மரத்தடி மாநாடு
- பராமரிப்பை மறந்த சொட்டு நீர் நிறுவனங்கள்..!
- டிராக்டர்... வைக்கோல் கட்டும் கருவி - ஒரு மணிநேர வாடகை 340 ரூபாய்!
- மரத்தடி மாநாடு : வெங்காயம் கோழிக்கால் நோய் தீர்க்கும் பூஞ்சணக்கொல்லி!
- மரத்தடி மாநாடு : கிணறு வெட்ட ரூ. 12,25,000 மானியம்!
- மரத்தடி மாநாடு : மாடுகளைத் தாக்கும் கழலை நோய் உஷார்!
- மரத்தடி மாநாடு : கூட்டுக் கிணறு மின் இணைப்புக்கு இனி வி.ஏ.ஓ சான்றிதழ் போதும்..!
- மரத்தடி மாநாடு : பந்தல் சாகுபடிக்கு ரூ. 2 லட்சம் மானியம்!
- மரத்தடி மாநாடு : நுண்ணீர்ப் பாசனம் அமைக்க 1,13,133 ரூபாய் மானியம்!
- மரத்தடி மாநாடு : மரவள்ளி மாவுப்பூச்சிக்கு ஒட்டுண்ணிதான் தீர்வு!
- மரத்தடி மாநாடு : கால்நடை சந்தைகளுக்கு அனுமதி இல்லை! மானிய விலையில் கருவிகள்!
- மரத்தடி மாநாடு: உணவுப் பதப்படுத்த 10 லட்சம் மானியம்! - நகையைக் கொள்ளையடித்த குரங்குகள்!
- மரத்தடி மாநாடு : காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 2,500 மானியம்! - வேளாண் துறையில் லஞ்ச வேட்டை!
- மரத்தடி மாநாடு : மோட்டார், பி.வி.சி குழாய் வாங்கவும் மானியம்!
- மரத்தடி மாநாடு: காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 15,000 மானியம்!
- மரத்தடி மாநாடு: உழவுக்கு உலை வைக்கும் சட்டங்கள்!
- மரத்தடி மாநாடு : மயிலை விரட்டும் அழுகிய முட்டை!
- மரத்தடி மாநாடு: பழங்களைப் பளபளப்பாக்கும் திராட்சை உரம்!
- மரத்தடி மாநாடு: மண்ணிலுள்ள உப்பை உறிஞ்சும் தாவரம்...
- மரத்தடி மாநாடு : குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்!
- மரத்தடி மாநாடு : சொட்டு நீலத்தை வைத்து குரங்குகளை விரட்டலாம்!
- மரத்தடி மாநாடு : உயிர்வேலி... உழவர் கடன் அட்டை... சூரிய ஒளி உலர்த்தி!
- மரத்தடி மாநாடு : விற்பனைக்குத் தீர்வு சொல்லிய வேப்பங்குளம் பிராண்ட்!
- மரத்தடி மாநாடு: பிரதமரைச் சிந்திக்க வைத்த தமிழ்நாட்டு யோசனை!
- மரத்தடி மாநாடு: மின்னணு ஏலத்தில் கலக்கும் ஆனைமலை!
- மரத்தடி மாநாடு: ஆனைக்கொம்பனுக்கு இயற்கைத் தீர்வு!
- மரத்தடி மாநாடு: மானியத்தில் வெங்காய விதை!
- மரத்தடி மாநாடு: வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல்!
- மரத்தடி மாநாடு : கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ் வசதி!
- மரத்தடி மாநாடு: காப்பீட்டுக்குப் பணம் கட்டலாமா, வேண்டாமா?
- மரத்தடி மாநாடு : இனியாவது கிடைக்குமா இலவச மின்சாரம்?
- மரத்தடி மாநாடு: நிலங்களுக்குத் தனி அடையாள எண்… மோசடியைத் தவிர்க்க அரசின் திட்டம்!
- மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசனத்திட்டம்!
- மரத்தடி மாநாடு: திருடர்களை விரட்டியடித்த விவசாய தம்பதிக்கு விருது!
- மரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்!
- மரத்தடி மாநாடு: விரைவில் பால் கொள்முதல் விலை உயரும்!
- மரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்!
- கைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்!
- மரத்தடி மாநாடு: டெல்டா மாவட்டங்களில் காய்கறி, பழங்கள், மலர்கள்...
- நீர்நிலை ஆக்கிரமிப்பு... நீதிமன்றம் அதிரடி!
- மான்களுக்குப் பசுந்தீவனம் வனத்துறை முயற்சி!
- வேளாண் படிப்புகளுக்குக் கூடும் மவுசு!
- கொப்பரைக்கு விலையில்லை... புலம்பும் விவசாயிகள்!
- இறக்கும் விலையில்லா ஆடுகள்... அதிர்ச்சியில் பயனாளிகள்!
- இயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை!
- மரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு!
- விவசாயிகளே மரத்தடி மாநாடு: மண் பரிசோதனை செய்யலாம்... ‘சிக்ரி’விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
- மரத்தடி மாநாடு: கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்... அமைச்சர் அறிவிப்பு!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு!
- மரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்!
- மீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்!
- மரத்தடி மாநாடு: நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள்...விவசாயிகளுக்குப் பலன் கிடைக்குமா?
- மரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவு!
- மரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..!
- மரத்தடி மாநாடு: கூட்டுப் பண்ணைத்திட்டம் வெற்றி... கூடுதல் நிதி ஒதுக்கிய அரசு!
- மரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை! - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்
- மரத்தடி மாநாடு: 10 நகரங்களில் உணவுப்பூங்கா!
- மரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்!
- மரத்தடி மாநாடு: குறையும் கரும்புச் சாகுபடி... பதறும் ஆலைகள்!
- மரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி!
- மரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்!
- மரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி!
- மரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்!
- மரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்!
- மரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..!
- மரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை!
- மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்!
- மரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்!
- ஆடுகளில் ஒட்டுண்ணிகள்... உஷார்!
- மரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டு!
- மரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடு!
- மரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்!
- மரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலை!
- மரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்பு!
- மரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்!
- மரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடி!
- மரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு!
- மரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்!
- மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்து!
- மரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம்!
- மரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்!
- மரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி!
- மரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனி!
- மரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்!
- மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்!
- மரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல்!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை!
- மரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியா!
- மரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்!
- மரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்!’’
- மரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்!
- மரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்?
- மரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்!
- மரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை!
- மரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலை!
- மரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்!
- மரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்!
- மரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்!
- மரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...
- மரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலை!
- மரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சை!
- ‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலை!
- அடிமாடாகும் ஜல்லிக்கட்டுக் காளைகள்
- மண்புழு மன்னாரு
- மரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்!
- மரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்டுப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாரு!’
- மரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலை!
- மரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்!
- மரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னே!
- மரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’!
- மரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர்!
- மரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை!
- மரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை!
- மரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்!
- மரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள்!
- மரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் !
- மரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்..!
- மரத்தடி மாநாடு : 'வேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க'
- மரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை!
- மரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு...!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம்!
- மரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி!
- மரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை!
- மரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி!
- மரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வளர்ப்பு!
- மரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி..!
- மரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார்!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம்!
- மரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...
- உச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் !
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....
- மரத்தடி மாநாடு : ஏறுமுகத்தில் பட்டுக்கூடு..!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...!
- மரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
சக்கைப் போடு போடும் சிறுகிழங்கு!
##~## |
காலையிலேயே 'ஏரோட்டி’ ஏகாம்பரத்தின் தோப்பு, களைகட்டி இருந்தது. உள்ளூர் தொலைக்காட்சிக்காரர்கள் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்வதற்காக ஏரோட்டியின் தோப்பைத் தேர்வு செய்திருந்ததுதான் காரணம்! பட்டுச் சட்டை, வேட்டியில் மிடுக்காக 'வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் ஆஜராகியிருந்தார்.
