மண்புழு மன்னாரு: அலையாத்தி காடுகளும் தில்லை மரமும்!
- கழுதை வளர்க்கலாம் வாங்க!அழைக்கும் கால்நடை பல்கலைக்கழகம்!
- மண்புழு மன்னாரு: கைவிட்ட பழப்பயிர்கள்.. கைகொடுத்த மரப்பயிர்கள்! இது தோற்று ஜெயித்தவரின் கதை!
- மண்புழு மன்னாரு: உலகை உலுக்கிய விவசாயிகள் போராட்டம்! - இது ‘ரஷ்யா’வின் கதை!
- மண்புழு மன்னாரு : உழவே ‘தலை’... உழவர்களைக் கொண்டாடுவோம்!
- மண்புழு மன்னாரு : நம்மாழ்வார் சொல்லிய அந்த ‘இயற்கை’ ரகசியம்!
- மண்புழு மன்னாரு : உலகம் போற்றிய பட்டு வளர்ப்பு... சூரரைப் போற்று சொல்ல மறந்த கதை!
- மண்புழு மன்னாரு : இயற்கை விவசாயத்தைப் போற்று! ‘சூரரைப் போற்று’ சொல்ல மறந்த கதை!
- மண்புழு மன்னாரு : வேளாண்மைப் படிப்பும் விந்தையான விதிகளும்!
- மண்புழு மன்னாரு : அடிமாடுகள் கொடுக்கும் ஒரு கோடி வருமானம்!
- பாலில் பல லட்சங்கள் சம்பாதிக்கும் பெண்களும் சாக்லேட் செய்து சாதிக்கும் ஸ்விட்சர்லாந்தும்!
- மண்புழு மன்னாரு : கூட்டுப்பண்ணையும் இயற்கை வேளாண்மையின் குருபீடமும்!
- மண்புழு மன்னாரு : சர்க்கரை நோய்க்கு ரேஷன் அரிசியும் கரும்பு ரகம் கண்டுபிடித்த விவசாயியும்!
- மண்புழு மன்னாரு : அரசு திட்டங்கள் வேண்டாம்; மரம் வளர்ப்பு போதும்!
- மண்புழு மன்னாரு : சினிமா கொடுத்த விருந்தும் எம்.ஜி.ஆர் ஓட்டிய டிராக்டரும்!
- மண்புழு மன்னாரு : அஜ்வா பேரீச்சையும் அறிவு கொள்முதலும்!
- மண்புழு மன்னாரு : ஒரு லட்சம் பவுனும்... மேட்டூர் அணை கட்டிய கதையும்!
- மண்புழு மன்னாரு: கால்வாய்த் தொழில்நுட்ப சிற்பி காலிங்கராயன்!
- மண்புழு மன்னாரு : தமிழ்நாட்டை விரும்பிய தலைக்காவிரி… கைப்பற்றிக்கொண்ட கர்நாடகம்!
- மண்புழு மன்னாரு : ஒரு சிறுதானிய மனிதரின் கதை!
- மண்புழு மன்னாரு : பி.பி.டி நெல்லும் பி.எம்.டபுள்யூ விவசாயிகளும்!
- மண்புழு மன்னாரு : சீன மீனும் சென்னைப்பட்டினமும்!
- மண்புழு மன்னாரு : பாரம்பர்ய மீன்களை பயமுறுத்தும் ஆப்பிரிக்க மீன்!
- மண்புழு மன்னாரு : சந்தனப் பொட்டு வைக்காத சந்தன மலைமக்கள்!
- கவரிமாவுக்கும் கவரிமானுக்கும் என்ன சம்பந்தம்?
- சீனாவை மிஞ்சும் சேலம் வெண்பட்டு... கருணை பொங்கும் காஞ்சிப் பட்டு!
- கடப்பாரை கேட்ட கால்நடை மருத்துவர்!
- மண்புழு மன்னாரு: பட்டறிவுப் பாடம் சொன்ன விவசாயி!
- மண்புழு மன்னாரு: பிரமிடு கட்டிய விவசாயிகளும் பிரமிடு விவசாய முறையும்!
