மண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசு!’
- கழுதை வளர்க்கலாம் வாங்க!அழைக்கும் கால்நடை பல்கலைக்கழகம்!
- மண்புழு மன்னாரு: கைவிட்ட பழப்பயிர்கள்.. கைகொடுத்த மரப்பயிர்கள்! இது தோற்று ஜெயித்தவரின் கதை!
- மண்புழு மன்னாரு: உலகை உலுக்கிய விவசாயிகள் போராட்டம்! - இது ‘ரஷ்யா’வின் கதை!
- மண்புழு மன்னாரு : உழவே ‘தலை’... உழவர்களைக் கொண்டாடுவோம்!
- மண்புழு மன்னாரு : நம்மாழ்வார் சொல்லிய அந்த ‘இயற்கை’ ரகசியம்!
- மண்புழு மன்னாரு : உலகம் போற்றிய பட்டு வளர்ப்பு... சூரரைப் போற்று சொல்ல மறந்த கதை!
- மண்புழு மன்னாரு : இயற்கை விவசாயத்தைப் போற்று! ‘சூரரைப் போற்று’ சொல்ல மறந்த கதை!
- மண்புழு மன்னாரு : வேளாண்மைப் படிப்பும் விந்தையான விதிகளும்!
- மண்புழு மன்னாரு : அடிமாடுகள் கொடுக்கும் ஒரு கோடி வருமானம்!
- பாலில் பல லட்சங்கள் சம்பாதிக்கும் பெண்களும் சாக்லேட் செய்து சாதிக்கும் ஸ்விட்சர்லாந்தும்!
- மண்புழு மன்னாரு : கூட்டுப்பண்ணையும் இயற்கை வேளாண்மையின் குருபீடமும்!
- மண்புழு மன்னாரு : சர்க்கரை நோய்க்கு ரேஷன் அரிசியும் கரும்பு ரகம் கண்டுபிடித்த விவசாயியும்!
- மண்புழு மன்னாரு : அரசு திட்டங்கள் வேண்டாம்; மரம் வளர்ப்பு போதும்!
- மண்புழு மன்னாரு : சினிமா கொடுத்த விருந்தும் எம்.ஜி.ஆர் ஓட்டிய டிராக்டரும்!
- மண்புழு மன்னாரு : அஜ்வா பேரீச்சையும் அறிவு கொள்முதலும்!
- மண்புழு மன்னாரு : ஒரு லட்சம் பவுனும்... மேட்டூர் அணை கட்டிய கதையும்!
- மண்புழு மன்னாரு: கால்வாய்த் தொழில்நுட்ப சிற்பி காலிங்கராயன்!
- மண்புழு மன்னாரு : தமிழ்நாட்டை விரும்பிய தலைக்காவிரி… கைப்பற்றிக்கொண்ட கர்நாடகம்!
- மண்புழு மன்னாரு : ஒரு சிறுதானிய மனிதரின் கதை!
- மண்புழு மன்னாரு : பி.பி.டி நெல்லும் பி.எம்.டபுள்யூ விவசாயிகளும்!
- மண்புழு மன்னாரு : சீன மீனும் சென்னைப்பட்டினமும்!
- மண்புழு மன்னாரு : பாரம்பர்ய மீன்களை பயமுறுத்தும் ஆப்பிரிக்க மீன்!
- மண்புழு மன்னாரு : சந்தனப் பொட்டு வைக்காத சந்தன மலைமக்கள்!
- கவரிமாவுக்கும் கவரிமானுக்கும் என்ன சம்பந்தம்?
- சீனாவை மிஞ்சும் சேலம் வெண்பட்டு... கருணை பொங்கும் காஞ்சிப் பட்டு!
- கடப்பாரை கேட்ட கால்நடை மருத்துவர்!
- மண்புழு மன்னாரு: பட்டறிவுப் பாடம் சொன்ன விவசாயி!
- மண்புழு மன்னாரு: பிரமிடு கட்டிய விவசாயிகளும் பிரமிடு விவசாய முறையும்!
