உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த இந்திய பெண்கள்!

இ.நிவேதா

அமெரிக்க ஊடக நிறுவனமான ஃபோர்ப்ஸ் (Forbes), சமீபத்தில் உலகின் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டுப் பெண்கள் இருவர் இடம் பெற்றுள்ளனர்.

அதில் ஊடகம், செல்வம், செல்வாக்கு என்ற பிரிவுகளின் கீழ் உள்ள பட்டியலில், 39 சி.இ.ஓ-கள், நாட்டின் 10 தலைவர்கள் மற்றும் 115 பில்லியன் சொத்து மதிப்பைக் கொண்ட 11 பில்லியனர்கள் இடம்பெற்று இருந்தனர்.

இவர்களில் நிர்மலா சீதாராமன் உட்பட 6 இந்தியப் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  

Nirmala Sitharaman

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தப் பட்டியலில் 36-வது இடத்தைப் பிடித்துள்ளார். நான்காவது முறையாக இந்தப் பட்டியலில் இவர் இடம்பெறுகிறார்.

Nirmala Sitharaman

இப்பட்டியலில் ஹெச்.சி.எல் டெக் நிறுவனத்தின் தலைவரான ரோஷினி நாடார் மல்கோத்ரா 53-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியாவின் (செபி) தலைவர் மாதபி பூரி புச் 54-வது இடத்தையும், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் தலைவர் சோமா மோண்டல் 67-வது இடத்தையும் பிடித்துள்ளார். 

மாதபி பூரி புச் |சோமா மோண்டல்

பயோகான் நிறுவனத் தலைவர் கிரண் மஜூம்தார்-ஷா 72-வது இடத்தையும், நியாகாவின் நிறுவனர் ஃபால்குனி நாயர் 89-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

கிரண் மஜூம்தார்-ஷா|ஃபால்குனி நாயர்

இவர்களில் ரோஷினி நாடார் மல்கோத்ரா, கிரண் மஜூம்தார்- ஷா மற்றும் ஃபால்குனி நாயர் கடந்த ஆண்டும் இந்தப் பட்டியலில் 52, 72, 88-வது இடங்களைப் பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஷினி நாடார் மல்கோத்ரா, கிரண் மஜூம்தார்- ஷா மற்றும் ஃபால்குனி நாயர்