<p><span style="color: #ff0000"><strong>கா</strong></span>ர்மேகம், பார்வதிக்குட்டியை முதன்முதலில் பார்த்தது, 'ஒரு ஓணம் ராத்திரி’ என்ற மலையாளப் பட ஷூட்டிங்கில். க்ஷேத்ராடனம்போல, இடையிடையே கேரளத்துக்கு அவர் 'தீர்த்தாடனம்’ போவது உண்டு. அப்படிப் போகும்போது, தற்செயலாக கோவளத்தில் நாகர்கோவில் கோலப்பனைப் பார்த்தார். கார்மேகம் சென்னை போகும்போது பலதும் செய்து கொடுப்பவன் கோலப்பன். கார்மேகத்தை 'முதலாளி... முதலாளி...’ என ஒவ்வொரு வரித் தொடக்கத்திலும் முடிவிலும் சொல்வான். உண்மையில் கார்மேகம் ஒரு முதலாளிதான். பரமக்குடியின் பெருந்தனக்காரர் சா.வி.கிருஷ்ணசாமியின் ஒரே புத்திரன். திரையரங்கு, மில்கள், தோப்புகள், கல்வி நிறுவனங்கள் என ஏராளமாக உள்ளன. கூடவே, பணக்காரப் புத்திரனுக்கு உண்டான எல்லா போக்கிரித்தனமும் உண்டு. கிருஷ்ணசாமியால் அவரைத் திருத்த முடியவில்லை. 'கல்யாணம் திருத்தும்’ என்றார்கள். இரண்டு பிள்ளைகள் ஆகியும் நாகஜோதி (பார்த்திபனூர் ஆ.ந.வி.ப.ராமசாமியின் மகள்) ராத்திரி பன்னிரண்டு மணி வரை விழித்திருந்தும், கார்மேகத்தின் வண்டி இரண்டு மணிக்குக் குறைந்து 'கிளப்’பில் இருந்து புறப்பட்டது இல்லை. போதையில் அவர் வண்டி லாகவமாகத் திரும்புவதை, ஐந்து முக்கில் ராத்தங்கும் சின்னாயி வீட்டுக் கழுதைகளும் சிலையாக நிற்கும் காந்தியும் நாள் தவறாது பார்ப்பார்கள்.</p>.<p>சா.வி.கிருஷ்ணசாமி தனக்கு நன்கொடை கொடுத்ததைப் பற்றி, மார்த்தாண்டம் சுந்தரம்பிள்ளை தன் நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார். கார்மேகம் தன்னைச் சுற்றியிருக்கும் அடிப்பொடிகளுக்கு மாத்திரமே ஏதேனும் தாரைவார்ப்பார். பரமக்குடியில் கூடுதலாக வெயில் இருப்பதாகக் கருதினாலோ அல்லது மலையாள மழை பார்க்கவேண்டும் எனத் தோன்றினாலோ, வண்டி ஆரியங்காவு கடக்கும். அப்படி ஒரு யாத்திரையில்தான், கோவளத்தில் வாயில் துண்டின் முனையைக் கடித்தபடி ஓடி வந்தான் கோலப்பன்.</p>.<p>'அண்ணா எந்தானு இங்கோட்டு ஒரு யாத்ரா?'</p>.<p>கார்மேகம் அவனை உற்று நோக்கினார். போதையில் கண்கள் கூசின. பகல் கடல் மின்னிக் கொண்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில கட்டடங்கள் தெரிந்தன. கடற்கரையில் ஒரு படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது.</p>.<p>'என்னடா விசேஷம்?' என்றார் கார்மேகம்.</p>.<p>'ஒரு மலையாளப் படம் அண்ணா.'</p>.<p>'என்ன படம்?'</p>.<p>' 'ஒரு ஓணம் ராத்திரி’... போன வருஷம் 'செம்மீன்’ எடுத்தாங்கல்ல... அவங்க புரொடக்ஷன். அச்சுதன் நாயரும் ரோஸியும் நாயகன் - நாயகி ஆயிட்டு. இப்போ இங்கதான் ஜோலி.'</p>.<p>'ம்... ம்...'</p>.<p>'அண்ணா... சாயங்காலம் அங்கோட்டு வரணும். நல்ல அயிட்டங்கள் உண்டு.'</p>.<p>'அயிட்டத்தை’ அழுத்தி உச்சரித்தான். கார்மேகம் பதில் பேசாமல் விடுதிக்குள் போனார். ரிசப்ஷனில் யாரோ இரண்டு மூன்று பேர் மலையாளத்தில் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தனர். தன் அறைக் கதவைத் திறந்தார். கூட்டாளிகளுக்கு வேறு அறை. அவர் எப்போதும் தனித்தே தங்குவார். எதிலும் ஒன்றாகப் புழங்குவதில் அவருக்கு விருப்பம் இல்லை. தவிர்க்க முடியாத சூழலில், முதல் ஆளாக முடித்துக்கொண்டு, வேட்டி மாத்திரம் கட்டிய வெற்று உடம்போடு, தன் அறைக்குத் திரும்புவார்.</p>.<p>அறையில் தொங்கிய காலண்டரை, கடற்காற்று இடம் வலமாக ஆட்டிக் கொண்டிருந்தது. அதில் இருக்கும் முண்டு அணிந்த மலையாளப் பெண்ணும், காற்றின் சொல்படி கேட்டுக் கொண்டிருந்தாள். வெளியே காக்கைகள் வேகமாகப் பறந்துகொண்டிருந்தன. அப்பாவுக்கு உடல்நலம் இல்லாமல் இருப்பது ஞாபகம் வந்தது. அலமாரியைத் திறந்து பாட்டிலில் இருக்கும் மீதத்தை கிளாஸில் கவிழ்த்துக் கொண்டார்.</p>.<p>சாயங்காலம் கோலப்பனே வந்து கூட்டிக்கொண்டுபோனான். கார்மேகமும் தவசியும் மாத்திரமே போனார்கள். 'அசதியாக இருக்கிறது’ எனச் சொல்லிவிட்டு அறையிலேயே படுத்துக்கொண்டார் ஜமால். இருவரும் செல்வாக்கில் கார்மேகத்தைவிட எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல.</p>.<p>பரபரப்பாக வேலைகள் நடந்து கொண்டிருந்தன.</p>.<p>'அத எடுத்தோ... வேகம், வேகம் லைட்டு போகுனு' - எங்கும் சத்தம். கட்டம்போட்ட முண்டும் ஜாக்கெட்டும் அணிந்த பெண்கள், அந்தப் பக்கம் கூட்டமாக அமர்ந்திருந்தார்கள். கோலப்பன் டீ கொண்டுவந்து கொடுத்தான்.</p>.<p>'அண்ணா... அங்க உட்கார்ந்திருக்கார்ல, அவர்தான் அச்சுதன் நாயர். இங்கோட்டு இருக்கினது ரோஸி.'</p>.<p>மீசையை பென்சிலால் தீட்டியது போல முஸ்லிம் கெட்டப்பில் அமர்ந்திருந்தார் அச்சுதன் நாயர். தவசி, ரோஸியிடம் இருந்து பார்வையை விலக்கவில்லை. ரோஸி இவர்களைப் பார்த்து ஏதோ சொல்லிச் சிரிப்பதுபோல் கார்மேகத்துக்குத் தோன்றியது. கார்மேகம் வேறு பக்கம் பார்வையைத் திருப்பினார். கட்டம் போட்ட முண்டுகளின் கூட்டம்.</p>.<p>சடாரென மழை பெய்ய ஆரம்பித்தது. இவர்கள் உட்கார்ந்திருந்த பெரிய துணிக் குடையை நோக்கி, முண்டு அணிந்த பெண்களில் சிலர் வந்தனர். ரோஸியும் அச்சுதன் நாயரும் காரை நோக்கி நடந்தார்கள்.</p>.<p>கொஞ்ச நேரம் கழித்துதான், தன் அருகே நிற்கும் பெண்ணை கார்மேகம் கவனித்தார். நெஞ்சுக்குள் ஏதோ பகீர் என்றது. விடுதி அறையில் காற்றில் ஆடிய காலண்டர் பெண்போலவே அசப்பில் இருந்தாள். தூரத்தே நடந்து போகும் நாயகி ரோஸியைக் காட்டிலும் அழகாக இருந்தாள். கோலப்பன், விநாடியில் கவனித்து விட்டான். தவசி பார்வையால் குதறிக் கொண்டிருந்தார்.</p>.<p>பார்வதிக்குட்டி, கார்மேகத்தின் பார்வையைக் கவனித்துவிட்டாள். ஏஜென்ட் வக்கச்சன்தான் அவளைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். நெய்யாற்றங்கரையை அடுத்து ஊர். அப்பா விவசாயக் கூலி. ஆனால், வேலை வருடம் முழுவதும் இருக்காது. இவளுக்குக் கீழ் இன்னும் மூவர். வக்கச்சன் அவள் அம்மையிடம் வாக்கு அளித்திருந்தார்.</p>.<p>'மூணு வேளை ஊணு, திவசத்துக்கு பைசா, பின்ன வல்ல சான்ஸ் கிட்டியால் கேரி பிடிச்சு நாயகி ஆகானல்லே.'</p>.