மண்புழு மன்னாரு: மருந்தாகும் மந்தாரை இலை!
- கழுதை வளர்க்கலாம் வாங்க!அழைக்கும் கால்நடை பல்கலைக்கழகம்!
- மண்புழு மன்னாரு: கைவிட்ட பழப்பயிர்கள்.. கைகொடுத்த மரப்பயிர்கள்! இது தோற்று ஜெயித்தவரின் கதை!
- மண்புழு மன்னாரு: உலகை உலுக்கிய விவசாயிகள் போராட்டம்! - இது ‘ரஷ்யா’வின் கதை!
- மண்புழு மன்னாரு : உழவே ‘தலை’... உழவர்களைக் கொண்டாடுவோம்!
- மண்புழு மன்னாரு : நம்மாழ்வார் சொல்லிய அந்த ‘இயற்கை’ ரகசியம்!
- மண்புழு மன்னாரு : உலகம் போற்றிய பட்டு வளர்ப்பு... சூரரைப் போற்று சொல்ல மறந்த கதை!
- மண்புழு மன்னாரு : இயற்கை விவசாயத்தைப் போற்று! ‘சூரரைப் போற்று’ சொல்ல மறந்த கதை!
- மண்புழு மன்னாரு : வேளாண்மைப் படிப்பும் விந்தையான விதிகளும்!
- மண்புழு மன்னாரு : அடிமாடுகள் கொடுக்கும் ஒரு கோடி வருமானம்!
- பாலில் பல லட்சங்கள் சம்பாதிக்கும் பெண்களும் சாக்லேட் செய்து சாதிக்கும் ஸ்விட்சர்லாந்தும்!
- மண்புழு மன்னாரு : கூட்டுப்பண்ணையும் இயற்கை வேளாண்மையின் குருபீடமும்!
- மண்புழு மன்னாரு : சர்க்கரை நோய்க்கு ரேஷன் அரிசியும் கரும்பு ரகம் கண்டுபிடித்த விவசாயியும்!
- மண்புழு மன்னாரு : அரசு திட்டங்கள் வேண்டாம்; மரம் வளர்ப்பு போதும்!
- மண்புழு மன்னாரு : சினிமா கொடுத்த விருந்தும் எம்.ஜி.ஆர் ஓட்டிய டிராக்டரும்!
- மண்புழு மன்னாரு : அஜ்வா பேரீச்சையும் அறிவு கொள்முதலும்!
- மண்புழு மன்னாரு : ஒரு லட்சம் பவுனும்... மேட்டூர் அணை கட்டிய கதையும்!
- மண்புழு மன்னாரு: கால்வாய்த் தொழில்நுட்ப சிற்பி காலிங்கராயன்!
- மண்புழு மன்னாரு : தமிழ்நாட்டை விரும்பிய தலைக்காவிரி… கைப்பற்றிக்கொண்ட கர்நாடகம்!
- மண்புழு மன்னாரு : ஒரு சிறுதானிய மனிதரின் கதை!
- மண்புழு மன்னாரு : பி.பி.டி நெல்லும் பி.எம்.டபுள்யூ விவசாயிகளும்!
- மண்புழு மன்னாரு : சீன மீனும் சென்னைப்பட்டினமும்!
- மண்புழு மன்னாரு : பாரம்பர்ய மீன்களை பயமுறுத்தும் ஆப்பிரிக்க மீன்!
- மண்புழு மன்னாரு : சந்தனப் பொட்டு வைக்காத சந்தன மலைமக்கள்!
- கவரிமாவுக்கும் கவரிமானுக்கும் என்ன சம்பந்தம்?
- சீனாவை மிஞ்சும் சேலம் வெண்பட்டு... கருணை பொங்கும் காஞ்சிப் பட்டு!
- கடப்பாரை கேட்ட கால்நடை மருத்துவர்!
- மண்புழு மன்னாரு: பட்டறிவுப் பாடம் சொன்ன விவசாயி!
- மண்புழு மன்னாரு: பிரமிடு கட்டிய விவசாயிகளும் பிரமிடு விவசாய முறையும்!
- மண்புழு மன்னாரு : விரைவில்... இயற்கை வேளாண் கொள்கை!