- மண்புழு மன்னாரு : விரைவில்... இயற்கை வேளாண் கொள்கை!
- மண்புழு மன்னாரு : மரம் வளர்ப்புக் கலையும் 10 நாள் மழைப் பொழிவும்!
- மண்புழு மன்னாரு : கவுனி அரிசியை ருசித்த சீன அதிபரும் தவளை வளர்க்கும் சீன விவசாயியும்!
- மண்புழு மன்னாரு: புற்றுநோய்க்குச் சவால் விடும் சாம்பார் சாதம்!
- மண்புழு மன்னாரு: மரங்களைக் காத்த - பழந்தமிழர்களும் ஆப்பிரிக்க தேவதையும்!
- மண்புழு மன்னாரு: எம்.எஸ்.சுவாமிநாதன் தமிழ்நாட்டுக்கு ஏன் வந்தார்?
- மண்புழு மன்னாரு: முளைப்பாரியும் தொடிப்புழுதியும்!
- மண்புழு மன்னாரு: ஆகாவலியும் அப்பள வாழையும்!
- மண்புழு மன்னாரு: சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜி.டி. நாயுடு!
- மண்புழு மன்னாரு: சுய உதவிக்குழு உருவான கதை!
- மண்புழு மன்னாரு: சந்தன மரங்களைப் பாதுகாக்கும் சிலிக்கான் சிப்!
- மண்புழு மன்னாரு: சந்தன மரம் டன் ரூ.50,00,000; செம்மரம் டன் ரூ.27,00,000
- மண்புழு மன்னாரு: நாட்டுக்கு வழிகாட்டும் மாதிரி கிராமம்!
- மண்புழு மன்னாரு: பீனிக்ஸ் பறவையும் பனை விதையும்!
- மண்புழு மன்னாரு: பஞ்சாப் புத்தாண்டும் பாஸ்மதி அரிசி வந்த கதையும்!
- மண்புழு மன்னாரு: உணவு மருத்துவமும் தரமான சம்பவங்களும்!
- மண்புழு மன்னாரு: ‘வாட்ஸ்அப்’ சித்தர்களும் உணவு மருத்துவமும்!
- மண்புழு மன்னாரு: ‘உப்பு’ யானையும் வெள்ளை யானையும்!
- மண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்!
- மண்புழு மன்னாரு: மழை பெய்வதை அறிவிக்கும் ‘அறிவாளி’ எலிகள்!
- மண்புழு மன்னாரு: நீரோட்டம் காட்டிய பசுங்கன்றும் பால் சுரக்கும் சுரைக்காயும்!
- மண்புழு மன்னாரு: தீங்கில்லாத மழையும் தீங்கான தேயிலை மலையும்!
- மண்புழு மன்னாரு: பெட்ரோல், டீசல் வேண்டாம்... மாடுகள் மூலமும் பேருந்துகள் ஓடும்!
- திரைப்படப் பாடலும் ‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா’ சோறும்!
- ‘சர்தார்’ கொய்யாவும் ‘ஆர்கானிக்’ ஆடுகளுக்கு மவுசும்!
- மண்புழு மன்னாரு: பணம் தேவைப்படாத வாழ்க்கையும் மானாவாரியில் விளையும் ‘ஜவாரி’யும்!
- மண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியா!
- மண்புழு மன்னாரு: தாய்லாந்து செல்போனும் சல்லிசான மாந்தோப்பும்!
- மண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபி!
- மண்புழு மன்னாரு: குறைந்த விலையில் மரக்கன்றுகள் வாங்க... ‘கடியம்’ போங்க!
- மண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்!
- மண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்!
- மண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானா!
- மண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனை!
- மண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும்!
- மண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்! கெட்டிக்காரன் புளுகும்
- மண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்!
- மண்புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம்!’
- மண்புழு மன்னாரு: மூக்குப் பொடி அளவு உரமும் மகசூலைக் கூட்ட உதவும்!
- மண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்!
- மண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசு!’