- மண்புழு மன்னாரு : விரைவில்... இயற்கை வேளாண் கொள்கை!
- மண்புழு மன்னாரு : மரம் வளர்ப்புக் கலையும் 10 நாள் மழைப் பொழிவும்!
- மண்புழு மன்னாரு : கவுனி அரிசியை ருசித்த சீன அதிபரும் தவளை வளர்க்கும் சீன விவசாயியும்!
- மண்புழு மன்னாரு: புற்றுநோய்க்குச் சவால் விடும் சாம்பார் சாதம்!
- மண்புழு மன்னாரு: மரங்களைக் காத்த - பழந்தமிழர்களும் ஆப்பிரிக்க தேவதையும்!
- மண்புழு மன்னாரு: எம்.எஸ்.சுவாமிநாதன் தமிழ்நாட்டுக்கு ஏன் வந்தார்?
- மண்புழு மன்னாரு: முளைப்பாரியும் தொடிப்புழுதியும்!
- மண்புழு மன்னாரு: ஆகாவலியும் அப்பள வாழையும்!
- மண்புழு மன்னாரு: சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜி.டி. நாயுடு!
- மண்புழு மன்னாரு: சுய உதவிக்குழு உருவான கதை!
- மண்புழு மன்னாரு: சந்தன மரங்களைப் பாதுகாக்கும் சிலிக்கான் சிப்!
- மண்புழு மன்னாரு: சந்தன மரம் டன் ரூ.50,00,000; செம்மரம் டன் ரூ.27,00,000
- மண்புழு மன்னாரு: நாட்டுக்கு வழிகாட்டும் மாதிரி கிராமம்!
- மண்புழு மன்னாரு: பீனிக்ஸ் பறவையும் பனை விதையும்!
- மண்புழு மன்னாரு: பஞ்சாப் புத்தாண்டும் பாஸ்மதி அரிசி வந்த கதையும்!
- மண்புழு மன்னாரு: உணவு மருத்துவமும் தரமான சம்பவங்களும்!
- மண்புழு மன்னாரு: ‘வாட்ஸ்அப்’ சித்தர்களும் உணவு மருத்துவமும்!
- மண்புழு மன்னாரு: ‘உப்பு’ யானையும் வெள்ளை யானையும்!
- மண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்!
- மண்புழு மன்னாரு: மழை பெய்வதை அறிவிக்கும் ‘அறிவாளி’ எலிகள்!
- மண்புழு மன்னாரு: நீரோட்டம் காட்டிய பசுங்கன்றும் பால் சுரக்கும் சுரைக்காயும்!
- மண்புழு மன்னாரு: தீங்கில்லாத மழையும் தீங்கான தேயிலை மலையும்!
- மண்புழு மன்னாரு: பெட்ரோல், டீசல் வேண்டாம்... மாடுகள் மூலமும் பேருந்துகள் ஓடும்!
- திரைப்படப் பாடலும் ‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா’ சோறும்!
- ‘சர்தார்’ கொய்யாவும் ‘ஆர்கானிக்’ ஆடுகளுக்கு மவுசும்!
- மண்புழு மன்னாரு: பணம் தேவைப்படாத வாழ்க்கையும் மானாவாரியில் விளையும் ‘ஜவாரி’யும்!
- மண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியா!
- மண்புழு மன்னாரு: தாய்லாந்து செல்போனும் சல்லிசான மாந்தோப்பும்!
- மண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபி!
- மண்புழு மன்னாரு: குறைந்த விலையில் மரக்கன்றுகள் வாங்க... ‘கடியம்’ போங்க!
- மண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்!
- மண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்!
- மண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானா!
- மண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனை!
- மண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும்!
- மண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்! கெட்டிக்காரன் புளுகும்
- மண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்!
- மண்புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம்!’
- மண்புழு மன்னாரு: மூக்குப் பொடி அளவு உரமும் மகசூலைக் கூட்ட உதவும்!
- மண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்!
- மண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசு!’
- மண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’
- மண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’
- மண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர்!
- மண்புழு மன்னாரு: கம்போஸ்ட் தயாரித்தால் ரூ.50 இனாம்!
