<p><span style="color: #ff0000"><strong>ச</strong></span>ரியா ஒரு மணி ஆனா, வயித்துக்குள்ள அலாரம் அடிச்சுடுது. சவிதா டிபன் பாக்ஸைத் திறந்தப்ப, உள்ளே இருந்த இட்லியும் சட்னியும் புராதன வாசனையைப் பறைசாற்றினபடி இருந்துச்சு. எதிரே உட்கார்ந்திருந்த வாணி, ''இட்லியா அக்கா?''னு கேட்டதுகூட கிண்டலா கேட்ட மாதிரி இருந்துச்சு.</p>.<p>''க்கும்... இதுவாச்சும் கொண்டுவர முடியுதேனு நானே திருப்திப்பட்டுக்கிறேன். நீ வேற...''</p>.<p>''நான் சங்கரை, பிரியாணி வாங்கிட்டு வரச் சொன்னேன்.''</p>.<p>''ஏன்... சமைக்கல?''</p>.<p>''இல்லக்கா... இன்னிக்கு முடியல. மூணாவது நாளா ப்ளீடிங் நிக்கல... அதான்... அவரு ஒண்ணும் பண்ண வேணாம்னு சொல்லிட்டாரு.''</p>.<p>சவிதா எதுவுமே சொல்லாம விழுந்து விழுந்து சிரிக்க... ''என்ன நடக்குது இங்க?''னு சொல்லியபடி லஞ்ச் பாக்ஸை மேஜை மீது வைத்தாள் மேபல்.</p>.<p>''கர்த்தாவே... என்னா சிரிப்பு இது?''</p>.<p>''என் கஷ்டத்தைச் சொன்னா சவிதாக்காவுக்கு சிரிப்புதான் வருது. என்னத்தைச் சொல்ல போ'' என்றபடி பிரியாணிப் பொட்டலத்தைப் பிரித்தாள். சவிதாவுக்கு புரையேறியது. ''ஏங்க்கா... ஏங்க்கா?'' என்றபடி அவள் தலையில் தட்டினாள் மேபல்.</p>.<p>''தலையுமில்லாம வாலுமில்லாமப் பேசுறா... என்னத்தைச் சொல்ல...''</p>.<p>''சும்மாருங்கக்கா... நானே டென்ஷன்ல இருக்கேன்... ஒங்களுக்கு கிண்டல் வேற...''</p>.<p>''அதான் இட்லியோ சட்னியோ, கல்யாணம் பண்ணிக்காம என்ன மாதிரி இருக்கணும் வாணி'' - சொன்னாளே தவிர, மனசுக்குள்ள தனியா ஈ.பி பில் கட்டுற கொடுமைலேருந்து, தனியா மூணு இட்லி ஊத்துற வெறுமை வரைக்கும் மனசுல வந்துதான் போச்சுது. ஆனா, எல்லார் முன்னாலயும் அதைச் சத்தமா ஒத்துக்க முடியல. சவிதா தலையை டக்குன்னு குனிஞ்சுக்கிட்டா.</p>.<p>மேபல் ஒண்ணும் சொல்லாது அமைதியா சாப்பிட ஆரம்பிச்சா. பின்ன மெள்ள, ''என்னத்த கல்யாணம் செஞ்சிக்கிட்டு... வெளிய சொல்ல முடியிதா? என் வாழ்க்கையை எடுத்துக்க... விவாகரத்து வாங்கி அடுத்த கல்யாணம்னுதான் பேரு... அதுல எத்தினி பிரச்னை பாரு... மோர்க்குழம்பு வெச்சு ஒரு நாள்லதான் சாப்பிடணும்... கல்யாணம்னா அது ஒரு தடவைதான் செய்யணும்...''</p>.<p>''ஏன் மேபல்?''னு பரிவா கேட்டா வாணி.</p>.<p>''அவருக்கு பிசினஸ் டல்லுக்கா... ஆனா, அவர் குடும்பம் அவரைப் பிடுங்கித் தின்னுது. அதைச் சொன்னா பிரச்னை... சண்டைதான்... பாருக்கா... மூணு நாளா வீட்ல சாப்பிடல... கோவம்... வைராக்கியமாம். பாத்தேன்... 