<p style="text-align: right"><span style="color: #0000ff"><strong>கவிதைகள்: கார்த்திக் நேத்தா </strong></span></p>.<p style="text-align: right"> <span style="color: #0000ff"><strong>ஓவியம்: பாலா</strong></span></p>.<p style="text-align: center"><span style="color: #800000"><strong>குட்டி சைக்கிளும் உப்புக் காகிதமும்</strong></span></p>.<p>ஒரு சின்ன பாத்திரத்தில்</p>.<p>தண்ணீர் பிடித்து வைத்துக்கொண்டு</p>.<p>காற்றடைத்த சைக்கிள் டயூபை</p>.<p>முக்கி முக்கி எடுக்கிறார்</p>.<p>பொட்டுக்காரத் தாத்தா</p>.<p>மீன் முட்டை விடுவதுபோல</p>.<p>டயூப் மூச்சு விடுவது அழகாய் இருந்தது</p>.<p>அருகிலிருந்த எனக்கு.</p>.<p>காற்றைப் பிடுங்கிவிட்டு</p>.<p>உப்புக் காகிதத்தில் மூச்சுத் துளைகளில்</p>.<p>தேய்த்துத் தேய்த்துப் பார்க்கிறார்</p>.<p>தாத்தா</p>.<p>அந்த வாசத்தில் சொக்கிச் சொக்கி</p>.<p>விழுகிறேன் நான் </p>.<p>பஞ்சர் ஒட்டிய பிறகு</p>.<p>சைக்கிளை உரியவரிடம் சேர்த்துவிட்டு</p>.<p>ஒரு ரூபாய் வாங்கிக்கொள்கிறார்</p>.<p>சைக்கிள் மிதந்து போவதை வியந்துகொண்டிருக்கும் என்னிடம்</p>.<p>எட்டணா தந்து</p>.<p>வேட்டியில் முடிந்திருந்த பீடியைப்</p>.<p>பற்றவைத்துக்கொண்டு</p>.<p>என் குட்டி சைக்கிளை நோட்டமிடத் தொடங்கினார்</p>.<p>எனக்கென்னமோ அன்று</p>.<p>உப்புக் காகிதம் வாங்கத்தான்</p>.<p>விருப்பமாய் இருந்தது.</p>.<p style="text-align: center"><span style="color: #800000"><strong>சாரோனின் ரோஜா வாசம்</strong></span></p>.<p>சாரோனின் ரோஜா</p>.<p>சாணி மெழுகிய வாசலில்</p>.<p>கோலம் போடும்போது</p>.<p>அப்படி அழகாய்ப் பார்ப்பாள்</p>.<p>பாதத்தில் ஒட்டிய சாண ஈரத்தோடு</p>.<p>நடக்கும்போது உண்மையாக</p>.<p>பாதத்தை மட்டுமேதான் பார்ப்பேன்</p>.<p>நெற்றி முடியை</p>.<p>கோல மாவு மணக்கும் விரல்கொண்டு</p>.<p>ஒதுக்கிவிட்டுப் பார்ப்பாள்</p>.<p>சாணி வாசமும் கோல மாவின் வாசமும்</p>.<p>அவளின் வாசமும் கலந்து</p>.<p>காதலோ காமமோ ஏதோ ஒன்றை</p>.<p>எனக்குள் தூண்டிவிட்டுப் போகும்.</p>.<p>இருட்டும் வரை அதே மயக்கத்தில்</p>.<p>கிடப்பதுதான் எத்தனை வலிய சாபம்?</p>.<p style="text-align: center"><span style="color: #800000"><strong>கலந்துபோதல்</strong></span></p>.<p>அணங்கே</p>.<p>மாதே</p>.<p>மகிசாசுர மத்தினியின்</p>.<p>மார்புச் சூடே</p>.<p>ஆண்டாளின்</p>.<p>அதர ரேகையே</p>.<p>உமையின் உதரக்</p>.<p>கரைசலே</p>.<p>ஆங்காரம் உரித்த</p>.<p>ஓங்கார மவுனமே</p>.<p>யானும் நீயும்</p>.<p>எவ்வழி அறிதும்</p>.<p>அப்போது போட்ட</p>.<p>ஆட்டுப் புழுக்கையில் ஒட்டிய</p>.<p>மண்போல்</p>.<p>நம் எண்ணம் கலந்ததுவே..</p>