- மண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’
- மண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’
- மண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர்!
- மண்புழு மன்னாரு: கம்போஸ்ட் தயாரித்தால் ரூ.50 இனாம்!
- மண்புழு மன்னாரு: லட்ச ரூபாய் செலவில்... சம்பங்கி தந்த அனுபவப் பாடம்!
- மண்புழு மன்னாரு: பஞ்சாப் ரகசியம்... பனியும் புகையும்!
- மண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்!
- மண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்!
- மண்புழு மன்னாரு: உலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்!’
- மண்புழு மன்னாரு: பாம்புச் சர்க்கரையும் வெண்டைக்காய் வெல்லமும்!
- மண்புழு மன்னாரு: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும்!
- மண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும்!
- மண்புழு மன்னாரு: மகாத்மா காந்தியும் பிக்பாஸ்தான்!
- மண்புழு மன்னாரு: கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்!
- மண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும் வெட்டிவேர் மகத்துவமும்!
- மண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்
- மண்புழு மன்னாரு: வினோபா போட்ட ‘ஜீரோ பட்ஜெட்’ விதை!
- மண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்!
- மண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்!
- மண்புழு மன்னாரு: ஐந்து ரூபாய்க்கு கவலைப்பட்ட காந்தி!
- மண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்!
- மண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்!”
- மண்புழு மன்னாரு: ஜனாதிபதி விவசாயியும் விவசாய முதலமைச்சரும்!
- மண்புழு மன்னாரு: மதயானையும் மரமனிதனும்!
- மண்புழு மன்னாரு: காளைகளை அடக்கிய கண்ணன்!
- மண்புழு மன்னாரு: அகத்திக்கீரையும், நாட்டு மாடும் செய்த அற்புதம்!
- மண்புழு மன்னாரு: மாடுகளை மகிழ்விக்கும் ‘ஆதீண்டு குற்றி’ !
- மண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்!
- மண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும்!
- மண்புழு மன்னாரு: மாடு வளர்ப்பும் ‘ஸ்டார்ட் அப்’தான்!
- மண்புழு மன்னாரு: கோபமான மா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்!
- மண்புழு மன்னாரு: ஜென் குருவுக்குப் பாடம் சொன்ன பெண் விவசாயி!
- மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோ!
- மண்புழு மன்னாரு: ஆடிப் பழஞ்சோறும் 'ஆதண்டங்காய்' வற்றலும்..!
- மண்புழு மன்னாரு: அலையாத்தி காடுகளும் தில்லை மரமும்!
- மண்புழு மன்னாரு: தங்கச்சிமட நாத்து, மதுரையில மணக்குது!
- மண்புழு மன்னாரு: வெள்ளத்துக்கு சங்கதி சொன்ன சங்கு மண்டபம்!
- மண்புழு மன்னாரு: சுண்டைக்காய் கால் பணம்... சுமைக்கூலி முக்கால் பணத்தின் சூத்திரம்!
- மண்புழு மன்னாரு: செந்நெல், செஞ்சாலிநெல்... ஸ்ரீராமானுஜர் சொல்!
- மரத்தடி மாநாடு: மானியம் நிறுத்தம்... தவிப்பில் விவசாயிகள்!
- மண்புழு மன்னாரு: மருந்தாகும் மந்தாரை இலை!
- மண்புழு மன்னாரு: மயிலாடுதுறையில் மணக்கும்... ‘பாதிரி’ மாம்பழம்!
- மண்புழு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..!
- மண்புழு மன்னாரு: பழைய சோத்துக்குள் இருக்குது... ஜோரான மருந்து..!
- மண்புழு மன்னாரு: ‘வார்தா வெயிலும் தென்னை ஓலையும்..!’
- மண்புழு மன்னாரு: ‘நண்பேன்டா’ எலிகள்!
- மண்புழு மன்னாரு: குமரகமும் கொடம்புளியும்..!
- மண்புழு மன்னாரு: ஆட்டுப்பால்... மலேசிய மக்களின் மருந்து!
