மரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு...!
- பராமரிப்பை மறந்த சொட்டு நீர் நிறுவனங்கள்..!
- டிராக்டர்... வைக்கோல் கட்டும் கருவி - ஒரு மணிநேர வாடகை 340 ரூபாய்!
- மரத்தடி மாநாடு : வெங்காயம் கோழிக்கால் நோய் தீர்க்கும் பூஞ்சணக்கொல்லி!
- மரத்தடி மாநாடு : கிணறு வெட்ட ரூ. 12,25,000 மானியம்!
- மரத்தடி மாநாடு : மாடுகளைத் தாக்கும் கழலை நோய் உஷார்!
- மரத்தடி மாநாடு : கூட்டுக் கிணறு மின் இணைப்புக்கு இனி வி.ஏ.ஓ சான்றிதழ் போதும்..!
- மரத்தடி மாநாடு : பந்தல் சாகுபடிக்கு ரூ. 2 லட்சம் மானியம்!
- மரத்தடி மாநாடு : நுண்ணீர்ப் பாசனம் அமைக்க 1,13,133 ரூபாய் மானியம்!
- மரத்தடி மாநாடு : மரவள்ளி மாவுப்பூச்சிக்கு ஒட்டுண்ணிதான் தீர்வு!
- மரத்தடி மாநாடு : கால்நடை சந்தைகளுக்கு அனுமதி இல்லை! மானிய விலையில் கருவிகள்!
- மரத்தடி மாநாடு: உணவுப் பதப்படுத்த 10 லட்சம் மானியம்! - நகையைக் கொள்ளையடித்த குரங்குகள்!
- மரத்தடி மாநாடு : காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 2,500 மானியம்! - வேளாண் துறையில் லஞ்ச வேட்டை!
- மரத்தடி மாநாடு : மோட்டார், பி.வி.சி குழாய் வாங்கவும் மானியம்!
- மரத்தடி மாநாடு: காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 15,000 மானியம்!
- மரத்தடி மாநாடு: உழவுக்கு உலை வைக்கும் சட்டங்கள்!
- மரத்தடி மாநாடு : மயிலை விரட்டும் அழுகிய முட்டை!
- மரத்தடி மாநாடு: பழங்களைப் பளபளப்பாக்கும் திராட்சை உரம்!
- மரத்தடி மாநாடு: மண்ணிலுள்ள உப்பை உறிஞ்சும் தாவரம்...
- மரத்தடி மாநாடு : குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்!
- மரத்தடி மாநாடு : சொட்டு நீலத்தை வைத்து குரங்குகளை விரட்டலாம்!
- மரத்தடி மாநாடு : உயிர்வேலி... உழவர் கடன் அட்டை... சூரிய ஒளி உலர்த்தி!
- மரத்தடி மாநாடு : விற்பனைக்குத் தீர்வு சொல்லிய வேப்பங்குளம் பிராண்ட்!
- மரத்தடி மாநாடு: பிரதமரைச் சிந்திக்க வைத்த தமிழ்நாட்டு யோசனை!
- மரத்தடி மாநாடு: மின்னணு ஏலத்தில் கலக்கும் ஆனைமலை!
- மரத்தடி மாநாடு: ஆனைக்கொம்பனுக்கு இயற்கைத் தீர்வு!
- மரத்தடி மாநாடு: மானியத்தில் வெங்காய விதை!
- மரத்தடி மாநாடு: வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல்!
- மரத்தடி மாநாடு : கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ் வசதி!
- மரத்தடி மாநாடு: காப்பீட்டுக்குப் பணம் கட்டலாமா, வேண்டாமா?
- மரத்தடி மாநாடு : இனியாவது கிடைக்குமா இலவச மின்சாரம்?
- மரத்தடி மாநாடு: நிலங்களுக்குத் தனி அடையாள எண்… மோசடியைத் தவிர்க்க அரசின் திட்டம்!
- மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசனத்திட்டம்!
- மரத்தடி மாநாடு: திருடர்களை விரட்டியடித்த விவசாய தம்பதிக்கு விருது!
- மரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்!
- மரத்தடி மாநாடு: விரைவில் பால் கொள்முதல் விலை உயரும்!
- மரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்!
- கைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்!
- மரத்தடி மாநாடு: டெல்டா மாவட்டங்களில் காய்கறி, பழங்கள், மலர்கள்...
- நீர்நிலை ஆக்கிரமிப்பு... நீதிமன்றம் அதிரடி!
- மான்களுக்குப் பசுந்தீவனம் வனத்துறை முயற்சி!
- வேளாண் படிப்புகளுக்குக் கூடும் மவுசு!
- கொப்பரைக்கு விலையில்லை... புலம்பும் விவசாயிகள்!
- இறக்கும் விலையில்லா ஆடுகள்... அதிர்ச்சியில் பயனாளிகள்!
- இயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை!
- மரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு!
- விவசாயிகளே மரத்தடி மாநாடு: மண் பரிசோதனை செய்யலாம்... ‘சிக்ரி’விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
- மரத்தடி மாநாடு: கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்... அமைச்சர் அறிவிப்பு!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு!
- மரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்!
- மீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்!
- மரத்தடி மாநாடு: நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள்...விவசாயிகளுக்குப் பலன் கிடைக்குமா?
- மரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவு!
- மரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..!
- மரத்தடி மாநாடு: கூட்டுப் பண்ணைத்திட்டம் வெற்றி... கூடுதல் நிதி ஒதுக்கிய அரசு!
- மரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை! - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்
- மரத்தடி மாநாடு: 10 நகரங்களில் உணவுப்பூங்கா!
- மரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்!
- மரத்தடி மாநாடு: குறையும் கரும்புச் சாகுபடி... பதறும் ஆலைகள்!
- மரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி!
- மரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்!
- மரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி!
- மரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்!
- மரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்!
- மரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..!
- மரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை!
- மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்!
- மரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்!
- ஆடுகளில் ஒட்டுண்ணிகள்... உஷார்!
- மரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டு!
- மரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடு!
- மரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்!
- மரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலை!
- மரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்பு!
- மரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்!
- மரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடி!
- மரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு!
- மரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்!
- மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்து!
- மரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம்!
- மரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்!
- மரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி!
- மரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனி!
- மரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்!
- மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்!
- மரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல்!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை!
- மரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியா!
- மரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்!
- மரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்!’’
- மரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்!
- மரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்?
- மரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்!
- மரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை!
- மரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலை!
- மரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்!
- மரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்!
- மரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்!
- மரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...
- மரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலை!
- மரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சை!
- ‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலை!
- அடிமாடாகும் ஜல்லிக்கட்டுக் காளைகள்
- மண்புழு மன்னாரு
- மரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்!
- மரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்டுப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாரு!’
- மரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலை!
- மரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்!
- மரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னே!
- மரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’!
- மரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர்!
- மரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை!
- மரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை!
- மரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்!
- மரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள்!
- மரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் !
- மரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்..!
- மரத்தடி மாநாடு : 'வேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க'
- மரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை!
- மரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு...!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம்!
- மரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி!
- மரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை!
- மரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி!
- மரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வளர்ப்பு!
- மரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி..!
- மரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார்!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம்!
- மரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...
- உச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் !
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....
- மரத்தடி மாநாடு : ஏறுமுகத்தில் பட்டுக்கூடு..!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...!
- மரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
ஓவியம்: ஹரன் படம்: க. ரமேஷ்
வானத்தில் மேகங்கள் திரண்டு நின்றதால், தோட்டத்துக்குச் செல்லாமல் ஊர் எல்லையில் உள்ள கல் திட்டில் அமர்ந்து 'வாத்தியார்’ வெள்ளைச்சாமியும், 'ஏரோட்டி’ ஏகாம்பரமும் நாளிதழ் வாசித்துக் கொண்டிருந்தனர். சற்றுநேரத்தில் 'காய்கறி’ கண்ணம்மாவும் வந்து சேர, மாநாடு களைகட்ட ஆரம்பித்தது.
'அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிடுச்சினு பயந்துகிட்டே இருந்தேன். ஆனா, ஓரளவுக்கு மழை பேய்ஞ்சி வெப்பம் குறைஞ்சி போயிடுச்சி' என்றார், காய்கறி.
