<p>கொடும்வாதையான நேற்றைய இரவிலிருந்து<br /> தப்பி வந்தவனில் நானொருவன்.<br /> என்னவெல்லாமோ செய்தேன்.<br /> மெழுகுவத்தியை உயிர்ப்பித்து இரவை எரித்தேன்.<br /> மின்விசிறியைச் சுழலவிட்டுக் கிழித்தேன்.<br /> போர்வைக்குள் புதைந்து இரவிலிருந்து எனைத் துண்டித்தேன்.<br /> தகித்த இரவின் தலையில் வாளி நீரைக் கொட்டினேன்.<br /> வேட்டையாடும் கண்கள் வாய்த்திருந்தன இரவுக்கு.<br /> கொய்யென மொய்க்கும் தேனீக்களின் கொடுக்குகளால் ஆனது<br /> என்றுகூடச் சொல்லலாம்.<br /> விடியலின் பொன்கீற்றொன்று துளைக்க<br /> உன் விரலெனப் பற்றிக்கொண்டேன்.<br /> ஆம்<br /> என் மார்பு கேசம் கோதும்<br /> உன் விரலெனப் பற்றிக்கொண்டேன்.<br /> இத்துணை ஆதுரமானதா உன் விரல்<br /> இத்துணை ஆதுரமானதா உன் பகல்?!</p>.<p style="text-align: center"><span style="color: #800080"><span style="font-size: medium">எனக்கான முதிரிளம் பருவத்து முலையே! </span></span></p>.<p>ஓர் உயரிய மதுப்புட்டியென அத்துணை வாளிப்பாக<br /> என் முன்னே இருக்கிறது என் நிலம்.<br /> நான் அதை முத்தமிட்டு முன் பின் தட்டித் திறப்பேன்;<br /> மிடறுமிடறாகப் பருகுவேன்.<br /> அப்போது திறந்துகொள்ளும் என் ஆன்மாவுக்கும்<br /> அதனைப் பருகக் கொடுப்பேன்.<br /> முதிரிளம் பருவத்துள் நுழையும் கூர்ந்த முலையென<br /> அதனை நக்கி, மென்கடி கடித்துச் சுவைக்கவும் செய்வேன்.<br /> அது என் நாடி நரம்புகளுக்குள் ஊடுருவி<br /> எனக்குள் புழுதி புரட்டி<br /> என்னை உழுது செப்பனிடும்.<br /> மண்டைக்குள் சுறுசுறுவென ஏறும் போதையை<br /> நிலம் தந்த வெள்ளாமையெனக் கொண்டாடிக் களிப்பேன்.<br /> கண்களுக்குள் உடையும் மீச்சிறு மின்னல்களில்<br /> என் கருவேலத்து மினுக்கட்டான்களைக் கண்டெடுப்பேன்.<br /> உச்சப் போதையில் என்னுடல் முறுக்குகையில்<br /> சடசடவென உதிரும் நெட்டிகளில்<br /> நீங்கள் புளியம்பழங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.<br /> அவைதாம் இம்மதுவுக்கு புளிப்புச்சுவை கூட்டியவை.<br /> என் கண்களில் செவ்வரியோடியிருப்பது<br /> வெடிப்புறச் செம்மாந்திருக்கும் கோடைகுடித்த என் நிலம்தான்.<br /> நிலமே...<br /> மதுவே...<br /> உனை எவருக்கும் கொடேன்<br /> ஓரேர் உழவனாய் கைக்கொள்வேன்<br /> அயலான் அருந்த உனை எப்படிக் கை நெகிழ்வேன்<br /> எனக்கான முதிரிளம் பருவத்து முலையே!</p>
<p>கொடும்வாதையான நேற்றைய இரவிலிருந்து<br /> தப்பி வந்தவனில் நானொருவன்.<br /> என்னவெல்லாமோ செய்தேன்.<br /> மெழுகுவத்தியை உயிர்ப்பித்து இரவை எரித்தேன்.<br /> மின்விசிறியைச் சுழலவிட்டுக் கிழித்தேன்.<br /> போர்வைக்குள் புதைந்து இரவிலிருந்து எனைத் துண்டித்தேன்.<br /> தகித்த இரவின் தலையில் வாளி நீரைக் கொட்டினேன்.<br /> வேட்டையாடும் கண்கள் வாய்த்திருந்தன இரவுக்கு.<br /> கொய்யென மொய்க்கும் தேனீக்களின் கொடுக்குகளால் ஆனது<br /> என்றுகூடச் சொல்லலாம்.<br /> விடியலின் பொன்கீற்றொன்று துளைக்க<br /> உன் விரலெனப் பற்றிக்கொண்டேன்.<br /> ஆம்<br /> என் மார்பு கேசம் கோதும்<br /> உன் விரலெனப் பற்றிக்கொண்டேன்.<br /> இத்துணை ஆதுரமானதா உன் விரல்<br /> இத்துணை ஆதுரமானதா உன் பகல்?!</p>.<p style="text-align: center"><span style="color: #800080"><span style="font-size: medium">எனக்கான முதிரிளம் பருவத்து முலையே! </span></span></p>.<p>ஓர் உயரிய மதுப்புட்டியென அத்துணை வாளிப்பாக<br /> என் முன்னே இருக்கிறது என் நிலம்.<br /> நான் அதை முத்தமிட்டு முன் பின் தட்டித் திறப்பேன்;<br /> மிடறுமிடறாகப் பருகுவேன்.<br /> அப்போது திறந்துகொள்ளும் என் ஆன்மாவுக்கும்<br /> அதனைப் பருகக் கொடுப்பேன்.<br /> முதிரிளம் பருவத்துள் நுழையும் கூர்ந்த முலையென<br /> அதனை நக்கி, மென்கடி கடித்துச் சுவைக்கவும் செய்வேன்.<br /> அது என் நாடி நரம்புகளுக்குள் ஊடுருவி<br /> எனக்குள் புழுதி புரட்டி<br /> என்னை உழுது செப்பனிடும்.<br /> மண்டைக்குள் சுறுசுறுவென ஏறும் போதையை<br /> நிலம் தந்த வெள்ளாமையெனக் கொண்டாடிக் களிப்பேன்.<br /> கண்களுக்குள் உடையும் மீச்சிறு மின்னல்களில்<br /> என் கருவேலத்து மினுக்கட்டான்களைக் கண்டெடுப்பேன்.<br /> உச்சப் போதையில் என்னுடல் முறுக்குகையில்<br /> சடசடவென உதிரும் நெட்டிகளில்<br /> நீங்கள் புளியம்பழங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.<br /> அவைதாம் இம்மதுவுக்கு புளிப்புச்சுவை கூட்டியவை.<br /> என் கண்களில் செவ்வரியோடியிருப்பது<br /> வெடிப்புறச் செம்மாந்திருக்கும் கோடைகுடித்த என் நிலம்தான்.<br /> நிலமே...<br /> மதுவே...<br /> உனை எவருக்கும் கொடேன்<br /> ஓரேர் உழவனாய் கைக்கொள்வேன்<br /> அயலான் அருந்த உனை எப்படிக் கை நெகிழ்வேன்<br /> எனக்கான முதிரிளம் பருவத்து முலையே!</p>