மண்புழு மன்னாரு: ‘நண்பேன்டா’ எலிகள்!
- கழுதை வளர்க்கலாம் வாங்க!அழைக்கும் கால்நடை பல்கலைக்கழகம்!
- மண்புழு மன்னாரு: கைவிட்ட பழப்பயிர்கள்.. கைகொடுத்த மரப்பயிர்கள்! இது தோற்று ஜெயித்தவரின் கதை!
- மண்புழு மன்னாரு: உலகை உலுக்கிய விவசாயிகள் போராட்டம்! - இது ‘ரஷ்யா’வின் கதை!
- மண்புழு மன்னாரு : உழவே ‘தலை’... உழவர்களைக் கொண்டாடுவோம்!
- மண்புழு மன்னாரு : நம்மாழ்வார் சொல்லிய அந்த ‘இயற்கை’ ரகசியம்!
- மண்புழு மன்னாரு : உலகம் போற்றிய பட்டு வளர்ப்பு... சூரரைப் போற்று சொல்ல மறந்த கதை!
- மண்புழு மன்னாரு : இயற்கை விவசாயத்தைப் போற்று! ‘சூரரைப் போற்று’ சொல்ல மறந்த கதை!
- மண்புழு மன்னாரு : வேளாண்மைப் படிப்பும் விந்தையான விதிகளும்!
- மண்புழு மன்னாரு : அடிமாடுகள் கொடுக்கும் ஒரு கோடி வருமானம்!
- பாலில் பல லட்சங்கள் சம்பாதிக்கும் பெண்களும் சாக்லேட் செய்து சாதிக்கும் ஸ்விட்சர்லாந்தும்!
- மண்புழு மன்னாரு : கூட்டுப்பண்ணையும் இயற்கை வேளாண்மையின் குருபீடமும்!
- மண்புழு மன்னாரு : சர்க்கரை நோய்க்கு ரேஷன் அரிசியும் கரும்பு ரகம் கண்டுபிடித்த விவசாயியும்!
- மண்புழு மன்னாரு : அரசு திட்டங்கள் வேண்டாம்; மரம் வளர்ப்பு போதும்!
- மண்புழு மன்னாரு : சினிமா கொடுத்த விருந்தும் எம்.ஜி.ஆர் ஓட்டிய டிராக்டரும்!
- மண்புழு மன்னாரு : அஜ்வா பேரீச்சையும் அறிவு கொள்முதலும்!
- மண்புழு மன்னாரு : ஒரு லட்சம் பவுனும்... மேட்டூர் அணை கட்டிய கதையும்!
- மண்புழு மன்னாரு: கால்வாய்த் தொழில்நுட்ப சிற்பி காலிங்கராயன்!
- மண்புழு மன்னாரு : தமிழ்நாட்டை விரும்பிய தலைக்காவிரி… கைப்பற்றிக்கொண்ட கர்நாடகம்!
- மண்புழு மன்னாரு : ஒரு சிறுதானிய மனிதரின் கதை!
- மண்புழு மன்னாரு : பி.பி.டி நெல்லும் பி.எம்.டபுள்யூ விவசாயிகளும்!
- மண்புழு மன்னாரு : சீன மீனும் சென்னைப்பட்டினமும்!
- மண்புழு மன்னாரு : பாரம்பர்ய மீன்களை பயமுறுத்தும் ஆப்பிரிக்க மீன்!
- மண்புழு மன்னாரு : சந்தனப் பொட்டு வைக்காத சந்தன மலைமக்கள்!
- கவரிமாவுக்கும் கவரிமானுக்கும் என்ன சம்பந்தம்?
- சீனாவை மிஞ்சும் சேலம் வெண்பட்டு... கருணை பொங்கும் காஞ்சிப் பட்டு!
- கடப்பாரை கேட்ட கால்நடை மருத்துவர்!
- மண்புழு மன்னாரு: பட்டறிவுப் பாடம் சொன்ன விவசாயி!
- மண்புழு மன்னாரு: பிரமிடு கட்டிய விவசாயிகளும் பிரமிடு விவசாய முறையும்!
