
அறிவிப்பு
தென்னை உர மேலாண்மை
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் நவம்பர் 28-ம் தேதி ‘தென்னையில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை’ பயிற்சி நடைபெற உள்ளது. காலை, மாலை தேநீர், மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.
தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.
சுருள்பாசி வளர்ப்பு
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி நிலையத்தில் நவம்பர் 29-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.
தொடர்புக்கு, செல்போன்: 94885 75716, 82489 24558.

எரிவாயு தயாரித்தல்
கன்னியாகுமரி, விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் டிசம்பர் 10-ம் தேதி ‘அசோலா கால்நடை தயாரித்தல்’, 24-ம் தேதி, ‘இயற்கை பூச்சி விரட்டிகள் தயாரித்தல் மற்றும் சமையல் அறைக் கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு பயிற்சிக்கும் கட்டணம் ரூ.150 (உணவு தவிர்த்து). முன்பதிவு செய்துகொள்ளவும்.
தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.