- மண்புழு மன்னாரு: மலையில் விளைந்தால் மாகாளி... நாட்டில் விளைந்தால் நன்னாரி..!
- மண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்து!
- மண்புழு மன்னாரு: ஜப்பானும், தஞ்சாவூர் நெல் சாகுபடியும்..!
- மண்புழு மன்னாரு: பொங்கிப் பாயும் பெருவெள்ளம்... சிலப்பதிகாரம் சொல்லும் தீர்வு!
- மண்புழு மன்னாரு: பரோட்டாவுக்கு சவால் விடும் தினை!
- மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையும்... முத்தான பலன்களும்!
- மண்புழு மன்னாரு: பனங்கருப்பட்டியும்,ஜால வித்தையும்!
- மண்புழு மன்னாரு: மூன்று வகை மனிதர்களும்... வெற்றிலை தாம்பூலமும்!
- மண்புழு மன்னாரு: கண்பார்வைக்கு அவரை...நீரிழிவுக்கு பரங்கி!
- மண்புழு மன்னாரு: வேகமெடுக்கும் இயற்கை விவசாயம்... கியூபா வழியில் கேரளா!

மாத்தி யோசி ஓவியம்: ஹரன்

பிச்சாவரம்... கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து 14 கிலோமீட்டர் தூரத்துல இருக்கு. வெளிநாட்டுப் பறவைகளுக்கும், வெளிநாட்டுக்காரங்களுக்கும் இந்த இடத்தோட அருமை பெருமை தெரியுது. அதனாலத்தான், தமிழ்நாட்டு பக்கம் வந்தா, பிச்சாவரம் மண்ணை மிதிச்சுட்டு போறதை பெரும்பாலும் வழக்கமா வெச்சிருக்காங்க வெளிநாட்டுக்காரங்க. இங்க ஓடி வந்து, இதோட இயற்கை அழகை ரசிச்சு பார்க்குறாங்க. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், இங்க வர்ற மக்களுக்கு பாதுகாப்பான படகுகள் மூலமா சுத்தி காட்டுற வேலையை செய்யுது.
பிச்சாவரத்துல இருக்கிற அலையாத்தி (மாங்குரோவ்) காடுங்கதான், உலகத்திலேயே ரெண்டாவது பெரிய அலையாத்தி காடுன்னு புள்ளிவிவரம் சொல்லுது. கடல் சீற்றம் மூலமா பெரிய அலைகள் உருவானா, அந்த அலைகளோட வேகத்தைக் கட்டுப்படுத்துற வேலையைத்தான் இந்த அலையாத்தி காடுங்க செய்யுது. அலையோட வேகத்தை குறைக்கிறதாலதான், அலையாத்தி காடுனு தமிழ் மொழியில பேரு வெச்சிருக்காங்க. அரிய வகை மீன் இனங்கள் வாழவும், சில வகை மீன்கள் குஞ்சு பொரிக்கவும் அலையாத்தி காடுகளோட வேர்தான் அடைக்கலமா இருக்கு.
பிச்சாவரம் காட்டுப்பகுதியோட பரப்பளவு 2,800 ஏக்கர். இந்தப் பகுதியில சின்னச் சின்ன தீவுங்க சுமார் 50 உண்டு. 177 வகையான பறவைங்க இந்தப் பகுதியில வந்து போறதா, புள்ளிவிவரம் சொல்லுது. இந்திய அளவுல சதுப்பு நிலக்காட்டுப் பகுதி சுற்றுலாத் தலமா இருக்குன்னா, அது பிச்சாவரத்துல மட்டும்தாங்க. விதம்விதமான மரம், செடி கொடிங்க, மயில், மீன்கொத்தி, நாரை, பருந்துனு விதவிதமான பறவைகளும், குள்ளநரி, நீர் நாய்... என ஏராளமான உயிரினங்களும் உண்டு. இந்தக் காடு தமிழ்நாடு வனத்துறை பாதுகாப்புல இருக்கு. இந்தப் பகுதியில சினிமா படப்பிடிப்பும் நிறைய நடக்குது. படத்துல பார்த்தா, அது எங்கேயோ வெளிநாட்டுல எடுத்தது மாதிரி பசுமையா, பிரமாண்டமா இருக்கும். ஆனா, அத்தனையும் பிச்சாவரம் சதுப்புநிலப்பகுதியில எடுத்ததாத்தான் இருக்கும்.