- மண்புழு மன்னாரு : விரைவில்... இயற்கை வேளாண் கொள்கை!
- மண்புழு மன்னாரு : மரம் வளர்ப்புக் கலையும் 10 நாள் மழைப் பொழிவும்!
- மண்புழு மன்னாரு : கவுனி அரிசியை ருசித்த சீன அதிபரும் தவளை வளர்க்கும் சீன விவசாயியும்!
- மண்புழு மன்னாரு: புற்றுநோய்க்குச் சவால் விடும் சாம்பார் சாதம்!
- மண்புழு மன்னாரு: மரங்களைக் காத்த - பழந்தமிழர்களும் ஆப்பிரிக்க தேவதையும்!
- மண்புழு மன்னாரு: எம்.எஸ்.சுவாமிநாதன் தமிழ்நாட்டுக்கு ஏன் வந்தார்?
- மண்புழு மன்னாரு: முளைப்பாரியும் தொடிப்புழுதியும்!
- மண்புழு மன்னாரு: ஆகாவலியும் அப்பள வாழையும்!
- மண்புழு மன்னாரு: சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜி.டி. நாயுடு!
- மண்புழு மன்னாரு: சுய உதவிக்குழு உருவான கதை!
- மண்புழு மன்னாரு: சந்தன மரங்களைப் பாதுகாக்கும் சிலிக்கான் சிப்!
- மண்புழு மன்னாரு: சந்தன மரம் டன் ரூ.50,00,000; செம்மரம் டன் ரூ.27,00,000
- மண்புழு மன்னாரு: நாட்டுக்கு வழிகாட்டும் மாதிரி கிராமம்!
- மண்புழு மன்னாரு: பீனிக்ஸ் பறவையும் பனை விதையும்!
- மண்புழு மன்னாரு: பஞ்சாப் புத்தாண்டும் பாஸ்மதி அரிசி வந்த கதையும்!
- மண்புழு மன்னாரு: உணவு மருத்துவமும் தரமான சம்பவங்களும்!
- மண்புழு மன்னாரு: ‘வாட்ஸ்அப்’ சித்தர்களும் உணவு மருத்துவமும்!
- மண்புழு மன்னாரு: ‘உப்பு’ யானையும் வெள்ளை யானையும்!
- மண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்!
- மண்புழு மன்னாரு: மழை பெய்வதை அறிவிக்கும் ‘அறிவாளி’ எலிகள்!
- மண்புழு மன்னாரு: நீரோட்டம் காட்டிய பசுங்கன்றும் பால் சுரக்கும் சுரைக்காயும்!
- மண்புழு மன்னாரு: தீங்கில்லாத மழையும் தீங்கான தேயிலை மலையும்!
- மண்புழு மன்னாரு: பெட்ரோல், டீசல் வேண்டாம்... மாடுகள் மூலமும் பேருந்துகள் ஓடும்!
- திரைப்படப் பாடலும் ‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா’ சோறும்!
- ‘சர்தார்’ கொய்யாவும் ‘ஆர்கானிக்’ ஆடுகளுக்கு மவுசும்!
- மண்புழு மன்னாரு: பணம் தேவைப்படாத வாழ்க்கையும் மானாவாரியில் விளையும் ‘ஜவாரி’யும்!
- மண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியா!
- மண்புழு மன்னாரு: தாய்லாந்து செல்போனும் சல்லிசான மாந்தோப்பும்!
- மண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபி!
- மண்புழு மன்னாரு: குறைந்த விலையில் மரக்கன்றுகள் வாங்க... ‘கடியம்’ போங்க!
- மண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்!
- மண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்!
- மண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானா!
- மண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனை!
- மண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும்!
- மண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்! கெட்டிக்காரன் புளுகும்
- மண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்!
- மண்புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம்!’
- மண்புழு மன்னாரு: மூக்குப் பொடி அளவு உரமும் மகசூலைக் கூட்ட உதவும்!
- மண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்!
- மண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசு!’
- மண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’
- மண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’
- மண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர்!
- மண்புழு மன்னாரு: கம்போஸ்ட் தயாரித்தால் ரூ.50 இனாம்!