- மண்புழு மன்னாரு: லட்ச ரூபாய் செலவில்... சம்பங்கி தந்த அனுபவப் பாடம்!
- மண்புழு மன்னாரு: பஞ்சாப் ரகசியம்... பனியும் புகையும்!
- மண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்!
- மண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்!
- மண்புழு மன்னாரு: உலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்!’
- மண்புழு மன்னாரு: பாம்புச் சர்க்கரையும் வெண்டைக்காய் வெல்லமும்!
- மண்புழு மன்னாரு: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும்!
- மண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும்!
- மண்புழு மன்னாரு: மகாத்மா காந்தியும் பிக்பாஸ்தான்!
- மண்புழு மன்னாரு: கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்!
- மண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும் வெட்டிவேர் மகத்துவமும்!
- மண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்
- மண்புழு மன்னாரு: வினோபா போட்ட ‘ஜீரோ பட்ஜெட்’ விதை!
- மண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்!
- மண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்!
- மண்புழு மன்னாரு: ஐந்து ரூபாய்க்கு கவலைப்பட்ட காந்தி!
- மண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்!
- மண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்!”
- மண்புழு மன்னாரு: ஜனாதிபதி விவசாயியும் விவசாய முதலமைச்சரும்!
- மண்புழு மன்னாரு: மதயானையும் மரமனிதனும்!
- மண்புழு மன்னாரு: காளைகளை அடக்கிய கண்ணன்!
- மண்புழு மன்னாரு: அகத்திக்கீரையும், நாட்டு மாடும் செய்த அற்புதம்!
- மண்புழு மன்னாரு: மாடுகளை மகிழ்விக்கும் ‘ஆதீண்டு குற்றி’ !
- மண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்!
- மண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும்!
- மண்புழு மன்னாரு: மாடு வளர்ப்பும் ‘ஸ்டார்ட் அப்’தான்!
- மண்புழு மன்னாரு: கோபமான மா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்!
- மண்புழு மன்னாரு: ஜென் குருவுக்குப் பாடம் சொன்ன பெண் விவசாயி!
- மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோ!
- மண்புழு மன்னாரு: ஆடிப் பழஞ்சோறும் 'ஆதண்டங்காய்' வற்றலும்..!
- மண்புழு மன்னாரு: அலையாத்தி காடுகளும் தில்லை மரமும்!
- மண்புழு மன்னாரு: தங்கச்சிமட நாத்து, மதுரையில மணக்குது!
- மண்புழு மன்னாரு: வெள்ளத்துக்கு சங்கதி சொன்ன சங்கு மண்டபம்!
- மண்புழு மன்னாரு: சுண்டைக்காய் கால் பணம்... சுமைக்கூலி முக்கால் பணத்தின் சூத்திரம்!
- மண்புழு மன்னாரு: செந்நெல், செஞ்சாலிநெல்... ஸ்ரீராமானுஜர் சொல்!
- மண்புழு மன்னாரு: மருந்தாகும் மந்தாரை இலை!
- மரத்தடி மாநாடு: மானியம் நிறுத்தம்... தவிப்பில் விவசாயிகள்!
- மண்புழு மன்னாரு: மயிலாடுதுறையில் மணக்கும்... ‘பாதிரி’ மாம்பழம்!
- மண்புழு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..!
- மண்புழு மன்னாரு: பழைய சோத்துக்குள் இருக்குது... ஜோரான மருந்து..!
- மண்புழு மன்னாரு: ‘வார்தா வெயிலும் தென்னை ஓலையும்..!’
- மண்புழு மன்னாரு: ‘நண்பேன்டா’ எலிகள்!
- மண்புழு மன்னாரு: குமரகமும் கொடம்புளியும்..!
- மண்புழு மன்னாரு: ஆட்டுப்பால்... மலேசிய மக்களின் மருந்து!
- மண்புழு மன்னாரு: மலையில் விளைந்தால் மாகாளி... நாட்டில் விளைந்தால் நன்னாரி..!