<p>நாயகிக்குப் பின், மீன் கூடையோடு நிற்பதுதான் பார்வதிக்குட்டியின் பல நாள் வேலை. இவளை பல காட்சிகளில் மாற்றி மாற்றி நிறுத்தினார்கள். நால்வர் மாத்திரமே நிற்கும் காட்சிகளில் இவளை வேண்டாம் என்றார்கள். ரோஸி சேச்சி மற்ற பெண்களோடு பேசுவதுபோல் இவளுடன் பேசுவது இல்லை. அச்சுதன் சேட்டன் இரண்டொரு முறை சிரித்திருக்கிறார். மற்றொரு நடிகரான ரஞ்சன் மாஷே எப்போதும் சிடுசிடுப்பாக. பார்வதிக்குட்டிக்கு ஊருக்குப் போகலாம் என இருந்தது. வீட்டில் அரை வயிற்றுக் கஞ்சியே என்றாலும் சந்தோஷமாகக் குடிக்கலாம். அதுவும் இன்றைக்கு மிகவும் கூனிக்குறுகிப் போய்விட்டாள். அச்சுதன் சேட்டன் பணம் கொடுப்பதுபோல காட்சி. ரோஸி சேச்சியின் தோழியரில் ஒருத்தி வாங்க வேண்டும். இயக்குநர் இவளை வாங்கச் சொல்லியிருந்தார். அந்தக் காட்சியில் ரோஸி சேச்சி கிடையாது. தற்செயலாக அங்கு வந்த ரோஸி, மேனேஜர் ஜேக்கப்பிடம் ஏதோ கேட்க, பார்வதிக்குட்டியை மாற்றி சுபைதாவை வாங்கச் சொன்னார்கள். பார்வதிக்குட்டிக்கு மிகவும் அவமானமாக இருந்தது. உடனே ஊருக்குப் போய்விட வேண்டும் என நினைத்தாள். கையில் பணம் இல்லை. ஷாட்டில் இல்லாத மற்ற பெண்களோடு அமர்ந்தவள், தூரத்தில் அலையில் விளையாடிக்கொண்டிருக்கும் குடும்பத்தையே பார்த்துக்கொண்டுஇருந்தாள்.</p>.<p>கோலப்பன் அவள் அருகில் வந்து அமர்ந்தான்; சுருக்கமாகப் பேசினான். அவளுக்கு யாரையோ பழிவாங்க வேண்டும் எனத் தோன்றியது. ஒருமுறை நிமிர்ந்து கார்மேகத்தைப் பார்த்தாள். அவர் அங்கு இருந்து, இவளையே பார்த்துக்கொண்டிருந்தார். கண்களைத் தாழ்த்திக்கொண்டாள்.</p>.<p>ராத்திரி கோலப்பனே வந்து அழைத்துக் கொண்டு போனான். அவர்கள் தங்கி இருந்த விடுதியில் இருந்து, இரண்டு தெரு தள்ளி இருந்தது பார்வதிக்குட்டி போன விடுதி. படிக்கட்டில் ஏறும்போது ரூம் பாய் நிமிர்ந்து பார்த்தான். பிறகு, இவர்கள் கடந்துபோனார்கள் என்றே தெரியாத பாவனையில், ஜாடியில் தண்ணீரை நிரப்பிக்கொண்டிருந்தான்.</p>.<p>ஜமாலுக்கும் தவசிக்கும் ஏற்கெனவே தெரிந்ததுதான். கார்மேகத்துக்குத்தான் எப்போதும் முதல் பூஜை. அவர் தன் அறைக் கட்டிலில் வெற்று உடம்போடு அமர்ந்திருந்தார்.</p>.<p>'அண்ணா... அப்ப நான் காலையில வர்றேன்' என்றபடி உள்ளே நுழையாமல், கோலப்பன் வேகமாகப் புறப்பட்டுப் போனான்.</p>.<p>கார்மேகம் அவளை 'வா’ எனச் சொல்லவில்லை. கிளாஸை எடுத்து ஸ்டூலில் வைத்தார்.</p>.<p>'குடிப்பியா?' என்றார்.</p>.<p>இவள் தலையை வேகமாக 'இல்லை’ என அசைத்தாள்... ஒன்றும் பேசவில்லை. கடல் அலையின் சத்தம் துல்லியமாகக் கேட்டது. பார்வதிக்கு, தன் நாய் குட்டன் ஞாபகம் வந்தது. சத்தம் இல்லாமல் அழ ஆரம்பித்தாள். திடுக்கிட்டவராக கார்மேகம் நிமிர்ந்து பார்த்தார்.</p>.<p>'ஏன் அழுற?'</p>.<p>'இது ஒண்ணும் எனக்குப் பழக்கம் இல்லா...'</p>.<p>'இது எல்லாரும் சொல்றதுதான்.'</p>.<p>'சத்தியம். நா ஆதியமாய்ட்டு சினிமாவில் அபிநயிக்காந்தன்னே வீட்டிலின்னு இறங்கியது.'</p>.<p>'எதுக்கு அழுற?'</p>.<p>'எண்ட பட்டி குட்டன் ஓர்ம வந்து...'</p>.<p>'கோலப்பன் எவ்வளவு சொன்னான்?'</p>.<p>'நூறு.'</p>.<p>கார்மேகத்திடம் முன்னூறு சொல்லியிருந்தான். கார்மேகம் ஏதோ தோன்றியவராக 'எங்கூட வர்றியா?' என்றார்.</p>.<p>'எவிட?'</p>.<p>'பரமக்குடிக்கு.'</p>.<p>'வந்து?'</p>.<p>'வந்து இரு.' </p>.<p>பிறகு இருவரும் ஒன்றும் பேசவில்லை. கார்மேகம் ஜன்னல்கள், கதவுகள் எல்லாவற்றையும் சாத்தினார். அவர் கட்டில் மேல் படுத்தார். இவள் நாற்காலியிலேயே உட்கார்ந்திருந்தாள். திடீரென யாரோ கதவை தடதடவெனத் தட்டினார்கள். உட்கார்ந்தவாறு தூங்கிக்கொண்டிருந்தவள், பதற்றத்தில் நாற்காலியில் இருந்து கீழே விழப்போனாள். கார்மேகம் நிதானமாக எழுந்து, வேட்டியை இறுக்கிக் கட்டியவாறு அவளை சைகையில் 'இரு’ எனச் சொல்லிவிட்டு, கதவைத் திறந்து வெளியே போனார்.</p>.<p>வெளியே ஒரே சத்தமாக இருந்தது. தவசியும் ஜமாலும் 'இப்பவே அனுப்பு’ என்றனர். கார்மேகம், 'இன்று முடியாது... நாளைதான்’ என்றார். ஜமால் தாழ்வாரத்தின் ஓரமாகப் போய் புகை பிடித்தார். தவசி அவர் அருகே போனார். இருவரும் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டனர். வராந்தாவின் கடைசியில் மாத்திரமே விளக்கு எரிந்தது. மற்ற இடங்கள் இருளாக இருந்தன. கார்மேகத்தின் அருகே வந்தனர்.</p>.<p>'சரி; நாளைக்கு விட்டுரணும் கார்மேகம். இது நல்லாயில்ல...'</p>.<p>''ம்... ம்...'</p>.<p>இருவரும் தங்களது அறைக்குள் நுழைந்து சத்தத்தோடு கதவைச் சாத்தினர். அவர்கள் எப்போதும் தங்குவது ஒரே அறையில்தான்.</p>.<p>கார்மேகம் அறைக்குள் வந்தார். பார்வதிக்கு வெளியே நடந்தது ஓரளவுக்குப் புரிந்திருந்தது. கார்மேகம் சிகரெட் பற்றவைத்தார். சிகரெட்டைக் கையில் பிடித்தவாறு வெளியே போனவர், பத்து நிமிடங்கள் கழித்து உள்ளே வந்து அவளிடம், 'கீழே ஒரு கறுப்பு அம்பாசிடர் கார் நிக்குது. டிக்கியைத் திறந்துவெச்சிருக்கேன். அதில ஏறி உட்கார்ந்து மூடிக்க.'</p>.<p>பார்வதிக்குட்டி இறங்கிப் போனாள். டிக்கி கதவை மூடும்போது கடற்கரையில் படப்பிடிப்பு நடப்பது தெரிந்தது. கதவைக் கீழே விட்டாள்... இருட்டியது.</p>.<p>கார்மேகம் எதிர்பார்த்ததுபோல தவசியும் ஜமாலும் மறுபடியும் வந்தார்கள்.</p>.<p>'மாப்ள... எங்க குட்டி?'</p>.<p>'போயிட்டா.'</p>.<p>'இது என்ன நியாயம்? நீர் மாத்திரம் செய்வீரு... நாங்க விளக்கு புடுச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கணுமா?'</p>.<p>'ஜமால்... பார்த்துப் பேசு!'</p>.<p>கோபத்தில் ஜமாலுக்கு மூச்சு இறைத்தது. தவசி மேஜையை விரலால் மெள்ளத் தட்டிக்கொண்டிருந்தார்.</p>.<p>'புத்திசாலித்தனமா செஞ்சுப்புட்டீக' என மாத்திரம் சொன்னார். கார்மேகம் சட்டையைப் போட்டார்.</p>.<p>'எங்க மாப்ள கிளம்பிட்டீக?' என்றார் தவசி.</p>.<p>'டீ குடிக்க.'</p>.<p>'நாங்களும் வரலாம் இல்ல?'</p>.<p>''வாங்க.'</p>.<p>சாலையில் ஓர் ஆள்கூட இல்லை. தலையில் சிவப்புத் துண்டோடு லோடு இறக்கிக்கொண்டிருப்பவர்களிடம் கேட்டார்கள்...</p>.<p>'நேரே போயி வலத்தோட்டுத் திரும்பு' என்றார்கள்.</p>.<p>வலது பக்கம் ஒரு டீக்கடை திறந்திருக்க, லாரிகளும் சில கார்களும் நின்றிருந்தன. மூவரும் டீயை வாங்கிக்கொண்டு கடையின் கீழ் இறங்கி நின்றனர். தவசி, எங்கோ டூர் போய் திரும்பும் மலையாளக் குடும்பத்தின் தலைவியை ஆராயத் தொடங்கியிருந்தார். கார்மேகம், 'வண்டி ரோட்டு மேல நிக்குது... கீழ இறக்கிப் போடுறேன்' என்றபடி காரை நோக்கி நடந்தார். காரில் ஏறியவர் கியரை மாற்றி ஓட்ட ஆரம்பித்தார். முதலில் தவசிதான் கவனித்தார்</p>.<p>'டேய் வண்டியை விட்டுட்டாருடா...'</p>.<p>'இதுல எதோ கோளாறு இருக்கு' என்றார் ஜமால்.</p>.<p>வண்டி நெய்யாற்றங்கரையைத் தாண்டியபோது நிறுத்தி, டிக்கியைத் திறந்தார்.</p>.<p>'வா வந்து முன்னால உட்காரு' என்றார்.</p>.<p>சேலையைச் சரிசெய்தவாறு கீழே இறங்க எத்தனித்தவள், வெளியே தெரிந்த கோயிலைப் பார்த்தவுடன் படக்கென டிக்கிக்குள் ஒடுங்கினாள். 