''ஆமா, கண்ணம்மா... தமிழ்நாடு முழுக்கவே நிறைய இடங்கள்ல மழை பெய்ஞ்சிருக்கு. இப்பவும் ரெண்டு தூறல் போடவும்தான் நாங்களும் இங்கேயே உக்காந்துட்டோம். நாளைக்குத்தான் டிராக்டர் வரச் சொல்லியிருக்கேன். உழவு ஓட்டி வைக்கணும்'' என்ற ஏரோட்டி,
''இந்த மழையெல்லாம் காணாது. மூணு, நாலு வருஷமா மழை இல்லாத துக்கு... வெள்ள நிவாரணம் கொடுக்கற அளவுக்குக் கொட்டித் தீர்த்தாதான் சரிப்படும்'' என்றார் சிரித்தபடியே!
அதை ஆமோதித்து தானும் சிரித்த வாத்தியார், ''நீ நிவாரணம்னு சொன்னதும்... போன வருஷ வறட்சி நிவாரண ஊழல் செய்தி ஞாபகத்துக்கு வந்துடுச்சி. 'பாசன வசதியே இல்லாத பெருந்துறை பகுதியிலதான், ஈரோடு மாவட்டத்துலேயே அதிக அளவு நிவாரணம் கொடுத்திருக்காங்களாம். அப்போ, வருவாய்துறை அமைச்சரா இருந்த (தற்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர்) தோப்பு வெங்கடாசலத்தோட தொகுதி இது. இங்க விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுக்காம, விவசாயமே செய்யாத கட்சிக்காரங்களுக்குதான் நிவாரணம் கொடுத்திருக்காரு’னு காஞ்சிகோவிலைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, ஈரோடு கலெக்டர்கிட்ட புகார் கொடுத்திருக்கார். அதை விசாரிச்சிட்டு 'தவறுதலா 71 லட்ச ரூபாயை நிவாரணமா கொடுத்துட்டோம். அதை திரும்ப வாங்கிட்டோம்’னு மாவட்ட நிர்வாகம் பதில் சொல்லியிருக்கு. அதோட ரெண்டு கிராம நிர்வாக அலுவலர்களையும் தற்காலிகப் பணி நீக்கம் செஞ்சிருக்காங்க.

அப்பவும் விஷயத்தை கைவிடாத கிருஷ்ணசாமி, 'இந்த விசாரணை முறையா நடக்கலை’னு சென்னை, உயர் நீதிமன்றத்துல பொதுநல வழக்கு போட்டிருக்கார். அமைச்சர் உட்பட அத்தனை பேருக்கும் கோர்ட் நோட்டீஸ் போயிருக்கு. ஆனா, 'என்னோட வளர்ச்சி பிடிக்காம என் மேல இப்படி குற்றம் சுமத்துறாங்க’னு மறுத்திருக்கார் அமைச்சர்'' என்றார், வாத்தியார்.
''என்ன கண்டுபிடிச்சு என்ன செய்ய... நிஜமா பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நியாயம் கிடைச்சிடவா போகுது? ஆனாலும், இதை அம்பலத்துக்குக் கொண்டு வந்தவரைப் பாராட்டியே தீரணும்'' என்று சொன்ன ஏரோட்டி, தான் ஒரு செய்தியைச் சொன்னார்.
''கடந்த மூணு வருஷமா உணவு தானிய உற்பத்தி இலக்கு நிறைவு அடையாததால, அரிசி, பருப்புனு எல்லாம் விலை ஏறிப்போச்சுதாம். அதனால, இந்த வருஷம், உணவு தானிய உற்பத்தி இலக்கை

145 லட்சம் டன் அப்படினு நிர்ணயிச்சிருக்காங்களாம். குறிப்பா, ஒவ்வொரு மாவட்டத்திலயும் 30 சதவிகித அளவுக்கு விளைச்சலை அதிகரிக்கணும்னு வேளாண்துறை முடிவு செஞ்சிருக்குதாம். அதிக மழை பெய்ற இடங்கள்ல மட்டும் நெல் விளைவிச்சிட்டு மற்ற மாவட்டங்கள்ல, இருக்கற தண்ணி அளவுக்கு ஏத்த பயிர்களை மட்டும் சாகுபடி செய்யணும்னு விவசாயிங்ககிட்ட வலியுறுத்தப் போறாங்களாம். நேத்து அக்ரி ஆபீசருங்க என்கிட்ட சொல்லிட்டு போனாங்க'' என்றார்.