'பார்றா மவனே’னு அந்தாளுக்குப் பிடிச்ச வஞ்சிரத்தை இஞ்சிப்பூண்டு அரைச்சு, எலுமிச்சை பிழிஞ்சு வறுத்து எடுத்தாந்துட்டேன்... என்னைவிட வஞ்சிரம்னா உசிரு மனுஷனுக்கு. ஆனா முகத்துல காட்டணும்... ம்ம்ம்'' - மேபல் வஞ்சிரம் மீனை வன்மத்தோடு கடித்தாள்.</p>.<p>''என்ன மேபல்... இப்படிச் சொல்ற. அப்படின்னா ஆபீஸ்ல ஸ்டெனோவ வெச்சிருக்கிற என் புருஷனுக்கு என்ன செய்யச் சொல்ற?'' - வாணி கண் கலங்குவதை மறைக்கப் பார்த்து, பிரியாணிக்குள் லெக் பீஸைத் தேடினாள்.</p>.<p>''எல்லாரும் காலம் பூரா லவ் பண்ணிட்டே அலைய முடியுமா என்ன? நீ வேற... எல்லாம் இருக்கும் வாணி, ஒரு உறவுன்னா... நம்ம மனச யாரும் எட்டிப் பாக்கலையா என்ன? சொல்லுங்க சவிதாக்கா... ஒங்களுக்கு கல்யாணம் ஆகல... ஆனா, நீங்க யாரையாச்சும் பாத்து அச்சோனு நின்னது இல்லை?''</p>.<p>சவிதா இட்லியைச் சாப்பிட்டு முடித்து, டிபன் பாக்ஸை மூடிவைத்தாள். ''அட இது என்ன பேச்சு? அரவிந்த் சாமியக்கூட எனக்குப் பிடிக்கும். ஒனக்கு ரஜினி பிடிக்கும்.''</p>.<p>''போக்கா.... எல்லாம் பழைய ஆளா சொல்லு...''</p>.<p>ப்யூன் சங்கர் எட்டிப் பார்த்து, ''மேடம்... பிரியாணி நூத்தி இருவது ரூவா ஆயிடுச்சு'' என்றான்.</p>.<p>''அப்புறம் வாப்பா... கோழி தொண்டைக்குள்ள இறங்கட்டும்... இன்னும் இருபதுதான் தரணும்.''</p>.<p>அவன் லேசான அதிருப்தியோடு அங்கிருந்து கிளம்ப... மேபல், ''அதை உடனே கொடுத்துத் தொலைச்சாத்தான் என்ன?''னு கேட்டா.</p>.<p>''ஆமா... இன்னும் பத்து நிமிஷத்துல கொடுத்தா வாங்க மாட்டானா என்ன? இதைக் கேளுக்கா... நேத்து கவுன்சலர்கிட்ட போனோம்... அவரு எல்லாத்தையும் ஒத்துக்கிட்டாரு. அவகூட ஆந்திரா வரைக்கும் போனாராம். எப்படிக்கா இதையெல்லாம் ஜீரணிக்க முடியும்?''</p>.<p>''அதெல்லாம் சகஜம்டி வாணி... வருத்தப்படுறார்ல?''</p>.<p>''அதெல்லாம் ஒண்ணும் இல்லை... தெம்பாச் சொல்றார்.''</p>.<p>''சொல்லாமகூட இருக்கலாம்ல?''</p>.<p>''அவகூட போகாம இருந்திருக்கலாம்ல?''</p>.<p>''கல்யாணம்ங்கிறதே உண்மையில கிழிஞ்ச துணியைத் தைக்கிற மாதிரிதான். அத முதல்ல ஒத்துக்க... இல்லன்னா சவத்த 'வேணாம்’னு வெட்டித் தள்ளிட்டு தனியா வாழு.''</p>.<p>''அது எப்படிக்கா முடியும்?''</p>.<p>''ஏன் அக்கா இல்லை?''</p>.<p>சவிதா வேறு எங்கேயோ பார்க்குற மாதிரி முகத்தை திருப்பிக்கிட்டா. உள்ளுக்குள்ள அம்மா போன வாரம் அனுப்பின வரன் முகம் ஞாபகத்துக்கு வந்துச்சு. 