'அய்யோ, இது எண்ட ஊராக்கும்.'</p>.<p>அதுதான் அவள் கடைசியாக நெய்யாற்றங்கரையைக் கண்டது.</p>.<p>பார்வதியை பரமக்குடியில், லாட்ஜில்தான் முதல் மூன்று நாட்கள் தங்கவைத்திருந்தார் கார்மேகம். சாப்பாடு கொண்டுவந்து தருகிற பையன் வழியாக, அது அவருடைய லாட்ஜ் எனத் தெரிந்துகொண்டாள். ஜமாலும் தவசியும் இரண்டாம் நாள் கார்மேகத்தோடு வந்தனர். வெளியே நின்றிருந்த ஜமாலின் கண்கள், இவள் இருக்கும் அறைக்குள்ளேயே இருந்தன. கார்மேகம் மேனேஜரோடு பேசிக் கொண்டிருக்கும்போது, ஜமால் இவள் அறை ஜன்னல் அருகே நின்றவாறு யாரிடமோ சொல்வதுபோல, 'இவரைக் கல்யாணம் பண்ணா ரெண்டாந்தாரம்னு கூட உறுதியா சொல்ல முடியாது. என்னோட வந்தா பொண்டாட்டி!' என்றார். அது அவளுக்கு ஏற்கெனவே தெரிந்ததுதான். கார்மேகம் அவரைப் பற்றி ஒளிவுமறைவு இல்லாமல், அவளிடம் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். அன்றைக்குப் படப்பிடிப்பில் மழையில் அவள் கண்கலங்கி நின்ற தருணம், தன்னை என்னவோ செய்தது என்றார்.</p>.<p>மதுரை அழகர்கோவிலில் வைத்து கல்யாணம் நடந்தது. கூடிப்போனால் பத்து ஆட்கள். அய்யர், கார்மேகத்தைப் பவ்யமாக வரவேற்றார். முத்தாலம்மன் கோயில் தெருவில், பழைய அம்பலக்காரர் வீட்டில் அவளைக் குடியமர்த்தினார். அவருடைய கைத்தடி சண்முகம் அங்குதான் குடியிருந்தான். பாதுகாப்புக்கும் ஆச்சு எனக் கணக்கிட்டிருந்தார்.</p>.<p>தெருவில் அவரோடு காரில் ஏறப் போகும்போதோ, இறங்கி நடந்து வரும்போதோ (கார் வர முடியாத அளவுக்குச் சிறிய தெரு) 'மலையாளத்தி’, 'மலையாளத்தி’ எனக் காதில் விழுந்துகொண்டே இருக்கும்.</p>.<p>35 வருடங்களாகக் கேட்டுக் கொண்டே இருக்கும் வசவு அது. மூத்த தாரம், அவர்களின் வீடு, குழந்தைகள், படுத்த படுக்கையாக இருக்கும் மாமனார் என துணி வெளுக்கும் சின்னக்குட்டிதான், பார்வதிக்கு எல்லா விஷயங்களையும் சொல்வாள்.</p>.<p>மூத்த தாரத்துக்கு இரண்டு பெரிய பையன்கள். கோயில் மண்டகப்படி, தியேட்டர் என காரை அனுப்பி பார்வதிக் குட்டியை எல்லா இடங்களுக்கும் வரச் சொல்வார் கார்மேகம். எல்லா இடங்களிலும் வெறுப்பான கண்கள், அவளை விரட்டிக்கொண்டே இருக்கும்.</p>.<p>ஒருமுறை இவர்களின் தியேட்டரில் படம் பார்க்கப் போனபோது, தற்செயலாக வந்த மூத்த தாரத்தின் மகன், இவளைப் பார்த்ததும் காரித் துப்பிவிட்டுப் போனான். மாமனார் இறந்த வீட்டுக்கு, இவளை கைக் குழந்தையோடு கார்மேகம் அழைத்துப் போனபோது, பெரும் ரகளையானது. மூத்த தாரத்தின் உறவினர்கள், இவள் வரக் கூடாது என ஆர்ப்பாட்டம் செய்தனர்.</p>.<p>''அவ அப்படித்தான் வருவா...' என்றார் கார்மேகம்.</p>.<p>மூத்தவன் அவரை அடிக்க வந்தான். அவன் அம்மா ஒரு ரூமுக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள். மூத்தவனை யாரோ இழுத்துக்கொண்டு போனார்கள்.</p>.<p>கோலப்பன் வழியாக வக்கச்சனை வரவழைத்து பார்வதி வீட்டுக்கு நல்லதொரு தொகையைக் கொடுத்தார் கார்மேகம். அம்மா, அப்பாவை 15 வருடங்கள் கழித்து அரவிந்த் ஆஸ்பத்திரிக்கு கண் ஆபரேஷன் பண்ண வந்தபோதுதான் பார்த்தாள். கூட வந்த பக்கத்து வீட்டு சரோஜா சேச்சிதான், அவர்கள் சொன்ன சொற்பத் தகவலை வைத்து, இவர்கள் வீட்டைக் கண்டுபிடித்தாள். இவள் பிள்ளைகள் மூவரையும் அப்பா, அம்மா அப்போதுதான் பார்க்கிறார்கள். அம்மா இவள் தலையை வருடிக்கொடுத்தபடி மலையாளத்தில் ஏதோ கேட்க, இவள் தமிழிலே பதில் சொன்னாள். மூத்தவனுக்கு மாதவன் என்றும் இரண்டாமவனுக்கு கார்மேகத்தின் தந்தை பெயரான கிருஷ்ணசாமி என்றும், மகளுக்கு யசோதா என்றும் பெயரிட்டிருந்தார்கள். ('யசோதா’ என்ற பெயரில் ஏற்கெனவே ஒரு தியேட்டரும் இருந்தது). மகன் மாதவன் பெயரில் தியேட்டர் கட்ட இளையான்குடி சாலையில் இடம் வாங்கிப்போட்டிருந்தார்.</p>.<p>பார்வதி குடியிருந்த வீட்டின் முகப்பில், 'ஸ்தாபிதம் 1939’ எனப் போட்டிருக்கும். (இதை வெகு பின்னால்தான் பார்வதி படித்தாள்) அதில் உள்ள 3 காலப்போக்கில் சற்று சரிந்து '199’ எனத் தகவல் சொல்லிக் கொண்டிருந்தது.</p>.<p>கார்மேகத்தின் சாம்ராஜ்யமும் ஆட்டம் கண்டிருந்தது. நகரில் புதிய ஏசி தியேட்டர்கள் வரத் தொடங்க, இவர்களின் தியேட்டரில் கூட்டம் குறையத் தொடங்கியது. செகண்டு ரிலீஸ், பழைய படங்கள் எனத் தத்தளித்துக்கொண்டிருந்தது.</p>.<p>கார்மேகம் ஐயப்பன் கோயிலுக்குப் போயிருந்த சமயம், அவருக்குத் தெரியாமல் மேனேஜர் மலையாள பிட் படம் ஒன்றை ஓட்ட, அதன் பெயரில் போலீஸ் கார்மேகத்தைக் கைதுசெய்யத் தேடியது. மலையில் இருந்து திரும்ப முடியாமல், மாலையையும் கழற்ற முடியாமல், கூடுதலாக ஒரு மாதம் ஐயப்பசாமியாகவே மலையாள தேசத்திலேயே தலைமறைவாகத் திரிந்தார். மூத்த தாரமும் மகன்களும் அவரை பரமக்குடிக்குள் நுழைய முடியாத சூழலை உருவாக்கினர். போலீஸ் தேடுதலுக்குப் பின் மகனின் கை இருப்பதாக தவசி அவரிடம் சொன்னார். அதன் பின் அறவே அந்த வீட்டுக்குப் போவதை நிறுத்தினார். என்றைக்காவது போதை கூடுதலாகும்போது பார்வதியிடம், 'நம்ம புள்ளைங்கள நல்லா வளர்க்கணும்னு நெனச்சேன்' என்பார்.</p>.<p>மாதவன் டாக்கீஸுக்கான இடம் எப்போதோ விலையாகி இருந்தது. ஆலத்தூர் வயலில் இருந்து வரும் நெல்லினால் சாப்பாட்டுக்குச் சிக்கல் இல்லை. அம்பலக்காரர் வீட்டை எப்போதோ வாங்கிப்போட்டதால், குடியிருப்பும் பிரச்னை இல்லை. செலவுகளுக்கு எதையாவது விற்றுக் கொண்டிருந்தார் கார்மேகம்.</p>.<p>பிள்ளைகள் வளர்ந்திருந்தனர். பையன்கள் இருவரும் ஓரளவுக்குப் படிக்க, மூன்றாமவள் யசோதாவுக்கு அறவே படிப்பு வரவில்லை. பேருக்குப் பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்தாள். தன் அதிகபட்ச செல்வாக்கைப் பயன்படுத்தி இரண்டாமவனுக்கு எம்.பி.பி.எஸ் ஸீட் வாங்கினார் கார்மேகம். மூத்தவன் தொழில் செய்கிறேன் என, சென்னையில் அப்பாவைப் பிரதியெடுத்தான்.</p>.<p>மகள் யசோதா, பின் வீட்டு ஆறுமுகம் மகன் சீனியோடு ஓடிப்போனாள்.</p>.<p>'உன்ன மாதிரிதான அவ இருப்பா' என பார்வதிக்குட்டியின் முகத்துக்கு நேரே இரண்டாமவன் சொன்னான். கார்மேகத்தின் கார் இன்னும் தாமதமாக கிளப்பில் இருந்து புறப்பட்டது.</p>.<p>இரண்டு மாதங்கள் கழித்து இருவரையும் பெங்களுரில் வைத்துப் பிடித்தார்கள். இருதரப்பும் பேசி 'வெட்டி’விட்டார்கள். பார்வதி, யசோதாவுக்கு உடனே கல்யாணம் செய்ய வேண்டும் எனச் சொன்னாள். கேரளாவில் ஒன்றும் அமையாமல், கடைசியாக பெல்லாரியில் ஒரு மாப்பிள்ளையைக் கண்டுபிடித்தார்கள். மாப்பிள்ளை, டாக்டர். பின் வீட்டு ஜன்னலை ஏக்கமாகப் பார்த்தபடியே கணவனுடன் காரில் ஏறிப்போனாள் யசோதா.