<p><span style="color: #ff0000"><strong>1.</strong></span></p>.<p>பிறர் தயவில்லாமல்</p>.<p>பெரிதாக வாழ்ந்தவர்கள்</p>.<p>எவருமில்லை</p>.<p>பிணங்க, பிதற்ற,</p>.<p>பிடிவாதம்கொள்ள,</p>.<p>பெருமைப்பட,</p>.<p>யாரோ ஒருவர் நமக்கு</p>.<p>எப்போதும் தேவைப்படுகிறார்</p>.<p><span style="color: #ff0000"><strong>2.</strong></span></p>.<p>ஒருவருடைய தயவு</p>.<p>தேவைப்படும் வரை</p>.<p>அவரை நாமோ அல்லது</p>.<p>அவர் நம்மையோ</p>.<p>சொல்லிக்கொள்கிறோம்</p>.<p>நேசிப்பதாக</p>.<p><span style="color: #ff0000"><strong>3.</strong></span></p>.<p>பாதகர்களோடும்</p>.<p>பழகத்தான் நேர்கிறது</p>.<p>அவர்களை நாம்</p>.<p>பகைக்கப் பயப்படுகிறோம்</p>.<p>விமர்சிக்கவோ</p>.<p>வெறுப்பை உமிழவோ</p>.<p>எந்தச் சந்தர்ப்பத்திலும்</p>.<p>எண்ணுவதில்லை</p>.<p>அவர்களை நெருக்கத்திலேயே</p>.<p>வைத்திருக்கிறோம்</p>.<p>என்றோ ஒருநாள் நம்முடைய</p>.<p>எதிரிகளைக் கொல்வதற்கு</p>.<p><span style="color: #ff0000"><strong>4.</strong></span></p>.<p>கூடிக் குடிக்கையில்</p>.<p>கொண்டாடிச் சிரிக்கையில்</p>.<p>நாடித் தளும்பேற</p>.<p>நக்கலடிக்கையில்</p>.<p>யாரோ ஒருவருடைய</p>.<p>அந்தரங்கத்துக்குள் பிரவேசிக்கிறது</p>.<p>நம்முடைய நாக்கு</p>.<p>இருப்பதைப் பகிரவும்</p>.<p>இல்லாததை நுகரவும்</p>.<p>ஏங்குகிற மனசுக்கு</p>.<p>ஒழுக்கமென்பது</p>.<p>ஒப்புக்கு</p>.<p><span style="color: #ff0000"><strong>5.</strong></span></p>.<p>ஊதியத்துக்காக</p>.<p>எந்த வேலையும் சரியெனில்</p>.<p>கூலிப்படையை ஏன் பார்க்கிறோம்</p>.<p>குற்றமாக?</p>.<p>உகந்த உணவென்றால்</p>.<p>உபாதையில்லை</p>.<p>சரியானவனைப் பாதிப்பதில்லை</p>.<p>சகவாசதோஷம்</p>.<p>கட்டுக்குள் வாழ்வதெனில்</p>.<p>கவலைதான்</p>.<p><span style="color: #ff0000"><strong>6.</strong></span></p>.<p>விருப்பங்களை</p>.<p>வியாபாரமாக்கிய பின்</p>.<p>சில்லறைகளை உறவுகளாகவும்</p>.<p>சிந்தனைகளைப் பிரிவுகளாகவும்</p>.<p>கருதுவதில் என்ன தவறு?</p>.<p>வாங்கிக் குவிப்பதே</p>.<p>வாழ்க்கை</p>.<p>ஏங்கித் தவிப்பதே</p>.<p>யதார்த்தம்</p>.<p style="text-align: left"><span style="color: #ff0000"><strong>7.</strong></span></p>.<p>எங்கோ இருப்பவன் மேல்</p>.<p>அடி விழுந்தால் என்ன</p>.<p>இடி விழுந்தால் என்ன என்று</p>.<p>இருக்க முடியுமா</p>.<p>கடந்து போங்கள்</p>.<p>கவலையை விடுங்கள்</p>.<p>எல்லாம் விதிப்பயன்</p>.<p>என்ன செய்வது</p>.<p>எங்கோ இருப்பவன்தானே</p>.<p>உங்களுக்கு என்ன வந்தது</p>.<p>இப்படி நிறையச் சொல்கிறார்கள்</p>.<p>சிரிப்பு வருகிறது</p>.<p>எங்கோ இருப்பவன்தான்</p>.<p>இவர்களுக்கு வழங்குகிறான்</p>.<p>அருளையும் ஆசியையும்</p>.<p><span style="color: #ff0000"><strong>8.</strong></span></p>.<p>வரிசையில் நிற்கையில்</p>.<p>நம்மை முந்துவதற்கு ஒருவரை</p>.<p>அனுமதிக்கிறோமா</p>.<p>எனக்குப் பிறகே</p>.<p>எல்லோருமென்ற</p>.<p>பெருமிதம் தேவைப்படுகிறது</p>.<p>வாழ</p>.<p><span style="color: #ff0000"><strong>9.</strong></span></p>.<p>வாசலோடு சிலரை</p>.<p>வரவேற்பறையோடு சிலரை</p>.<p>கூடத்தில் சிலரை</p>.