''எம்புட்டு நேரம் காத்துட்டு இருக்குறது? வெரசா வாம்மா... டி.வி காரங்கள்லாம் கேமராவோட உக்காந்துட்டு இருக்காங்க'' வந்ததும் வராததுமாக 'காய்கறி’ கண்ணம்மாவை செல்லமாகக் கடிந்து கொண்டார், ஏரோட்டி.
தயாராக இருந்த சாமான்களை வைத்து, பரபரவென பொங்கல் வைக்க ஆரம்பித்தார், காய்கறி. பொங்கி வரும் சமயத்தில், குலவையிட்டுக் கொண்டே 'பொங்கலோ பொங்கல்’ என்று அனைவரும் உற்சாகமாகச் சொல்ல... ஜரூராக ஒளிப்பதிவு நடந்து முடிந்தது.
வந்த வேலை முடிந்து படப்பிடிக்குழுவினர் கிளம்ப, மழை ஓய்ந்தது போல இருந்தது அந்த இடம். மூன்று பேரும் வரப்பில் அமர்ந்து, பொங்கலைச் சாப்பிட ஆரம்பிக்க...
''இந்தாங்க சிறுகிழங்கு வறுத்துட்டு வந்திருக்கேன், சேர்த்துச் சாப்பிடுங்க'’ என்று பாத்திரத்தை எடுத்து நடுவில் வைத்த காய்கறி, ஒரு சந்தோஷ செய்தியைச் சொல்லி, அன்றைய மாநாட்டையும் துவக்கி வைத்தார்...
''திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி சுத்து வட்டாரத்துல இருக்கற பாப்பான்குளம், கடையம், வெள்ளிக்குளம், சம்பன்குளம், ரவணசமுத்திரம், வீராசமுத்திரம், கீழாம்பூர், காக்கநல்லூர் கிராமங்கள்ல இந்த வருஷம் சிறுகிழங்கு (கூர்க்கன் கிழங்கு) நல்லா விளைஞ்சுருக்காம். வழக்கமா ஆடி மாசத்துல நட்டு, மார்கழி மாசத்துல அறுவடை பண்ணுவாங்க. பொங்கல் சமயத்துல நிறைய பேர் வாங்குவாங்க. இந்த வருஷம் விளைச்சல் அதிகரிச்சு இருந்தாலும்... போன வருஷத்தைவிட விலை ஏறியிருக்குதாம். கிலோ 25 ரூபாய் வரைக்கும் விக்குதாம். சென்னை, ஐதராபாத், மும்பை, கேரளானு நிறைய ஊர்களுக்கு கிழங்கு மூட்டை போகுதாம். அதனால, சம்சாரிகளுக்கு சந்தோஷமாம்'' என்றார்!

''எங்கிட்டோ பண்டிகை கொண்டாடுறதுக்கு சம்சாரிகளுக்கு நாலு காசு கிடைச்சா சரிதான்'' என்று சந்தோஷ குரலில் சொன்ன ஏரோட்டி,
''சிவகங்கை மாவட்டம், சிறாவயல் கிராமத்துல மஞ்சு விரட்டு, ரொம்ப பிரபலம்ல. கிட்டத்தட்ட நூறு வருஷத்துக்கு மேல அங்க மஞ்சு விரட்டு நடந்துக்கிட்டு இருக்கு. இடையில கோர்ட் பஞ்சாயத்தால நின்னு போச்சு. சுப்ரீம் கோர்ட், மஞ்சு விரட்டு நடத்த அனுமதிச்சுருக்குற ஊர்கள்ல சிறாவயலும் ஒண்ணு. அதனால, இந்த வருஷம் சிவகங்கை மாவட்டத்துல மஞ்சு விரட்டுக்காக காளைகளைத் தயார் பண்ணிட்டு இருக்காங்களாம்'' என்று ஒரு தகவல் தந்தார்.
