், டீசல் வேண்டாம்... மாடுகள் மூலமும் பேருந்துகள் ஓடும்!
- திரைப்படப் பாடலும் ‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா’ சோறும்!
- ‘சர்தார்’ கொய்யாவும் ‘ஆர்கானிக்’ ஆடுகளுக்கு மவுசும்!
- மண்புழு மன்னாரு: பணம் தேவைப்படாத வாழ்க்கையும் மானாவாரியில் விளையும் ‘ஜவாரி’யும்!
- மண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியா!
- மண்புழு மன்னாரு: தாய்லாந்து செல்போனும் சல்லிசான மாந்தோப்பும்!
- மண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபி!
- மண்புழு மன்னாரு: குறைந்த விலையில் மரக்கன்றுகள் வாங்க... ‘கடியம்’ போங்க!
- மண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்!
- மண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்!
- மண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானா!
- மண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனை!
- மண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும்!
- மண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்! கெட்டிக்காரன் புளுகும்
- மண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்!
- மண்புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம்!’
- மண்புழு மன்னாரு: மூக்குப் பொடி அளவு உரமும் மகசூலைக் கூட்ட உதவும்!
- மண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்!
- மண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசு!’
- மண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’
- மண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’
- மண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர்!
- மண்புழு மன்னாரு: கம்போஸ்ட் தயாரித்தால் ரூ.50 இனாம்!
- மண்புழு மன்னாரு: லட்ச ரூபாய் செலவில்... சம்பங்கி தந்த அனுபவப் பாடம்!
- மண்புழு மன்னாரு: பஞ்சாப் ரகசியம்... பனியும் புகையும்!
- மண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்!
- மண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்!
- மண்புழு மன்னாரு: உலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்!’
- மண்புழு மன்னாரு: பாம்புச் சர்க்கரையும் வெண்டைக்காய் வெல்லமும்!
- மண்புழு மன்னாரு: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும்!
- மண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும்!
- மண்புழு மன்னாரு: மகாத்மா காந்தியும் பிக்பாஸ்தான்!
- மண்புழு மன்னாரு: கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்!
- மண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும் வெட்டிவேர் மகத்துவமும்!
- மண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்
- மண்புழு மன்னாரு: வினோபா போட்ட ‘ஜீரோ பட்ஜெட்’ விதை!
- மண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்!
- மண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்!
- மண்புழு மன்னாரு: ஐந்து ரூபாய்க்கு கவலைப்பட்ட காந்தி!
- மண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்!
- மண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்!”
- மண்புழு மன்னாரு: ஜனாதிபதி விவசாயியும் விவசாய முதலமைச்சரும்!
- மண்புழு மன்னாரு: மதயானையும் மரமனிதனும்!
- மண்புழு மன்னாரு: காளைகளை அடக்கிய கண்ணன்!
- மண்புழு மன்னாரு: அகத்திக்கீரையும், நாட்டு மாடும் செய்த அற்புதம்!
- மண்புழு மன்னாரு: மாடுகளை மகிழ்விக்கும் ‘ஆதீண்டு குற்றி’ !
- மண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்!
- மண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும்!
- மண்புழு மன்னாரு: மாடு வளர்ப்பும் ‘ஸ்டார்ட் அப்’தான்!
- மண்புழு மன்னாரு: கோபமான மா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்!
- மண்புழு மன்னாரு: ஜென் குருவுக்குப் பாடம் சொன்ன பெண் விவசாயி!
- மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோ!
- மண்புழு மன்னாரு: ஆடிப் பழஞ்சோறும் 'ஆதண்டங்காய்' வற்றலும்..!
- மண்புழு மன்னாரு: அலையாத்தி காடுகளும் தில்லை மரமும்!
- மண்புழு மன்னாரு: தங்கச்சிமட நாத்து, மதுரையில மணக்குது!
- மண்புழு மன்னாரு: வெள்ளத்துக்கு சங்கதி சொன்ன சங்கு மண்டபம்!
- மண்புழு மன்னாரு: சுண்டைக்காய் கால் பணம்... சுமைக்கூலி முக்கால் பணத்தின் சூத்திரம்!
- மண்புழு மன்னாரு: செந்நெல், செஞ்சாலிநெல்... ஸ்ரீராமானுஜர் சொல்!
- மரத்தடி மாநாடு: மானியம் நிறுத்தம்... தவிப்பில் விவசாயிகள்!
- மண்புழு மன்னாரு: மருந்தாகும் மந்தாரை இலை!
