<p><span style="color: #ff0000"><strong>உணர்ந்தறிதல் </strong></span></p>.<p><strong>வெ</strong>ருண்டு உருண்டு<br /> கண்கள் மருண்டு</p>.<p>காற்றும் நீருமாய்<br /> நாசி நடுநடுங்க...</p>.<p>காது விரைக்கக்<br /> கழுத்து அதிர்ந்து...</p>.<p>கால்கள் துவண்டு<br /> கன்னங்கள் கிட்டித்து...</p>.<p>உடம்பு கிடுகிடுக்க<br /> உள்ளுக்குள் வெடிவெடிக்க...</p>.<p>பெருமுச்சுக் குவியலில்<br /> உயிர்மூச்சுக் கலகலத்து...</p>.<p>இதுவரை கேட்டறியா<br /> விதங்களில் கதறலிட்டு...</p>.<p>முன்னுடம்பு குறுக்கி<br /> பின்னுடம்பு பிதுக்கி...</p>.<p>பூமிப் பந்தை ஒரு நிமிடம்<br /> புதிதாகப் பிறக்கவிட்டு...</p>.<p>கன்று ஈன்று நாக்கிட்ட<br /> காராம் பசு பார்த்து,</p>.<p>உடலெல்லாம் சிலிர்ப்போடி<br /> உள்ளம் வியர்த்து நின்றேன்</p>.<p>வீட்டில்</p>.<p>கர்ப்பிணியாய்</p>.<p>மனைவி!</p>.<p><strong>- ராஜ திருமகன் </strong></p>.<p><span style="color: #993366"><strong>காணாமல் போன நிலா! </strong></span></p>.<p><strong>நி</strong>லவை <br /> இடியாப்பமென யாரோ <br /> சொல்லிவைத்திருந்தார்கள் </p>.<p>தெருவில் இடியாப்பம் விற்கும் <br /> ஆச்சியின் குரல் கேட்ட திசையில் <br /> தட்டை நீட்டிவிடுகிறாள் யாத்வி குட்டி <br /> ரூபாய்க்கு இரண்டு <br /> நிலவைத் தரச் சொல்லி</p>.<p>அப்பா படித்துவிட்டுப் போன <br /> புத்தகத்தைப் புரட்டி <br /> 'கல்பனா சாவ்லா’வைக் காண்பிக்கிறாள் </p>.<p>'பறந்து போன இந்த அக்காதான் <br /> பசிக்கும்போது தெனமும் <br /> இடியாப்பத்தைப் பிச்சுப் பிச்சுத் தின்றாளா?'வென <br /> தாத்தாவிடம் கேட்டுவைக்கிறாள்</p>.<p>தேடிய பதிலேதும் கிடைக்காமல் <br /> சின்னதாய்ப் பொய் சொல்லி <br /> படுக்கைக்கு அழைக்கிறோம் <br /> 'யாத்வி... சீக்கிரம் படுடா<br /> பறக்கும் தட்டு வந்துடும்''<br /> 'அப்ப அதுல இடியாப்பம் இறங்கி வருமா?'வென்கிறாள் </p>.<p>மேகம் மூடி மறைத்துவிட்ட <br /> நிலவைக் காணாது <br /> இடியாப்பத்தை எவரோ <br /> திருடிவிட்டதாய்ச் சொல்லி <br /> தேம்பித் தேம்பி அழுகையைத்<br /> துவக்குகிறாள் </p>.<p>பெரும் இடி இரைச்சலோடு <br /> அழத் தொடங்கியது பெருமழை </p>.<p>தொலைந்துபோன நிலவை <br /> காலையில் தேடித் தருவதாய்ச் சொன்ன <br /> அம்மாவின் பதில் கேட்டு <br /> விரல் சூப்பிக்கொள்கிறாள். </p>.<p><strong>- கொ.மா.கோ.இளங்கோ </strong></p>.<p><span style="color: #003366"><strong>சாமியாடி கருப்பையா </strong></span></p>.<p><strong>த</strong>னக்காய் நேர்ந்துவிட்ட<br /> ஆடுகளை அறுக்க<br /> கருப்பையாவிடம்<br /> இறங்கியுள்ளார் கருப்பசாமி.<br /> அதற்கீடாய்<br /> ஆடறுக்கும் இடைவெளிகளில்<br /> கருப்பையாவை<br /> ஒரு பீடி வலிக்க<br /> அனுமதிக்கிறார் கருப்பசாமி.</p>.<p><strong>- கு.விநாயகமூர்த்தி </strong></p>.<p><span style="color: #ff6600"><strong>கால அதிர்வு </strong></span></p>.<p><strong>ப</strong>ள்ளிக்குச் செல்லும்<br /> அக்காவைப் பார்த்துவிட்டு,<br /> 'இன்னிக்கே என்னை<br /> ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போ’<br /> என அடம்பிடித்தது குழந்தை<br /> 'நாளைக்குப் போகலாம்’<br /> சமாதானம் சொன்னாள் அம்மா.<br /> 'அப்படீன்னா...<br /> என்னை இன்னிக்கே<br /> நாளைக்குக் கூட்டிட்டுப் போ!’<br /> என்றது குழந்தை<br /> திடுக்கிட்டது காலம்.</p>.<p><strong>- ப.உமாமகேஸ்வரி </strong></p>