</p>.<p>போன முதல் மாதத்தில் இருந்தே கணவனுடன் பிரச்னை. பயங்கரமாகக் குடிக்கிறான்; அடிக்கிறான். நிறையப் பொம்பளை தொடர்பிருக்கிறது என்றும், ''உன் புருஷன் தேடின மாப்பிள்ளை அவரை மாதிரிதான இருப்பான்' என்றும், அம்மாவிடம் போனில் சொல்லி அழுதாள்.</p>.<p>மகன்கள் அப்பாவோடு பேசுவது இல்லை. யசோதா முத்தாலம்மன் கோயில் லவுட் ஸ்பீக்கர் அலறும் ஒரு காலைப் பொழுதில் ரிக்ஷாவில் வந்து இறங்கினாள். தெருவே பார்த்தது.</p>.<p>''இனி அவனோடு வாழவே மாட்டேன்' என மறுபடியும் ஜன்னல் திறந்து பின் வீட்டைப் பார்க்க ஆரம்பித்தாள்.</p>.<p>கார்மேகம் கிளப்புக்குச் செல்வதையும் நிறுத்தி, வீட்டின் பின் பக்கத்திலேயே உட்கார்ந்து குடிக்க ஆரம்பித்தார். மூத்தவன் சென்னையில் இருந்து வரும் நாட்களில், அவர் வைத்திருக்கும் சரக்கின் அளவு குறைந்தது. மூத்தவன் அங்கு யாரோடோ தொடுப்பில் இருக்கிறான் என்றார்கள். இரண்டாமவன், மதுரை அரசு மருத்துவமனை டீனின் மகளைக் காதலிக்கிறான் என்றும், அந்த வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அரசல் புரசலாகக் காதில் விழுந்தது.</p>.<p>கார்மேகம் பின்பக்கத்து முருங்கை மரத்தின் கீழ் புகைத்துக்கொண்டிருந்த காலைப்பொழுதில், டீன் வீடு தேடியே வந்துவிட்டார். சம்பிரதாயம் இல்லாமல் தொடங்கினார்.</p>.<p>'உங்க மகனைத்தான் கட்டுவேன்னு ஒத்தக் கால்ல நிக்கிறா. தூக்க</p>.<p>மாத்திரையைச் சாப்பிட்டு...' - அவரிடம் கேட்காமலேயே சிகரெட் எடுத்துக்கொண்டார்.</p>.<p>'நா எவ்வளவோ சொல்றேன்... 'வேணாம்’னு. உங்களுக்குத் தெரியும் மதுர ரோடு வீடுன்னா (அவர் மூத்த தாரத்தின் வீடு) நான் கண்ணை மூடிக்கிட்டு 'சரி’ன்னுடுவேன்'- ஒன்றும் பேசாமல் தன் ஷூவைப் பார்த்துக்கொண்டிருந்தவர், சடாரென எழுந்தார்... 'நீங்கதான் உங்க மகனுக்குச் சொல்லிப் புரிய வைக்கணும்.' எதிரே வந்த பார்வதியை, ஓர் உறைந்த பார்வை பார்த்துவிட்டுப் போனார். இந்த டீன் சாதாரண மருத்துவராக பரமக்குடியில் இருந்தபோது பல ஆண்டுகளுக்கு முன்னால், கார்மேகத்துக்கு யாரோ அறிமுகம் செய்துவைத்திருந்தார்கள்...</p>.<p>'நம்ம ஆளுகதான்’ என.</p>.<p>ரெண்டாமவன் நடுக்கூடத்தில் இருந்து கத்தினான்...</p>.<p>'நீங்க செஞ்ச தப்புக்கு நாங்க அனுபவிக்கணுமா... அப்ப ஒழுங்கா இருந்துருக்கணும்.' </p>.<p>மிக்ஸியில் கார்மேகத்துக்காக பாகற்காய் ஜூஸ் அடித்துக் கொண்டிருந்தாள் பார்வதி. யசோதா தனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என மாடி ஜன்னலைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.</p>.<p>இரண்டாமவன் கிருஷ்ணசாமியும் டீன் மகளும் ஓடிப்போனார்கள். டீன் சட்டையைப் பிடிக்காத குறையாக கார்மேகத்திடம் பேசிவிட்டுப் போனார். 10 நாட்கள் கழித்து, ஓர் அர்த்தராத்தியில் கிருஷ்ணசாமியும் டீன் மகளும் வந்தார்கள். யாரிடமும் பேசவில்லை. நேரே மாடிக்குப் போய் கிருஷ்ணசாமியின் ரூம் கதவைச் சாத்திக்கொண்டார்கள். யசோதா, தன் அறையின் டி.வி சத்தத்தைக் கூட்டினாள். காலையில் டீன் தன் மனைவி சகிதமாக வந்தார். சற்று நேரம் எதுவும் பேசவில்லை 'ரெண்டு குடும்பமும் சேர்ந்து ஒரு ரிசப்ஷன் நடத்திடுவோம்... செலவு எங்களுது.' - கார்மேகம் தலையை மாத்திரம் ஆட்டினார்.</p>.<p>பார்வதி அந்த வரவேற்புக்குப் போகவில்லை. மகன் 'வர வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டான். கார்மேகம் பெயருக்குப் போய், பந்தி தொடங்கும்போது புறப்பட்டு வந்துவிட்டார். அழைத்துப் போக கார் வரவில்லை என மாடிக்குத் திரும்பிவிட்டாள் யசோதா. மூத்தவன், ரெண்டாமவனுக்குக் கைவிளக்காக நின்றான்.</p>.<p>மருமகள் இவர்கள் யாரோடும் பேசுவது இல்லை. யசோதா மீண்டும் ஏதோ படிக்கப்போகிறேன் என ஒரு கம்ப்யூட்டர் கிளாஸில் சேர்ந்தாள். அடிக்கடி இன்ஸ்டிட்யூட்டில் டூர் போகிறார்கள் எனப் போய்வந்தாள். மருமகள், 'எல்லாம் அந்த சீனியோடுதான் போய்ட்டு வர்றா' என்றாள். பார்வதி ஒன்றும் சொல்லாது, பேத்தியைக் குளிப்பாட்டிக்கொண்டிருந்தாள்.</p>.<p>ஒரு மழைநாளில் நடுராத்திரி கார்மேகம் குடிக்கத் தண்ணீர் கேட்க, பாதி குடிக்கும்போது டம்ளர் நெஞ்சில் விழுந்தது. கிருஷ்ணசாமிதான் அந்த வீட்டுக்குப் பேசினான்.</p>.<p>''நாங்க அங்க வர மாட்டோம் நீங்க இங்க கொண்டுவந்திருங்க' என்றார்கள். பார்வதி பிடிவாதமாக காரில் ஏறினாள். அடர்த்தியான மழை. அதே பழைய கார்தான். 'ஸ்தாபிதம் 1902’ என்ற சுவரின் முன் கார் நின்றது. கோட்டை போன்ற வீடு. உள்ளே இருந்து நால்வர் குடையோடு ஓடிவந்தார்கள். காரைத் திருப்பி நிறுத்தச் சொன்னார்கள்; பார்வதியும் இறங்கினாள். கிருஷ்ணசாமியும் சேர்ந்து தூக்கப்போக அவன் தோளைத் தட்டி, 'இதோட உங்க வேலை முடிஞ்சுருச்சு. நாளைக்கு யாரும் இந்த வீட்டுக்கு பொண்டாட்டி, புள்ளைனு வரக் கூடாது.'</p>.<p>தடாலென இரும்புக் கதவு சாத்தப்பட்டது. கதவின் மீது தண்ணீர் ஓடியதால், சத்தம் பெரிதாகக் கேட்கவில்லை. கிருஷ்ணசாமி அம்மாவை உற்றுப் பார்த்தான். விறுவிறுவென காரை நோக்கி நடந்து, பார்வதி மேல் தண்ணீர் தெறிக்க காரைக் கிளப்பிக் கொண்டு போனான். எதிரே மழைக்கு பூக்கடையின் கீழ் படுத்திருந்த யாரோ, பார்வதியை நோக்கி ஓடிவந்தார்கள்.</p>.<p>மறுநாள் பார்வதி மாத்திரம் மாலையிடப்பட்ட கார்மேகத்தின் போட்டோ அருகே உட்கார்ந்திருந்தாள். மாதவனும் கிருஷ்ணசாமியும் சலூனில் சென்று மொட்டையடித்துக் கொண்டார்கள். யசோதா மாடியில் இருந்து இறங்கவில்லை.</p>.<p>கொஞ்ச நாளில் மேலே படிக்கப் போகிறேன் என யசோதா சென்னைக்குப் போனாள்.</p>.<p>'அந்த சீனி அங்கதான் இருக்கானாம்ல?' என்றாள் மருமகள். கிருஷ்ணசாமியும் மாதவனும் வீட்டை இடித்துக் கட்டி, வாடகைக்குவிட முடிவு செய்தனர். கிருஷ்ணசாமிக்கு முன்பக்கம் நான்கு கடைகளும் ஒரு கிளினிக்கும். மாடி போர்ஷன் முழுக்க மாதவனுக்கு என எழுதிக்கொண்டனர். கிருஷ்ணசாமி வீடு கட்டும் வரை அருளானந்தா நகருக்குக் குடிபோனான்.</p>.<p>பின்பக்கம் சிறிய ஷெட் போன்ற ஓர் அறை கட்டப்பட்டது. பார்வதிக் குட்டியின் பொருட்கள் அங்கு மாற்றப்பட்டன.</p>.<p>'நாளைக்கு இடிக்க ஆள் வந்திருவாங்க. நீ இதுல இருந்துக்க...'</p>.<p>பார்வதி ஒன்றும் பேசாமல் நின்றாள்.</p>.<p>'கார் டிக்கியைவிட இது பெருசுதான்...' எனச் சொல்லிவிட்டுப் போனான் கிருஷ்ணசாமி.</p>.<p>ரோஸி சேச்சி, அன்றைக்கு அந்தப் பணத்தை அச்சுதன் சேட்டனிடம் இருந்து தன்னை வாங்கவிட்டிருக்கலாம் என, சம்பந்தமே இல்லாமல் அந்த நேரத்தில் பார்வதிக்குத் தோன்றியது!</p>
