மண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’
- கழுதை வளர்க்கலாம் வாங்க!அழைக்கும் கால்நடை பல்கலைக்கழகம்!
- மண்புழு மன்னாரு: கைவிட்ட பழப்பயிர்கள்.. கைகொடுத்த மரப்பயிர்கள்! இது தோற்று ஜெயித்தவரின் கதை!
- மண்புழு மன்னாரு: உலகை உலுக்கிய விவசாயிகள் போராட்டம்! - இது ‘ரஷ்யா’வின் கதை!
- மண்புழு மன்னாரு : உழவே ‘தலை’... உழவர்களைக் கொண்டாடுவோம்!
- மண்புழு மன்னாரு : நம்மாழ்வார் சொல்லிய அந்த ‘இயற்கை’ ரகசியம்!
- மண்புழு மன்னாரு : உலகம் போற்றிய பட்டு வளர்ப்பு... சூரரைப் போற்று சொல்ல மறந்த கதை!
- மண்புழு மன்னாரு : இயற்கை விவசாயத்தைப் போற்று! ‘சூரரைப் போற்று’ சொல்ல மறந்த கதை!
- மண்புழு மன்னாரு : வேளாண்மைப் படிப்பும் விந்தையான விதிகளும்!
- மண்புழு மன்னாரு : அடிமாடுகள் கொடுக்கும் ஒரு கோடி வருமானம்!
- பாலில் பல லட்சங்கள் சம்பாதிக்கும் பெண்களும் சாக்லேட் செய்து சாதிக்கும் ஸ்விட்சர்லாந்தும்!
- மண்புழு மன்னாரு : கூட்டுப்பண்ணையும் இயற்கை வேளாண்மையின் குருபீடமும்!
- மண்புழு மன்னாரு : சர்க்கரை நோய்க்கு ரேஷன் அரிசியும் கரும்பு ரகம் கண்டுபிடித்த விவசாயியும்!
- மண்புழு மன்னாரு : அரசு திட்டங்கள் வேண்டாம்; மரம் வளர்ப்பு போதும்!
- மண்புழு மன்னாரு : சினிமா கொடுத்த விருந்தும் எம்.ஜி.ஆர் ஓட்டிய டிராக்டரும்!
- மண்புழு மன்னாரு : அஜ்வா பேரீச்சையும் அறிவு கொள்முதலும்!
- மண்புழு மன்னாரு : ஒரு லட்சம் பவுனும்... மேட்டூர் அணை கட்டிய கதையும்!
- மண்புழு மன்னாரு: கால்வாய்த் தொழில்நுட்ப சிற்பி காலிங்கராயன்!
- மண்புழு மன்னாரு : தமிழ்நாட்டை விரும்பிய தலைக்காவிரி… கைப்பற்றிக்கொண்ட கர்நாடகம்!
- மண்புழு மன்னாரு : ஒரு சிறுதானிய மனிதரின் கதை!
- மண்புழு மன்னாரு : பி.பி.டி நெல்லும் பி.எம்.டபுள்யூ விவசாயிகளும்!
- மண்புழு மன்னாரு : சீன மீனும் சென்னைப்பட்டினமும்!
- மண்புழு மன்னாரு : பாரம்பர்ய மீன்களை பயமுறுத்தும் ஆப்பிரிக்க மீன்!
- மண்புழு மன்னாரு : சந்தனப் பொட்டு வைக்காத சந்தன மலைமக்கள்!
- கவரிமாவுக்கும் கவரிமானுக்கும் என்ன சம்பந்தம்?
- சீனாவை மிஞ்சும் சேலம் வெண்பட்டு... கருணை பொங்கும் காஞ்சிப் பட்டு!
- கடப்பாரை கேட்ட கால்நடை மருத்துவர்!
- மண்புழு மன்னாரு: பட்டறிவுப் பாடம் சொன்ன விவசாயி!
- மண்புழு மன்னாரு: பிரமிடு கட்டிய விவசாயிகளும் பிரமிடு விவசாய முறையும்!
- மண்புழு மன்னாரு : விரைவில்... இயற்கை வேளாண் கொள்கை!