- மண்புழு மன்னாரு: லட்ச ரூபாய் செலவில்... சம்பங்கி தந்த அனுபவப் பாடம்!
- மண்புழு மன்னாரு: பஞ்சாப் ரகசியம்... பனியும் புகையும்!
- மண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்!
- மண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்!
- மண்புழு மன்னாரு: உலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்!’
- மண்புழு மன்னாரு: பாம்புச் சர்க்கரையும் வெண்டைக்காய் வெல்லமும்!
- மண்புழு மன்னாரு: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும்!
- மண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும்!
- மண்புழு மன்னாரு: மகாத்மா காந்தியும் பிக்பாஸ்தான்!
- மண்புழு மன்னாரு: கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்!
- மண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும் வெட்டிவேர் மகத்துவமும்!
- மண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்
- மண்புழு மன்னாரு: வினோபா போட்ட ‘ஜீரோ பட்ஜெட்’ விதை!
- மண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்!
- மண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்!
- மண்புழு மன்னாரு: ஐந்து ரூபாய்க்கு கவலைப்பட்ட காந்தி!
- மண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்!
- மண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்!”
- மண்புழு மன்னாரு: ஜனாதிபதி விவசாயியும் விவசாய முதலமைச்சரும்!
- மண்புழு மன்னாரு: மதயானையும் மரமனிதனும்!
- மண்புழு மன்னாரு: காளைகளை அடக்கிய கண்ணன்!
- மண்புழு மன்னாரு: அகத்திக்கீரையும், நாட்டு மாடும் செய்த அற்புதம்!
- மண்புழு மன்னாரு: மாடுகளை மகிழ்விக்கும் ‘ஆதீண்டு குற்றி’ !
- மண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்!
- மண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும்!
- மண்புழு மன்னாரு: மாடு வளர்ப்பும் ‘ஸ்டார்ட் அப்’தான்!
- மண்புழு மன்னாரு: கோபமான மா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்!
- மண்புழு மன்னாரு: ஜென் குருவுக்குப் பாடம் சொன்ன பெண் விவசாயி!
- மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோ!
- மண்புழு மன்னாரு: ஆடிப் பழஞ்சோறும் 'ஆதண்டங்காய்' வற்றலும்..!
- மண்புழு மன்னாரு: அலையாத்தி காடுகளும் தில்லை மரமும்!
- மண்புழு மன்னாரு: தங்கச்சிமட நாத்து, மதுரையில மணக்குது!
- மண்புழு மன்னாரு: வெள்ளத்துக்கு சங்கதி சொன்ன சங்கு மண்டபம்!
- மண்புழு மன்னாரு: சுண்டைக்காய் கால் பணம்... சுமைக்கூலி முக்கால் பணத்தின் சூத்திரம்!
- மண்புழு மன்னாரு: செந்நெல், செஞ்சாலிநெல்... ஸ்ரீராமானுஜர் சொல்!
- மரத்தடி மாநாடு: மானியம் நிறுத்தம்... தவிப்பில் விவசாயிகள்!
- மண்புழு மன்னாரு: மருந்தாகும் மந்தாரை இலை!
- மண்புழு மன்னாரு: மயிலாடுதுறையில் மணக்கும்... ‘பாதிரி’ மாம்பழம்!
- மண்புழு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..!
- மண்புழு மன்னாரு: பழைய சோத்துக்குள் இருக்குது... ஜோரான மருந்து..!
- மண்புழு மன்னாரு: ‘வார்தா வெயிலும் தென்னை ஓலையும்..!’
- மண்புழு மன்னாரு: ‘நண்பேன்டா’ எலிகள்!
- மண்புழு மன்னாரு: குமரகமும் கொடம்புளியும்..!
- மண்புழு மன்னாரு: ஆட்டுப்பால்... மலேசிய மக்களின் மருந்து!
- மண்புழு மன்னாரு: மலையில் விளைந்தால் மாகாளி... நாட்டில் விளைந்தால் நன்னாரி..!
- மண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்து!