- மண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்து!
- மண்புழு மன்னாரு: ஜப்பானும், தஞ்சாவூர் நெல் சாகுபடியும்..!
- மண்புழு மன்னாரு: பொங்கிப் பாயும் பெருவெள்ளம்... சிலப்பதிகாரம் சொல்லும் தீர்வு!
- மண்புழு மன்னாரு: பரோட்டாவுக்கு சவால் விடும் தினை!
- மண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையும்... முத்தான பலன்களும்!
- மண்புழு மன்னாரு: பனங்கருப்பட்டியும்,ஜால வித்தையும்!
- மண்புழு மன்னாரு: மூன்று வகை மனிதர்களும்... வெற்றிலை தாம்பூலமும்!
- மண்புழு மன்னாரு: கண்பார்வைக்கு அவரை...நீரிழிவுக்கு பரங்கி!
- மண்புழு மன்னாரு: வேகமெடுக்கும் இயற்கை விவசாயம்... கியூபா வழியில் கேரளா!

மாத்தியோசிஓவியம்: ஹரன்
‘‘செங்கல்பட்டுக்குப் பக்கத்துல இருக்கிற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தைப் பார்க்கப் போகிறோம். நீங்களும் எங்களோடு வரமுடியுமா?’’னு நண்பர் ஒருத்தர் அழைப்புவிடுத்தாரு. இயற்கை ஆர்வலரான அந்த நண்பர், வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகத்துல பேராசிரியரா இருக்காரு. விடுமுறையில சென்னை வந்திருந்தார். அவரோட ஆசையை நிறைவேத்த, ஒரு சுபதினத்தில வேடந்தாங்கலுக்குப் புறப்பட்டுப் போனோம். அந்தப் பக்கம் பலமுறை பயணம் போயிருந்தாலும், எப்பவாவது நண்பர்கள் வந்தா மட்டும்தான், சரணாலயத்துக்குள்ள போறது வழக்கம்.

‘‘உலகிலேயே உயர்தரமான இயற்கை உரம்னா, அது பறவைகள் எச்சம்தான். கால்நடைகளோட கழிவைவிடச் சிறந்தது. காரணம், பறவைகள் சிறுநீரையும் மலத்தையும் சேர்த்து வெளியே தள்ளுது. அதனால, அதோட கழிவுல நைட்ரஜன் சத்து அதிகமா இருக்கும். பறவைகள் சரணாலயத்துக்குப் பக்கத்துல உள்ள விவசாயிகளுக்கு இது இயற்கையாகக் கிடைக்கும் பரிசுதான். பறவைகள் எச்சம் கலந்த நீரை விவசாயத்துக்குப் பயன்படுத்தும்போது, நல்ல விளைச்சல் கிடைக்கும்’’னு முன்னுரை கொடுத்த பேராசிரியர், தன்னோட லேப்டாப்பைத் திறந்து காட்டி, மேலும் சில குறிப்புகளையும் சொன்னாரு.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்தப் பறவைகள் சரணாலயம் உலக அளவுல புகழ்பெற்றது.
தமிழ்நாட்டுல இருக்கிற பறவைகள் சரணாலயங்கள் வரிசையில வேடந்தாங்கல் பழைமையானது. சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட, இந்தச் சரணாலயம் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலும் பார்வையாளருக்குத் திறந்திருக்கும். ஏன்னா, இந்த நேரத்துலதான், இதமான தட்பவெப்பச் சூழல் இருக்கும். குளிர்ப்பிரதேச நாடுகளிலிருந்து மிகவும் அரிதான பறவை இனங்கள் ஆண்டுதோறும் இங்கே வந்து சேருது. சுமார் 4 ஆயிரத்துக்கும் மேல அதுகளோட எண்ணிக்கை இருக்கும். வெளிநாட்டுப் பறவைகள் பல ஆயிரம் கிலோமீட்டர் கடந்து, இங்கே வர்றத்துக்கு முக்கியக் காரணம், இனப்பெருக்கம் செஞ்சு குஞ்சுகள பெருக்கிட்டு, சொந்த நாட்டுக்குப் போயிடும். உடம்புல சூடு இருந்தாதான், இனப்பெருக்கம் நல்லபடியா நடக்கும். சந்ததிகளும் ஆரோக்கியமா இருக்கும். அதனாலதான், வெப்ப நாடான நம்ம ஊரைத் தேடி அந்தப் பறவைகள் வருது’’னு நண்பர் சொல்லி முடிக்கவும், வேடந்தாங்கல் வரவும் சரியா இருந்துச்சு. வெளிநாட்டுல இருந்து எடுத்து வந்த, பைனாகுலர் மூலமா, பறவைகளைப் பார்த்துப் பார்த்து ரசிச்சாரு. ரெண்டு மணி நேரத்துல, ‘‘சரிவாங்க வீட்டுக்குப் போகலாம்’’னு கூப்பிட்டாரு.