<p><span style="color: #ff0000"><strong>கா</strong></span>ர்மேகம், பார்வதிக்குட்டியை முதன்முதலில் பார்த்தது, 'ஒரு ஓணம் ராத்திரி’ என்ற மலையாளப் பட ஷூட்டிங்கில். க்ஷேத்ராடனம்போல, இடையிடையே கேரளத்துக்கு அவர் 'தீர்த்தாடனம்’ போவது உண்டு. அப்படிப் போகும்போது, தற்செயலாக கோவளத்தில் நாகர்கோவில் கோலப்பனைப் பார்த்தார். கார்மேகம் சென்னை போகும்போது பலதும் செய்து கொடுப்பவன் கோலப்பன். கார்மேகத்தை 'முதலாளி... முதலாளி...’ என ஒவ்வொரு வரித் தொடக்கத்திலும் முடிவிலும் சொல்வான். உண்மையில் கார்மேகம் ஒரு முதலாளிதான். பரமக்குடியின் பெருந்தனக்காரர் சா.வி.கிருஷ்ணசாமியின் ஒரே புத்திரன். திரையரங்கு, மில்கள், தோப்புகள், கல்வி நிறுவனங்கள் என ஏராளமாக உள்ளன. கூடவே, பணக்காரப் புத்திரனுக்கு உண்டான எல்லா போக்கிரித்தனமும் உண்டு. கிருஷ்ணசாமியால் அவரைத் திருத்த முடியவில்லை. 'கல்யாணம் திருத்தும்’ என்றார்கள். இரண்டு பிள்ளைகள் ஆகியும் நாகஜோதி (பார்த்திபனூர் ஆ.ந.வி.ப.ராமசாமியின் மகள்) ராத்திரி பன்னிரண்டு மணி வரை விழித்திருந்தும், கார்மேகத்தின் வண்டி இரண்டு மணிக்குக் குறைந்து 'கிளப்’பில் இருந்து புறப்பட்டது இல்லை. போதையில் அவர் வண்டி லாகவமாகத் திரும்புவதை, ஐந்து முக்கில் ராத்தங்கும் சின்னாயி வீட்டுக் கழுதைகளும் சிலையாக நிற்கும் காந்தியும் நாள் தவறாது பார்ப்பார்கள்.</p>.<p>சா.வி.கிருஷ்ணசாமி தனக்கு நன்கொடை கொடுத்ததைப் பற்றி, மார்த்தாண்டம் சுந்தரம்பிள்ளை தன் நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார். கார்மேகம் தன்னைச் சுற்றியிருக்கும் அடிப்பொடிகளுக்கு மாத்திரமே ஏதேனும் தாரைவார்ப்பார். பரமக்குடியில் கூடுதலாக வெயில் இருப்பதாகக் கருதினாலோ அல்லது மலையாள மழை பார்க்கவேண்டும் எனத் தோன்றினாலோ, வண்டி ஆரியங்காவு கடக்கும். அப்படி ஒரு யாத்திரையில்தான், கோவளத்தில் வாயில் துண்டின் முனையைக் கடித்தபடி ஓடி வந்தான் கோலப்பன்.</p>.<p>'அண்ணா எந்தானு இங்கோட்டு ஒரு யாத்ரா?'</p>.<p>கார்மேகம் அவனை உற்று நோக்கினார். போதையில் கண்கள் கூசின. பகல் கடல் மின்னிக் கொண்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில கட்டடங்கள் தெரிந்தன. கடற்கரையில் ஒரு படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது.</p>.<p>'என்னடா விசேஷம்?' என்றார் கார்மேகம்.</p>.<p>'ஒரு மலையாளப் படம் அண்ணா.'</p>.<p>'என்ன படம்?'</p>.<p>' 'ஒரு ஓணம் ராத்திரி’... போன வருஷம் 'செம்மீன்’ எடுத்தாங்கல்ல... அவங்க புரொடக்ஷன். அச்சுதன் நாயரும் ரோஸியும் நாயகன் - நாயகி ஆயிட்டு. இப்போ இங்கதான் ஜோலி.'</p>.<p>'ம்... ம்...'</p>.<p>'அண்ணா... சாயங்காலம் அங்கோட்டு வரணும். நல்ல அயிட்டங்கள் உண்டு.'</p>.<p>'அயிட்டத்தை’ அழுத்தி உச்சரித்தான். கார்மேகம் பதில் பேசாமல் விடுதிக்குள் போனார். ரிசப்ஷனில் யாரோ இரண்டு மூன்று பேர் மலையாளத்தில் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தனர். தன் அறைக் கதவைத் திறந்தார். கூட்டாளிகளுக்கு வேறு அறை. அவர் எப்போதும் தனித்தே தங்குவார். எதிலும் ஒன்றாகப் புழங்குவதில் அவருக்கு விருப்பம் இல்லை. தவிர்க்க முடியாத சூழலில், முதல் ஆளாக முடித்துக்கொண்டு, வேட்டி மாத்திரம் கட்டிய வெற்று உடம்போடு, தன் அறைக்குத் திரும்புவார்.</p>.<p>அறையில் தொங்கிய காலண்டரை, கடற்காற்று இடம் வலமாக ஆட்டிக் கொண்டிருந்தது. அதில் இருக்கும் முண்டு அணிந்த மலையாளப் பெண்ணும், காற்றின் சொல்படி கேட்டுக் கொண்டிருந்தாள். வெளியே காக்கைகள் வேகமாகப் பறந்துகொண்டிருந்தன. அப்பாவுக்கு உடல்நலம் இல்லாமல் இருப்பது ஞாபகம் வந்தது. அலமாரியைத் திறந்து பாட்டிலில் இருக்கும் மீதத்தை கிளாஸில் கவிழ்த்துக் கொண்டார்.</p>.<p>சாயங்காலம் கோலப்பனே வந்து கூட்டிக்கொண்டுபோனான். கார்மேகமும் தவசியும் மாத்திரமே போனார்கள். 'அசதியாக இருக்கிறது’ எனச் சொல்லிவிட்டு அறையிலேயே படுத்துக்கொண்டார் ஜமால். இருவரும் செல்வாக்கில் கார்மேகத்தைவிட எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல.</p>.<p>பரபரப்பாக வேலைகள் நடந்து கொண்டிருந்தன.</p>.<p>'அத எடுத்தோ... வேகம், வேகம் லைட்டு போகுனு' - எங்கும் சத்தம். கட்டம்போட்ட முண்டும் ஜாக்கெட்டும் அணிந்த பெண்கள், அந்தப் பக்கம் கூட்டமாக அமர்ந்திருந்தார்கள். கோலப்பன் டீ கொண்டுவந்து கொடுத்தான்.</p>.<p>'அண்ணா... அங்க உட்கார்ந்திருக்கார்ல, அவர்தான் அச்சுதன் நாயர். இங்கோட்டு இருக்கினது ரோஸி.'</p>.<p>மீசையை பென்சிலால் தீட்டியது போல முஸ்லிம் கெட்டப்பில் அமர்ந்திருந்தார் அச்சுதன் நாயர். தவசி, ரோஸியிடம் இருந்து பார்வையை விலக்கவில்லை. ரோஸி இவர்களைப் பார்த்து ஏதோ சொல்லிச் சிரிப்பதுபோல் கார்மேகத்துக்குத் தோன்றியது. கார்மேகம் வேறு பக்கம் பார்வையைத் திருப்பினார். கட்டம் போட்ட முண்டுகளின் கூட்டம்.</p>.<p>சடாரென மழை பெய்ய ஆரம்பித்தது. இவர்கள் உட்கார்ந்திருந்த பெரிய துணிக் குடையை நோக்கி, முண்டு அணிந்த பெண்களில் சிலர் வந்தனர். ரோஸியும் அச்சுதன் நாயரும் காரை நோக்கி நடந்தார்கள்.</p>.<p>கொஞ்ச நேரம் கழித்துதான், தன் அருகே நிற்கும் பெண்ணை கார்மேகம் கவனித்தார். நெஞ்சுக்குள் ஏதோ பகீர் என்றது. விடுதி அறையில் காற்றில் ஆடிய காலண்டர் பெண்போலவே அசப்பில் இருந்தாள். தூரத்தே நடந்து போகும் நாயகி ரோஸியைக் காட்டிலும் அழகாக இருந்தாள். கோலப்பன், விநாடியில் கவனித்து விட்டான். தவசி பார்வையால் குதறிக் கொண்டிருந்தார்.</p>.<p>பார்வதிக்குட்டி, கார்மேகத்தின் பார்வையைக் கவனித்துவிட்டாள். ஏஜென்ட் வக்கச்சன்தான் அவளைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். நெய்யாற்றங்கரையை அடுத்து ஊர். அப்பா விவசாயக் கூலி. ஆனால், வேலை வருடம் முழுவதும் இருக்காது. இவளுக்குக் கீழ் இன்னும் மூவர். வக்கச்சன் அவள் அம்மையிடம் வாக்கு அளித்திருந்தார்.</p>.<p>'மூணு வேளை ஊணு, திவசத்துக்கு பைசா, பின்ன வல்ல சான்ஸ் கிட்டியால் கேரி பிடிச்சு நாயகி ஆகானல்லே.'</p>.