மரத்தடி மாநாடு
- பராமரிப்பை மறந்த சொட்டு நீர் நிறுவனங்கள்..!
- டிராக்டர்... வைக்கோல் கட்டும் கருவி - ஒரு மணிநேர வாடகை 340 ரூபாய்!
- மரத்தடி மாநாடு : வெங்காயம் கோழிக்கால் நோய் தீர்க்கும் பூஞ்சணக்கொல்லி!
- மரத்தடி மாநாடு : கிணறு வெட்ட ரூ. 12,25,000 மானியம்!
- மரத்தடி மாநாடு : மாடுகளைத் தாக்கும் கழலை நோய் உஷார்!
- மரத்தடி மாநாடு : கூட்டுக் கிணறு மின் இணைப்புக்கு இனி வி.ஏ.ஓ சான்றிதழ் போதும்..!
- மரத்தடி மாநாடு : பந்தல் சாகுபடிக்கு ரூ. 2 லட்சம் மானியம்!
- மரத்தடி மாநாடு : நுண்ணீர்ப் பாசனம் அமைக்க 1,13,133 ரூபாய் மானியம்!
- மரத்தடி மாநாடு : மரவள்ளி மாவுப்பூச்சிக்கு ஒட்டுண்ணிதான் தீர்வு!
- மரத்தடி மாநாடு : கால்நடை சந்தைகளுக்கு அனுமதி இல்லை! மானிய விலையில் கருவிகள்!
- மரத்தடி மாநாடு: உணவுப் பதப்படுத்த 10 லட்சம் மானியம்! - நகையைக் கொள்ளையடித்த குரங்குகள்!
- மரத்தடி மாநாடு : காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 2,500 மானியம்! - வேளாண் துறையில் லஞ்ச வேட்டை!
- மரத்தடி மாநாடு : மோட்டார், பி.வி.சி குழாய் வாங்கவும் மானியம்!
- மரத்தடி மாநாடு: காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 15,000 மானியம்!
- மரத்தடி மாநாடு: உழவுக்கு உலை வைக்கும் சட்டங்கள்!
- மரத்தடி மாநாடு : மயிலை விரட்டும் அழுகிய முட்டை!
- மரத்தடி மாநாடு: பழங்களைப் பளபளப்பாக்கும் திராட்சை உரம்!
- மரத்தடி மாநாடு: மண்ணிலுள்ள உப்பை உறிஞ்சும் தாவரம்...
- மரத்தடி மாநாடு : குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்!
- மரத்தடி மாநாடு : சொட்டு நீலத்தை வைத்து குரங்குகளை விரட்டலாம்!
- மரத்தடி மாநாடு : உயிர்வேலி... உழவர் கடன் அட்டை... சூரிய ஒளி உலர்த்தி!
- மரத்தடி மாநாடு : விற்பனைக்குத் தீர்வு சொல்லிய வேப்பங்குளம் பிராண்ட்!
- மரத்தடி மாநாடு: பிரதமரைச் சிந்திக்க வைத்த தமிழ்நாட்டு யோசனை!
- மரத்தடி மாநாடு: மின்னணு ஏலத்தில் கலக்கும் ஆனைமலை!
- மரத்தடி மாநாடு: ஆனைக்கொம்பனுக்கு இயற்கைத் தீர்வு!
- மரத்தடி மாநாடு: மானியத்தில் வெங்காய விதை!
- மரத்தடி மாநாடு: வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல்!
- மரத்தடி மாநாடு : கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ் வசதி!
- மரத்தடி மாநாடு: காப்பீட்டுக்குப் பணம் கட்டலாமா, வேண்டாமா?
- மரத்தடி மாநாடு : இனியாவது கிடைக்குமா இலவச மின்சாரம்?
- மரத்தடி மாநாடு: நிலங்களுக்குத் தனி அடையாள எண்… மோசடியைத் தவிர்க்க அரசின் திட்டம்!
- மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசனத்திட்டம்!
- மரத்தடி மாநாடு: திருடர்களை விரட்டியடித்த விவசாய தம்பதிக்கு விருது!
- மரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்!
- மரத்தடி மாநாடு: விரைவில் பால் கொள்முதல் விலை உயரும்!
- மரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்!
- கைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்!
