மரத்தடி மாநாடு
- பராமரிப்பை மறந்த சொட்டு நீர் நிறுவனங்கள்..!
- டிராக்டர்... வைக்கோல் கட்டும் கருவி - ஒரு மணிநேர வாடகை 340 ரூபாய்!
- மரத்தடி மாநாடு : வெங்காயம் கோழிக்கால் நோய் தீர்க்கும் பூஞ்சணக்கொல்லி!
- மரத்தடி மாநாடு : கிணறு வெட்ட ரூ. 12,25,000 மானியம்!
- மரத்தடி மாநாடு : மாடுகளைத் தாக்கும் கழலை நோய் உஷார்!
- மரத்தடி மாநாடு : கூட்டுக் கிணறு மின் இணைப்புக்கு இனி வி.ஏ.ஓ சான்றிதழ் போதும்..!
- மரத்தடி மாநாடு : பந்தல் சாகுபடிக்கு ரூ. 2 லட்சம் மானியம்!
- மரத்தடி மாநாடு : நுண்ணீர்ப் பாசனம் அமைக்க 1,13,133 ரூபாய் மானியம்!
- மரத்தடி மாநாடு : மரவள்ளி மாவுப்பூச்சிக்கு ஒட்டுண்ணிதான் தீர்வு!
- மரத்தடி மாநாடு : கால்நடை சந்தைகளுக்கு அனுமதி இல்லை! மானிய விலையில் கருவிகள்!
- மரத்தடி மாநாடு: உணவுப் பதப்படுத்த 10 லட்சம் மானியம்! - நகையைக் கொள்ளையடித்த குரங்குகள்!
- மரத்தடி மாநாடு : காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 2,500 மானியம்! - வேளாண் துறையில் லஞ்ச வேட்டை!
- மரத்தடி மாநாடு : மோட்டார், பி.வி.சி குழாய் வாங்கவும் மானியம்!
- மரத்தடி மாநாடு: காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 15,000 மானியம்!
- மரத்தடி மாநாடு: உழவுக்கு உலை வைக்கும் சட்டங்கள்!
- மரத்தடி மாநாடு : மயிலை விரட்டும் அழுகிய முட்டை!
- மரத்தடி மாநாடு: பழங்களைப் பளபளப்பாக்கும் திராட்சை உரம்!
- மரத்தடி மாநாடு: மண்ணிலுள்ள உப்பை உறிஞ்சும் தாவரம்...
- மரத்தடி மாநாடு : குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்!
- மரத்தடி மாநாடு : சொட்டு நீலத்தை வைத்து குரங்குகளை விரட்டலாம்!
- மரத்தடி மாநாடு : உயிர்வேலி... உழவர் கடன் அட்டை... சூரிய ஒளி உலர்த்தி!
- மரத்தடி மாநாடு : விற்பனைக்குத் தீர்வு சொல்லிய வேப்பங்குளம் பிராண்ட்!
- மரத்தடி மாநாடு: பிரதமரைச் சிந்திக்க வைத்த தமிழ்நாட்டு யோசனை!
- மரத்தடி மாநாடு: மின்னணு ஏலத்தில் கலக்கும் ஆனைமலை!
- மரத்தடி மாநாடு: ஆனைக்கொம்பனுக்கு இயற்கைத் தீர்வு!
- மரத்தடி மாநாடு: மானியத்தில் வெங்காய விதை!
- மரத்தடி மாநாடு: வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல்!
- மரத்தடி மாநாடு : கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ் வசதி!
- மரத்தடி மாநாடு: காப்பீட்டுக்குப் பணம் கட்டலாமா, வேண்டாமா?
- மரத்தடி மாநாடு : இனியாவது கிடைக்குமா இலவச மின்சாரம்?
- மரத்தடி மாநாடு: நிலங்களுக்குத் தனி அடையாள எண்… மோசடியைத் தவிர்க்க அரசின் திட்டம்!
- மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசனத்திட்டம்!