'ரெண்டாம் தாரம்தான்... மூத்த தாரம் கேன்சர்ல போயிட்டாளாம். அவள நல்லா பார்த்திருக்கார். இப்பக்கூட அவ போட்டோவ ஹால்ல மாட்டிதான் வெச்சிருக்கார் பாத்தியா... இன்னொரு கல்யாணம் கட்டிக்கிட்டாக் கூட அவ போட்டோ இங்கதான் இருக்கும்னு அப்பாட்ட சொல்லிருக்கார். அப்பாக்கு ரொம்ப திருப்திடி... ஒன்னயும் அவள மாதிரியே நல்லா பாத்துப்பார்டி.’</p>.<p>'என் போட்டோவ எங்கே மாட்டுவாராம்?’</p>.<p>'துக்கிரி துக்கிரி... நீ ஏண்டி சாகணும்?’</p>.<p>'எனக்கு அரவிந்த் சாமி புடிக்கும்மா... அவர் படத்தை நானும் மாட்டிக்கிறேன்.’</p>.<p>'நீ என்ன அரவிந்த் சாமியக் கட்டிக்கிட்டியா? அவன் ஒன்ன வுட்டுட்டுப் போயிட்டானா? பேத்தாத... நீ கல்யாணமே கட்டிக்க வேணாம் போ. ஒன்ன நெனச்சே அப்பாவும் நானும் செத்துப்போறோம். எங்க போட்டோவ மாட்டிக்கிட்டு நீ இரு.’</p>.<p>அம்மா அதுக்கு அப்புறம் ஒரு வாரம் ஆகியும் ஒரு வார்த்தைகூடப் பேசல... காலையில எழுந்து ஒரு கப் பால் காய்ச்சி, காபி போட்டு, மீதி பால் இருந்தா உறை ஊத்தி, மூணு இட்லி ஊத்தி, தனியா டிவி பாத்து... இந்த வாழ்க்கைக்குப் பயந்து வாழ்க்கையில கல்யாணம் பண்ணிக்க முடியுமா? பண்ணிக்கிட்டு மேபல் மாதிரியும் வாணி மாதிரியும் புலம்பத்தான் முடியுமா?</p>.<p>வாணி பாதி பிரியாணியை மூடி வெச்சா... ''சாப்பிடு''ன்னு அதட்டினா மேபல். அவள் அப்படியே மேஜை மேல சரிஞ்சி அழுதா...</p>.<p>''எல்லாம் போச்சுக்கா... நம்பிக்கை இல்லாம எந்தப் புருஷனோட வாழ முடியும்? பொம்பளப் புள்ளையப் பெத்து வெச்சிருக்கேன்... வேற என்ன செய்ய? இல்லன்னா 'நீ ஸ்டெனோவோட போறியா? நான் மேனேஜரோட போறேன்’னு போலாம்... த்தூ... இதெல்லாம் ஒரு வாழ்க்கையா?</p>.<p>வஞ்சிரத்தோட நடு எலும்பைக் கடிச்சி, டிபன் பாக்ஸின் ஒரு ஓரம் கடிச்சுத் துப்பின மேபல், ''அழுது என்ன ஆகப்போகுது? இல்ல... நம்ம மேனேஜர்தான் அவ்ளோ அழகா இருக்காரா?''</p>.<p>''என்ன பேசுற? நானே மனசு தாங்காமச் சொல்றேன்? நீ மட்டும் மீன் தின்னு. வயிறு வலிதான் வரணும் ஒனக்கு.''</p>.<p>''அதானே... சொல்லு சொல்லு. அப்புறமா அக்கவுன்ட்ஸ் செக்ஷன் பூரா புருஷனுக்கு மேபல் சோறு போட மாட்டானு பேசு.''</p>.<p>விஷயம் வேற திசை மாறுதுன்னு சவிதா உணர்ந்து எழுந்திரிக்க... மேபல், ''என்ன பிரச்னை ஆகுதுன்னவுடனே எந்திரிக்கிறீங்களா? இதுக்கு நீங்க கல்யாணமே கட்டி இருக்கலாம் போங்க'' என்று எரிச்சலுடன் டிபன் பாக்ஸை மூடினாள். வஞ்சிரம் சாப்பிடாத கணவனை டப்பாக்குள்ள அடைச்சுட்ட பெருநிம்மதி தெரிஞ்சுது அவளுக்கு.</p>.<p>''எப்ப சொன்னேன் மேபல் ஒன்னப் பத்தி''- என்று தேம்பி அழலானாள் வாணி.</p>.<p>''அட வுடு... ஏதோ கோவத்துல சொல்லிட்டேன்... ஒன்ன விட்டா எனக்காரு சொல்லு... இல்லே சவிதாக்கா?''