<p><span style="color: #ff0000"><strong>உணர்ந்தறிதல் </strong></span></p>.<p><strong>வெ</strong>ருண்டு உருண்டு<br /> கண்கள் மருண்டு</p>.<p>காற்றும் நீருமாய்<br /> நாசி நடுநடுங்க...</p>.<p>காது விரைக்கக்<br /> கழுத்து அதிர்ந்து...</p>.<p>கால்கள் துவண்டு<br /> கன்னங்கள் கிட்டித்து...</p>.<p>உடம்பு கிடுகிடுக்க<br /> உள்ளுக்குள் வெடிவெடிக்க...</p>.<p>பெருமுச்சுக் குவியலில்<br /> உயிர்மூச்சுக் கலகலத்து...</p>.<p>இதுவரை கேட்டறியா<br /> விதங்களில் கதறலிட்டு...</p>.<p>முன்னுடம்பு குறுக்கி<br /> பின்னுடம்பு பிதுக்கி...</p>.<p>பூமிப் பந்தை ஒரு நிமிடம்<br /> புதிதாகப் பிறக்கவிட்டு...</p>.<p>கன்று ஈன்று நாக்கிட்ட<br /> காராம் பசு பார்த்து,</p>.<p>உடலெல்லாம் சிலிர்ப்போடி<br /> உள்ளம் வியர்த்து நின்றேன்</p>.<p>வீட்டில்</p>.<p>கர்ப்பிணியாய்</p>.<p>மனைவி!</p>.<p><strong>- ராஜ திருமகன் </strong></p>.<p><span style="color: #993366"><strong>காணாமல் போன நிலா! </strong></span></p>.<p><strong>நி</strong>லவை <br /> இடியாப்பமென யாரோ <br /> சொல்லிவைத்திருந்தார்கள் </p>.<p>தெருவில் இடியாப்பம் விற்கும் <br /> ஆச்சியின் குரல் கேட்ட திசையில் <br /> தட்டை நீட்டிவிடுகிறாள் யாத்வி குட்டி <br /> ரூபாய்க்கு இரண்டு <br /> நிலவைத் தரச் சொல்லி</p>.<p>அப்பா படித்துவிட்டுப் போன <br /> புத்தகத்தைப் புரட்டி <br /> 'கல்பனா சாவ்லா’வைக் காண்பிக்கிறாள் </p>.<p>'பறந்து போன இந்த அக்காதான் <br /> பசிக்கும்போது தெனமும் <br /> இடியாப்பத்தைப் பிச்சுப் பிச்சுத் தின்றாளா?'வென <br /> தாத்தாவிடம் கேட்டுவைக்கிறாள்</p>.<p>தேடிய பதிலேதும் கிடைக்காமல் <br /> சின்னதாய்ப் பொய் சொல்லி <br /> படுக்கைக்கு அழைக்கிறோம் <br /> 'யாத்வி... சீக்கிரம் படுடா<br /> பறக்கும் தட்டு வந்துடும்''<br /> 'அப்ப அதுல இடியாப்பம் இறங்கி வருமா?'வென்கிறாள் </p>.<p>மேகம் மூடி மறைத்துவிட்ட <br /> நிலவைக் காணாது <br /> இடியாப்பத்தை எவரோ <br /> திருடிவிட்டதாய்ச் சொல்லி <br /> தேம்பித் தேம்பி அழுகையைத்<br /> துவக்குகிறாள் </p>.<p>பெரும் இடி இரைச்சலோடு <br /> அழத் தொடங்கியது பெருமழை </p>.<p>தொலைந்துபோன நிலவை <br /> காலையில் தேடித் தருவதாய்ச் சொன்ன <br /> அம்மாவின் பதில் கேட்டு <br /> விரல் சூப்பிக்கொள்கிறாள். </p>.<p><strong>- கொ.மா.கோ.இளங்கோ </strong></p>.<p><span style="color: #003366"><strong>சாமியாடி கருப்பையா </strong></span></p>.<p><strong>த</strong>னக்காய் நேர்ந்துவிட்ட<br /> ஆடுகளை அறுக்க<br /> கருப்பையாவிடம்<br /> இறங்கியுள்ளார் கருப்பசாமி.<br /> அதற்கீடாய்<br /> ஆடறுக்கும் இடைவெளிகளில்<br /> கருப்பையாவை<br /> ஒரு பீடி வலிக்க<br /> அனுமதிக்கிறார் கருப்பசாமி.</p>.<p><strong>- கு.விநாயகமூர்த்தி </strong></p>.<p><span style="color: #ff6600"><strong>கால அதிர்வு </strong></span></p>.<p><strong>ப</strong>ள்ளிக்குச் செல்லும்<br /> அக்காவைப் பார்த்துவிட்டு,<br /> 'இன்னிக்கே என்னை<br /> ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போ’<br /> என அடம்பிடித்தது குழந்தை<br /> 'நாளைக்குப் போகலாம்’<br /> சமாதானம் சொன்னாள் அம்மா.<br /> 'அப்படீன்னா...<br /> என்னை இன்னிக்கே<br /> நாளைக்குக் கூட்டிட்டுப் போ!’<br /> என்றது குழந்தை<br /> திடுக்கிட்டது காலம்.</p>.<p><strong>- ப.உமாமகேஸ்வரி </strong></p>