- மண்புழு மன்னாரு : மரம் வளர்ப்புக் கலையும் 10 நாள் மழைப் பொழிவும்!
- மண்புழு மன்னாரு : கவுனி அரிசியை ருசித்த சீன அதிபரும் தவளை வளர்க்கும் சீன விவசாயியும்!
- மண்புழு மன்னாரு: புற்றுநோய்க்குச் சவால் விடும் சாம்பார் சாதம்!
- மண்புழு மன்னாரு: மரங்களைக் காத்த - பழந்தமிழர்களும் ஆப்பிரிக்க தேவதையும்!
- மண்புழு மன்னாரு: எம்.எஸ்.சுவாமிநாதன் தமிழ்நாட்டுக்கு ஏன் வந்தார்?
- மண்புழு மன்னாரு: முளைப்பாரியும் தொடிப்புழுதியும்!
- மண்புழு மன்னாரு: ஆகாவலியும் அப்பள வாழையும்!
- மண்புழு மன்னாரு: சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜி.டி. நாயுடு!
- மண்புழு மன்னாரு: சுய உதவிக்குழு உருவான கதை!
- மண்புழு மன்னாரு: சந்தன மரங்களைப் பாதுகாக்கும் சிலிக்கான் சிப்!
- மண்புழு மன்னாரு: சந்தன மரம் டன் ரூ.50,00,000; செம்மரம் டன் ரூ.27,00,000
- மண்புழு மன்னாரு: நாட்டுக்கு வழிகாட்டும் மாதிரி கிராமம்!
- மண்புழு மன்னாரு: பீனிக்ஸ் பறவையும் பனை விதையும்!
- மண்புழு மன்னாரு: பஞ்சாப் புத்தாண்டும் பாஸ்மதி அரிசி வந்த கதையும்!
- மண்புழு மன்னாரு: உணவு மருத்துவமும் தரமான சம்பவங்களும்!
- மண்புழு மன்னாரு: ‘வாட்ஸ்அப்’ சித்தர்களும் உணவு மருத்துவமும்!
- மண்புழு மன்னாரு: ‘உப்பு’ யானையும் வெள்ளை யானையும்!
- மண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்!
- மண்புழு மன்னாரு: மழை பெய்வதை அறிவிக்கும் ‘அறிவாளி’ எலிகள்!
- மண்புழு மன்னாரு: நீரோட்டம் காட்டிய பசுங்கன்றும் பால் சுரக்கும் சுரைக்காயும்!
- மண்புழு மன்னாரு: தீங்கில்லாத மழையும் தீங்கான தேயிலை மலையும்!
- மண்புழு மன்னாரு: பெட்ரோல், டீசல் வேண்டாம்... மாடுகள் மூலமும் பேருந்துகள் ஓடும்!
- திரைப்படப் பாடலும் ‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா’ சோறும்!
- ‘சர்தார்’ கொய்யாவும் ‘ஆர்கானிக்’ ஆடுகளுக்கு மவுசும்!
- மண்புழு மன்னாரு: பணம் தேவைப்படாத வாழ்க்கையும் மானாவாரியில் விளையும் ‘ஜவாரி’யும்!
- மண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியா!
- மண்புழு மன்னாரு: தாய்லாந்து செல்போனும் சல்லிசான மாந்தோப்பும்!
- மண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபி!
- மண்புழு மன்னாரு: குறைந்த விலையில் மரக்கன்றுகள் வாங்க... ‘கடியம்’ போங்க!
- மண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்!
- மண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்!
- மண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானா!
- மண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனை!
- மண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும்!
- மண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்! கெட்டிக்காரன் புளுகும்
- மண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்!
- மண்புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம்!’
- மண்புழு மன்னாரு: மூக்குப் பொடி அளவு உரமும் மகசூலைக் கூட்ட உதவும்!
- மண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்!
- மண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசு!’
- மண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’
- மண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’
- மண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர்!
- மண்புழு மன்னாரு: கம்போஸ்ட் தயாரித்தால் ரூ.50 இனாம்!