</p>.<p>சவிதா, 'ஆமா’ என்பதுபோல் தலையசைக்க... வாணி, ''எனக்கு குத்த உணர்வா இருக்குக்கா. நேத்து கவுன்சலிங் போயிட்டு வந்ததுலேருந்து மனசுல இந்தாள பழி வாங்க நானும் எவங்கூடயாச்சும் போகணும்னு தோணுது. அதுவே என்னக் கொல்லுது. ஆனா, கூச்சம் இல்லாம என்னைத் தொட வர்றான். பீரியட்ஸ்னு பொய் சொல்லிட்டுப் படுத்துக்கிட்டேன்.''</p>.<p>கட்டற்ற அருவியில் மலைப்பாம்பு மடிஞ்சி அடிச்சிட்டுப் போற மாதிரி வாணி அழுதா.</p>.<p>''இந்த உறவு எல்லாம் வெறும் ஐடியலிசம்தான் வாணி... புனிதம் அது இதுனு நாமளா பேசிக்கிறோம். எல்லாமே பலூன்தான். சின்ன குண்டூசி டப்புனு வெடிக்க வெச்சிடும்... அப்படியே எதிர்கொள்''னு சவிதா சொன்னதும், அவ தோள்ல சாஞ்சி அழுதா.</p>.<p>சவிதா எந்திரிக்க, ''ரொமான்ஸ்கூட ஐடியல்தான். இளையராஜான்னா எனக்கு உசிரு. ஆனா, அவர் பாட்டுல வர்ற ரொமான்ஸ் வாழ்க்கையில இருக்கா என்ன?''னு சொல்லிட்டுக் கடந்து போனா. அவ வாணியைத் தட்டிக் கொடுத்துட்டாவது போயிருக்கலாம்னு மேபலுக்கு தோணி இருக்கணும். ''இவல்லாம்...''னு பல்லைக் கடிச்சிட்டே சொன்னா.</p>.<p>அடுத்த நாள் சவிதா பிரியாணி வாங்கி வரச் சொல்ல, மேபல் இட்லி சட்னி சாப்பிட, வாணி வஞ்சிரம் மீன் எடுத்துவந்திருந்தாள். </p>
<p><span style="color: #ff0000"><strong>ச</strong></span>ரியா ஒரு மணி ஆனா, வயித்துக்குள்ள அலாரம் அடிச்சுடுது. சவிதா டிபன் பாக்ஸைத் திறந்தப்ப, உள்ளே இருந்த இட்லியும் சட்னியும் புராதன வாசனையைப் பறைசாற்றினபடி இருந்துச்சு. எதிரே உட்கார்ந்திருந்த வாணி, ''இட்லியா அக்கா?''னு கேட்டதுகூட கிண்டலா கேட்ட மாதிரி இருந்துச்சு.</p>.<p>''க்கும்... இதுவாச்சும் கொண்டுவர முடியுதேனு நானே திருப்திப்பட்டுக்கிறேன். நீ வேற...''</p>.<p>''நான் சங்கரை, பிரியாணி வாங்கிட்டு வரச் சொன்னேன்.''</p>.<p>''ஏன்... சமைக்கல?''</p>.<p>''இல்லக்கா... இன்னிக்கு முடியல. மூணாவது நாளா ப்ளீடிங் நிக்கல... அதான்... அவரு ஒண்ணும் பண்ண வேணாம்னு சொல்லிட்டாரு.''</p>.<p>சவிதா எதுவுமே சொல்லாம விழுந்து விழுந்து சிரிக்க... ''என்ன நடக்குது இங்க?''னு சொல்லியபடி லஞ்ச் பாக்ஸை மேஜை மீது வைத்தாள் மேபல்.</p>.<p>''கர்த்தாவே... என்னா சிரிப்பு இது?''</p>.<p>''என் கஷ்டத்தைச் சொன்னா சவிதாக்காவுக்கு சிரிப்புதான் வருது. என்னத்தைச் சொல்ல போ'' என்றபடி பிரியாணிப் பொட்டலத்தைப் பிரித்தாள். சவிதாவுக்கு புரையேறியது. ''ஏங்க்கா... ஏங்க்கா?'' என்றபடி அவள் தலையில் தட்டினாள் மேபல்.</p>.