<p style="text-align: left"><span style="color: #ff0000"><strong>இ</strong></span>ந்நாளின் இலகுவுக்கு</p>.<p> ஏதோ ஒன்று</p>.<p>குறைந்தபடியே இருந்தது.</p>.<p>வாலடியில் சிவந்திருக்கும் சிறுகுருவி</p>.<p>இன்று காலையில்</p>.<p>ஏனோ வரவில்லை.</p>.<p>அழுத்திப் பல் தேய்க்கையில்</p>.<p>ஈறு காயமாகிவிட்டது.</p>.<p> குளிக்கையில்</p>.<p>கண்ணுக்குள் நுரையிறங்கிவிட</p>.<p>படாதபாடு பட்டேன்.</p>.<p>இணையக்கடையில் வாங்கிய</p>.<p>விலை உயர்ந்த புதுச்செருப்பை</p>.<p>இரவு காத்த வீட்டு நாய்</p>.<p>கடித்துவைத்திருந்தது.</p>.<p>இன்னும் இரண்டு மிடறுகள்</p>.<p>குடிக்க விரும்பி உறிஞ்சியபோது</p>.<p>தேநீர் தீர்ந்துவிட்டது.</p>.<p>கிளம்புகையில் மனைவி</p>.<p>'நடுராத்திரியில் யாரோடவோ பேசுறீங்க’ என்று</p>.<p>கண் ததும்பினாள்.</p>.<p>சாய்நிறுத்தியை அகற்றாமலேயே</p>.<p>வண்டியை ஓட்டிக்கொண்டு</p>.<p>அலுவலகம் வந்தேன்.</p>.<p>சந்திக்க வந்த ஏற்றுமதியாளர்</p>.<p>'இப்படியே ஐரோப்பிய நிலை நீடிக்குமெனில்</p>.<p>நம் பாடு திண்டாட்டம்’ என்று அச்சுறுத்தினார்.</p>.<p>மண்டை உடைய ஆராய்ந்து</p>.<p>வாங்கிய பங்குகள்</p>.<p>விலை தாழ்ந்திருந்தன.</p>.<p>மதிய உணவு</p>.<p>குழம்போடு ஊறி</p>.<p>புதுப்பெயர் வைக்கும் அளவுக்கு</p>.<p>மாறியிருந்தது.</p>.<p>இந்தப் பிற்பகல்</p>.<p>என்றைக்குமில்லாத சோம்பலில்</p>.<p>கழிந்தது.</p>.<p>வீடு திரும்புகையில்</p>.<p>மனையாளின் நிறைகண்கள்</p>.<p>நினைவுக்கு வர</p>.<p>மல்லிகை விடுபூக்கள்</p>.<p>கால் கிலோ வாங்கிக்கொண்டேன்.</p>.<p>ஒரு பூப்பொட்டலம் கைவந்ததும்</p>.<p>அந்தியின் அழகிய சுடர்</p>.<p>மனத்துள் மஞ்சள் மழையாய் இறங்கிற்று.</p>.<p>சாலை நாய் ஏறிட்டுப் பார்த்து</p>.<p>வாலாட்டியது.</p>.<p>அருகிலிருந்த கடைக்குள் நுழைந்து</p>.<p>ஒரு டீ சொன்னேன்.</p>
<p style="text-align: left"><span style="color: #ff0000"><strong>இ</strong></span>ந்நாளின் இலகுவுக்கு</p>.<p> ஏதோ ஒன்று</p>.<p>குறைந்தபடியே இருந்தது.</p>.<p>வாலடியில் சிவந்திருக்கும் சிறுகுருவி</p>.<p>இன்று காலையில்</p>.<p>ஏனோ வரவில்லை.</p>.<p>அழுத்திப் பல் தேய்க்கையில்</p>.<p>ஈறு காயமாகிவிட்டது.</p>.<p> குளிக்கையில்</p>.<p>கண்ணுக்குள் நுரையிறங்கிவிட</p>.<p>படாதபாடு பட்டேன்.</p>.<p>இணையக்கடையில் வாங்கிய</p>.<p>விலை உயர்ந்த புதுச்செருப்பை</p>.<p>இரவு காத்த வீட்டு நாய்</p>.<p>கடித்துவைத்திருந்தது.</p>.<p>இன்னும் இரண்டு மிடறுகள்</p>.<p>குடிக்க விரும்பி உறிஞ்சியபோது</p>.<p>தேநீர் தீர்ந்துவிட்டது.</p>.<p>கிளம்புகையில் மனைவி</p>.<p>'நடுராத்திரியில் யாரோடவோ பேசுறீங்க’ என்று</p>.<p>கண் ததும்பினாள்.</p>.<p>சாய்நிறுத்தியை அகற்றாமலேயே</p>.<p>வண்டியை ஓட்டிக்கொண்டு</p>.<p>அலுவலகம் வந்தேன்.</p>.<p>சந்திக்க வந்த ஏற்றுமதியாளர்</p>.<p>'இப்படியே ஐரோப்பிய நிலை நீடிக்குமெனில்</p>.<p>நம் பாடு திண்டாட்டம்’ என்று அச்சுறுத்தினார்.</p>.<p>மண்டை உடைய ஆராய்ந்து</p>.<p>வாங்கிய பங்குகள்</p>.<p>விலை தாழ்ந்திருந்தன.</p>.<p>மதிய உணவு</p>.<p>குழம்போடு ஊறி</p>.<p>புதுப்பெயர் வைக்கும் அளவுக்கு</p>.<p>மாறியிருந்தது.</p>.<p>இந்தப் பிற்பகல்</p>.<p>என்றைக்குமில்லாத சோம்பலில்</p>.<p>கழிந்தது.</p>.<p>வீடு திரும்புகையில்</p>.<p>மனையாளின் நிறைகண்கள்</p>.<p>நினைவுக்கு வர</p>.<p>மல்லிகை விடுபூக்கள்</p>.<p>கால் கிலோ வாங்கிக்கொண்டேன்.</p>.<p>ஒரு பூப்பொட்டலம் கைவந்ததும்</p>.<p>அந்தியின் அழகிய சுடர்</p>.<p>மனத்துள் மஞ்சள் மழையாய் இறங்கிற்று.</p>.<p>சாலை நாய் ஏறிட்டுப் பார்த்து</p>.<p>வாலாட்டியது.</p>.<p>அருகிலிருந்த கடைக்குள் நுழைந்து</p>.<p>ஒரு டீ சொன்னேன்.</p>