- மண்புழு மன்னாரு : மரம் வளர்ப்புக் கலையும் 10 நாள் மழைப் பொழிவும்!
- மண்புழு மன்னாரு : கவுனி அரிசியை ருசித்த சீன அதிபரும் தவளை வளர்க்கும் சீன விவசாயியும்!
- மண்புழு மன்னாரு: புற்றுநோய்க்குச் சவால் விடும் சாம்பார் சாதம்!
- மண்புழு மன்னாரு: மரங்களைக் காத்த - பழந்தமிழர்களும் ஆப்பிரிக்க தேவதையும்!
- மண்புழு மன்னாரு: எம்.எஸ்.சுவாமிநாதன் தமிழ்நாட்டுக்கு ஏன் வந்தார்?
- மண்புழு மன்னாரு: முளைப்பாரியும் தொடிப்புழுதியும்!
- மண்புழு மன்னாரு: ஆகாவலியும் அப்பள வாழையும்!
- மண்புழு மன்னாரு: சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜி.டி. நாயுடு!
- மண்புழு மன்னாரு: சுய உதவிக்குழு உருவான கதை!
- மண்புழு மன்னாரு: சந்தன மரங்களைப் பாதுகாக்கும் சிலிக்கான் சிப்!
- மண்புழு மன்னாரு: சந்தன மரம் டன் ரூ.50,00,000; செம்மரம் டன் ரூ.27,00,000
- மண்புழு மன்னாரு: நாட்டுக்கு வழிகாட்டும் மாதிரி கிராமம்!
- மண்புழு மன்னாரு: பீனிக்ஸ் பறவையும் பனை விதையும்!
- மண்புழு மன்னாரு: பஞ்சாப் புத்தாண்டும் பாஸ்மதி அரிசி வந்த கதையும்!
- மண்புழு மன்னாரு: உணவு மருத்துவமும் தரமான சம்பவங்களும்!
- மண்புழு மன்னாரு: ‘வாட்ஸ்அப்’ சித்தர்களும் உணவு மருத்துவமும்!
- மண்புழு மன்னாரு: ‘உப்பு’ யானையும் வெள்ளை யானையும்!
- மண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்!
- மண்புழு மன்னாரு: மழை பெய்வதை அறிவிக்கும் ‘அறிவாளி’ எலிகள்!
- மண்புழு மன்னாரு: நீரோட்டம் காட்டிய பசுங்கன்றும் பால் சுரக்கும் சுரைக்காயும்!
- மண்புழு மன்னாரு: தீங்கில்லாத மழையும் தீங்கான தேயிலை மலையும்!
- மண்புழு மன்னாரு: பெட்ரோல், டீசல் வேண்டாம்... மாடுகள் மூலமும் பேருந்துகள் ஓடும்!
- திரைப்படப் பாடலும் ‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா’ சோறும்!
- ‘சர்தார்’ கொய்யாவும் ‘ஆர்கானிக்’ ஆடுகளுக்கு மவுசும்!
- மண்புழு மன்னாரு: பணம் தேவைப்படாத வாழ்க்கையும் மானாவாரியில் விளையும் ‘ஜவாரி’யும்!
- மண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியா!
- மண்புழு மன்னாரு: தாய்லாந்து செல்போனும் சல்லிசான மாந்தோப்பும்!
- மண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபி!
- மண்புழு மன்னாரு: குறைந்த விலையில் மரக்கன்றுகள் வாங்க... ‘கடியம்’ போங்க!
- மண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்!
- மண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்!
- மண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானா!
- மண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனை!
- மண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும்!
- மண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்! கெட்டிக்காரன் புளுகும்
- மண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்!
- மண்புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம்!’
- மண்புழு மன்னாரு: மூக்குப் பொடி அளவு உரமும் மகசூலைக் கூட்ட உதவும்!
- மண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்!
- மண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசு!’
- மண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’
- மண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’
- மண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர்!
- மண்புழு மன்னாரு: கம்போஸ்ட் தயாரித்தால் ரூ.50 இனாம்!
- மண்புழு மன்னாரு: லட்ச ரூபாய் செலவில்... சம்பங்கி தந்த அனுபவப் பாடம்!