<p>''தலையுமில்லாம வாலுமில்லாமப் பேசுறா... என்னத்தைச் சொல்ல...''</p>.<p>''சும்மாருங்கக்கா... நானே டென்ஷன்ல இருக்கேன்... ஒங்களுக்கு கிண்டல் வேற...''</p>.<p>''அதான் இட்லியோ சட்னியோ, கல்யாணம் பண்ணிக்காம என்ன மாதிரி இருக்கணும் வாணி'' - சொன்னாளே தவிர, மனசுக்குள்ள தனியா ஈ.பி பில் கட்டுற கொடுமைலேருந்து, தனியா மூணு இட்லி ஊத்துற வெறுமை வரைக்கும் மனசுல வந்துதான் போச்சுது. ஆனா, எல்லார் முன்னாலயும் அதைச் சத்தமா ஒத்துக்க முடியல. சவிதா தலையை டக்குன்னு குனிஞ்சுக்கிட்டா.</p>.<p>மேபல் ஒண்ணும் சொல்லாது அமைதியா சாப்பிட ஆரம்பிச்சா. பின்ன மெள்ள, ''என்னத்த கல்யாணம் செஞ்சிக்கிட்டு... வெளிய சொல்ல முடியிதா? என் வாழ்க்கையை எடுத்துக்க... விவாகரத்து வாங்கி அடுத்த கல்யாணம்னுதான் பேரு... அதுல எத்தினி பிரச்னை பாரு... மோர்க்குழம்பு வெச்சு ஒரு நாள்லதான் சாப்பிடணும்... கல்யாணம்னா அது ஒரு தடவைதான் செய்யணும்...''</p>.<p>''ஏன் மேபல்?''னு பரிவா கேட்டா வாணி.</p>.<p>''அவருக்கு பிசினஸ் டல்லுக்கா... ஆனா, அவர் குடும்பம் அவரைப் பிடுங்கித் தின்னுது. அதைச் சொன்னா பிரச்னை... சண்டைதான்... பாருக்கா... மூணு நாளா வீட்ல சாப்பிடல... கோவம்... வைராக்கியமாம். பாத்தேன்... 'பார்றா மவனே’னு அந்தாளுக்குப் பிடிச்ச வஞ்சிரத்தை இஞ்சிப்பூண்டு அரைச்சு, எலுமிச்சை பிழிஞ்சு வறுத்து எடுத்தாந்துட்டேன்... என்னைவிட வஞ்சிரம்னா உசிரு மனுஷனுக்கு. ஆனா முகத்துல காட்டணும்... ம்ம்ம்'' - மேபல் வஞ்சிரம் மீனை வன்மத்தோடு கடித்தாள்.</p>.<p>''என்ன மேபல்... இப்படிச் சொல்ற. அப்படின்னா ஆபீஸ்ல ஸ்டெனோவ வெச்சிருக்கிற என் புருஷனுக்கு என்ன செய்யச் சொல்ற?'' - வாணி கண் கலங்குவதை மறைக்கப் பார்த்து, பிரியாணிக்குள் லெக் பீஸைத் தேடினாள்.</p>.<p>''எல்லாரும் காலம் பூரா லவ் பண்ணிட்டே அலைய முடியுமா என்ன? நீ வேற... எல்லாம் இருக்கும் வாணி, ஒரு உறவுன்னா... நம்ம மனச யாரும் எட்டிப் பாக்கலையா என்ன? சொல்லுங்க சவிதாக்கா... ஒங்களுக்கு கல்யாணம் ஆகல... ஆனா, நீங்க யாரையாச்சும் பாத்து அச்சோனு நின்னது இல்லை?''</p>.<p>சவிதா இட்லியைச் சாப்பிட்டு முடித்து, டிபன் பாக்ஸை மூடிவைத்தாள். ''அட இது என்ன பேச்சு? அரவிந்த் சாமியக்கூட எனக்குப் பிடிக்கும். ஒனக்கு ரஜினி பிடிக்கும்.''</p>.<p>''போக்கா.... எல்லாம் பழைய ஆளா சொல்லு...''</p>.<p>ப்யூன் சங்கர் எட்டிப் பார்த்து, ''மேடம்... பிரியாணி நூத்தி இருவது ரூவா ஆயிடுச்சு'' என்றான்.</p>.<p>''அப்புறம் வாப்பா... கோழி தொண்டைக்குள்ள இறங்கட்டும்... இன்னும் இருபதுதான் தரணும்.''