<p>நாயகிக்குப் பின், மீன் கூடையோடு நிற்பதுதான் பார்வதிக்குட்டியின் பல நாள் வேலை. இவளை பல காட்சிகளில் மாற்றி மாற்றி நிறுத்தினார்கள். நால்வர் மாத்திரமே நிற்கும் காட்சிகளில் இவளை வேண்டாம் என்றார்கள். ரோஸி சேச்சி மற்ற பெண்களோடு பேசுவதுபோல் இவளுடன் பேசுவது இல்லை. அச்சுதன் சேட்டன் இரண்டொரு முறை சிரித்திருக்கிறார். மற்றொரு நடிகரான ரஞ்சன் மாஷே எப்போதும் சிடுசிடுப்பாக. பார்வதிக்குட்டிக்கு ஊருக்குப் போகலாம் என இருந்தது. வீட்டில் அரை வயிற்றுக் கஞ்சியே என்றாலும் சந்தோஷமாகக் குடிக்கலாம். அதுவும் இன்றைக்கு மிகவும் கூனிக்குறுகிப் போய்விட்டாள். அச்சுதன் சேட்டன் பணம் கொடுப்பதுபோல காட்சி. ரோஸி சேச்சியின் தோழியரில் ஒருத்தி வாங்க வேண்டும். இயக்குநர் இவளை வாங்கச் சொல்லியிருந்தார். அந்தக் காட்சியில் ரோஸி சேச்சி கிடையாது. தற்செயலாக அங்கு வந்த ரோஸி, மேனேஜர் ஜேக்கப்பிடம் ஏதோ கேட்க, பார்வதிக்குட்டியை மாற்றி சுபைதாவை வாங்கச் சொன்னார்கள். பார்வதிக்குட்டிக்கு மிகவும் அவமானமாக இருந்தது. உடனே ஊருக்குப் போய்விட வேண்டும் என நினைத்தாள். கையில் பணம் இல்லை. ஷாட்டில் இல்லாத மற்ற பெண்களோடு அமர்ந்தவள், தூரத்தில் அலையில் விளையாடிக்கொண்டிருக்கும் குடும்பத்தையே பார்த்துக்கொண்டுஇருந்தாள்.</p>.<p>கோலப்பன் அவள் அருகில் வந்து அமர்ந்தான்; சுருக்கமாகப் பேசினான். அவளுக்கு யாரையோ பழிவாங்க வேண்டும் எனத் தோன்றியது. ஒருமுறை நிமிர்ந்து கார்மேகத்தைப் பார்த்தாள். அவர் அங்கு இருந்து, இவளையே பார்த்துக்கொண்டிருந்தார். கண்களைத் தாழ்த்திக்கொண்டாள்.</p>.<p>ராத்திரி கோலப்பனே வந்து அழைத்துக் கொண்டு போனான். அவர்கள் தங்கி இருந்த விடுதியில் இருந்து, இரண்டு தெரு தள்ளி இருந்தது பார்வதிக்குட்டி போன விடுதி. படிக்கட்டில் ஏறும்போது ரூம் பாய் நிமிர்ந்து பார்த்தான். பிறகு, இவர்கள் கடந்துபோனார்கள் என்றே தெரியாத பாவனையில், ஜாடியில் தண்ணீரை நிரப்பிக்கொண்டிருந்தான்.</p>.<p>ஜமாலுக்கும் தவசிக்கும் ஏற்கெனவே தெரிந்ததுதான். கார்மேகத்துக்குத்தான் எப்போதும் முதல் பூஜை. அவர் தன் அறைக் கட்டிலில் வெற்று உடம்போடு அமர்ந்திருந்தார்.</p>.<p>'அண்ணா... அப்ப நான் காலையில வர்றேன்' என்றபடி உள்ளே நுழையாமல், கோலப்பன் வேகமாகப் புறப்பட்டுப் போனான்.</p>.<p>கார்மேகம் அவளை 'வா’ எனச் சொல்லவில்லை. கிளாஸை எடுத்து ஸ்டூலில் வைத்தார்.</p>.<p>'குடிப்பியா?' என்றார்.</p>.<p>இவள் தலையை வேகமாக 'இல்லை’ என அசைத்தாள்... ஒன்றும் பேசவில்லை. கடல் அலையின் சத்தம் துல்லியமாகக் கேட்டது. பார்வதிக்கு, தன் நாய் குட்டன் ஞாபகம் வந்தது. சத்தம் இல்லாமல் அழ ஆரம்பித்தாள். திடுக்கிட்டவராக கார்மேகம் நிமிர்ந்து பார்த்தார்.</p>.<p>'ஏன் அழுற?'</p>.<p>'இது ஒண்ணும் எனக்குப் பழக்கம் இல்லா...'</p>.<p>'இது எல்லாரும் சொல்றதுதான்.'</p>.<p>'சத்தியம். நா ஆதியமாய்ட்டு சினிமாவில் அபிநயிக்காந்தன்னே வீட்டிலின்னு இறங்கியது.'</p>.<p>'எதுக்கு அழுற?'</p>.<p>'எண்ட பட்டி குட்டன் ஓர்ம வந்து...'</p>.<p>'கோலப்பன் எவ்வளவு சொன்னான்?'</p>.<p>'நூறு.'</p>.<p>கார்மேகத்திடம் முன்னூறு சொல்லியிருந்தான். கார்மேகம் ஏதோ தோன்றியவராக 'எங்கூட வர்றியா?' என்றார்.</p>.<p>'எவிட?'</p>.<p>'பரமக்குடிக்கு.'</p>.<p>'வந்து?'</p>.<p>'வந்து இரு.' </p>.<p>பிறகு இருவரும் ஒன்றும் பேசவில்லை. கார்மேகம் ஜன்னல்கள், கதவுகள் எல்லாவற்றையும் சாத்தினார். அவர் கட்டில் மேல் படுத்தார். இவள் நாற்காலியிலேயே உட்கார்ந்திருந்தாள். திடீரென யாரோ கதவை தடதடவெனத் தட்டினார்கள். உட்கார்ந்தவாறு தூங்கிக்கொண்டிருந்தவள், பதற்றத்தில் நாற்காலியில் இருந்து கீழே விழப்போனாள். கார்மேகம் நிதானமாக எழுந்து, வேட்டியை இறுக்கிக் கட்டியவாறு அவளை சைகையில் 'இரு’ எனச் சொல்லிவிட்டு, கதவைத் திறந்து வெளியே போனார்.</p>.<p>வெளியே ஒரே சத்தமாக இருந்தது. தவசியும் ஜமாலும் 'இப்பவே அனுப்பு’ என்றனர். கார்மேகம், 'இன்று முடியாது... நாளைதான்’ என்றார். ஜமால் தாழ்வாரத்தின் ஓரமாகப் போய் புகை பிடித்தார். தவசி அவர் அருகே போனார். இருவரும் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டனர். வராந்தாவின் கடைசியில் மாத்திரமே விளக்கு எரிந்தது. மற்ற இடங்கள் இருளாக இருந்தன. கார்மேகத்தின் அருகே வந்தனர்.</p>.<p>'சரி; நாளைக்கு விட்டுரணும் கார்மேகம். இது நல்லாயில்ல...'</p>.<p>''ம்... ம்...'</p>.<p>இருவரும் தங்களது அறைக்குள் நுழைந்து சத்தத்தோடு கதவைச் சாத்தினர். அவர்கள் எப்போதும் தங்குவது ஒரே அறையில்தான்.</p>.<p>கார்மேகம் அறைக்குள் வந்தார். பார்வதிக்கு வெளியே நடந்தது ஓரளவுக்குப் புரிந்திருந்தது. கார்மேகம் சிகரெட் பற்றவைத்தார். சிகரெட்டைக் கையில் பிடித்தவாறு வெளியே போனவர், பத்து நிமிடங்கள் கழித்து உள்ளே வந்து அவளிடம், 'கீழே ஒரு கறுப்பு அம்பாசிடர் கார் நிக்குது. டிக்கியைத் திறந்துவெச்சிருக்கேன். அதில ஏறி உட்கார்ந்து மூடிக்க.'</p>.<p>பார்வதிக்குட்டி இறங்கிப் போனாள். டிக்கி கதவை மூடும்போது கடற்கரையில் படப்பிடிப்பு நடப்பது தெரிந்தது. கதவைக் கீழே விட்டாள்... இருட்டியது.</p>.<p>கார்மேகம் எதிர்பார்த்ததுபோல தவசியும் ஜமாலும் மறுபடியும் வந்தார்கள்.</p>.<p>'மாப்ள... எங்க குட்டி?'</p>.<p>'போயிட்டா.'</p>.<p>'இது என்ன நியாயம்? நீர் மாத்திரம் செய்வீரு... நாங்க விளக்கு புடுச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கணுமா?'</p>.<p>'ஜமால்... பார்த்துப் பேசு!'</p>.<p>கோபத்தில் ஜமாலுக்கு மூச்சு இறைத்தது. தவசி மேஜையை விரலால் மெள்ளத் தட்டிக்கொண்டிருந்தார்.</p>.<p>'புத்திசாலித்தனமா செஞ்சுப்புட்டீக' என மாத்திரம் சொன்னார். கார்மேகம் சட்டையைப் போட்டார்.</p>.<p>'எங்க மாப்ள கிளம்பிட்டீக?' என்றார் தவசி.</p>.<p>'டீ குடிக்க.'</p>.<p>'நாங்களும் வரலாம் இல்ல?'</p>.<p>''வாங்க.'</p>.<p>சாலையில் ஓர் ஆள்கூட இல்லை. தலையில் சிவப்புத் துண்டோடு லோடு இறக்கிக்கொண்டிருப்பவர்களிடம் கேட்டார்கள்...</p>.<p>'நேரே போயி வலத்தோட்டுத் திரும்பு' என்றார்கள்.</p>.<p>வலது பக்கம் ஒரு டீக்கடை திறந்திருக்க, லாரிகளும் சில கார்களும் நின்றிருந்தன. மூவரும் டீயை வாங்கிக்கொண்டு கடையின் கீழ் இறங்கி நின்றனர். தவசி, எங்கோ டூர் போய் திரும்பும் மலையாளக் குடும்பத்தின் தலைவியை ஆராயத் தொடங்கியிருந்தார். கார்மேகம், 'வண்டி ரோட்டு மேல நிக்குது... கீழ இறக்கிப் போடுறேன்' என்றபடி காரை நோக்கி நடந்தார். காரில் ஏறியவர் கியரை மாற்றி ஓட்ட ஆரம்பித்தார். முதலில் தவசிதான் கவனித்தார்</p>.<p>'டேய் வண்டியை விட்டுட்டாருடா...'</p>.<p>'இதுல எதோ கோளாறு இருக்கு' என்றார் ஜமால்.</p>.<p>வண்டி நெய்யாற்றங்கரையைத் தாண்டியபோது நிறுத்தி, டிக்கியைத் திறந்தார்.</p>.<p>'வா வந்து முன்னால உட்காரு' என்றார்.</p>.<p>சேலையைச் சரிசெய்தவாறு கீழே இறங்க எத்தனித்தவள், வெளியே தெரிந்த கோயிலைப் பார்த்தவுடன் படக்கென டிக்கிக்குள் ஒடுங்கினாள். 