- மண்புழு மன்னாரு: பஞ்சாப் ரகசியம்... பனியும் புகையும்!
- மண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்!
- மண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்!
- மண்புழு மன்னாரு: உலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்!’
- மண்புழு மன்னாரு: பாம்புச் சர்க்கரையும் வெண்டைக்காய் வெல்லமும்!
- மண்புழு மன்னாரு: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும்!
- மண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும்!
- மண்புழு மன்னாரு: மகாத்மா காந்தியும் பிக்பாஸ்தான்!
- மண்புழு மன்னாரு: கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்!
- மண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும் வெட்டிவேர் மகத்துவமும்!
- மண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்
- மண்புழு மன்னாரு: வினோபா போட்ட ‘ஜீரோ பட்ஜெட்’ விதை!
- மண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்!
- மண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்!
- மண்புழு மன்னாரு: ஐந்து ரூபாய்க்கு கவலைப்பட்ட காந்தி!
- மண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்!
- மண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்!”
- மண்புழு மன்னாரு: ஜனாதிபதி விவசாயியும் விவசாய முதலமைச்சரும்!
- மண்புழு மன்னாரு: மதயானையும் மரமனிதனும்!
- மண்புழு மன்னாரு: காளைகளை அடக்கிய கண்ணன்!
- மண்புழு மன்னாரு: அகத்திக்கீரையும், நாட்டு மாடும் செய்த அற்புதம்!
- மண்புழு மன்னாரு: மாடுகளை மகிழ்விக்கும் ‘ஆதீண்டு குற்றி’ !
- மண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்!
- மண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும்!
- மண்புழு மன்னாரு: மாடு வளர்ப்பும் ‘ஸ்டார்ட் அப்’தான்!
- மண்புழு மன்னாரு: கோபமான மா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்!
- மண்புழு மன்னாரு: ஜென் குருவுக்குப் பாடம் சொன்ன பெண் விவசாயி!
- மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோ!
- மண்புழு மன்னாரு: ஆடிப் பழஞ்சோறும் 'ஆதண்டங்காய்' வற்றலும்..!
- மண்புழு மன்னாரு: அலையாத்தி காடுகளும் தில்லை மரமும்!
- மண்புழு மன்னாரு: தங்கச்சிமட நாத்து, மதுரையில மணக்குது!
- மண்புழு மன்னாரு: வெள்ளத்துக்கு சங்கதி சொன்ன சங்கு மண்டபம்!
- மண்புழு மன்னாரு: சுண்டைக்காய் கால் பணம்... சுமைக்கூலி முக்கால் பணத்தின் சூத்திரம்!
- மண்புழு மன்னாரு: செந்நெல், செஞ்சாலிநெல்... ஸ்ரீராமானுஜர் சொல்!
- மரத்தடி மாநாடு: மானியம் நிறுத்தம்... தவிப்பில் விவசாயிகள்!
- மண்புழு மன்னாரு: மருந்தாகும் மந்தாரை இலை!
- மண்புழு மன்னாரு: மயிலாடுதுறையில் மணக்கும்... ‘பாதிரி’ மாம்பழம்!
- மண்புழு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..!
- மண்புழு மன்னாரு: பழைய சோத்துக்குள் இருக்குது... ஜோரான மருந்து..!
- மண்புழு மன்னாரு: ‘வார்தா வெயிலும் தென்னை ஓலையும்..!’
- மண்புழு மன்னாரு: ‘நண்பேன்டா’ எலிகள்!
- மண்புழு மன்னாரு: குமரகமும் கொடம்புளியும்..!
- மண்புழு மன்னாரு: ஆட்டுப்பால்... மலேசிய மக்களின் மருந்து!
- மண்புழு மன்னாரு: மலையில் விளைந்தால் மாகாளி... நாட்டில் விளைந்தால் நன்னாரி..!
- மண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்து!
- மண்புழு மன்னாரு: ஜப்பானும், தஞ்சாவூர் நெல் சாகுபடியும்..!
- மண்புழு மன்னாரு: பொங்கிப் பாயும் பெருவெள்ளம்... சிலப்பதிகாரம் சொல்லும் தீர்வு!
