மண்புழு மன்னாரு: பழைய சோத்துக்குள் இருக்குது... ஜோரான மருந்து..!
- கழுதை வளர்க்கலாம் வாங்க!அழைக்கும் கால்நடை பல்கலைக்கழகம்!
- மண்புழு மன்னாரு: கைவிட்ட பழப்பயிர்கள்.. கைகொடுத்த மரப்பயிர்கள்! இது தோற்று ஜெயித்தவரின் கதை!
- மண்புழு மன்னாரு: உலகை உலுக்கிய விவசாயிகள் போராட்டம்! - இது ‘ரஷ்யா’வின் கதை!
- மண்புழு மன்னாரு : உழவே ‘தலை’... உழவர்களைக் கொண்டாடுவோம்!
- மண்புழு மன்னாரு : நம்மாழ்வார் சொல்லிய அந்த ‘இயற்கை’ ரகசியம்!
- மண்புழு மன்னாரு : உலகம் போற்றிய பட்டு வளர்ப்பு... சூரரைப் போற்று சொல்ல மறந்த கதை!
- மண்புழு மன்னாரு : இயற்கை விவசாயத்தைப் போற்று! ‘சூரரைப் போற்று’ சொல்ல மறந்த கதை!
- மண்புழு மன்னாரு : வேளாண்மைப் படிப்பும் விந்தையான விதிகளும்!
- மண்புழு மன்னாரு : அடிமாடுகள் கொடுக்கும் ஒரு கோடி வருமானம்!
- பாலில் பல லட்சங்கள் சம்பாதிக்கும் பெண்களும் சாக்லேட் செய்து சாதிக்கும் ஸ்விட்சர்லாந்தும்!
- மண்புழு மன்னாரு : கூட்டுப்பண்ணையும் இயற்கை வேளாண்மையின் குருபீடமும்!
- மண்புழு மன்னாரு : சர்க்கரை நோய்க்கு ரேஷன் அரிசியும் கரும்பு ரகம் கண்டுபிடித்த விவசாயியும்!
- மண்புழு மன்னாரு : அரசு திட்டங்கள் வேண்டாம்; மரம் வளர்ப்பு போதும்!
- மண்புழு மன்னாரு : சினிமா கொடுத்த விருந்தும் எம்.ஜி.ஆர் ஓட்டிய டிராக்டரும்!
- மண்புழு மன்னாரு : அஜ்வா பேரீச்சையும் அறிவு கொள்முதலும்!
- மண்புழு மன்னாரு : ஒரு லட்சம் பவுனும்... மேட்டூர் அணை கட்டிய கதையும்!
- மண்புழு மன்னாரு: கால்வாய்த் தொழில்நுட்ப சிற்பி காலிங்கராயன்!
- மண்புழு மன்னாரு : தமிழ்நாட்டை விரும்பிய தலைக்காவிரி… கைப்பற்றிக்கொண்ட கர்நாடகம்!
- மண்புழு மன்னாரு : ஒரு சிறுதானிய மனிதரின் கதை!
- மண்புழு மன்னாரு : பி.பி.டி நெல்லும் பி.எம்.டபுள்யூ விவசாயிகளும்!
- மண்புழு மன்னாரு : சீன மீனும் சென்னைப்பட்டினமும்!
- மண்புழு மன்னாரு : பாரம்பர்ய மீன்களை பயமுறுத்தும் ஆப்பிரிக்க மீன்!
- மண்புழு மன்னாரு : சந்தனப் பொட்டு வைக்காத சந்தன மலைமக்கள்!
- கவரிமாவுக்கும் கவரிமானுக்கும் என்ன சம்பந்தம்?
- சீனாவை மிஞ்சும் சேலம் வெண்பட்டு... கருணை பொங்கும் காஞ்சிப் பட்டு!
- கடப்பாரை கேட்ட கால்நடை மருத்துவர்!
- மண்புழு மன்னாரு: பட்டறிவுப் பாடம் சொன்ன விவசாயி!
- மண்புழு மன்னாரு: பிரமிடு கட்டிய விவசாயிகளும் பிரமிடு விவசாய முறையும்!