</p>.<p>அவன் லேசான அதிருப்தியோடு அங்கிருந்து கிளம்ப... மேபல், ''அதை உடனே கொடுத்துத் தொலைச்சாத்தான் என்ன?''னு கேட்டா.</p>.<p>''ஆமா... இன்னும் பத்து நிமிஷத்துல கொடுத்தா வாங்க மாட்டானா என்ன? இதைக் கேளுக்கா... நேத்து கவுன்சலர்கிட்ட போனோம்... அவரு எல்லாத்தையும் ஒத்துக்கிட்டாரு. அவகூட ஆந்திரா வரைக்கும் போனாராம். எப்படிக்கா இதையெல்லாம் ஜீரணிக்க முடியும்?''</p>.<p>''அதெல்லாம் சகஜம்டி வாணி... வருத்தப்படுறார்ல?''</p>.<p>''அதெல்லாம் ஒண்ணும் இல்லை... தெம்பாச் சொல்றார்.''</p>.<p>''சொல்லாமகூட இருக்கலாம்ல?''</p>.<p>''அவகூட போகாம இருந்திருக்கலாம்ல?''</p>.<p>''கல்யாணம்ங்கிறதே உண்மையில கிழிஞ்ச துணியைத் தைக்கிற மாதிரிதான். அத முதல்ல ஒத்துக்க... இல்லன்னா சவத்த 'வேணாம்’னு வெட்டித் தள்ளிட்டு தனியா வாழு.''</p>.<p>''அது எப்படிக்கா முடியும்?''</p>.<p>''ஏன் அக்கா இல்லை?''</p>.<p>சவிதா வேறு எங்கேயோ பார்க்குற மாதிரி முகத்தை திருப்பிக்கிட்டா. உள்ளுக்குள்ள அம்மா போன வாரம் அனுப்பின வரன் முகம் ஞாபகத்துக்கு வந்துச்சு. 'ரெண்டாம் தாரம்தான்... மூத்த தாரம் கேன்சர்ல போயிட்டாளாம். அவள நல்லா பார்த்திருக்கார். இப்பக்கூட அவ போட்டோவ ஹால்ல மாட்டிதான் வெச்சிருக்கார் பாத்தியா... இன்னொரு கல்யாணம் கட்டிக்கிட்டாக் கூட அவ போட்டோ இங்கதான் இருக்கும்னு அப்பாட்ட சொல்லிருக்கார். அப்பாக்கு ரொம்ப திருப்திடி... ஒன்னயும் அவள மாதிரியே நல்லா பாத்துப்பார்டி.’</p>.<p>'என் போட்டோவ எங்கே மாட்டுவாராம்?’</p>.<p>'துக்கிரி துக்கிரி... நீ ஏண்டி சாகணும்?’</p>.<p>'எனக்கு அரவிந்த் சாமி புடிக்கும்மா... அவர் படத்தை நானும் மாட்டிக்கிறேன்.’</p>.<p>'நீ என்ன அரவிந்த் சாமியக் கட்டிக்கிட்டியா? அவன் ஒன்ன வுட்டுட்டுப் போயிட்டானா? பேத்தாத... நீ கல்யாணமே கட்டிக்க வேணாம் போ. ஒன்ன நெனச்சே அப்பாவும் நானும் செத்துப்போறோம். எங்க போட்டோவ மாட்டிக்கிட்டு நீ இரு.’</p>.<p>அம்மா அதுக்கு அப்புறம் ஒரு வாரம் ஆகியும் ஒரு வார்த்தைகூடப் பேசல... காலையில எழுந்து ஒரு கப் பால் காய்ச்சி, காபி போட்டு, மீதி பால் இருந்தா உறை ஊத்தி, மூணு இட்லி ஊத்தி, தனியா டிவி பாத்து... இந்த வாழ்க்கைக்குப் பயந்து வாழ்க்கையில கல்யாணம் பண்ணிக்க முடியுமா? பண்ணிக்கிட்டு மேபல் மாதிரியும் வாணி மாதிரியும் புலம்பத்தான் முடியுமா?</p>.<p>வாணி பாதி பிரியாணியை மூடி வெச்சா... ''சாப்பிடு''ன்னு அதட்டினா மேபல். அவள் அப்படியே மேஜை மேல சரிஞ்சி அழுதா...</p>.