- மண்புழு மன்னாரு: மயிலாடுதுறையில் மணக்கும்... ‘பாதிரி’ மாம்பழம்!
- மண்புழு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..!
- மண்புழு மன்னாரு: பழைய சோத்துக்குள் இருக்குது... ஜோரான மருந்து..!
- மண்புழு மன்னாரு: ‘வார்தா வெயிலும் தென்னை ஓலையும்..!’
- மண்புழு மன்னாரு: ‘நண்பேன்டா’ எலிகள்!
- மண்புழு மன்னாரு: குமரகமும் கொடம்புளியும்..!
- மண்புழு மன்னாரு: ஆட்டுப்பால்... மலேசிய மக்களின் மருந்து!
- மண்புழு மன்னாரு: மலையில் விளைந்தால் மாகாளி... நாட்டில் விளைந்தால் நன்னாரி..!
- மண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்து!
- மண்புழு மன்னாரு: ஜப்பானும், தஞ்சாவூர் நெல் சாகுபடியும்..!
- மண்புழு மன்னாரு: பொங்கிப் பாயும் பெருவெள்ளம்... சிலப்பதிகாரம் சொல்லும் தீர்வு!
- மண்புழு மன்னாரு: பரோட்டாவுக்கு சவால் விடும் தினை!
- மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையும்... முத்தான பலன்களும்!
- மண்புழு மன்னாரு: பனங்கருப்பட்டியும்,ஜால வித்தையும்!
- மண்புழு மன்னாரு: மூன்று வகை மனிதர்களும்... வெற்றிலை தாம்பூலமும்!
- மண்புழு மன்னாரு: கண்பார்வைக்கு அவரை...நீரிழிவுக்கு பரங்கி!
- மண்புழு மன்னாரு: வேகமெடுக்கும் இயற்கை விவசாயம்... கியூபா வழியில் கேரளா!
மாத்தி யோசி ஓவியம்: ஹரன்
‘அன்னம், பரபிரம்ம ஸ்வரூபம்’னு சமஸ்கிருதத்துல சொல்லியிருக்காங்க. இதோட அர்த்தம், ‘எல்லா உயிரினங்களும் அன்னத்திலிருந்தே ஆரம்பம் ஆகின்றன. எனவே, அன்னம்தான் கடவுள்’னு சொல்றாங்க. இதைத்தான், நம்ம ஆளுங்க, ‘சோத்துல இருக்கிறான் சொக்கநாதன்’னு தெளிவா சொல்லியிருக்காங்க.
சாப்பாட்டு விஷயத்துல கண்ணும் கருத்துமா இருக்கிறவங்களுக்குத்தான் உடம்பு வில்லு மாதிரி கிண்ணுனு இருக்கும். ஆஸ்பத்திரி பக்கம் போக வேணாம்னு ஆசைப்படுறவங்களுக்கு கீரைகள்தான் தீர்வு. எதையுமே, வெளிநாட்டுக்காரங்க சொன்னாத்தான் நமக்கும் புரியும். நாமளும் ஏத்துக்குவோம்.
இதோ, இந்தியாவோட முருங்கைக்கீரை மகத்துவத்தை அமெரிக்கக்காரங்க பெருமையோடு பேசறாங்க. அதனால, முருங்கைக்கீரை பக்கம் கவனத்தைத் திருப்புங்க. அதாவது, உலகத்துல இருக்கிற, வேற எந்த தாவர வகைகளிலும் இல்லாத ஒரு பொருள், அதிக அளவில முருங்கைக்கீரையில இருக்குது. அதாவது, முதுமையைத் தாமதப்படுத்தி உயிரணுக்களை அதிகமா பெருக வைக்கிற ‘சித்தின்’ (zeatin) என்ற ஊட்டச்சத்து அதில் இருக்குனு கண்டுபிடிச்சிருக்காங்க.

எப்பவும், சுறுசுறுப்பா இருக்கணும்னு ஆசைப்படுறவங்க முருங்கைக்கீரை, முருங்கைக்காயை மறக்காம சாப்பிடுங்கனு, வெளிநாட்டு மருத்துவ விஞ்ஞானிங்க, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆலோசனை சொல்லி கோடிகோடியா பணம் சம்பாதிச்சிக்கிட்டு இருக்காங்க. ஆனா, நம்ம தெருக்கோடியில, இதை கூவிக்கூவி வித்தாலும், வாங்கி சாப்பிடறதுக்கு யோசிக்கிறோம்.