- மண்புழு மன்னாரு: ஜப்பானும், தஞ்சாவூர் நெல் சாகுபடியும்..!
- மண்புழு மன்னாரு: பொங்கிப் பாயும் பெருவெள்ளம்... சிலப்பதிகாரம் சொல்லும் தீர்வு!
- மண்புழு மன்னாரு: பரோட்டாவுக்கு சவால் விடும் தினை!
- மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையும்... முத்தான பலன்களும்!
- மண்புழு மன்னாரு: பனங்கருப்பட்டியும்,ஜால வித்தையும்!
- மண்புழு மன்னாரு: மூன்று வகை மனிதர்களும்... வெற்றிலை தாம்பூலமும்!
- மண்புழு மன்னாரு: கண்பார்வைக்கு அவரை...நீரிழிவுக்கு பரங்கி!
- மண்புழு மன்னாரு: வேகமெடுக்கும் இயற்கை விவசாயம்... கியூபா வழியில் கேரளா!

மாத்தி யோசி, ஓவியம்: ஹரன்
சில வருஷத்துக்கு முன்னால ஆந்திராவுல நடந்த சர்வதேசக் கருத்தரங்குக்கு, இந்தோனேசியா நாட்டுல இருந்து விஞ்ஞானிங்க நாலு பேரு வந்திருந்தாங்க. அந்த சமயத்துல ஆந்திர மாநில நெல் வயல்கள்ல, எலித்தொல்லை அதிகமா இருக்குனு உள்ளூர் இங்கிலீஸ் நியூஸ் பேப்பர்ல பெருசா செய்தி போட்டிருந்தாங்க. இதைப் படிச்ச இந்தோனேசிய விஞ்ஞானிங்க, எலிகள் பத்தின தங்களோட அனுபவங்கள தனிப்பட்ட முறையில பேசிக்கிட்டிருந்தப்ப எங்ககிட்ட எடுத்து வெச்சாங்க. அவங்க சொன்ன தகவல்கள் ஆச்சர்யத்தை வரவழைக்கிறதா இருந்துச்சு.
‘எலிகளை அழிக்க முடியாது, எண்ணிக்கையை வேண்டுமானால் கட்டுப்படுத்தலாம். எலிகளைக் கொல்வதற்கு விஷம் வைப்பதைவிட, எலிப்பொறிகள் வைக்கலாம். நெல் வயலைச் சுற்றிலும் புதினா கீரையை வரப்புப் பயிராக சாகுபடி செய்வது போன்ற எளிய முறைகளைப் பின்பற்றலாம். எங்கள் நாட்டிலும், எலிகள் தொந்தரவு அதிகம்தான். ஆனால், அதை யாரும் விஷம் வைத்துக் கொள்வதில்லை. எலிகளின் எண்ணிக்கையைக் குறைக்க, எங்கள் நாட்டில் உள்ள சில மாநில அரசாங்கங்கள் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தின. புதிதாக திருமணம் செய்து கொள்ளும் தம்பதி சார்பில் 400 எலிகளைப் பிடித்துத் தர வேண்டும். மாப்பிள்ளையும், பெண்ணும் தலா 200 எலிகளைப் பிடித்துக் கொடுத்தால்தான் திருமணப் பதிவுச் சான்றிதழ் கொடுக்கப்படும் என்று அறிவித்து விட்டனர். இதற்கு முக்கிய காரணம், எலிகள் மூலம் பயிர்களுக்குச் சேதம் ஏற்படுவதைத் தடுக்க, ஊர் கூடி வேலை செய்ய வேண்டும் என்பதை உணர்த்தத்தான்.

விஷம் வைத்து எலிகளைக் கொன்றால், அந்த விஷம் எலிகளை மட்டுமல்ல, மண்ணில் உள்ள மண்புழு தொடங்கி, கண்ணுக்குத் தெரியாத நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் வரை அனைத்தையும் பாதிக்கும். அதனால்தான், மக்கள் பங்கேற்புடன் எலிகளைக் கட்டுப்படுத்த எங்கள் அரசு முயற்சி செய்தது. ஆனால் விலங்குகளை கடவுளாக வணங்கும் உங்கள் நாட்டில், அதிக விஷத்தை வைத்து எலிகளைக் கொல்லும் கொடுஞ்செயல் நடக்கின்றது’னு கொதிச்சார் இந்தோனேசியாவிலிருந்து வந்திருந்த மூத்த விஞ்ஞானி.