- மரத்தடி மாநாடு: டெல்டா மாவட்டங்களில் காய்கறி, பழங்கள், மலர்கள்...
- நீர்நிலை ஆக்கிரமிப்பு... நீதிமன்றம் அதிரடி!
- மான்களுக்குப் பசுந்தீவனம் வனத்துறை முயற்சி!
- வேளாண் படிப்புகளுக்குக் கூடும் மவுசு!
- கொப்பரைக்கு விலையில்லை... புலம்பும் விவசாயிகள்!
- இறக்கும் விலையில்லா ஆடுகள்... அதிர்ச்சியில் பயனாளிகள்!
- இயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை!
- மரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு!
- விவசாயிகளே மரத்தடி மாநாடு: மண் பரிசோதனை செய்யலாம்... ‘சிக்ரி’விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
- மரத்தடி மாநாடு: கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்... அமைச்சர் அறிவிப்பு!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு!
- மரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்!
- மீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்!
- மரத்தடி மாநாடு: நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள்...விவசாயிகளுக்குப் பலன் கிடைக்குமா?
- மரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவு!
- மரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..!
- மரத்தடி மாநாடு: கூட்டுப் பண்ணைத்திட்டம் வெற்றி... கூடுதல் நிதி ஒதுக்கிய அரசு!
- மரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை! - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்
- மரத்தடி மாநாடு: 10 நகரங்களில் உணவுப்பூங்கா!
- மரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்!
- மரத்தடி மாநாடு: குறையும் கரும்புச் சாகுபடி... பதறும் ஆலைகள்!
- மரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி!
- மரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்!
- மரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி!
- மரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்!
- மரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்!
- மரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..!
- மரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை!
- மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்!
- மரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்!
- ஆடுகளில் ஒட்டுண்ணிகள்... உஷார்!
- மரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டு!
- மரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடு!
- மரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்!
- மரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலை!
- மரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்பு!
- மரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்!
- மரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடி!
- மரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு!
- மரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்!
- மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்து!
- மரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம்!
- மரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்!
- மரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி!
- மரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனி!
- மரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்!
- மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்!
- மரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல்!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை!
- மரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியா!
- மரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்!
- மரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்!’’
- மரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்!
- மரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்?
- மரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்!
- மரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை!
- மரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலை!
- மரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்!
- மரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்!
- மரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்!
- மரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...
- மரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலை!
- மரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சை!
- ‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலை!
- அடிமாடாகும் ஜல்லிக்கட்டுக் காளைகள்
- மண்புழு மன்னாரு
- மரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்!
- மரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்டுப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாரு!’
- மரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலை!
- மரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்!
- மரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னே!
- மரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’!
- மரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர்!
- மரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை!
- மரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை!
- மரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்!
- மரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள்!
- மரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் !
- மரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்..!
- மரத்தடி மாநாடு : 'வேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க'
- மரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை!
- மரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு...!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம்!
- மரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி!
- மரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை!
- மரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி!
- மரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வளர்ப்பு!
- மரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி..!
- மரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார்!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம்!
- மரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...
- உச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் !
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....
- மரத்தடி மாநாடு : ஏறுமுகத்தில் பட்டுக்கூடு..!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...!
- மரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
ஊருக்கெல்லாம் சொல்லுமாம் பல்லி... அது விழுகுமாம், கழுநீர் பானையில துள்ளி! ஓவியம்: ஹரன்
##~## |
காலையிலேயே 'ஏரோட்டி’ ஏகாம்பரத்தோடு தோட்டத்துக்கு வந்துவிட்ட 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி, செய்தித்தாள்களைப் படித்துக் கொண்டிருந்தார்.
வயல் வேலையில் தீவிரமாக இருந்த ஏரோட்டி, அந்தக் காலையிலேயே அக்னி வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்க முடியாதவராக, வேலைகளை அப்படியே நிறுத்தி விட்டு, சரசரவென தென்னை மரத்தில் ஏறி, இளநீர் காய்களை வெட்டிப் போட்டார்.
இருவரும் சீவிக் குடித்துக் கொண்டிருந்தபோதே, 'காய்கறி’ கண்ணம்மாவும் வந்து சேர்ந்துவிட, அவருக்கும் ஒன்றை வெட்டிக் கொடுத்தார் ஏரோட்டி.