'அய்யோ, இது எண்ட ஊராக்கும்.'</p>.<p>அதுதான் அவள் கடைசியாக நெய்யாற்றங்கரையைக் கண்டது.</p>.<p>பார்வதியை பரமக்குடியில், லாட்ஜில்தான் முதல் மூன்று நாட்கள் தங்கவைத்திருந்தார் கார்மேகம். சாப்பாடு கொண்டுவந்து தருகிற பையன் வழியாக, அது அவருடைய லாட்ஜ் எனத் தெரிந்துகொண்டாள். ஜமாலும் தவசியும் இரண்டாம் நாள் கார்மேகத்தோடு வந்தனர். வெளியே நின்றிருந்த ஜமாலின் கண்கள், இவள் இருக்கும் அறைக்குள்ளேயே இருந்தன. கார்மேகம் மேனேஜரோடு பேசிக் கொண்டிருக்கும்போது, ஜமால் இவள் அறை ஜன்னல் அருகே நின்றவாறு யாரிடமோ சொல்வதுபோல, 'இவரைக் கல்யாணம் பண்ணா ரெண்டாந்தாரம்னு கூட உறுதியா சொல்ல முடியாது. என்னோட வந்தா பொண்டாட்டி!' என்றார். அது அவளுக்கு ஏற்கெனவே தெரிந்ததுதான். கார்மேகம் அவரைப் பற்றி ஒளிவுமறைவு இல்லாமல், அவளிடம் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். அன்றைக்குப் படப்பிடிப்பில் மழையில் அவள் கண்கலங்கி நின்ற தருணம், தன்னை என்னவோ செய்தது என்றார்.</p>.<p>மதுரை அழகர்கோவிலில் வைத்து கல்யாணம் நடந்தது. கூடிப்போனால் பத்து ஆட்கள். அய்யர், கார்மேகத்தைப் பவ்யமாக வரவேற்றார். முத்தாலம்மன் கோயில் தெருவில், பழைய அம்பலக்காரர் வீட்டில் அவளைக் குடியமர்த்தினார். அவருடைய கைத்தடி சண்முகம் அங்குதான் குடியிருந்தான். பாதுகாப்புக்கும் ஆச்சு எனக் கணக்கிட்டிருந்தார்.</p>.<p>தெருவில் அவரோடு காரில் ஏறப் போகும்போதோ, இறங்கி நடந்து வரும்போதோ (கார் வர முடியாத அளவுக்குச் சிறிய தெரு) 'மலையாளத்தி’, 'மலையாளத்தி’ எனக் காதில் விழுந்துகொண்டே இருக்கும்.</p>.<p>35 வருடங்களாகக் கேட்டுக் கொண்டே இருக்கும் வசவு அது. மூத்த தாரம், அவர்களின் வீடு, குழந்தைகள், படுத்த படுக்கையாக இருக்கும் மாமனார் என துணி வெளுக்கும் சின்னக்குட்டிதான், பார்வதிக்கு எல்லா விஷயங்களையும் சொல்வாள்.</p>.<p>மூத்த தாரத்துக்கு இரண்டு பெரிய பையன்கள். கோயில் மண்டகப்படி, தியேட்டர் என காரை அனுப்பி பார்வதிக் குட்டியை எல்லா இடங்களுக்கும் வரச் சொல்வார் கார்மேகம். எல்லா இடங்களிலும் வெறுப்பான கண்கள், அவளை விரட்டிக்கொண்டே இருக்கும்.</p>.<p>ஒருமுறை இவர்களின் தியேட்டரில் படம் பார்க்கப் போனபோது, தற்செயலாக வந்த மூத்த தாரத்தின் மகன், இவளைப் பார்த்ததும் காரித் துப்பிவிட்டுப் போனான். மாமனார் இறந்த வீட்டுக்கு, இவளை கைக் குழந்தையோடு கார்மேகம் அழைத்துப் போனபோது, பெரும் ரகளையானது. மூத்த தாரத்தின் உறவினர்கள், இவள் வரக் கூடாது என ஆர்ப்பாட்டம் செய்தனர்.</p>.<p>''அவ அப்படித்தான் வருவா...' என்றார் கார்மேகம்.</p>.<p>மூத்தவன் அவரை அடிக்க வந்தான். அவன் அம்மா ஒரு ரூமுக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள். மூத்தவனை யாரோ இழுத்துக்கொண்டு போனார்கள்.</p>.<p>கோலப்பன் வழியாக வக்கச்சனை வரவழைத்து பார்வதி வீட்டுக்கு நல்லதொரு தொகையைக் கொடுத்தார் கார்மேகம். அம்மா, அப்பாவை 15 வருடங்கள் கழித்து அரவிந்த் ஆஸ்பத்திரிக்கு கண் ஆபரேஷன் பண்ண வந்தபோதுதான் பார்த்தாள். கூட வந்த பக்கத்து வீட்டு சரோஜா சேச்சிதான், அவர்கள் சொன்ன சொற்பத் தகவலை வைத்து, இவர்கள் வீட்டைக் கண்டுபிடித்தாள். இவள் பிள்ளைகள் மூவரையும் அப்பா, அம்மா அப்போதுதான் பார்க்கிறார்கள். அம்மா இவள் தலையை வருடிக்கொடுத்தபடி மலையாளத்தில் ஏதோ கேட்க, இவள் தமிழிலே பதில் சொன்னாள். மூத்தவனுக்கு மாதவன் என்றும் இரண்டாமவனுக்கு கார்மேகத்தின் தந்தை பெயரான கிருஷ்ணசாமி என்றும், மகளுக்கு யசோதா என்றும் பெயரிட்டிருந்தார்கள். ('யசோதா’ என்ற பெயரில் ஏற்கெனவே ஒரு தியேட்டரும் இருந்தது). மகன் மாதவன் பெயரில் தியேட்டர் கட்ட இளையான்குடி சாலையில் இடம் வாங்கிப்போட்டிருந்தார்.</p>.<p>பார்வதி குடியிருந்த வீட்டின் முகப்பில், 'ஸ்தாபிதம் 1939’ எனப் போட்டிருக்கும். (இதை வெகு பின்னால்தான் பார்வதி படித்தாள்) அதில் உள்ள 3 காலப்போக்கில் சற்று சரிந்து '199’ எனத் தகவல் சொல்லிக் கொண்டிருந்தது.</p>.<p>கார்மேகத்தின் சாம்ராஜ்யமும் ஆட்டம் கண்டிருந்தது. நகரில் புதிய ஏசி தியேட்டர்கள் வரத் தொடங்க, இவர்களின் தியேட்டரில் கூட்டம் குறையத் தொடங்கியது. செகண்டு ரிலீஸ், பழைய படங்கள் எனத் தத்தளித்துக்கொண்டிருந்தது.</p>.<p>கார்மேகம் ஐயப்பன் கோயிலுக்குப் போயிருந்த சமயம், அவருக்குத் தெரியாமல் மேனேஜர் மலையாள பிட் படம் ஒன்றை ஓட்ட, அதன் பெயரில் போலீஸ் கார்மேகத்தைக் கைதுசெய்யத் தேடியது. மலையில் இருந்து திரும்ப முடியாமல், மாலையையும் கழற்ற முடியாமல், கூடுதலாக ஒரு மாதம் ஐயப்பசாமியாகவே மலையாள தேசத்திலேயே தலைமறைவாகத் திரிந்தார். மூத்த தாரமும் மகன்களும் அவரை பரமக்குடிக்குள் நுழைய முடியாத சூழலை உருவாக்கினர். போலீஸ் தேடுதலுக்குப் பின் மகனின் கை இருப்பதாக தவசி அவரிடம் சொன்னார். அதன் பின் அறவே அந்த வீட்டுக்குப் போவதை நிறுத்தினார். என்றைக்காவது போதை கூடுதலாகும்போது பார்வதியிடம், 'நம்ம புள்ளைங்கள நல்லா வளர்க்கணும்னு நெனச்சேன்' என்பார்.</p>.<p>மாதவன் டாக்கீஸுக்கான இடம் எப்போதோ விலையாகி இருந்தது. ஆலத்தூர் வயலில் இருந்து வரும் நெல்லினால் சாப்பாட்டுக்குச் சிக்கல் இல்லை. அம்பலக்காரர் வீட்டை எப்போதோ வாங்கிப்போட்டதால், குடியிருப்பும் பிரச்னை இல்லை. செலவுகளுக்கு எதையாவது விற்றுக் கொண்டிருந்தார் கார்மேகம்.</p>.<p>பிள்ளைகள் வளர்ந்திருந்தனர். பையன்கள் இருவரும் ஓரளவுக்குப் படிக்க, மூன்றாமவள் யசோதாவுக்கு அறவே படிப்பு வரவில்லை. பேருக்குப் பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்தாள். தன் அதிகபட்ச செல்வாக்கைப் பயன்படுத்தி இரண்டாமவனுக்கு எம்.பி.பி.எஸ் ஸீட் வாங்கினார் கார்மேகம். மூத்தவன் தொழில் செய்கிறேன் என, சென்னையில் அப்பாவைப் பிரதியெடுத்தான்.</p>.<p>மகள் யசோதா, பின் வீட்டு ஆறுமுகம் மகன் சீனியோடு ஓடிப்போனாள்.</p>.<p>'உன்ன மாதிரிதான அவ இருப்பா' என பார்வதிக்குட்டியின் முகத்துக்கு நேரே இரண்டாமவன் சொன்னான். கார்மேகத்தின் கார் இன்னும் தாமதமாக கிளப்பில் இருந்து புறப்பட்டது.</p>.<p>இரண்டு மாதங்கள் கழித்து இருவரையும் பெங்களுரில் வைத்துப் பிடித்தார்கள். இருதரப்பும் பேசி 'வெட்டி’விட்டார்கள். பார்வதி, யசோதாவுக்கு உடனே கல்யாணம் செய்ய வேண்டும் எனச் சொன்னாள். கேரளாவில் ஒன்றும் அமையாமல், கடைசியாக பெல்லாரியில் ஒரு மாப்பிள்ளையைக் கண்டுபிடித்தார்கள். மாப்பிள்ளை, டாக்டர். பின் வீட்டு ஜன்னலை ஏக்கமாகப் பார்த்தபடியே கணவனுடன் காரில் ஏறிப்போனாள் யசோதா.