- மண்புழு மன்னாரு: லட்ச ரூபாய் செலவில்... சம்பங்கி தந்த அனுபவப் பாடம்!
- மண்புழு மன்னாரு: பஞ்சாப் ரகசியம்... பனியும் புகையும்!
- மண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்!
- மண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்!
- மண்புழு மன்னாரு: உலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்!’
- மண்புழு மன்னாரு: பாம்புச் சர்க்கரையும் வெண்டைக்காய் வெல்லமும்!
- மண்புழு மன்னாரு: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும்!
- மண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும்!
- மண்புழு மன்னாரு: மகாத்மா காந்தியும் பிக்பாஸ்தான்!
- மண்புழு மன்னாரு: கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்!
- மண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும் வெட்டிவேர் மகத்துவமும்!
- மண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்
- மண்புழு மன்னாரு: வினோபா போட்ட ‘ஜீரோ பட்ஜெட்’ விதை!
- மண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்!
- மண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்!
- மண்புழு மன்னாரு: ஐந்து ரூபாய்க்கு கவலைப்பட்ட காந்தி!
- மண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்!
- மண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்!”
- மண்புழு மன்னாரு: ஜனாதிபதி விவசாயியும் விவசாய முதலமைச்சரும்!
- மண்புழு மன்னாரு: மதயானையும் மரமனிதனும்!
- மண்புழு மன்னாரு: காளைகளை அடக்கிய கண்ணன்!
- மண்புழு மன்னாரு: அகத்திக்கீரையும், நாட்டு மாடும் செய்த அற்புதம்!
- மண்புழு மன்னாரு: மாடுகளை மகிழ்விக்கும் ‘ஆதீண்டு குற்றி’ !
- மண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்!
- மண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும்!
- மண்புழு மன்னாரு: மாடு வளர்ப்பும் ‘ஸ்டார்ட் அப்’தான்!
- மண்புழு மன்னாரு: கோபமான மா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்!
- மண்புழு மன்னாரு: ஜென் குருவுக்குப் பாடம் சொன்ன பெண் விவசாயி!
- மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோ!
- மண்புழு மன்னாரு: ஆடிப் பழஞ்சோறும் 'ஆதண்டங்காய்' வற்றலும்..!
- மண்புழு மன்னாரு: அலையாத்தி காடுகளும் தில்லை மரமும்!
- மண்புழு மன்னாரு: தங்கச்சிமட நாத்து, மதுரையில மணக்குது!
- மண்புழு மன்னாரு: வெள்ளத்துக்கு சங்கதி சொன்ன சங்கு மண்டபம்!
- மண்புழு மன்னாரு: சுண்டைக்காய் கால் பணம்... சுமைக்கூலி முக்கால் பணத்தின் சூத்திரம்!
- மண்புழு மன்னாரு: செந்நெல், செஞ்சாலிநெல்... ஸ்ரீராமானுஜர் சொல்!
- மரத்தடி மாநாடு: மானியம் நிறுத்தம்... தவிப்பில் விவசாயிகள்!
- மண்புழு மன்னாரு: மருந்தாகும் மந்தாரை இலை!
- மண்புழு மன்னாரு: மயிலாடுதுறையில் மணக்கும்... ‘பாதிரி’ மாம்பழம்!
- மண்புழு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..!
- மண்புழு மன்னாரு: பழைய சோத்துக்குள் இருக்குது... ஜோரான மருந்து..!
- மண்புழு மன்னாரு: ‘வார்தா வெயிலும் தென்னை ஓலையும்..!’
- மண்புழு மன்னாரு: ‘நண்பேன்டா’ எலிகள்!
- மண்புழு மன்னாரு: குமரகமும் கொடம்புளியும்..!
- மண்புழு மன்னாரு: ஆட்டுப்பால்... மலேசிய மக்களின் மருந்து!
- மண்புழு மன்னாரு: மலையில் விளைந்தால் மாகாளி... நாட்டில் விளைந்தால் நன்னாரி..!
- மண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்து!