மூவரும் அதைக் குடித்தபடியே... கதைக்க ஆரம்பிக்க, அன்றைய மாநாடும் ஆரம்பமானது...
''முதல்வரோட ஸ்ரீரங்கம் தொகுதியிலயே விவசாயிகளுக்கு அநியாயம்னு பொங்கி எழுந்து போராட ஆரம்பிச்சுருக்கறதைக் கேள்விப்பட்டீங்களா?'' என்று கட்டியம் சொன்ன வாத்தியார்,
''சமீபத்துல நடந்த சட்டசபை கூட்டத்துல, ஸ்ரீரங்கம் தொகுதியில இருக்குற மொண்டிப்பட்டி பஞ்சாயத்துல 1,200 கோடி ரூபாய்ல காகித ஆலை அமைக்கப்படும்னு அறிவிப்பை வெளியிட்டாங்க முதல்வரம்மா.
அதுக்கான வேலைகள் இப்ப ஜரூரா நடக்குது. மொண்டிப்பட்டி பஞ்சாயத்துல இருக்குற கொட்டப்பட்டி, போடுவார்பட்டி, வடுகப்பட்டி, பூங்குடிப்பட்டினு நிறைய ஊர்கள்ல தமிழ்நாடு காகித ஆலை அதிகாரிகள் வந்து நிலத்தை அளந்துருக்காங்க. அதுல 300 ஏக்கர் நெல் வயல், 250 ஏக்கர் கரும்பு வயல், மத்த பயிருங்க உள்ள நிலம் 300 ஏக்கர்னு எல்லாம் அடிபடுது. கிட்டத்தட்ட பத்தாயிரம் தென்னை, மா மரங்கள் இருக்குதாம். நல்ல தண்ணி வசதியோட ஏறத்தாழ 200 கிணறுகளும் இருக்குதாம்.

இப்படி நல்ல வளமான விளைநிலத்தை காலி பண்ணி, காகித ஆலை அமைச்சா... கிட்டத்தட்ட 2 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்படுவாங்களாம். அதனால, 'எங்க பகுதியில காகித ஆலை வரக்கூடாது’னு கலெக்டர்கிட்ட மனு கொடுத்திருக்காங்க விவசாயிங்க. 'குடும்பத்துல ஒருத்தருக்கு காகித ஆலையில வேலை போட்டுத் தர்றோம்’னும், 'தரிசு நிலங்களைத்தான் எடுப்போம். வளமான நிலங்களை எடுக்க மாட்டோம்’னு என்ªன்னவோ சொல்லி, சம்சாரிகளை சம்மதிக்க வெக்க பாக்கறாங்களாம் நியாயன்மாருங்க! ஆனாலும், விவசாயிங்க சம்மதிக்கலையாம்'' என்று சொன்னார்.
''ஆமாம், நெய்வேலி, சேலம், நரிமணம்னு ஒவ்வொரு ஊர்லயும் இப்படி ஏதாச்சும் ஆலைகளை அரசாங்கம் தொடங்கறப்ப எல்லாம், இப்படித்தானே வாக்குறுதி கொடுத்தாங்க. ஆனா, கடைசியில மண்ணு அள்ளிக் கொட்டுற கூலி வேலையைத்தானே கொடுத்தாங்க. அரசாங்கத்த நம்பி நிலத்த கொடுத்துட்டு... நாப்பது, அம்பது வருஷத்துக்கும் மேலா... நெய்வேலியில போராடிட்டேதானே இருக்காங்க சம்சாரிங்க'' என்று இடைச்செருகலான ஏரோட்டி,
''வளர்ச்சியைவிட விவசாயிங்களோட வாழ்வதாராம்தான் முக்கியம். அதைக் கெடுக்கற மாதிரி எந்தச் செயலையும் என் அரசாங்கம் ஆதரிக்காதுனு மத்திய அரசாங்கத்தோட 'கெயில்', கேஸ் குழாய பதிக்கற விஷயத்துல அறிக்கைவிட்ட அம்மா, இப்ப என்ன முடிவெடிக்கப் போறாங்கனு தெரியல...'' என்று ஒரு கேள்வியையும் எழுப்பினார்.