</p>.<p>போன முதல் மாதத்தில் இருந்தே கணவனுடன் பிரச்னை. பயங்கரமாகக் குடிக்கிறான்; அடிக்கிறான். நிறையப் பொம்பளை தொடர்பிருக்கிறது என்றும், ''உன் புருஷன் தேடின மாப்பிள்ளை அவரை மாதிரிதான இருப்பான்' என்றும், அம்மாவிடம் போனில் சொல்லி அழுதாள்.</p>.<p>மகன்கள் அப்பாவோடு பேசுவது இல்லை. யசோதா முத்தாலம்மன் கோயில் லவுட் ஸ்பீக்கர் அலறும் ஒரு காலைப் பொழுதில் ரிக்ஷாவில் வந்து இறங்கினாள். தெருவே பார்த்தது.</p>.<p>''இனி அவனோடு வாழவே மாட்டேன்' என மறுபடியும் ஜன்னல் திறந்து பின் வீட்டைப் பார்க்க ஆரம்பித்தாள்.</p>.<p>கார்மேகம் கிளப்புக்குச் செல்வதையும் நிறுத்தி, வீட்டின் பின் பக்கத்திலேயே உட்கார்ந்து குடிக்க ஆரம்பித்தார். மூத்தவன் சென்னையில் இருந்து வரும் நாட்களில், அவர் வைத்திருக்கும் சரக்கின் அளவு குறைந்தது. மூத்தவன் அங்கு யாரோடோ தொடுப்பில் இருக்கிறான் என்றார்கள். இரண்டாமவன், மதுரை அரசு மருத்துவமனை டீனின் மகளைக் காதலிக்கிறான் என்றும், அந்த வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அரசல் புரசலாகக் காதில் விழுந்தது.</p>.<p>கார்மேகம் பின்பக்கத்து முருங்கை மரத்தின் கீழ் புகைத்துக்கொண்டிருந்த காலைப்பொழுதில், டீன் வீடு தேடியே வந்துவிட்டார். சம்பிரதாயம் இல்லாமல் தொடங்கினார்.</p>.<p>'உங்க மகனைத்தான் கட்டுவேன்னு ஒத்தக் கால்ல நிக்கிறா. தூக்க</p>.<p>மாத்திரையைச் சாப்பிட்டு...' - அவரிடம் கேட்காமலேயே சிகரெட் எடுத்துக்கொண்டார்.</p>.<p>'நா எவ்வளவோ சொல்றேன்... 'வேணாம்’னு. உங்களுக்குத் தெரியும் மதுர ரோடு வீடுன்னா (அவர் மூத்த தாரத்தின் வீடு) நான் கண்ணை மூடிக்கிட்டு 'சரி’ன்னுடுவேன்'- ஒன்றும் பேசாமல் தன் ஷூவைப் பார்த்துக்கொண்டிருந்தவர், சடாரென எழுந்தார்... 'நீங்கதான் உங்க மகனுக்குச் சொல்லிப் புரிய வைக்கணும்.' எதிரே வந்த பார்வதியை, ஓர் உறைந்த பார்வை பார்த்துவிட்டுப் போனார். இந்த டீன் சாதாரண மருத்துவராக பரமக்குடியில் இருந்தபோது பல ஆண்டுகளுக்கு முன்னால், கார்மேகத்துக்கு யாரோ அறிமுகம் செய்துவைத்திருந்தார்கள்...</p>.<p>'நம்ம ஆளுகதான்’ என.</p>.<p>ரெண்டாமவன் நடுக்கூடத்தில் இருந்து கத்தினான்...</p>.<p>'நீங்க செஞ்ச தப்புக்கு நாங்க அனுபவிக்கணுமா... அப்ப ஒழுங்கா இருந்துருக்கணும்.' </p>.<p>மிக்ஸியில் கார்மேகத்துக்காக பாகற்காய் ஜூஸ் அடித்துக் கொண்டிருந்தாள் பார்வதி. யசோதா தனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என மாடி ஜன்னலைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.</p>.<p>இரண்டாமவன் கிருஷ்ணசாமியும் டீன் மகளும் ஓடிப்போனார்கள். டீன் சட்டையைப் பிடிக்காத குறையாக கார்மேகத்திடம் பேசிவிட்டுப் போனார். 10 நாட்கள் கழித்து, ஓர் அர்த்தராத்தியில் கிருஷ்ணசாமியும் டீன் மகளும் வந்தார்கள். யாரிடமும் பேசவில்லை. நேரே மாடிக்குப் போய் கிருஷ்ணசாமியின் ரூம் கதவைச் சாத்திக்கொண்டார்கள். யசோதா, தன் அறையின் டி.வி சத்தத்தைக் கூட்டினாள். காலையில் டீன் தன் மனைவி சகிதமாக வந்தார். சற்று நேரம் எதுவும் பேசவில்லை 'ரெண்டு குடும்பமும் சேர்ந்து ஒரு ரிசப்ஷன் நடத்திடுவோம்... செலவு எங்களுது.' - கார்மேகம் தலையை மாத்திரம் ஆட்டினார்.</p>.<p>பார்வதி அந்த வரவேற்புக்குப் போகவில்லை. மகன் 'வர வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டான். கார்மேகம் பெயருக்குப் போய், பந்தி தொடங்கும்போது புறப்பட்டு வந்துவிட்டார். அழைத்துப் போக கார் வரவில்லை என மாடிக்குத் திரும்பிவிட்டாள் யசோதா. மூத்தவன், ரெண்டாமவனுக்குக் கைவிளக்காக நின்றான்.</p>.<p>மருமகள் இவர்கள் யாரோடும் பேசுவது இல்லை. யசோதா மீண்டும் ஏதோ படிக்கப்போகிறேன் என ஒரு கம்ப்யூட்டர் கிளாஸில் சேர்ந்தாள். அடிக்கடி இன்ஸ்டிட்யூட்டில் டூர் போகிறார்கள் எனப் போய்வந்தாள். மருமகள், 'எல்லாம் அந்த சீனியோடுதான் போய்ட்டு வர்றா' என்றாள். பார்வதி ஒன்றும் சொல்லாது, பேத்தியைக் குளிப்பாட்டிக்கொண்டிருந்தாள்.</p>.<p>ஒரு மழைநாளில் நடுராத்திரி கார்மேகம் குடிக்கத் தண்ணீர் கேட்க, பாதி குடிக்கும்போது டம்ளர் நெஞ்சில் விழுந்தது. கிருஷ்ணசாமிதான் அந்த வீட்டுக்குப் பேசினான்.</p>.<p>''நாங்க அங்க வர மாட்டோம் நீங்க இங்க கொண்டுவந்திருங்க' என்றார்கள். பார்வதி பிடிவாதமாக காரில் ஏறினாள். அடர்த்தியான மழை. அதே பழைய கார்தான். 'ஸ்தாபிதம் 1902’ என்ற சுவரின் முன் கார் நின்றது. கோட்டை போன்ற வீடு. உள்ளே இருந்து நால்வர் குடையோடு ஓடிவந்தார்கள். காரைத் திருப்பி நிறுத்தச் சொன்னார்கள்; பார்வதியும் இறங்கினாள். கிருஷ்ணசாமியும் சேர்ந்து தூக்கப்போக அவன் தோளைத் தட்டி, 'இதோட உங்க வேலை முடிஞ்சுருச்சு. நாளைக்கு யாரும் இந்த வீட்டுக்கு பொண்டாட்டி, புள்ளைனு வரக் கூடாது.'</p>.<p>தடாலென இரும்புக் கதவு சாத்தப்பட்டது. கதவின் மீது தண்ணீர் ஓடியதால், சத்தம் பெரிதாகக் கேட்கவில்லை. கிருஷ்ணசாமி அம்மாவை உற்றுப் பார்த்தான். விறுவிறுவென காரை நோக்கி நடந்து, பார்வதி மேல் தண்ணீர் தெறிக்க காரைக் கிளப்பிக் கொண்டு போனான். எதிரே மழைக்கு பூக்கடையின் கீழ் படுத்திருந்த யாரோ, பார்வதியை நோக்கி ஓடிவந்தார்கள்.</p>.<p>மறுநாள் பார்வதி மாத்திரம் மாலையிடப்பட்ட கார்மேகத்தின் போட்டோ அருகே உட்கார்ந்திருந்தாள். மாதவனும் கிருஷ்ணசாமியும் சலூனில் சென்று மொட்டையடித்துக் கொண்டார்கள். யசோதா மாடியில் இருந்து இறங்கவில்லை.</p>.<p>கொஞ்ச நாளில் மேலே படிக்கப் போகிறேன் என யசோதா சென்னைக்குப் போனாள்.</p>.<p>'அந்த சீனி அங்கதான் இருக்கானாம்ல?' என்றாள் மருமகள். கிருஷ்ணசாமியும் மாதவனும் வீட்டை இடித்துக் கட்டி, வாடகைக்குவிட முடிவு செய்தனர். கிருஷ்ணசாமிக்கு முன்பக்கம் நான்கு கடைகளும் ஒரு கிளினிக்கும். மாடி போர்ஷன் முழுக்க மாதவனுக்கு என எழுதிக்கொண்டனர். கிருஷ்ணசாமி வீடு கட்டும் வரை அருளானந்தா நகருக்குக் குடிபோனான்.</p>.<p>பின்பக்கம் சிறிய ஷெட் போன்ற ஓர் அறை கட்டப்பட்டது. பார்வதிக் குட்டியின் பொருட்கள் அங்கு மாற்றப்பட்டன.</p>.<p>'நாளைக்கு இடிக்க ஆள் வந்திருவாங்க. நீ இதுல இருந்துக்க...'</p>.<p>பார்வதி ஒன்றும் பேசாமல் நின்றாள்.</p>.<p>'கார் டிக்கியைவிட இது பெருசுதான்...' எனச் சொல்லிவிட்டுப் போனான் கிருஷ்ணசாமி.</p>.<p>ரோஸி சேச்சி, அன்றைக்கு அந்தப் பணத்தை அச்சுதன் சேட்டனிடம் இருந்து தன்னை வாங்கவிட்டிருக்கலாம் என, சம்பந்தமே இல்லாமல் அந்த நேரத்தில் பார்வதிக்குத் தோன்றியது!</p>