''பார்றா... அவ்வளவு பெரிய ஆளாயிட்டியா நீ?'' என்று கேட்ட வாத்தியார்,
''தேனி மாவட்டம், பூதிபுரம் கிராமத்துல... நஞ்சுண்ட ஈஸ்வரி, ஆதிபராசக்தி கோயில்கள் இருக்கு. திருப்பணி வேலைக்காக மண்ணை தோண்டினப்போ, 'ஃபிரேம்’ போட்ட ஒரு நோட்டீஸ் கிடைச்சிருக்கு. 1982-ம் வருஷம் மாணிக்கம் பிள்ளைன்றவர் அச்சடிச்சி அப்போதைய மதுரை கலெக்டர், தமிழக அறநிலையத்துறை அமைச்சர்னு மனுவா அனுப்பினதுதான் அந்த நோட்டீஸ். அதுல, 'பூதிபுரத்தில் ராஜபூபால சமுத்திரக் கண்மாய், ஆலமரத்துக் கண்மாய், கல்லூரணி குளம், குப்பாயி குளம், குஞ்சுமூப்பன் குளம், மூர்த்திவீரன் குளம் ஆகிய கண்மாய்களை ஆக்கிரமிச்சுட்டாங்க. இதனால், விவசாய நில கிணறுகள்ல தண்ணி வத்திப்போச்சி. விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு போச்சி. அரசாங்கத்தார் தலையிட்டு, கண்மாய்களை ஆக்கிரமிப்புல இருந்து மீட்கணும்’னு கோரிக்கை வெச்சிருக்கார். முப்பது வருஷமாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. அந்த நோட்டீஸ்ல சொல்லப்பட்டிருந்த ஆறு கண்மாய்ல நாலு கண்மாய், காணாமலே போயிடுச்சாம். ரெண்டு மட்டும்தான் இருக்குதாம். புதையலா கிடைச்ச இந்த மனுவை கையில எடுத்துக்கிட்டு, கண்மாய்களை மீட்டுத்தரச் சொல்லி முதலமைச்சருக்கு மறுபடியும் மனு அனுப்பியிருக்காங்களாம் ஊர் விவசாயிகள்'' என்றார்.
இதைக் கேட்டு கபகபவென சிரித்தார் ஏரோட்டி.
''என்னய்யா... இதுக்குப் போய் சிரிக்கறே..?'' என்று காய்கறி சூடாக,
''இப்படி ஊரு முழுக்க இருந்த குளம், ஏரி, குட்டை, கண்மாய் எல்லாத்தையும் பிளாட் போட்டு வித்துப்புட்டாங்க. பல இடங்கள்ல ஸ்கூல், கோர்ட், பஸ்-ஸ்டாண்டுனு கட்டி வெச்சிருக்காங்க. இந்தக் கொடுமையை யெல்லாம் செய்தது அரசியல்வியாதிகளும்... அதிகாரிங்களும்தான். இப்ப என்னடான்னா... 'தமிழகம் கடும் வறட்சியில் சிக்கித் தவிக்கிறது. இதைத் தடுத்து நிறுத்தி, மக்களைக் காப்பாற்ற என்ன செய்வது என்று அதிகாரிகள் ஆலோசனை'னு பேப்பர்ல சேதி வருது. ஒரு வாரமா... எல்லா கலெக்டருங்களும் மாறி மாறி மெட்ராஸுக்கு போய்... டேபிள்ல மினரல் வாட்டர் பாட்டிலை வெச்சிக்கிட்டு... யோசிச்சி தள்ளிக்கிட்டே இருக்காங்களாம். அதை நினைச்சேன்... சிரிச்சேன்'' என்றார் ஏரோட்டி.
''கிழிச்சாங்க...'' என்று மறுபடியும் சூடான காய்கறி, கூடையைத் தூக்கி தலையில் வைக்க... அன்றைய மாநாடு அத்தோடு முடிந்தது!