- மண்புழு மன்னாரு: ஜப்பானும், தஞ்சாவூர் நெல் சாகுபடியும்..!
- மண்புழு மன்னாரு: பொங்கிப் பாயும் பெருவெள்ளம்... சிலப்பதிகாரம் சொல்லும் தீர்வு!
- மண்புழு மன்னாரு: பரோட்டாவுக்கு சவால் விடும் தினை!
- மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையும்... முத்தான பலன்களும்!
- மண்புழு மன்னாரு: பனங்கருப்பட்டியும்,ஜால வித்தையும்!
- மண்புழு மன்னாரு: மூன்று வகை மனிதர்களும்... வெற்றிலை தாம்பூலமும்!
- மண்புழு மன்னாரு: கண்பார்வைக்கு அவரை...நீரிழிவுக்கு பரங்கி!
- மண்புழு மன்னாரு: வேகமெடுக்கும் இயற்கை விவசாயம்... கியூபா வழியில் கேரளா!

மாத்தியோசிஓவியம்: ஹரன்
ரயிலில் பகல் நேரப்பயணம், பல அனுபவங்களைக் கொடுக்கும். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிலிருந்து, புதுடெல்லிக்கு 10 மணி நேர ரயில் பயணம் அமைஞ்சது. கலர் கலராக டர்பன் கட்டிய சர்தாஜிகளும், காலை 7 மணிக்கே சூடாகச் சப்பாத்தி வித்தபடி செல்லும் வியாபாரிகளுமாகப் பயணம் ஜோரா ஆரம்பிச்சது. என்னோட நல்ல காலம், ஒரு விவசாயக் குழு பக்கத்து இருக்கையில உட்கார்ந்திருந்தாங்க. அமிர்தசரஸ்ல நடந்த விவசாய நிகழ்ச்சியில கலந்துகிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பிக்கிட்டிருந்தாங்க. அந்தக் குழுவுல ஹரியானா, உத்தரப் பிரதேசம், பீகார்னு பல மாநில விவசாயிங்க இருந்தாங்க.
உத்தரப் பிரதேச விவசாயி ஒரு விஷயத்தைச் சொல்லிப் பேச்சுக் கச்சேரியை ஆரம்பிச்சாரு....
‘‘எங்க உத்தரப் பிரதேச மாநிலம், மலிகாபாத் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல மாம்பழ ஆராய்ச்சியாளரான ஹாஜி கலீமுல்லா, விதவிதமான புதிய மாம்பழ ரகங்களை உருவாக்கியதற்காக ‘பத்மஸ்ரீ’ விருது வாங்கினார். ஒரே மரத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட மாம்பழ ரகங்களை ஒட்டுக்கட்டி அசத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரபலங்களைக் கௌரவிக்கும் விதத்தில் அவர்களின் பெயர்களை, தான் உருவாக்கிய மாம்பழ ரகங்களுக்குச் சூட்டியுள்ளார். சமீபத்தில்கூடத் தான் கண்டுபிடித்துள்ள மாம்பழ ரகத்துக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பெயரை வைத்துள்ளார். இவரைப் போலவே, ராஜஸ்தான் மாநிலத்திலும் ஒரு சாதனை விவசாயி உள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா மாவட்டம், கிர்தார்புரா கிராமத்து விவசாயி கிஷன் சுமன், ‘மா’வில் புதிய ரகம் கண்டுபிடித்துள்ளார். இரண்டாம் வகுப்பு வரையிலுமே படித்துள்ள கிஷன் சுமன், விவசாயத்தின் மீதான காதலும் புதிய விஷயங்களைச் செய்ய வேண்டும் என்ற தூண்டுதலும், இவரைச் சாதனையாளராக உருவாக்கியுள்ளது.