<p style="text-align: right"><span style="color: #0000ff"><strong>கவிதைகள்: கார்த்திக் நேத்தா </strong></span></p>.<p style="text-align: right"> <span style="color: #0000ff"><strong>ஓவியம்: பாலா</strong></span></p>.<p style="text-align: center"><span style="color: #800000"><strong>குட்டி சைக்கிளும் உப்புக் காகிதமும்</strong></span></p>.<p>ஒரு சின்ன பாத்திரத்தில்</p>.<p>தண்ணீர் பிடித்து வைத்துக்கொண்டு</p>.<p>காற்றடைத்த சைக்கிள் டயூபை</p>.<p>முக்கி முக்கி எடுக்கிறார்</p>.<p>பொட்டுக்காரத் தாத்தா</p>.<p>மீன் முட்டை விடுவதுபோல</p>.<p>டயூப் மூச்சு விடுவது அழகாய் இருந்தது</p>.<p>அருகிலிருந்த எனக்கு.</p>.<p>காற்றைப் பிடுங்கிவிட்டு</p>.<p>உப்புக் காகிதத்தில் மூச்சுத் துளைகளில்</p>.<p>தேய்த்துத் தேய்த்துப் பார்க்கிறார்</p>.<p>தாத்தா</p>.<p>அந்த வாசத்தில் சொக்கிச் சொக்கி</p>.<p>விழுகிறேன் நான் </p>.<p>பஞ்சர் ஒட்டிய பிறகு</p>.<p>சைக்கிளை உரியவரிடம் சேர்த்துவிட்டு</p>.<p>ஒரு ரூபாய் வாங்கிக்கொள்கிறார்</p>.<p>சைக்கிள் மிதந்து போவதை வியந்துகொண்டிருக்கும் என்னிடம்</p>.<p>எட்டணா தந்து</p>.<p>வேட்டியில் முடிந்திருந்த பீடியைப்</p>.<p>பற்றவைத்துக்கொண்டு</p>.<p>என் குட்டி சைக்கிளை நோட்டமிடத் தொடங்கினார்</p>.<p>எனக்கென்னமோ அன்று</p>.<p>உப்புக் காகிதம் வாங்கத்தான்</p>.<p>விருப்பமாய் இருந்தது.</p>.<p style="text-align: center"><span style="color: #800000"><strong>சாரோனின் ரோஜா வாசம்</strong></span></p>.<p>சாரோனின் ரோஜா</p>.<p>சாணி மெழுகிய வாசலில்</p>.<p>கோலம் போடும்போது</p>.<p>அப்படி அழகாய்ப் பார்ப்பாள்</p>.<p>பாதத்தில் ஒட்டிய சாண ஈரத்தோடு</p>.<p>நடக்கும்போது உண்மையாக</p>.<p>பாதத்தை மட்டுமேதான் பார்ப்பேன்</p>.<p>நெற்றி முடியை</p>.<p>கோல மாவு மணக்கும் விரல்கொண்டு</p>.<p>ஒதுக்கிவிட்டுப் பார்ப்பாள்</p>.<p>சாணி வாசமும் கோல மாவின் வாசமும்</p>.<p>அவளின் வாசமும் கலந்து</p>.<p>காதலோ காமமோ ஏதோ ஒன்றை</p>.<p>எனக்குள் தூண்டிவிட்டுப் போகும்.</p>.<p>இருட்டும் வரை அதே மயக்கத்தில்</p>.<p>கிடப்பதுதான் எத்தனை வலிய சாபம்?</p>.<p style="text-align: center"><span style="color: #800000"><strong>கலந்துபோதல்</strong></span></p>.<p>அணங்கே</p>.<p>மாதே</p>.<p>மகிசாசுர மத்தினியின்</p>.<p>மார்புச் சூடே</p>.<p>ஆண்டாளின்</p>.<p>அதர ரேகையே</p>.<p>உமையின் உதரக்</p>.<p>கரைசலே</p>.<p>ஆங்காரம் உரித்த</p>.<p>ஓங்கார மவுனமே</p>.<p>யானும் நீயும்</p>.<p>எவ்வழி அறிதும்</p>.<p>அப்போது போட்ட</p>.<p>ஆட்டுப் புழுக்கையில் ஒட்டிய</p>.<p>மண்போல்</p>.<p>நம் எண்ணம் கலந்ததுவே..</p>