<p>''எல்லாம் போச்சுக்கா... நம்பிக்கை இல்லாம எந்தப் புருஷனோட வாழ முடியும்? பொம்பளப் புள்ளையப் பெத்து வெச்சிருக்கேன்... வேற என்ன செய்ய? இல்லன்னா 'நீ ஸ்டெனோவோட போறியா? நான் மேனேஜரோட போறேன்’னு போலாம்... த்தூ... இதெல்லாம் ஒரு வாழ்க்கையா?</p>.<p>வஞ்சிரத்தோட நடு எலும்பைக் கடிச்சி, டிபன் பாக்ஸின் ஒரு ஓரம் கடிச்சுத் துப்பின மேபல், ''அழுது என்ன ஆகப்போகுது? இல்ல... நம்ம மேனேஜர்தான் அவ்ளோ அழகா இருக்காரா?''</p>.<p>''என்ன பேசுற? நானே மனசு தாங்காமச் சொல்றேன்? நீ மட்டும் மீன் தின்னு. வயிறு வலிதான் வரணும் ஒனக்கு.''</p>.<p>''அதானே... சொல்லு சொல்லு. அப்புறமா அக்கவுன்ட்ஸ் செக்ஷன் பூரா புருஷனுக்கு மேபல் சோறு போட மாட்டானு பேசு.''</p>.<p>விஷயம் வேற திசை மாறுதுன்னு சவிதா உணர்ந்து எழுந்திரிக்க... மேபல், ''என்ன பிரச்னை ஆகுதுன்னவுடனே எந்திரிக்கிறீங்களா? இதுக்கு நீங்க கல்யாணமே கட்டி இருக்கலாம் போங்க'' என்று எரிச்சலுடன் டிபன் பாக்ஸை மூடினாள். வஞ்சிரம் சாப்பிடாத கணவனை டப்பாக்குள்ள அடைச்சுட்ட பெருநிம்மதி தெரிஞ்சுது அவளுக்கு.</p>.<p>''எப்ப சொன்னேன் மேபல் ஒன்னப் பத்தி''- என்று தேம்பி அழலானாள் வாணி.</p>.<p>''அட வுடு... ஏதோ கோவத்துல சொல்லிட்டேன்... ஒன்ன விட்டா எனக்காரு சொல்லு... இல்லே சவிதாக்கா?''</p>.<p>சவிதா, 'ஆமா’ என்பதுபோல் தலையசைக்க... வாணி, ''எனக்கு குத்த உணர்வா இருக்குக்கா. நேத்து கவுன்சலிங் போயிட்டு வந்ததுலேருந்து மனசுல இந்தாள பழி வாங்க நானும் எவங்கூடயாச்சும் போகணும்னு தோணுது. அதுவே என்னக் கொல்லுது. ஆனா, கூச்சம் இல்லாம என்னைத் தொட வர்றான். பீரியட்ஸ்னு பொய் சொல்லிட்டுப் படுத்துக்கிட்டேன்.''</p>.<p>கட்டற்ற அருவியில் மலைப்பாம்பு மடிஞ்சி அடிச்சிட்டுப் போற மாதிரி வாணி அழுதா.</p>.<p>''இந்த உறவு எல்லாம் வெறும் ஐடியலிசம்தான் வாணி... புனிதம் அது இதுனு நாமளா பேசிக்கிறோம். எல்லாமே பலூன்தான். சின்ன குண்டூசி டப்புனு வெடிக்க வெச்சிடும்... அப்படியே எதிர்கொள்''னு சவிதா சொன்னதும், அவ தோள்ல சாஞ்சி அழுதா.</p>.<p>சவிதா எந்திரிக்க, ''ரொமான்ஸ்கூட ஐடியல்தான். இளையராஜான்னா எனக்கு உசிரு. ஆனா, அவர் பாட்டுல வர்ற ரொமான்ஸ் வாழ்க்கையில இருக்கா என்ன?''னு சொல்லிட்டுக் கடந்து போனா. அவ வாணியைத் தட்டிக் கொடுத்துட்டாவது போயிருக்கலாம்னு மேபலுக்கு தோணி இருக்கணும். ''இவல்லாம்...''னு பல்லைக் கடிச்சிட்டே சொன்னா.</p>.<p>அடுத்த நாள் சவிதா பிரியாணி வாங்கி வரச் சொல்ல, மேபல் இட்லி சட்னி சாப்பிட, வாணி வஞ்சிரம் மீன் எடுத்துவந்திருந்தாள். </p>