<p>சொல்லைத் தொலைத்துவிட்டேன்.<br /> தேடுகிறேன்... இன்னும் தேடுகிறேன்.</p>.<p>பச்சை மண்ணைப்போல<br /> பூமியில் வந்து விழுந்தபோது,<br /> வாரியெடுத்து என் அம்மா<br /> தன் மார்பில் புதைத்தபோது அழும்போது<br /> என்னை ஆக்கிரமித்துக் காத்திருந்த<br /> அந்த ஒரு சொல்லைத்<br /> தேடுகிறேன்.</p>.<p>பருவம் வந்தபோது,<br /> குணமும் மாறிப்போய்,<br /> தான் என்ற எண்ணம்<br /> தலைமுழுக்கக் குடியேறி<br /> வானம் என்பது என் உள்ளங்கை அளவு,<br /> உலகம் என்பது<br /> நான் திரிந்தலையும் சோலை என<br /> வாழ்க்கை என்பதையே<br /> புதிதாக அர்த்தப்படுத்தி,<br /> ஒவ்வொரு கணத்தையும்<br /> சந்தோஷக் குவியலாய்<br /> சுகம் கண்டு சொன்ன சொல் ஒன்றைத்<br /> தேடுகிறேன்.</p>.<p>பகட்டான உலகத்தில்<br /> பாதைகளின் கீழ் புதைந்த விஷப்பூக்களை<br /> யார் யாரோ தூவிட்டதை<br /> அறியாமல்<br /> துக்கத்தை சுகித்த பின்னர்<br /> பொட்டென்று மண்டையில் போட்டு,<br /> வாழ்வின் புதிய அர்த்தத்தைச் சொல்லிக்கொடுத்த<br /> <br /> காலம் பயன்படுத்திய<br /> அந்த ஒரு சொல்லைத் தேடுகிறேன்.<br /> <br /> இன்னும் கிடைக்கவில்லை...<br /> அந்தச் சொல் கிடைக்காத நாள் வரையில்<br /> நான் பேசும் பேச்செல்லாம்<br /> வெறும் காற்றுதான்<br /> மானுடரே!<br /> அதற்குள் அர்த்தம் நீர் கண்டறிந்தால்<br /> நான் பொறுப்பல்ல.</p>.<p>வாய் திறந்து நான் எழுப்பும் ஓசைகளை<br /> பேச்சென்றும் பொழிவென்றும்<br /> பாட்டென்றும் வசனமென்றும்<br /> கோபம் என்றும் காதல் என்றும்<br /> உளறல் என்றும் தத்துவம் என்றும்<br /> உண்மை என்றும் பொய் என்றும்<br /> நீங்களாக நினைத்துக்கொள்ள<br /> நான் பொறுப்பல்ல.</p>.<p>எனக்குத் தெரிந்த அந்த ஒரு சொல்தான்<br /> எனக்குச் சொந்தம்.<br /> அது கிடைக்கும் வரையில்<br /> நான் பேசும் பேச்செல்லாம்,<br /> வெறும் ஓசைதான்.<br /> இல்லையென்றால்<br /> மௌனம் என<br /> மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள்!</p>
<p>சொல்லைத் தொலைத்துவிட்டேன்.<br /> தேடுகிறேன்... இன்னும் தேடுகிறேன்.</p>.<p>பச்சை மண்ணைப்போல<br /> பூமியில் வந்து விழுந்தபோது,<br /> வாரியெடுத்து என் அம்மா<br /> தன் மார்பில் புதைத்தபோது அழும்போது<br /> என்னை ஆக்கிரமித்துக் காத்திருந்த<br /> அந்த ஒரு சொல்லைத்<br /> தேடுகிறேன்.</p>.<p>பருவம் வந்தபோது,<br /> குணமும் மாறிப்போய்,<br /> தான் என்ற எண்ணம்<br /> தலைமுழுக்கக் குடியேறி<br /> வானம் என்பது என் உள்ளங்கை அளவு,<br /> உலகம் என்பது<br /> நான் திரிந்தலையும் சோலை என<br /> வாழ்க்கை என்பதையே<br /> புதிதாக அர்த்தப்படுத்தி,<br /> ஒவ்வொரு கணத்தையும்<br /> சந்தோஷக் குவியலாய்<br /> சுகம் கண்டு சொன்ன சொல் ஒன்றைத்<br /> தேடுகிறேன்.</p>.<p>பகட்டான உலகத்தில்<br /> பாதைகளின் கீழ் புதைந்த விஷப்பூக்களை<br /> யார் யாரோ தூவிட்டதை<br /> அறியாமல்<br /> துக்கத்தை சுகித்த பின்னர்<br /> பொட்டென்று மண்டையில் போட்டு,<br /> வாழ்வின் புதிய அர்த்தத்தைச் சொல்லிக்கொடுத்த<br /> <br /> காலம் பயன்படுத்திய<br /> அந்த ஒரு சொல்லைத் தேடுகிறேன்.<br /> <br /> இன்னும் கிடைக்கவில்லை...<br /> அந்தச் சொல் கிடைக்காத நாள் வரையில்<br /> நான் பேசும் பேச்செல்லாம்<br /> வெறும் காற்றுதான்<br /> மானுடரே!<br /> அதற்குள் அர்த்தம் நீர் கண்டறிந்தால்<br /> நான் பொறுப்பல்ல.</p>.<p>வாய் திறந்து நான் எழுப்பும் ஓசைகளை<br /> பேச்சென்றும் பொழிவென்றும்<br /> பாட்டென்றும் வசனமென்றும்<br /> கோபம் என்றும் காதல் என்றும்<br /> உளறல் என்றும் தத்துவம் என்றும்<br /> உண்மை என்றும் பொய் என்றும்<br /> நீங்களாக நினைத்துக்கொள்ள<br /> நான் பொறுப்பல்ல.</p>.<p>எனக்குத் தெரிந்த அந்த ஒரு சொல்தான்<br /> எனக்குச் சொந்தம்.<br /> அது கிடைக்கும் வரையில்<br /> நான் பேசும் பேச்செல்லாம்,<br /> வெறும் ஓசைதான்.<br /> இல்லையென்றால்<br /> மௌனம் என<br /> மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள்!</p>