- மண்புழு மன்னாரு : விரைவில்... இயற்கை வேளாண் கொள்கை!
- மண்புழு மன்னாரு : மரம் வளர்ப்புக் கலையும் 10 நாள் மழைப் பொழிவும்!
- மண்புழு மன்னாரு : கவுனி அரிசியை ருசித்த சீன அதிபரும் தவளை வளர்க்கும் சீன விவசாயியும்!
- மண்புழு மன்னாரு: புற்றுநோய்க்குச் சவால் விடும் சாம்பார் சாதம்!
- மண்புழு மன்னாரு: மரங்களைக் காத்த - பழந்தமிழர்களும் ஆப்பிரிக்க தேவதையும்!
- மண்புழு மன்னாரு: எம்.எஸ்.சுவாமிநாதன் தமிழ்நாட்டுக்கு ஏன் வந்தார்?
- மண்புழு மன்னாரு: முளைப்பாரியும் தொடிப்புழுதியும்!
- மண்புழு மன்னாரு: ஆகாவலியும் அப்பள வாழையும்!
- மண்புழு மன்னாரு: சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜி.டி. நாயுடு!
- மண்புழு மன்னாரு: சுய உதவிக்குழு உருவான கதை!
- மண்புழு மன்னாரு: சந்தன மரங்களைப் பாதுகாக்கும் சிலிக்கான் சிப்!
- மண்புழு மன்னாரு: சந்தன மரம் டன் ரூ.50,00,000; செம்மரம் டன் ரூ.27,00,000
- மண்புழு மன்னாரு: நாட்டுக்கு வழிகாட்டும் மாதிரி கிராமம்!
- மண்புழு மன்னாரு: பீனிக்ஸ் பறவையும் பனை விதையும்!
- மண்புழு மன்னாரு: பஞ்சாப் புத்தாண்டும் பாஸ்மதி அரிசி வந்த கதையும்!
- மண்புழு மன்னாரு: உணவு மருத்துவமும் தரமான சம்பவங்களும்!
- மண்புழு மன்னாரு: ‘வாட்ஸ்அப்’ சித்தர்களும் உணவு மருத்துவமும்!
- மண்புழு மன்னாரு: ‘உப்பு’ யானையும் வெள்ளை யானையும்!
- மண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்!
- மண்புழு மன்னாரு: மழை பெய்வதை அறிவிக்கும் ‘அறிவாளி’ எலிகள்!
- மண்புழு மன்னாரு: நீரோட்டம் காட்டிய பசுங்கன்றும் பால் சுரக்கும் சுரைக்காயும்!
- மண்புழு மன்னாரு: தீங்கில்லாத மழையும் தீங்கான தேயிலை மலையும்!
- மண்புழு மன்னாரு: பெட்ரோல், டீசல் வேண்டாம்... மாடுகள் மூலமும் பேருந்துகள் ஓடும்!
- திரைப்படப் பாடலும் ‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா’ சோறும்!
- ‘சர்தார்’ கொய்யாவும் ‘ஆர்கானிக்’ ஆடுகளுக்கு மவுசும்!
- மண்புழு மன்னாரு: பணம் தேவைப்படாத வாழ்க்கையும் மானாவாரியில் விளையும் ‘ஜவாரி’யும்!
- மண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியா!
- மண்புழு மன்னாரு: தாய்லாந்து செல்போனும் சல்லிசான மாந்தோப்பும்!
- மண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபி!
- மண்புழு மன்னாரு: குறைந்த விலையில் மரக்கன்றுகள் வாங்க... ‘கடியம்’ போங்க!
- மண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்!
- மண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்!
- மண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானா!
- மண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனை!
- மண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும்!
- மண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்! கெட்டிக்காரன் புளுகும்
- மண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்!
- மண்புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம்!’
- மண்புழு மன்னாரு: மூக்குப் பொடி அளவு உரமும் மகசூலைக் கூட்ட உதவும்!
- மண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்!
- மண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசு!’