- மண்புழு மன்னாரு: பரோட்டாவுக்கு சவால் விடும் தினை!
- மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையும்... முத்தான பலன்களும்!
- மண்புழு மன்னாரு: பனங்கருப்பட்டியும்,ஜால வித்தையும்!
- மண்புழு மன்னாரு: மூன்று வகை மனிதர்களும்... வெற்றிலை தாம்பூலமும்!
- மண்புழு மன்னாரு: கண்பார்வைக்கு அவரை...நீரிழிவுக்கு பரங்கி!
- மண்புழு மன்னாரு: வேகமெடுக்கும் இயற்கை விவசாயம்... கியூபா வழியில் கேரளா!

மாத்தி யோசி, ஓவியம்: ஹரன்

‘‘ஜுன் 5-ம் தேதி கொண்டாடப்பட்ட சுற்றுச்சூழல் தினத்தோட முக்கிய கோஷம் ‘காட்டுயிர்களைக் கொல்லாதீங்க’ங்கிறதுதான். காட்டுக்குள்ள போகாதீங்க... காட்டுக்குள்ள போகாதீங்க...’’னு ஒரு பக்கம் எதிர்ப்பும், மறுபக்கம் காடு, காட்டுயிர், சுற்றுச்சூழல் பாதுகாப்புனு பேசிகிட்டு, காட்டுக்குள்ள ஒரு கூட்டம், கூட்டமா போறதும் நடக்குது. ‘கடவுளின்தேசம்’(god’s own state)னு சொல்லப்படற கேரளாவுல ‘எகோ-டூரிஸம்’(Eco-tourism)ங்கிற பேர்ல நடக்கிற கூத்து, காட்டையும், காட்டுல வாழ்ற உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலா இருக்கு. கேரளாவுல பல பகுதியில ‘எகோ-டூரிஸம்’னு சொல்ற ‘காட்டு உலா’ ரொம்பவே பிரபலம். வனத்துறை சார்பிலேயே, இந்த உலாவுக்கு ஏற்பாடு செய்றாங்க. தமிழ்நாடு மட்டும் இதுக்கு விதிவிலக்கா என்ன..? கேரளாவுல சட்டப்படி நடந்தா, இங்க வேற மாதிரி நடக்குது.
இப்படி காட்டுக்குள்ள மனுஷங்க அடிக்கடி நுழையுறது அங்க வாழ்ற உயிர்களுக்கு ஆபத்தானதுனு வனவியல் விஞ்ஞானிங்க எச்சரிக்கை செய்றாங்க. ஏன்னா, மனுஷங்க விதவிதமான சோப்பு, ஷாம்பு, வாசனைத் திரவியங்களைப் போட்டுகிட்டு காட்டுக்குள்ள திரிஞ்சா, காட்டுயிர்களோட நுண்ணறியும் சக்திக்கு தொந்தரவா இருக்குமாம். நுண்ணறியும் திறன்ல குழப்பம் வந்தா, எதிரி விலங்குகள் நடமாட்டத்தை அறிய முடியாமல் போகுமாம். உதாரணத்துக்கு, மான்களுக்கு தன்னோட எதிரிகளான புலி, சிங்கம் இதுகளவிட ஆபத்தான மனுஷங்களோட வாசனை எல்லாம் தெரியும். அந்த வாசனையை வெச்சே, அந்த திசைப்பக்கம் போகாம திரும்பிடும். ஆனா, நவீன உலகத்து மனுஷன் கூட்டமா போகும் போது, காட்டுக்குள்ள வாழும் ஒவ்வோர் உயிருக்கும் ஆபத்து உருவாகுது. கூடவே இவங்க கொண்டு போற பிளாஸ்டிக் பேப்பர், பீர் பாட்டில் கண்ணாடிங்க... பெரிய, பெரிய யானைகளோட உயிர்களுக்கே கூட உலை வைக்கிறதும் உண்டு. இதனாலதான், காட்டுக்குள்ள மனுஷனை அனுப்பாதீங்கனு எதிர்ப்புக் குரல் ஒலிக்குது.
