<p><span style="color: #ff0000">சாந்திகளாய் மாறிய முனியம்மாக்கள்!</span></p>.<p> டெல்லியில்</p>.<p>சற்று வசதியானவர் வீடுகளுக்கு</p>.<p>வேலைக்குச் செல்கிறார்கள்</p>.<p>சாந்திகளாகவும் ராணிகளாகவும்</p>.<p>பெயர் மாற்றம்கொண்ட முனியம்மாக்கள்.</p>.<p>அலுவலகம் செல்வோரின் குழந்தைகளுக்கு</p>.<p>பகுதிநேரத் தாயாகி உணவூட்டுகையில்</p>.<p>நினைவுக்கு வருகிறார்கள்</p>.<p>கிளம்பும்போது உறங்கிக்கொண்டிருந்த</p>.<p>மூன்றும் நான்கும் படிக்கும்</p>.<p>தனது குழந்தைகள்.</p>.<p>பாத்திரங்கள் துலக்கியும்</p>.<p>துணிகள் துவைத்தும்</p>.<p>வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்தபோதும்</p>.<p>அவ்விடம் எதிர்கொள்ள நேரிடுகிறது</p>.<p>மனதில் அழுக்கேறிய பாத்திரங்களை.</p>.<p>கால் வைக்குமளவு</p>.<p>தாராள இடம்கொண்ட வீடுகளில்</p>.<p>வசிக்கும் இவர்கள்</p>.<p>டெல்லியறியா உறவுகளின் கற்பனையில்</p>.<p>உயர்ந்து நிற்கிறார்கள்</p>.<p>செல்வச்சீமாட்டிகளாக.</p>.<p>தங்கள் விசுவாசத்தின் மீது</p>.<p>அவ்வப்போது விழும் கற்களை</p>.<p>சகிப்புடன் அகற்றியவாறு</p>.<p>வாழ்க்கையை நகர்த்தும் இவர்கள்</p>.<p>எப்பாடுபட்டேனும்</p>.<p>வருடம் ஒருமுறை உறவுகளுடன் குலவி</p>.<p>சுதந்திரமாய்ச் சுவாசித்து ஆசுவாசம்கொள்ள</p>.<p>சொந்த ஊருக்கு ரயிலில் பயணமாகிறார்கள்</p>.<p>தற்காலிகமாய்</p>.<p>தங்கள் இடத்தில்</p>.<p>வேறொரு சாந்தியையும் ராணியையும்</p>.<p>நியமித்துவிட்டு!</p>.<p><span style="color: #0000ff">- ஜோதி பெருமாள்</span></p>.<p><span style="color: #ff0000">சிறகுகள்</span></p>.<p>ஏழு கடல்</p>.<p>ஏழு மைல் தாண்டி</p>.<p>மந்திரவாதியின்</p>.<p>உயிரைத் தேடிப் போனவன்</p>.<p>எப்படிப் போனான்</p>.<p>என்று கேட்கவே இல்லை</p>.<p>எந்தக் குழந்தையும்</p>.<p>அவர்கள் வசம் சிறகுகள் இருந்தன!</p>.<p><span style="color: #ff0000">ஒரு</span></p>.<p>ஒரே ஒரு ஊரில் இருக்கும்</p>.<p>ஒரே ஒரு ராஜாவுக்கு</p>.<p>இன்னும் வயசாகவுமில்லை;</p>.<p>சாகவுமில்லை!</p>.<p><span style="color: #ff0000">வாசம்</span></p>.<p>அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கும்</p>.<p>குழந்தையின் அருகில்</p>.<p>அமர்ந்துகொண்டு</p>.<p>எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்</p>.<p>இக்கவிதையில் கமழும்</p>.<p>பால் வாசனையை</p>.<p>ரசிக்கிறீர்கள்...</p>.<p>சற்று நேரத்தில்</p>.<p>கிளம்பும் மூத்திர வாடையையும்</p>.<p>சகித்துக்கொள்வீர்கள்தானே!</p>.