இதைக் கேட்டுக்கிட்டிருந்த நெதர்லாந்து விஞ்ஞானியும், எலிகளைப் பத்தி பல சுவையான தகவகளைச் சொல்ல ஆரம்பிச்சாரு.
‘இந்தியாவில் மட்டுமல்ல உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் எலி இனம் என்றாலே, அது கிராமப்புறமாக இருந்தாலும் சரி, நகர்ப்புறமாக இருந்தாலும் சரி, மனிதர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த எலி இனங்கள் இயற்கைக்கு மிகப்பெரிய சேவை செய்வதாக எங்கள் நாட்டைச்சேர்ந்த விஞ்ஞானி பேட்ரிக் ஜான்சன், பல ஆண்டுகள் ஆய்வுக்குப் பின்பு கண்டுபிடித்தார். எலிகளுக்கு ஆதரவாக இவர் பேசியபோது, எல்லோரும் இவரைக் கேவலமாகத்தான் பார்த்தார்கள். ஆனால், காலம், செல்லச்செல்ல எலிகள் பற்றி அவர் சொல்லிய கருத்துக்கள் சரியானவை என்று எல்லோரும் ஏற்றுக் கொள்ள தொடங்கிவிட்டார்கள்.
எலிகள் இயற்கைக்கு நன்மை செய்கின்றன என்பதை, ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்க, ‘அகவுடிக்’ என்ற ஒருவகை பெருச்சாளிகளைத் தேர்வு செய்தார். தென் அமெரிக்க காடுகளில் காணப்படும் இவற்றின் கழுத்தில் கண்காணிப்புக் கருவிகளை (ஜி.பி.எஸ்) பொருத்தினார். மாதக்கணக்கில் எலிகளைக் கண்காணித்தார். அதன் பிறகு, ஆராய்ச்சி முடிவை வெளியிட்டார்.
மரத்தின் கீழே கொட்டிக் கிடக்கும் விதைகளை உணவுக்காக அந்தப் பெருச்சாளிகள் சேகரிப்பது வழக்கம். இப்படி விதைகளைச் சேகரித்து முதலில் எடுத்துச்சென்ற பெருச்சாளி, சுமார் 9 மீட்டர் தொலைவில் கொண்டு சென்று புதைத்து வைத்தது. இப்படி புதைக்கப்பட்ட விதைகளில் சிலவற்றை அந்த இடத்திலிருந்து கடத்திச் சென்ற இன்னொரு பெருச்சாளி, 5 மீட்டர் தொலைவில் புதைத்தது. இப்படியே ஒன்றிலிருந்து ஒன்றாக 25 பெருச்சாளிகள் மாற்றி மாற்றி புதைத்தன. முடிவில் இந்த விதை சுமார் 70 மீட்டர் தொலைவு வரை பரவலாகக் கொண்டு செல்லப்பட்டன. எலிகள் தின்றது போக, மீதியுள்ள விதைகள் ஆங்காங்கே முளைத்து, மரங்களாக வளரத் தொடங்கின.
தாய்மரத்திலிருந்து 70 மீட்டர் தொலைவில் புதுக்கன்றுகள் முளைப்பதற்கு இந்தப் பெருச்சாளிகள் காரணமாக அமைந்திருந்ததை உறுதிப்படுத்திய பேட்ரிக் ஜான்சன், பூமியில் விதைகள் பரவுவதற்கு எலி இனங்களும் பணியாற்றுகின்றன என்று தன் ஆய்வு முடிவை தெரிவித்தார்’னு தேங்காய் உடைச்ச மாதிரி சொன்னார்.
எலிகள் மனுஷங்களுக்கு வேணும்னா எதிரியா இருக்கலாம், இயற்கையைப் பொறுத்தவரை எலிகளும் நண்பன்தான்!