உடனே, பழைய நினைவுகளில் மூழ்கிய வாத்தியார், ''அடேங்கப்பா... எத்தனை விதமா மாடுக வரும் தெரியுமா? முன்னயெல்லாம் அந்தப் பக்கம் வீட்டுக்கு வீடு ஒரு காளை மாடு விரைச்சுக்கிட்டு நிக்கும். மஞ்சு விரட்டு நடக்கறப்போ எங்கிட்டு விரட்டி விட்டாலும், நேரா வீட்டுக்கு வந்து சேர்ந்துடும். அந்த ஊர்ல, மஞ்சுவிரட்டுக் காளை வளர்க்கறவங்க, பொங்கல் சமயத்துல, சொந்தக்காரங்களைஎல்லாம் வீட்டுக்கு வர வெச்சு தடபுடலா விருந்து போடுவாங்க. தை மாசம் சிறாவயல்ல முதல்ல மஞ்சு விரட்டு ஆரம்பிச்சா... அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட அறுபது ஊர்கள்ல மஞ்சு விரட்டு நடக்கும். பாகனேரியில ஆனி மாசத்துல கடைசி மஞ்சுவிரட்டு முடியும். ஆனா, இப்ப எல்லாமே மாறிப்போச்சு. பழைய அளவுக்கெல்லாம் மஞ்சு விரட்டுக்கு முக்கியத்துவம் இல்லாம போயிடுச்சு' என்றார் ஏக்கமாக!
''சரி, மஞ்சு விரட்டு இருக்கட்டும். நீ, உன் ஆடு, மாடுகள சூதனமாக பார்த்துக்கோயா...'' என்று பூடகமாக ஆரம்பித்த வாத்தியார்,
''காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் பக்கத்துல நென்மேலியில கோமாரி நோய் வந்து ஒரு பசுமாடு இறந்து போச்சாம். அதனால அந்தப்பகுதியில மாடுகளுக்கு தடுப்பூசி போட்டுக்கிட்டிருக்காங்களாம். வாயில கம்பி மாதிரி எச்சில் ஒழுகறது, ஈறுகள்ல புண் வர்றது, மூச்சிரைக்கிறது, மடிக்காம்புகளோட நுனியில புண் வர்றது... இதெல்லாம் கோமாரி நோய்க்கான அறிகுறிகளாம். ஆரம்பத்துலயே கண்டுபிடிச்சாதான்... நோயைக் குணப்படுத்த முடியுமாம். இல்லாட்டி மாடுகள காப்பாத்தறதே கஷ்டமாயிடுமாம்'' என்று சொல்ல...
''பொங்கல் நேரம், நானு நாலு சுத்து வந்தாத்தான் நம்ம கையில நாலு காசு நிக்கும். நான் கிளம்பறேன்'' என்ற காய்கறி, கூடையைத் தூக்கி தலையில் வைக்க... அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது.
தீவனப் பயிர் தயார்!
'நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், தீவனப் பயிர் விற்பனைக்குத் தயாராக உள்ளது’ என அந்நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
தீவனப் பயிர் தேவைப்படும விவசாயிகள், நாமக்கல் மோகனூர் சாலையில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரில் வந்து, உரிய தொகையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், விவரம் தேவைப்பட்டால், 04286-266345, 266244, 266650 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிர்கள் கருகியதால் விவசாயி மரணம் !
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகிலுள்ள வளத்தக்காடு, காவிரியின் கடைமடைப்பகுதிகளில் ஒன்று. கல்லணைக் கால்வாய் மூலமாக பாசனம் நடக்கும் ஊர். இங்கே, கருப்பையா என்கிற 62 வயது விவசாயி, இரண்டு ஏக்கரில் நெல் பயிரிட்டிருந்தார். காவிரி தண்ணீர் மற்றும் மழை இரண்டுமே கிடைக்காததால் இந்தப் பகுதி முழுக்கவே பயிர்கள் கருகிக் கொண்டிருக்கின்றன. தினமும் சோகமாக வயலைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்த கருப்பையா... கடந்த சிலதினங்களுக்கு முன் மாரடைப்பால் இறந்து போயிருக்கிறார்!