அப்படினா, காட்டுக்குள்ள வாழ்ற மலைவாழ் குடிமக்கள் மூலமா, காட்டுக்குள்ள இருக்கிற எந்த உயிர்களுக்கும் குந்தகம் ஏற்படாதானு கேட்கலாம். நிச்சயம் பாதிப்பு ஏற்படாது. ஏன்னா, காடுங்கதான் தங்களோட வாழ்வாதாரம்ங்கிறது அந்த மக்களுக்கு நல்லாவே தெரியும்.

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை மலைப்பகுதியில உள்ள மலைவாழ் மக்களுக்கு ‘காணி’ ங்கிற பேரு உண்டு. இந்த மலையில வாழுற மக்களுக்கு, எப்படி காணினு பேரு வந்திருக்கும்னு விசாரிச்சப்போ ஒரு கதை சொன்னாங்க. திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் மார்த்தாண்டவர்மா, ஆபத்து காலத்தில கன்னியாகுமரி காட்டுக்குள்ள தஞ்சம் புகுந்திருக்கார். அங்க வாழ்ந்த பழங்குடி மக்கள் மன்னரைப் பாதுகாத்து சேவகம் செய்திருக்காங்க. இதற்கு பிரதிபலனா மன்னர் மீண்டும் அரியணை ஏறியதும், அந்த மக்கள் வசித்து வந்த மலைப் பகுதியில் இருந்த இடங்களை, ‘கரம் ஒளிவு பண்டார வகை காணி சொத்து’ என்ற பெயரில், இவர்களுக்கு செப்புப் பட்டயம் எழுதிக் கொடுத்திருக்கிறார். ‘காணி’ என்றால் ‘நிலம்’ மன்னர் கொடுத்த காணிக்கு, அதாவது நிலத்துக்குச் சொந்தக்காரர்கள் ஆனாதால, இந்த மக்களுக்கு காணினு பேரு வந்திருக்கு. திருவிதாங்கூர் மன்னர் கொடுத்த நிலத்துல விவசாயம் செய்தாலும், காணி மக்களுக்கு இப்பவும் காடுதான் தெய்வம். காட்டுல விளைஞ்சு கிடக்கிற கிழங்கு, பழ வகைகள், காந்தாரி மிளகாயைச் சேகரிச்சு சாப்பிடறதை இன்னும் கூட சில பேரு பழக்கமா வெச்சிருக்காங்க. மலைவாழ்மக்களுக்கு காடுங்கதான் அட்சயபாத்திரம் அதை முறையா எப்படி பயன்படுத்திக்கிறதுங்கிற, அறிவும், தெளிவும் அந்த மக்கள்கிட்ட அதிகமாவே இருக்கு.
ஐரோப்பிய நாடுகளுக்கு மந்தாரை இலைகளை ஏற்றுமதி செய்றாங்க, ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்துல உள்ள மலைவாழ் மக்கள். காட்டுப்பகுதியில உள்ள மந்தாரை மரத்துல இருந்து, இலைகளை சேமிச்சு, பதப்படுத்தி கப்பல் மூலமா அனுப்புறாங்க.
இந்த மந்தாரை இலைகளைத் தைச்சு, அதுல சாப்பாடு சாப்பிட்ட பழக்கத்தை நாம மறந்துட்டோம். ஆனா, ஐரோப்பிய ஹோட்டல்கள்ல மந்தாரை இலையை அழகான தட்டா செஞ்சு, விதவிதமா சாப்பிடுறாங்க. ‘இந்தத் தட்டில் மருத்துவ குணம் இருக்கு. இந்தத் தட்டு மட்கும் தன்மை (Bio-Degradable) கொண்டது’னு விளம்பரம் வேற செய்றாங்க. அப்படி என்ன இந்த மந்தாரைக்குள்ள இருக்குனு பார்த்த ‘மந்தாரை உள்ளவரை நொந்தாரைக் காண முடியாது’னு ஒரு சித்த மருத்துவப் பழமொழி சொல்லுது. ‘சீதபேதி மற்றும் மூலவியாதியைக் குணப்படுத்த இந்த இலை உதவும்’னு மந்தாரை புகழ்பாடுது சித்த மருத்துவம்.