<p> <span style="color: #0000ff">- இரா.பூபாலன்</span></p>.<p><span style="color: #ff0000">மின் குரலின் கட்டளை</span></p>.<p>'ப்ளீஸ் க்ளோஸ் தி டோர்’</p>.<p>என அதே பெண் குரல்தான்</p>.<p>தவறாது</p>.<p>மின் கட்டளை தருகிறது</p>.<p>அடுக்குமாடியின்</p>.<p>மின் ஏற்றத்தில்</p>.<p>நாம் தனியாகப்</p>.<p>பயணிக்க நேரிடும்</p>.<p>ஒவ்வொரு முறையும்.</p>.<p>நீதான்</p>.<p>தவறாக அர்த்தம்செய்து</p>.<p>உடல் மூடிக்கொள்கிறாய்</p>.<p>உன் மாராப்பு சேலையை!</p>.<p><span style="color: #0000ff">- பிராஸ்பர்</span></p>.<p><span style="color: #ff0000">பொய்ச் சோழிகள்</span></p>.<p> பாதையோரச் சோதிடன்</p>.<p>சோழிகள் குலுக்கி</p>.<p>எத்தனை முறை போட்டாலும்</p>.<p>விழவில்லை தாயம்</p>.<p>ஆதலால்</p>.<p>தன் காலைப் பசியின் தொடர்</p>.<p>மதியத்துக்குமென</p>.<p>தனக்கான சோதிடத்தால்</p>.<p>தளர்ந்தவன் நிமிர்ந்தான்</p>.<p>வாராத தலையோடு</p>.<p>வந்தமர்ந்தாள் ஒரு கிழவி</p>.<p>சோழிப் பொய் சொல்லியும்</p>.<p>சோறு கிடைக்கப்போவதால்</p>.<p>மகிழ்ந்தவன்</p>.<p>கைகளை இணைத்துப்</p>.<p>பொய்களை வேகமாய்க் குலுக்கத் தொடங்கினான்!</p>.<p><span style="color: #0000ff">- செல்மா காமராசன்</span></p>
<p><span style="color: #ff0000">சாந்திகளாய் மாறிய முனியம்மாக்கள்!</span></p>.<p> டெல்லியில்</p>.<p>சற்று வசதியானவர் வீடுகளுக்கு</p>.<p>வேலைக்குச் செல்கிறார்கள்</p>.<p>சாந்திகளாகவும் ராணிகளாகவும்</p>.<p>பெயர் மாற்றம்கொண்ட முனியம்மாக்கள்.</p>.<p>அலுவலகம் செல்வோரின் குழந்தைகளுக்கு</p>.<p>பகுதிநேரத் தாயாகி உணவூட்டுகையில்</p>.<p>நினைவுக்கு வருகிறார்கள்</p>.<p>கிளம்பும்போது உறங்கிக்கொண்டிருந்த</p>.<p>மூன்றும் நான்கும் படிக்கும்</p>.<p>தனது குழந்தைகள்.</p>.<p>பாத்திரங்கள் துலக்கியும்</p>.<p>துணிகள் துவைத்தும்</p>.<p>வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்தபோதும்</p>.<p>அவ்விடம் எதிர்கொள்ள நேரிடுகிறது</p>.<p>மனதில் அழுக்கேறிய பாத்திரங்களை.</p>.<p>கால் வைக்குமளவு</p>.<p>தாராள இடம்கொண்ட வீடுகளில்</p>.<p>வசிக்கும் இவர்கள்</p>.<p>டெல்லியறியா உறவுகளின் கற்பனையில்</p>.<p>உயர்ந்து நிற்கிறார்கள்</p>.<p>செல்வச்சீமாட்டிகளாக.</p>.<p>தங்கள் விசுவாசத்தின் மீது</p>.<p>அவ்வப்போது விழும் கற்களை</p>.<p>சகிப்புடன் அகற்றியவாறு</p>.<p>வாழ்க்கையை நகர்த்தும் இவர்கள்</p>.<p>எப்பாடுபட்டேனும்</p>.<p>வருடம் ஒருமுறை உறவுகளுடன் குலவி</p>.