- மரத்தடி மாநாடு: திருடர்களை விரட்டியடித்த விவசாய தம்பதிக்கு விருது!
- மரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்!
- மரத்தடி மாநாடு: விரைவில் பால் கொள்முதல் விலை உயரும்!
- மரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்!
- கைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்!
- மரத்தடி மாநாடு: டெல்டா மாவட்டங்களில் காய்கறி, பழங்கள், மலர்கள்...
- நீர்நிலை ஆக்கிரமிப்பு... நீதிமன்றம் அதிரடி!
- மான்களுக்குப் பசுந்தீவனம் வனத்துறை முயற்சி!
- வேளாண் படிப்புகளுக்குக் கூடும் மவுசு!
- கொப்பரைக்கு விலையில்லை... புலம்பும் விவசாயிகள்!
- இறக்கும் விலையில்லா ஆடுகள்... அதிர்ச்சியில் பயனாளிகள்!
- இயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை!
- மரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு!
- விவசாயிகளே மரத்தடி மாநாடு: மண் பரிசோதனை செய்யலாம்... ‘சிக்ரி’விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
- மரத்தடி மாநாடு: கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்... அமைச்சர் அறிவிப்பு!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு!
- மரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்!
- மீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்!
- மரத்தடி மாநாடு: நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள்...விவசாயிகளுக்குப் பலன் கிடைக்குமா?
- மரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவு!
- மரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..!
- மரத்தடி மாநாடு: கூட்டுப் பண்ணைத்திட்டம் வெற்றி... கூடுதல் நிதி ஒதுக்கிய அரசு!
- மரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை! - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்
- மரத்தடி மாநாடு: 10 நகரங்களில் உணவுப்பூங்கா!
- மரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்!
- மரத்தடி மாநாடு: குறையும் கரும்புச் சாகுபடி... பதறும் ஆலைகள்!
- மரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி!
- மரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்!
- மரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி!
- மரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்!
- மரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்!
- மரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..!
- மரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை!
- மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்!
- மரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்!
- ஆடுகளில் ஒட்டுண்ணிகள்... உஷார்!
- மரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டு!
- மரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடு!
- மரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்!
- மரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலை!
- மரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்பு!
- மரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்!
- மரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடி!
- மரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு!
- மரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்!
- மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்து!
- மரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம்!
- மரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்!
- மரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி!
- மரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனி!
- மரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்!
- மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்!
- மரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல்!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை!
- மரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியா!
- மரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்!
- மரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்!’’
- மரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்!
- மரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்?
- மரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்!
- மரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை!
- மரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலை!
- மரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்!
- மரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்!
- மரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்!
- மரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்!
- மரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...
- மரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலை!
- மரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சை!
- ‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலை!
- அடிமாடாகும் ஜல்லிக்கட்டுக் காளைகள்
- மண்புழு மன்னாரு
- மரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்!
- மரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்டுப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாரு!’
- மரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலை!
- மரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்!
- மரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னே!
- மரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’!
- மரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர்!
- மரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை!
- மரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை!
- மரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்!
- மரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள்!
- மரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் !
- மரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்..!
- மரத்தடி மாநாடு : 'வேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க'
- மரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை!
- மரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு...!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம்!
- மரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி!
- மரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை!
- மரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி!
- மரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வளர்ப்பு!
- மரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி..!
- மரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார்!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம்!
- மரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...
- உச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் !
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....
- மரத்தடி மாநாடு : ஏறுமுகத்தில் பட்டுக்கூடு..!
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...!
- மரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு !
