<p><span style="color: #ff0000"><strong>ப</strong></span>ஞ்சுமிட்டாய்களுக்கு</p>.<p>முதன்முதலில்</p>.<p>ரோஸ் நிறத்தைத் தேர்ந்தெடுத்தவன்</p>.<p>குழந்தைகளின்</p>.<p>மாபெரும் ஓவியனாகத்தான் இருப்பான்</p>.<p>'பஞ்சு மிட்டாய்’ என்று</p>.<p>கூக்குரலிடாமல்</p>.<p>சிணுங்கும் சிறுமணியோசையால்</p>.<p>அவன் குழந்தைகளை அழைப்பது</p>.<p>ஒரு தெய்வீகக் குரல்</p>.<p>தெய்வமே அழைத்தாலும்</p>.<p>குழந்தைகள்</p>.<p>ஓடிவந்துவிடுமா என்ன</p>.<p>மழலைகளின் விழிகளிலும்</p>.<p>விரல்களிலும்</p>.<p>இதழ்களிலும்</p>.<p>கன்னங்களிலும்கூட</p>.<p>ஒட்டிக்கொண்ட</p>.<p>ரோஸ் நிறத்தின் இனிமையை</p>.<p>அவனைப் போல</p>.<p>யாரும் ரசித்திருக்க முடியாது</p>.<p>மேலும் குழந்தைகளின் கைகளில் </p>.<p>அப்படியொரு மென்மையைத் தருகிறவன் </p>.<p>கலைஞனாக அல்லாமல்</p>.<p>வேறு என்னவாக இருக்க முடியும்</p>.<p>குழந்தைகளின் கலைஞன்</p>.<p>தன் படைப்புகளை</p>.<p>அதன் அசலான வெண்ணிறத்தில்</p>.<p>வழங்க நினைத்தான்</p>.<p>அவனது குழந்தைகளேகூட</p>.<p>அவற்றை விரும்பவில்லை</p>.<p>சலிப்புற்ற கலைஞன்</p>.<p>கடற்கரையில் ஒருநாள்</p>.<p>களைத்து நின்றபோது</p>.<p>அவனுக்கு முன்னால்</p>.<p>ஒரு வானவில்</p>.<p>அது</p>.<p>கலைந்துகொண்டேயிருந்தது.</p>
<p><span style="color: #ff0000"><strong>ப</strong></span>ஞ்சுமிட்டாய்களுக்கு</p>.<p>முதன்முதலில்</p>.<p>ரோஸ் நிறத்தைத் தேர்ந்தெடுத்தவன்</p>.<p>குழந்தைகளின்</p>.<p>மாபெரும் ஓவியனாகத்தான் இருப்பான்</p>.<p>'பஞ்சு மிட்டாய்’ என்று</p>.<p>கூக்குரலிடாமல்</p>.<p>சிணுங்கும் சிறுமணியோசையால்</p>.<p>அவன் குழந்தைகளை அழைப்பது</p>.<p>ஒரு தெய்வீகக் குரல்</p>.<p>தெய்வமே அழைத்தாலும்</p>.<p>குழந்தைகள்</p>.<p>ஓடிவந்துவிடுமா என்ன</p>.<p>மழலைகளின் விழிகளிலும்</p>.<p>விரல்களிலும்</p>.<p>இதழ்களிலும்</p>.<p>கன்னங்களிலும்கூட</p>.<p>ஒட்டிக்கொண்ட</p>.<p>ரோஸ் நிறத்தின் இனிமையை</p>.<p>அவனைப் போல</p>.<p>யாரும் ரசித்திருக்க முடியாது</p>.<p>மேலும் குழந்தைகளின் கைகளில் </p>.<p>அப்படியொரு மென்மையைத் தருகிறவன் </p>.<p>கலைஞனாக அல்லாமல்</p>.<p>வேறு என்னவாக இருக்க முடியும்</p>.<p>குழந்தைகளின் கலைஞன்</p>.<p>தன் படைப்புகளை</p>.<p>அதன் அசலான வெண்ணிறத்தில்</p>.<p>வழங்க நினைத்தான்</p>.<p>அவனது குழந்தைகளேகூட</p>.<p>அவற்றை விரும்பவில்லை</p>.<p>சலிப்புற்ற கலைஞன்</p>.<p>கடற்கரையில் ஒருநாள்</p>.<p>களைத்து நின்றபோது</p>.<p>அவனுக்கு முன்னால்</p>.<p>ஒரு வானவில்</p>.<p>அது</p>.<p>கலைந்துகொண்டேயிருந்தது.</p>