<p>சுதந்திரமாய்ச் சுவாசித்து ஆசுவாசம்கொள்ள</p>.<p>சொந்த ஊருக்கு ரயிலில் பயணமாகிறார்கள்</p>.<p>தற்காலிகமாய்</p>.<p>தங்கள் இடத்தில்</p>.<p>வேறொரு சாந்தியையும் ராணியையும்</p>.<p>நியமித்துவிட்டு!</p>.<p><span style="color: #0000ff">- ஜோதி பெருமாள்</span></p>.<p><span style="color: #ff0000">சிறகுகள்</span></p>.<p>ஏழு கடல்</p>.<p>ஏழு மைல் தாண்டி</p>.<p>மந்திரவாதியின்</p>.<p>உயிரைத் தேடிப் போனவன்</p>.<p>எப்படிப் போனான்</p>.<p>என்று கேட்கவே இல்லை</p>.<p>எந்தக் குழந்தையும்</p>.<p>அவர்கள் வசம் சிறகுகள் இருந்தன!</p>.<p><span style="color: #ff0000">ஒரு</span></p>.<p>ஒரே ஒரு ஊரில் இருக்கும்</p>.<p>ஒரே ஒரு ராஜாவுக்கு</p>.<p>இன்னும் வயசாகவுமில்லை;</p>.<p>சாகவுமில்லை!</p>.<p><span style="color: #ff0000">வாசம்</span></p>.<p>அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கும்</p>.<p>குழந்தையின் அருகில்</p>.<p>அமர்ந்துகொண்டு</p>.<p>எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்</p>.<p>இக்கவிதையில் கமழும்</p>.<p>பால் வாசனையை</p>.<p>ரசிக்கிறீர்கள்...</p>.<p>சற்று நேரத்தில்</p>.<p>கிளம்பும் மூத்திர வாடையையும்</p>.<p>சகித்துக்கொள்வீர்கள்தானே!</p>.<p> <span style="color: #0000ff">- இரா.பூபாலன்</span></p>.<p><span style="color: #ff0000">மின் குரலின் கட்டளை</span></p>.<p>'ப்ளீஸ் க்ளோஸ் தி டோர்’</p>.<p>என அதே பெண் குரல்தான்</p>.<p>தவறாது</p>.<p>மின் கட்டளை தருகிறது</p>.<p>அடுக்குமாடியின்</p>.<p>மின் ஏற்றத்தில்</p>.<p>நாம் தனியாகப்</p>.<p>பயணிக்க நேரிடும்</p>.<p>ஒவ்வொரு முறையும்.</p>.<p>நீதான்</p>.<p>தவறாக அர்த்தம்செய்து</p>.<p>உடல் மூடிக்கொள்கிறாய்</p>.<p>உன் மாராப்பு சேலையை!</p>.<p><span style="color: #0000ff">- பிராஸ்பர்</span></p>.<p><span style="color: #ff0000">பொய்ச் சோழிகள்</span></p>.<p> பாதையோரச் சோதிடன்</p>.<p>சோழிகள் குலுக்கி</p>.<p>எத்தனை முறை போட்டாலும்</p>.<p>விழவில்லை தாயம்</p>.<p>ஆதலால்</p>.<p>தன் காலைப் பசியின் தொடர்</p>.<p>மதியத்துக்குமென</p>.<p>தனக்கான சோதிடத்தால்</p>.<p>தளர்ந்தவன் நிமிர்ந்தான்</p>.<p>வாராத தலையோடு</p>.<p>வந்தமர்ந்தாள் ஒரு கிழவி</p>.<p>சோழிப் பொய் சொல்லியும்</p>.<p>சோறு கிடைக்கப்போவதால்</p>.<p>மகிழ்ந்தவன்</p>.<p>கைகளை இணைத்துப்</p>.<p>பொய்களை வேகமாய்க் குலுக்கத் தொடங்கினான்!</p>.<p><span style="color: #0000ff">- செல்மா காமராசன்</span></p>