பசுமைக் குழு
‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.
- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்
நாட்டுக்கோழி வளர்ப்பு!
திண்டுக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நவம்பர் 26-ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’, 27-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, தொலைபேசி: 0451-2460141.
செம்மறியாடு வளர்ப்பு!
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், நவம்பர் 17-ம் தேதி, ‘செம்மறியாடு வளர்ப்பு’, 24-ம் தேதி ‘மதிப்புக்கூட்டிய இறைச்சிப் பொருட்கள்’ போன்ற பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு,தொலைபேசி: 0452-2483903
வீட்டுக் காய்கறித் தோட்டம்!
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், நவம்பர் 20-ம் தேதி, ‘கால் மிதியடி தயாரித்தல்’ 21-ம் தேதி, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ 26-ம் தேதி, ‘வீட்டுக் காய்கறித் தோட்டம்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சி இலவசம்.
தொடர்புக்கு, செல்போன்: 77088-20505, 94885-75716.
ஒருங்கிணைந்த பண்ணை!
அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் 24-ம் தேதி ‘காய்கறி சாகுபடி’ 26-ம் தேதி, ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.
தொடர்புக்கு, தொலைபேசி: 04331-290335 செல்போன்: 97512-80089
கறவைமாடு வளர்ப்பு!
சேலம் மாவட்டம், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், நவம்பர் 18-ம் தேதி, ‘செம்மறியாடு வளர்ப்பு’ டிசம்பர் 3-ம் தேதி, ‘கறவை மாடு வளர்ப்பு’ போன்ற பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு,தொலைபேசி: 0427-2410408.
காளான் உற்பத்தி!
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், நவம்பர் 24-ம் தேதி, ‘காளான் உற்பத்தி’, 25-ம் தேதி’, ‘ஆடு வளர்ப்பு’, 26-ம் தேதி, ‘இயற்கைப் பண்ணையம்’ 30-ம் தேதி, ‘மாடித்தோட்ட பயிற்சி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.
முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, தொலைபேசி: 04285-241626.
இயற்கைக் கருத்தரங்கு!
சென்னை, லயோலா கல்லூரியிலுள்ள பூச்சியியல் ஆய்வு நிறுவனத்தில் நவம்பர் 28-ம் தேதி, ‘இயற்கை வேளாண்மைக் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா’ நடைபெற உள்ளது. கால்நடை மருத்துவர் காசிப்பிச்சை, சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், பூச்சியியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் இன்னாசிமுத்து, பேராசிரியர் வின்சென்ட் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
தொடர்புக்கு, செல்போன்: 98410-97109.
புவி மாநாடு!
நவம்பர்–20ம் தேதி, புவி பாதுகாப்பு மாநாடு, மதுரை கே.கே. நகரில் உள்ள ஜஸ்டிஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் (சோகோ அறக்கட்டளை) அரங்கில் நடைபெற உள்ளது. கருத்தரங்கு, கலைநிகழ்ச்சிகள், குறும்படங்கள் திரையிடல், இயற்கை விதை அங்காடிகளின் கண்காட்சி ஆகிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
தொடர்புக்கு, செல்போன்: 90476-29798.
திலேப்பியா மீன் வளர்ப்பு!
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நவம்பர் 18-ம் தேதி, ‘கிப்ட் திலேப்பியா மீன் வளர்ப்புத் தொழில்நுட்பப் பயிற்சி’ நடைபெற உள்ளது. அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, தொலைபேசி: 044-27971557.
கட்டணப் பயிற்சிகள்
மண்புழு உரம்!
தூத்துக்குடி மாவட்டம், வாகைக்குளம், ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையத்தில், நவம்பர் 16-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, 20-ம் தேதி ‘மாடித்தோட்ட அமைப்பு முறைகள்’, 21-ம் தேதி ‘மண்புழு உரம் தயாரிப்புத் தொழில்நுட்பங்கள்’, 24-ம் தேதி ‘நாட்டுக் கோழி வளர்ப்பு’, 25-ம் தேதி ‘காளான் வளர்ப்பு மற்றும் மதிப்புக் கூட்டல் தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். ஒவ்வொரு பயிற்சிக்கும் கட்டணம் `100.
தொடர்புக்கு, செல்போன்: 99429-78688, 99429-78497.
பாரம்பர்ய நெல்!
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, ஆதிரெங்கம் கிரியேட் இயற்கை வேளாண் மையத்தில், நவம்பர் 21-ம் தேதி, ‘இயற்கை வேளாண்மையில் பாரம்பர்ய நெல் சாகுபடி கருத்தரங்கம் மற்றும் வயல்வெளிப் பயிற்சி’ நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் `150. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, செல்போன்: 94433-20954, தொலைபேசி: 04369-220954.
உயிராற்றல் வேளாண்மை! திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவியில் உள்ள ராடிசன் இயற்கை பண்ணையில், நவம்பர் 22-ம் தேதி, ‘உயர் விளைச்சல் தரும் உயிராற்றல் வேளாண்மை பயிற்சி’ நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் `150. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, செல்போன்: 95517-26956, 98658-75896.
அறிவிப்பு
தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044-66802927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.