- மண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’
- மண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’
- மண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர்!
- மண்புழு மன்னாரு: கம்போஸ்ட் தயாரித்தால் ரூ.50 இனாம்!
- மண்புழு மன்னாரு: லட்ச ரூபாய் செலவில்... சம்பங்கி தந்த அனுபவப் பாடம்!
- மண்புழு மன்னாரு: பஞ்சாப் ரகசியம்... பனியும் புகையும்!
- மண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்!
- மண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்!
- மண்புழு மன்னாரு: உலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்!’
- மண்புழு மன்னாரு: பாம்புச் சர்க்கரையும் வெண்டைக்காய் வெல்லமும்!
- மண்புழு மன்னாரு: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும்!
- மண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும்!
- மண்புழு மன்னாரு: மகாத்மா காந்தியும் பிக்பாஸ்தான்!
- மண்புழு மன்னாரு: கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்!
- மண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும் வெட்டிவேர் மகத்துவமும்!
- மண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்
- மண்புழு மன்னாரு: வினோபா போட்ட ‘ஜீரோ பட்ஜெட்’ விதை!
- மண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்!
- மண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்!
- மண்புழு மன்னாரு: ஐந்து ரூபாய்க்கு கவலைப்பட்ட காந்தி!
- மண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்!
- மண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்!”
- மண்புழு மன்னாரு: ஜனாதிபதி விவசாயியும் விவசாய முதலமைச்சரும்!
- மண்புழு மன்னாரு: மதயானையும் மரமனிதனும்!
- மண்புழு மன்னாரு: காளைகளை அடக்கிய கண்ணன்!
- மண்புழு மன்னாரு: அகத்திக்கீரையும், நாட்டு மாடும் செய்த அற்புதம்!
- மண்புழு மன்னாரு: மாடுகளை மகிழ்விக்கும் ‘ஆதீண்டு குற்றி’ !
- மண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்!
- மண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும்!
- மண்புழு மன்னாரு: மாடு வளர்ப்பும் ‘ஸ்டார்ட் அப்’தான்!
- மண்புழு மன்னாரு: கோபமான மா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்!
- மண்புழு மன்னாரு: ஜென் குருவுக்குப் பாடம் சொன்ன பெண் விவசாயி!
- மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோ!
- மண்புழு மன்னாரு: ஆடிப் பழஞ்சோறும் 'ஆதண்டங்காய்' வற்றலும்..!
- மண்புழு மன்னாரு: அலையாத்தி காடுகளும் தில்லை மரமும்!
- மண்புழு மன்னாரு: தங்கச்சிமட நாத்து, மதுரையில மணக்குது!
- மண்புழு மன்னாரு: வெள்ளத்துக்கு சங்கதி சொன்ன சங்கு மண்டபம்!
- மண்புழு மன்னாரு: சுண்டைக்காய் கால் பணம்... சுமைக்கூலி முக்கால் பணத்தின் சூத்திரம்!
- மண்புழு மன்னாரு: செந்நெல், செஞ்சாலிநெல்... ஸ்ரீராமானுஜர் சொல்!
- மரத்தடி மாநாடு: மானியம் நிறுத்தம்... தவிப்பில் விவசாயிகள்!
- மண்புழு மன்னாரு: மருந்தாகும் மந்தாரை இலை!
- மண்புழு மன்னாரு: மயிலாடுதுறையில் மணக்கும்... ‘பாதிரி’ மாம்பழம்!
- மண்புழு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..!
- மண்புழு மன்னாரு: பழைய சோத்துக்குள் இருக்குது... ஜோரான மருந்து..!
- மண்புழு மன்னாரு: ‘வார்தா வெயிலும் தென்னை ஓலையும்..!’
- மண்புழு மன்னாரு: ‘நண்பேன்டா’ எலிகள்!
- மண்புழு மன்னாரு: குமரகமும் கொடம்புளியும்..!
- மண்புழு மன்னாரு: ஆட்டுப்பால்... மலேசிய மக்களின் மருந்து!