- மரத்தடி மாநாடு
- மரத்தடி மாநாடு
மான்சான்டோ வலையில் பி.ஜே.பி.- சிவசேனா எம்.பி.க்கள்! ஓவியம்: ஹரன்
மோட்டார் அறையின் அருகே வளர்ந்திருந்த வாழை மரத்தில் தார் தொங்கிக் கொண்டிருக்க, அதை உன்னிப்பாகப் பார்த்தபடி ஏதோ பேசிக்கொண்டிருந்தனர், 'ஏரோட்டி’ ஏகாம்பரமும், 'வாத்தியார்’ வெள்ளைச்சாமியும். ''என்ன இது, வாழைத்தாரு இத்தனை ஆராய்ச்சி?'' என்று குரல்கொடுத்தபடியே 'காய்கறி’ கண்ணம்மா வந்தமர... திரும்பிப் பார்த்த இருவரும் அருகில் வந்தமர்ந்தனர்.
''வாழைத்தாரு வழக்கத்தைவிட கொழுக் மொழுக்னு இருக்கே... ஏதாச்சும் மரபணு மாத்தின வாழையா இருக்குமோனு ஒரு சந்தேகம்... அதான் கண்ணம்மா...'' என்று ஏரோட்டி சொல்ல...
''மரபணு மாற்றுப் பயிர்னு சொன்னதும்தான் ஒரு சேதி ஞாபகத்துக்கு வருது. ஒரு பக்கம் மரபணு மாற்றுப் பயிர்கள் வேண்டாம்னு பி.ஜே.பி-யோட தாய் அமைப்பான விசுவ ஹிந்து பரிஷத் சொல்லிட்டிருக்கு. கூட்டாளியான சிவசேனாவும் இதையேதான் சொல்லிட்டிருக்கு. பி.ஜே.பி-யும்கூட இதுக்கு தலையாட்டியிருக்கு. ஆனா, இன்னொருப் பக்கம் மரபணு மாற்று விதைகளோட பிரம்மாவா இருக்கிற, அமெரிக்காவின் மான்சான்டோ கம்பெனி விரிச்ச வலையில, இந்த பி.ஜே.பி, சிவசேனா எம்.பி-க்கள் விழுந்து கிடக்கிறதுதான் பயமா இருக்கு. ஒவ்வொரு எம்.பி-க்கும் 3 லட்ச ரூபாய்க்கு மேல செலவு செய்து, அமெரிக்காவுக்கு அழைச்சுக்கிட்டுப் போறதுக்கான திட்டத்தைத் தீட்டியிருக்கு மான்சான்டோ. இப்ப இந்த விஷயம்தான் தீயா பரவிக்கிட்டிருக்கு'' என்று நொந்துகொண்டார் வாத்தியார்.

''பாம்புக்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டிக்கிட்டு பொழைப்பை ஓட்டிக்கிட்டிருக்கிற விலாங்கு மீன் சாதியா இருப்பாங்களோ...'' என்று சிடுசிடுத்தார் காய்கறி.
''சாதி, மதம் இன்னும் என்னவெல்லாம் உண்டோ... அதெல்லாமும்தான் இருக்கும். எல்லாம் நம்ம தலையெழுத்து'' என்று விரக்தியாகச் சிரித்தார் வாத்தியார். அடுத்து பேசிய ஏரோட்டி, ''பி.ஏ.பி.னு சொல்லப்படுற பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டம் தமிழ்நாட்டுல இருக்குற பெரிய பாசனத்திட்டங்கள்ல ஒண்ணு. மேற்குத்தொடர்ச்சி மலையில இருக்குற பரம்பிக்குளம் அணைக்கு, சோலையாறு மூலமா வர்ற தண்ணி, சர்க்கார்பதி நீர்மின்சார நிலையத்தைக் கடந்து, காண்டூர் கால்வாய் வழியா திருமூர்த்தி அணைக்கு வருது. அங்க இருந்து குடிநீருக்கும், பாசனத்துக்கும் அனுப்புறாங்க.
கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்கள்ல கிட்டத்தட்ட 3 லட்சத்து 77 ஏக்கர் நிலங்கள்ல இதன் மூலமா பாசனம் நடக்குது. இந்தப் பகுதிகள்ல இருக்குற நிறைய தொழிற்சாலைக்காரங்க, இந்தக் கால்வாயை ஒட்டி இருக்குற நிலங்கள்ல 10 சென்ட் அளவுக்கு மட்டும் அதிக விலை கொடுத்து வாங்கிக்கிறாங்களாம். அந்த நிலத்துல கிணறு தோண்டி, மின்சார இணைப்பு வாங்கி மோட்டார் வெச்சு, குழாய் மூலமா தண்ணி கொண்டு போறாங்களாம். ராத்திரி நேரங்கள்ல நேரடியாவே கால்வாய்ல இருந்து மோட்டார் மூலமா உறிஞ்சுறாங்களாம். நெகமம், செஞ்சேரிமலை, கம்மாளப்பட்டி, சுல்தான்பேட்டை பகுதிகள்ல மட்டும் இதுமாதிரி நூறு திடீர் கிணறுகள் உருவாகியிருக்குதாம். இதனால கடைமடைப்பகுதிகளுக்கு தண்ணி போய் சேர்றதில்லையாம்'' என்றார்.
''பிச்சை எடுக்குதாம் பெருமாளு... அதையும் பிடுங்குச்சாம் அனுமாருங்கற கதையால்ல இருக்கு'' என்ற காய்கறி தொலைக்காட்சியில்தான் பார்த்த ஒரு செய்தியைச் சொன்னார்.
'கரூர்ல நான்குவழிச் சாலை அமைக்கிறதுக்காக நெடுஞ்சாலையில இருந்த ஏராளமான மரங்களை வெட்டிட்டு இருக்காங்களாம். கருப்பக்கவுண்டன்புதூர் சுங்கச்சாவடி பக்கத் துல 150 வயசான அரச மரத்தை வெட்டறதைக் கேள்விப்பட்ட சமூக அமைப்புகள், ஒப்பந்தக்காரங்ககிட்ட பேச்சுவார்த்தை நடத்தி, மரத்தோட அடிபாகத்தை மட்டும் விலைக்கு வாங்கி, கிரேன் மூலமா வேரோட எடுத்துட்டுப் போய் சேரன் பொறியியல் கல்லூரியில நட்டு வெச்சுருக்காங்க. வேர் சேதப்படாததால மரம் உயிர் பிடிச்சுடும்னு சொல்றாங்க'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே... சடசடவென மழை அடிக்க ஆரம்பிக்க... அன்றைய மாநாடு சட்டென முடிவுக்கு வந்தது.
''கம்பெனிகளுக்கு

5 லட்சம் கோடி மானியம்!''
கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி, உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் தமிழக விவசாய சங்கம் ஆகியவற்றின் சார்பாக, கோவில்பட்டி, காந்தி மைதானத்தில் 'வறட்சி நிவாரண கோரிக்கை மாநாடு’ நடத்தப்பட்டது. இதில் பேசிய உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் கு. செல்லமுத்து, ''கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் கோடி மானியம் கொடுக்கும் அரசு, விவசாயத்துக்கு மானியம் கொடுக்கத் தயங்குகிறது. இந்தியாவில் விவசாயத்தை முழுமையாக அழிப்பதற்கு உலக அளவில் சதி நடந்து கொண்டிருக்கிறது. தங்கு தடையற்ற உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்துப் போட்டிருப்பதால், 'விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நேரடியாக வெளிநாடுகளில் விற்று, அதிக லாபம் அடையலாம்' என்ற போலி பிரசாரம் நடக்கிறது. இதை முறியடித்தாக வேண்டும்.

தெலங்கானாவிலும், ஆந்திராவிலும் புதிய அரசுகள் பதவி ஏற்ற உடனேயே விவசாயக் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார், சிவாஜி என்கிற ஆந்திர எம்.பி. ஆனால், தமிழக எம்.பி-க்கள் யாருமே விவசாயத்தைப் பற்றியோ... விவசாயிகளைப் பற்றியோ பேசுவதே இல்லை. விவசாயிகளே மக்கள் பிரதிநிதிகளாக ஆகும் பட்சத்தில்தான் இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும்'' என்று சொன்னார்.
இரா. ஸ்ரீராம்சுந்தர்ராஜ்