''ஊருக்கெல்லாம் சொல்லுமாம் பல்லி... அது விழுகுமாம் கழுநீர் பானையில துள்ளி'னு சொன்ன கதையால்ல இருக்கு'' என்று நக்கலாக காய்கறி சிரிக்க...
''அட நீ வேற கண்ணம்மா... கெயில், மத்திய அரசு நிறுவனம். ஆனா, இப்ப சொன்னது மாநில அரசாச்சே. சொன்னதை நிறைவேத்தாம விட்டுடுவாங்களா இந்தம்மா? 'குடிகாரன் பேச்சு... பொழுதுவிடிஞ்சா போச்சு, அரசியல்வாதி பேச்சு... அந்த நிமிஷமே போச்சு'ங்கறதுதானே நாட்டு நடப்பு.
வழக்கம்போல, 'எங்க பகுதியில காகித ஆலை வரணும்’னு கோரிக்கை வெச்சு ஒரு 500, 600 பேர் போராட்டத்துல இறங்கியிருக்காங்க. அம்மாவோட மனசு குளிரணும்கிறதுக்காக அந்தப் பகுதி ஆளுங்கட்சி புள்ளிகளோட ஏற்பாடுதானாம் இது. இதை வெச்சே, 'விவசாயிகளோட ஆதரவுடன் காகித ஆலை அமையும்'னு சீக்கிரமே அம்மா அறிக்கை விட்டுடுவாங்க'' என்றார், வேதனையுடன்.
''தொடர்ந்து, இப்படி விவசாயிக வயித்துலயே அடிச்சுட்டிருந்தா... நாடு என்னத்துக்காகுமோ?'' என்று ஆத்திரப்பட்ட காய்கறி, ஒரு செய்தியைச் சொன்னார்.
''எவ்வளவு வறட்சியா இருந்தாலும், சித்திரையில புழுதி உழவு ஓட்டுறதுக்கு ஒரு கோடை மழை பெய்ஞ்சுடும். இந்த வருஷம் நிறைய இடங்கள்ல அதுவும் இல்லாமப் போச்சாம். அதனால, மக்களெல்லாம் மழைக்காக என்னென்னவோ வேண்டுதல்களையெல்லாம் செய்ய ஆரம்பிச்சுருக்காங்க.
சேலம், ஆத்தூர் பக்கமிருக்கற கன்னிப்பொண்ணுங்க... வீடு வீடாப் போய் பிச்சை எடுத்து அந்தச் சாப்பாட்டை முச்சந்தியில வெச்சு பூஜை செஞ்சுருக்காங்க. ஒப்பாரி வெக்கிறது, கொடும்பாவி இழுக்குறதுனு எல்லா வழக்கத்தையும் நிறைவேத்தி கோயில்கள்ல பூஜையும் பண்ணிட்டிருக்காங்க. ஆனா, அந்த மழைச்சாமி, இதுவரைக்கும் கண் தொறந்தபாடில்லை'' என்றவர்,
''சரிசரி, வெயில் நேரத்துல போனாத்தான் இந்த தர்பூசணியையெல்லாம் வித்து முடிக்க முடியும். இந்தாங்க இதைச் சாப்பிடுங்க'’ என்று ஆளுக்கொரு தர்பூசணிக் கீற்றைக் கொடுத்தார். பிறகு, ''போன தடவை, 'கிண்ணம் நிறைய தண்ணி இருக்கு... ஆனா, குருவி குடிக்க வழி இல்லை அது என்ன?’னு கேட்டேனே, கண்டுபுடிச்சீங்களா?'' என்று காய்கறி கேட்க...
''இது தெரியாதா... இளநி'' என்று ஏரோட்டி சொல்ல... ''பரவாயில்லையே... நீங்களா கண்டுபுடிச்சுங்கீளா.. இல்ல தெருவுல சின்னப்பசங்ககிட்ட கேட்டுட்டு வந்தீங்களா...'' என்று சத்தம்போட்டு சிரித்தவர்,
''சரி சரி, இதையாவது நீங்களாவே கண்டுபுடிச்சு வைங்க பாக்கலாம்... 'குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்தே இருக்குமாம்... அது யாரு?'' என்றபடி கிளம்ப, முடிவுக்கு வந்தது, அன்றைய மாநாடு.