‘முருங்கைக் கீரையில் சுமார் 90 வகையான ஊட்டச்சத்துக்கள் இருக்குது... இதில் புற்றுநோயைக் கட்டுப்படுத்தக் கூடிய இரண்டு வகை சத்துக்களும் இருக்கு’னு நவீன விஞ்ஞான முறைப்படி கண்டுபுடிச்சு சொல்லியிருக்காங்க. 300 வகையான நோய்களைத் தீர்க்கக்கூடிய திறன் முருங்கைக்கு உண்டுனு பல நூறு வருஷத்துக்கு முன்னயே ஆயுர்வேத மருத்துவத்துல எழுதி வெச்சிருக்காங்க.
முருங்கைக்கீரையில பாலைவிட இரண்டு மடங்கு புரதச்சத்தும், நான்கு மடங்கு கால்சியமும், ஏழு ஆரஞ்சு பழத்துல இருக்கிற வைட்டமின்-சி உயிர்ச்சத்தும், மூணு வாழைப்பழத்துல உள்ள பொட்டாசியமும், கடல்பாசியைவிட மூணு மடங்கு இரும்புச் சத்தும், கேரட்டைவிட நான்கு மடங்கு வைட்டமின்-ஏ உயிர்ச்சத்தும் இருக்குனு பட்டியல் போட்டுச் சொல்றாங்க.
‘நெய்யில கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கு. அதனால, அதைச் சாப்பிடவே மாட்டோம்!’னு சிலர் பெருமையா பேசிக்குவாங்க. நெய்யைப் பக்குவமா பயன்படுத்தத் தெரியாதவங்க, நெய் மேல, குத்தம் சொல்றாங்க. அந்தக் காலத்துல, நெய் காய்ச்சும் போது, ஒரு கைப்பிடி முருங்கை இலையை அதுல போடுவாங்க. முருங்கை இலையைப் போட்டதுக்கு அப்புறம்தான், நெய் மணம் தூக்கலா அடிக்கும். முருங்கை இலையை மணத்துக்கு மட்டுமில்லீங்க, நெய்யில இருக்கிற தீமை செய்யுற கொழுப்பு வகையை நீக்கவும்தான் நெய்யில பயன்படுத்துறாங்க.
சித்த மருத்துவத்தில, முன்னோடியான அகத்தியர், ‘நன் முருங்கைத்தழை, நெய் வார்த்துண்ணில்... யாளி யென விஞ்சுவார்’னு பாடி வெச்சிருக்காரு. அதாவது, தினமும் முருங்கைக் கீரையை நெய்யில பொரிச்சு சாப்பிட்டா, ‘யாளி’ மாதிரி பலம் உண்டாகுமாம். ஒரு ‘யாளி’ பத்து யானையோட பலம் கொண்டதுனு சொல்றாங்க. அந்தக் காலத்துல உடம்பை புஷ்டியா வைச்சுக்க ஆசைப்படுறவங்களுக்கு, சித்த மருத்துவருங்க, அகத்தியர் சொன்ன சூத்திரத்தைத்தான் சொல்லி அனுப்புவாங்களாம்.
இந்த அவரச யுகத்துல வெண்ணெய் எடுத்து, நெய் காய்ச்ச முடியாவிட்டாலும், கடையில வாங்கற நெய்யில, முருங்கைக் கீரையைச் சேர்த்துக் காய்ச்சி சாப்பிடலாம்தானே!
சிலவகை உணவுகளைச் சாப்பிடும்போது, நிறைய தண்ணீர் தாகம் எடுக்கிறது என்றால், அந்த உணவு சரியில்லை என்று அர்த்தம்’னு தமிழ் மருத்துவம் சொல்லுது. உதாரணத்துக்கு மசால் தோசையைச் சாப்பிட்டு முடிச்சவுடனே, முக்கால் லிட்டர் தண்ணி குடிச்சாத்தான் தாகம் அடங்குது. தோசையில இருந்த அதிகமான புளிப்புத் தன்மையை சமம் செய்துக்கத்தான், நம்ம உடம்பே மருத்துவராகி தண்ணி குடிக்க வைக்குது.
பொதுவா, எந்த ஒரு உணவையும் சாப்பிட்டவுடனே, லிட்டர் கணக்குல தண்ணி, குடிக்க வைச்சா, அது சரியில்லாத உணவுனு நீங்களே முடிவு செய்துடலாம். முருங்கைக் கீரை, முருங்கைக்காயை.... உணவுல சேர்த்துக்கிட்டா, உடனே தண்ணி தாகம் வராது. இதுவே, முருங்கை நல்ல உணவுனு சொல்றதுக்கான அறிகுறி!