தன்னோட தோட்டத்தில் உள்ள ஒரு மா மரம் ஜனவரி - பிப்ரவரி, ஜூன் - ஜூலை மற்றும் செப்டம்பர் - அக்டோபர் வரையிலான மூன்று பருவ காலத்தில் பூ பூப்பதைக் கவனித்து, அந்த மரத்திலிருந்து 5 ஒட்டுக்கன்றுகளை உருவாக்கியுள்ளார். இந்த ஒட்டுக்கன்றுகளும் மூன்று பருவத்தில் காய்த்துக் குலுங்குகின்றன. வேளாண் பல்கலைக்கழகம், ஆராய்ச்சி நிலையங்களின் விஞ்ஞானிகள் போட்டி போட்டுக் கொண்டு, கிஷன் சுமன் தோட்டத்துக்குப் படையெடுத்துக்கொண்டுள்ளார்கள். அதைப் பார்க்கும்போது, ஒரு பக்கம் சந்தோஷமாகவும் மறுபக்கம் பயமாகவும் இருந்தது. இந்த விஞ்ஞானிகள் உதவிசெய்கிறேன் என்கிற பெயரில், அந்த எளிய விவசாயி கண்டுபிடிப்பைத் தனது அரிய கண்டுபிடிப்பு என எழுதி ‘டாக்டர்’ பட்டம் வாங்காமல் இருந்தால் சரிதான்...’’ என்று சொல்லி முடிக்கும்போது, குபீர் சிரிப்பலைகள் ரயில் பெட்டியில் எதிரொலிச்சுது.
சூடாக டீ குடித்தப்படியே ஹரியானா மாநில விவசாயி பேச ஆரம்பிச்சார். ‘‘ரஜினி காந்த்போல, வர முடியாது. தன்னை நம்பியவர்களை, ரஜினி காந்த் கைவிட்டது கிடையாது’’னு சொல்லிக்கிட்டிருந்தாரு. நம்ம ஊரு சூப்பர் ஸ்டார் புகழ் வட மாநிலம் வரையிலும் பரவியிருக்கேன்னு நினைச்சேன். ஆனா, அந்த விவசாயி சொன்னது, சினிமா நடிகர் ரஜினி காந்தைப் பத்திச் சொல்லலைன்னு, கொஞ்சம் நேரம் கழிச்சுத்தான் புரிஞ்சது. அந்த விவசாயி, ரஜினி காந்த்னு சொன்னது, சம்பங்கி மலரைத்தான். சம்பங்கியை, வட மாநிலங்கள்ல, ‘ரஜினி காந்த், ரஜினி காந்தா’’னு பல பேருல அழைக்கிறாங்க.

‘‘மெக்சிகன் சிங்கிள், சிருங்கார், பிரஜ்வல், பியர்ல் டபுள், சுவாசினி, வைபவ் ஆகிய ரகங்கள் இருந்தாலும், பிரஜ்வல் ரகம் அதிக மகசூல் தருகின்றது. பூங்கொத்தில் மொட்டுகள் அதிகமாகவும் பூக்கள் நீளமாகவும் காணப்படும். பிரஜ்வல் சம்பங்கி ரகத்தைக் கர்நாடக மாநிலம் காசர்கட்டாவிலிருக்கும் இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தில்தான் உருவாக்கி வெளியிட்டுள்ளார்கள். நாட்டு ரகத்தைக் காட்டிலும் பெரிய பூக்களாக இருப்பதால் மலர் கொத்துகளில் பயன்படுத்தவும், சென்ட் எடுக்கவும் இந்த ரகம்தான் சிறந்தது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானா மாநிலத்தில் சம்பங்கிச் சாகுபடி செய்யத் தொடங்கிய விவசாயிகள், நல்ல வசதியுடன் வாழ்கிறார்கள். இவ்வளவுக்கும் ஏக்கர் கணக்கில்கூட, சாகுபடி செய்வதில்லை. 30 சென்ட், 50 சென்ட் எனக் குறைந்த நிலப்பரப்பில், ரஜினி காந்த்தைச் சாகுபடி செய்து லாபம் எடுத்து வருகிறார்கள்’’னு அந்த விவசாயி, சொல்லி முடிக்கும்போது, பக்கத்தில் இருந்த விவசாயிகள் முகத்துல ஆச்சர்யமும் நாமும் அதைச் சாகுபடி செய்யணும்ங்கிற ஏக்கமும் தெரிஞ்சது.