பேராசிரியர் பெருந்தகையே, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை ரெண்டு, மூணு மணி நேரத்துல பார்த்துட முடியாது. காலையில பறவைகள் இரைத்தேடி வலசை போறதும், மாலை 5 மணிக்கு மேல, அதுங்க கூட்டுக்கு வந்து சேர்றதும் பார்க்க கண் கோடி வேணும். பறவைகள் சரணாலயம் இருக்கிறதால, சுற்றுவட்டாரத்துல தொழிற்சாலைகள் கிடையாது. இதனால, சுத்தமான காற்று இங்கு கிடைக்குது. இது இரண்டாவது ‘இயற்கைப் பரிசு’. காற்று, மண், நீர் சுத்தமா இருக்கிறதால, இந்தப் பகுதியில இயற்கை விவசாயப் பண்ணைகளும், பயிற்சி மையங்களும் உருவாகுது. இது மூன்றாவது பரிசுனு சொன்னேன். ‘‘அட, கேட்கவே மகிழ்ச்சியா இருக்கு. இப்படி அற்புதமான தகவல் சொல்வீங்கன்னுதான், உங்களைக் கூட்டிவந்தோம். மாலை வரையிலும் இருக்கலாம். பணம் எடுக்கணும், பக்கத்துல ஏ.டி.எம் இருக்குமானு கேட்டாரு பேராசிரியர். விசாரிச்சுப் பார்த்தோம், 10 கிலோமீட்டர் தூரத்துக்கு ஏ.டி.எம் கிடையாதுன்னு சொன்னாங்க. அந்தச் சமயத்துல, வெளியூர்ல இருந்து வந்த வயதான சுற்றுலாப் பயணி ஒருத்தர் மயக்கம் போட்டு விழுந்தாரு. பக்கத்துல மருத்துவமனை இருக்கான்னு தேடினா, அதுவும் 10 கிலோமீட்டர் போனாத்தான் உண்டுன்னாங்க. ஒரு வழியா முதலுதவி செஞ்சு, ஊருக்கு அனுப்பி வெச்சோம்.
அந்தப் பகுதி ஜூனியர் விகடன் நிருபரை செல்போன்ல, கூப்பிட்டு இந்தத் தகவல்களைச் சொன்னேன். அடுத்த அரை மணி நேரத்துல, நிருபர் போனுல அழைச்சாரு. ‘‘இந்த விஷயத்தைக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கவனத்துக்குக் கொண்டுபோனோம். ‘இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், ஏ.டி.எம் இயந்திரம், மருத்துவ உதவி மையம்... விரைவாக அமைக்கப்படும். இந்த வசதிகள் மூலம், சுற்றுலாப் பயணிங்க மட்டுமில்லாமல், சுற்றுவட்டார கிராம மக்களும் பயன்பெறுவார்கள்’னு மாவட்ட ஆட்சியர் சொன்னதா சொன்னாரு நிருபர். நல்லது நடந்தா சரிதான்னு வானத்தைப் பார்த்தோம். வலசை போன பறவைங்க, கூட்டுக்குத் திரும்பி வந்த அழகைப் பார்க்கப் பார்க்க இனிமையா இருந்துச்சு.