- மண்புழு மன்னாரு: மலையில் விளைந்தால் மாகாளி... நாட்டில் விளைந்தால் நன்னாரி..!
- மண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்து!
- மண்புழு மன்னாரு: ஜப்பானும், தஞ்சாவூர் நெல் சாகுபடியும்..!
- மண்புழு மன்னாரு: பொங்கிப் பாயும் பெருவெள்ளம்... சிலப்பதிகாரம் சொல்லும் தீர்வு!
- மண்புழு மன்னாரு: பரோட்டாவுக்கு சவால் விடும் தினை!
- மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையும்... முத்தான பலன்களும்!
- மண்புழு மன்னாரு: பனங்கருப்பட்டியும்,ஜால வித்தையும்!
- மண்புழு மன்னாரு: மூன்று வகை மனிதர்களும்... வெற்றிலை தாம்பூலமும்!
- மண்புழு மன்னாரு: கண்பார்வைக்கு அவரை...நீரிழிவுக்கு பரங்கி!
- மண்புழு மன்னாரு: வேகமெடுக்கும் இயற்கை விவசாயம்... கியூபா வழியில் கேரளா!

மாத்தி யோசி, ஓவியம்: ஹரன்

கர்நாடக மாநிலத்தில இருக்கிற நகர்ப்புறக் கடைகள்லகூட கேழ்வரகு களிதான் பிரதானமா விற்பனையாகுது. கேழ்வரகு களிக்கு, கன்னட மொழியில ‘ராகி முக்தே’னு பேரு. பெரிய, பெரிய கார்ல போறவங்க கூட, ராகி முத்தேவை ரசிச்சு ருசிச்சு சாப்பிடற காட்சியை கர்நாடகாவுல பார்க்கலாம். பாரம்பர்ய உணவு விஷயத்துல அந்த மக்கள் தெளிவா இருக்காங்க.
ஒரு காலத்துல, தமிழ்நாடு முழுக்க நீராகாரம் இல்லாத வீடு இருக்காது. நீராகாரம் குடிச்சுட்டுதான், அன்றைய வேலையைத் தொடங்குறதே வாடிக்கையா இருந்துச்சு. ‘‘காலையில பழையதைக் குடிச்சுட்டு, பாக்குக் கிடங்குக்கு கிளம்பினேன்...’னு புதுச்சேரி மாநிலத்துல, பிரெஞ்சு ஆட்சிக்காரங்களுக்கு மொழிபெயர்ப்பாளரா இருந்த ஆனந்த ரங்கம் பிள்ளை, தன்னோட நாட்குறிப்புல எழுதி வைச்சிருக்காரு. அந்த காலத்துல பெரிய மாளிகையும், பிரமாண்டமான கப்பலும் சொந்தமா இவருக்கு இருந்திருக்கு.
பெரிய வசதி வாய்ப்பு இருந்தாலும், பழைய சாதமும், நீராகாரமும் சாப்பிடறதுதான் அந்த காலத்துல வழக்கமா இருந்திருக்கு. நீராகாரம் குடிக்கிறது நின்னு போனது, டீயும், காபியும் வீட்டுக்குள்ள வந்த பின்னாடிதான். கூடவே, பாரம்பர்ய அரிசி ரகத்துல சமைச்ச சோறுதான், பழைய சோத்துக்கும் நீராகாரத்துக்கும் சரியா இருக்கும். ரசாயனத்துல ஒட்டு ரக நெல்லை விளைவிச்சா, பொழுது சாயிரத்துக்குள்ளயே, சோறு கூழாகிடும். ஆக, உணவுப் பழக்கம் மாறினதுக்கு பின்னால, பல விஷயங்கள் அடங்கியிருக்கு.