எம்.ஜி.ஆர் நடிச்ச ‘இதயக்கனி’ திரைப்படத்தோட காட்சியை, இங்க இருக்கிற, ஒரு திட்டுல படம் புடிச்சிருக்காங்க. அதுல இருந்து, அந்த திட்டுக்கு எம்.ஜி.ஆர் திட்டுன்னு பேரு வெச்சு மக்கள் கூப்பிடறாங்க.
இந்த பிச்சாவரத்துக்கும், சிதம்பரம் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு. அதாவது, சிதம்பரம் நடராஜர் கோயிலோட தலவிருட்சம் ‘தில்லை’ மரம். இந்த மரம் பிச்சாவரம் அலையாத்தி காட்டுப்பகுதியில நிறையவே இருக்கு. அதாவது, ஒரு காலத்துல கடற்கரைப் பகுதி சிதம்பரம் நடராஜர் கோயில் வரையிலும் இருந்ததாகவும், காலப்போக்குல கடல் உள்வாங்கி பிச்சாவரம் பகுதியோட இப்போ நிக்குதுன்னும் சொல்றங்க. இதுக்கு ஆதாரமாத்தான், நடராஜர் கோயில்ல இப்பவும், தில்லை மரம் நின்னுக்கிட்டிருக்கு. சிதம்பரத்துக்கு ‘தில்லை’ன்னும் இன்னொரு பேரு உண்டு.
கூடவே, இன்னொரு கதையும் உலா வருது. முதலாம் பராந்தக சோழ மன்னருக்கு தொழுநோய் பாதிப்பு ஏற்பட்டுச்சாம். பலவிதமான ராஜ மருத்துவம் பார்த்தும் நோய் குணமான மாதிரி தெரியல. கடைசியா சித்தர்கள் வழிகாட்டல் மூலமா 48 நாள் சிதம்பரம் நடராஜர் கோயில தங்கி, தல விருட்சமான தில்லை மர இலையோட தீர்த்தத்தை (தண்ணீர்) குடிச்சாராம். இதுக்குப் பிறகு, பராந்தக சோழனுக்கு தொழுநோய் குணமாயிடுச்சுன்னும் சொல்றாங்க. இந்த முதலாம் பராந்தக சோழன்தான், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குப் பொன்னாலேயே கூரை செய்து கொடுத்திருக்கார். இவருக்கு ‘பொற்கூரை வேய்ந்த சோழன்’னும் பட்டப் பெயர் உண்டு. பிச்சாவரம் அலையாத்தி காட்டுப்பகுதியில உள்ள சுரபுன்னை, தில்லை மரங்களோட மருத்துவக் குணம் அந்த பகுதி தண்ணில கலந்திருக்காம். இதனால, அங்க மீன் பிடிக்குற மீனவர்களுக்கு, தொழுநோயோ, புற்றுநோயோ வரதில்லைன்னும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிங்க ஆய்வு மூலமா கண்டுபிடிச்சிருக்காங்க.
தில்லை மரத்துல ஏராளமான மருத்துவக் குணம் இருந்தாலும், இந்த மரத்துக்கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்துக்கணும்னு சொல்றாங்க. ஏன்னா, இந்த மரத்தோட பால் கண்ணுல பட்டா, கண் எரிச்சல் ஏற்பட்டு பார்வை குறைபாடு வந்துடுமாம், இதனாலத்தான், குருடாக்கும் மரம்னு (Blinding Tree) இதுக்கு இன்னொரு பேரு வெச்சிருக்காங்க. இனி சிதம்பரம்னு சொன்னா, நடராஜர் மட்டுமில்லீங்க, தில்லை மரமும் கண்ணு முன்னால வந்து நிக்கும்தானே!