‘‘தமிழ்நாடு வெப்ப மண்டல பகுதி. பழைய சாதம் – நீராகாரம் முதல் நாள் இரவில் சமைத்த அன்னத்தில் நீருற்றி வைத்திருந்து, மறுநாள் காலை அந்த நீருடன் சேர்த்து அன்னத்தை உண்ணுவது உடல் உழைப்புக்குத் தேவையான வலிமையைக் கொடுக்கும். ஆண்மையைப் பெருக்கும். இந்த அன்னம் மிகப் புளிப்பாக இருக்கக்கூடாது. சிறிதளவே புளித்திருக்க வேண்டும். அதிகம் புளிக்காத பழையதுடன், மோர் அல்லது தயிர் சேர்த்து, வெங்காயம், மாவடு, எலுமிச்சை ஊறுகாய் இவற்றுடன் சேர்த்து உண்ணுவது தமிழர்களின் பாரம்பர்ய வழக்கம். இதன் சுவையை மறக்க முடியாது. அதுவும் சித்திரை மாசம் அடிக்கும் கோடை வெயிலில், உடலைக் குளிர்வித்து, தெம்பு கொடுக்கும்னு’’ உணவியல் வல்லுநருங்க சொல்றாங்க.
அரிசிச் சோற்றை வடிச்சு, அதுல தண்ணி ஊத்தி வைச்சா, மறுநாள் காலையில் அது பழைய சாதம். சோத்தை அலுமினியம், மண், ஸ்டீல்... பாத்திரத்தில வெச்சிருந்து, ஆய்வு பண்ணியிருக்காங்க. அப்போ, மண் பாத்திரத்துல இருந்த பழைய சோறுதான் வாசமும், தரமும் கூடுதலா இருந்திருக்கு.
பழையச் சோத்தோட ஆயுள் 15 மணி நேரம்தான். முதல் நாள் ராத்திரி 10 மணிக்கு தண்ணி ஊத்தி வைச்சா, அதில இருந்து அதிகபட்சம் 15 மணி நேரத்துக்குள்ள சாப்பிட்டு முடிச்சிடணுமாம். இதுக்கு மேல பழையச் சோத்தை வெச்சிருந்து சாப்பிட்டா, அது அமுதமா இருக்காது. உடம்புக்கு பாதிப்பு கொடுக்கக் கூடிய விஷமா மாறிடுமாம்.
‘‘பழையச் சோற்றில் மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத வைட்டமின் பி-6, பி-12 போன்றவை வளமாக நிறைந்துள்ளது. பழையச் சோற்றில் லட்சக்கணக்கான நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் உள்ளன. இதை சாப்பிடும்போது, செரிமான மண்டலம் ஆரோக்கியமா இருக்கும்.
பழையச் சோற்றில் நோய் எதிர்ப்புக்கான காரணிகள் அதிகம் உள்ளன. தினமும் காலையில் பழையச் சோற்றைச் சாப்பிட்டு வந்தால், முதுமைத் தோற்றம் விரைவில் ஏற்படுவதைத் தடுக்கலாம். அதாவது, நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க விரும்பினால், பழையச் சோற்றை காலை உணவாக உட்கொண்டு வாருங்கள். காலையில் பழையச் சோற்றை உட்கொண்டால், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படலாம். ரத்த அழுத்தம், அல்சர் பிரச்னைக்கு பழைய சோறுதான் அருமருந்து...’’ னு அமெரிக்க ஊட்டச் சத்து விஞ்ஞானிங்க நம்ம ஊர் பழைய சோத்தை இப்ப புகழ்ந்து தள்ளிக்கிட்டிருக்காங்க. நம்ம மக்களும் இந்த விஷயத்தை பெருமையா இப்ப பேசிக்கிட்டிருக்காங்க. ஆனா, இதைத்தான் பல நூறு வருஷத்துக்கு முன்னாடியே, நம்ம நாட்டு விஞ்ஞானிகளான சித்தர் பெருமக்கள்
‘ஆற்று நீர் வாதம் போக்கும்,
அருவி நீர் பித்தம் போக்கும்,
சோற்று நீர் இரண்டையும் போக்கும்’னு சொல்லி வெச்சிருக்காங்க. வெள்ளக்காரன் கோட்டு, சூட்டு போட்டுக்கிட்டு வந்து, சொன்னாதான் நம்ம பாரம்பர்ய உணவோட அருமை நமக்கு புரியுது.