<p>கொல்லை வரை சிலரை</p>.<p>ஆள் பார்த்தே</p>.<p>அரும்புகிறது அன்பு</p>.<p>அவசியம் ஏற்படாத வரை</p>.<p>நம்முடைய இதயங்கள்</p>.<p>யாருக்காகவும் எதற்காகவும்</p>.<p>திறப்பதே இல்லை</p>.<p><span style="color: #ff0000"><strong>10.</strong></span></p>.<p>நடந்ததைப் பேச</p>.<p>நடப்பதை ஆலோசிக்க</p>.<p>ஒருவரைத் தேடுகிறபோது</p>.<p>அவருடைய நேசத்தின்</p>.<p>அளவு புரிகிறது</p>.<p>நெருக்கத்தில் விலகியும்</p>.<p>தயக்கத்தில் பழகியும்</p>.<p>முடியவே முடியாத உறவைத்தான்</p>.<p>காதலென்று சொல்கிறோமா!</p>
<p><span style="color: #ff0000"><strong>1.</strong></span></p>.<p>பிறர் தயவில்லாமல்</p>.<p>பெரிதாக வாழ்ந்தவர்கள்</p>.<p>எவருமில்லை</p>.<p>பிணங்க, பிதற்ற,</p>.<p>பிடிவாதம்கொள்ள,</p>.<p>பெருமைப்பட,</p>.<p>யாரோ ஒருவர் நமக்கு</p>.<p>எப்போதும் தேவைப்படுகிறார்</p>.<p><span style="color: #ff0000"><strong>2.</strong></span></p>.<p>ஒருவருடைய தயவு</p>.<p>தேவைப்படும் வரை</p>.<p>அவரை நாமோ அல்லது</p>.<p>அவர் நம்மையோ</p>.<p>சொல்லிக்கொள்கிறோம்</p>.<p>நேசிப்பதாக</p>.<p><span style="color: #ff0000"><strong>3.</strong></span></p>.<p>பாதகர்களோடும்</p>.<p>பழகத்தான் நேர்கிறது</p>.<p>அவர்களை நாம்</p>.<p>பகைக்கப் பயப்படுகிறோம்</p>.<p>விமர்சிக்கவோ</p>.<p>வெறுப்பை உமிழவோ</p>.<p>எந்தச் சந்தர்ப்பத்திலும்</p>.<p>எண்ணுவதில்லை</p>.<p>அவர்களை நெருக்கத்திலேயே</p>.<p>வைத்திருக்கிறோம்</p>.<p>என்றோ ஒருநாள் நம்முடைய</p>.<p>எதிரிகளைக் கொல்வதற்கு</p>.<p><span style="color: #ff0000"><strong>4.</strong></span></p>.<p>கூடிக் குடிக்கையில்</p>.<p>கொண்டாடிச் சிரிக்கையில்</p>.<p>நாடித் தளும்பேற</p>.<p>நக்கலடிக்கையில்</p>.<p>யாரோ ஒருவருடைய</p>.<p>அந்தரங்கத்துக்குள் பிரவேசிக்கிறது</p>.<p>நம்முடைய நாக்கு</p>.<p>இருப்பதைப் பகிரவும்</p>.<p>இல்லாததை நுகரவும்</p>.<p>ஏங்குகிற மனசுக்கு</p>.<p>ஒழுக்கமென்பது</p>.<p>ஒப்புக்கு</p>.<p><span style="color: #ff0000"><strong>5.</strong></span></p>.<p>ஊதியத்துக்காக</p>.<p>எந்த வேலையும் சரியெனில்</p>.<p>கூலிப்படையை ஏன் பார்க்கிறோம்</p>.<p>குற்றமாக?</p>.<p>உகந்த உணவென்றால்</p>.<p>உபாதையில்லை</p>.<p>சரியானவனைப் பாதிப்பதில்லை</p>.<p>சகவாசதோஷம்</p>.<p>கட்டுக்குள் வாழ்வதெனில்</p>.<p>கவலைதான்</p>.<p><span style="color: #ff0000"><strong>6.</strong></span></p>.<p>விருப்பங்களை</p>.<p>வியாபாரமாக்கிய பின்</p>.<p>சில்லறைகளை உறவுகளாகவும்</p>.<p>சிந்தனைகளைப் பிரிவுகளாகவும்</p>.<p>கருதுவதில் என்ன தவறு?</p>.<p>வாங்கிக் குவிப்பதே</p>.<p>வாழ்க்கை</p>.<p>ஏங்கித் தவிப்பதே</p>.<p>யதார்த்தம்</p>.<p style="text-align: left"><span style="color: #ff0000"><strong>7.</strong></span></p>.<p>எங்கோ இருப்பவன் மேல்</p>.<p>அடி விழுந்தால் என்ன</p>.<p>இடி விழுந்தால் என்ன என்று</p>.<p>இருக்க முடியுமா</p>.<p>கடந்து போங்கள்</p>.<p>கவலையை விடுங்கள்</p>.<p>எல்லாம் விதிப்பயன்</p>.<p>என்ன செய்வது</p>.<p>எங்கோ இருப்பவன்தானே</p>.<p>உங்களுக்கு என்ன வந்தது</p>.<p>இப்படி நிறையச் சொல்கிறார்கள்</p>.<p>சிரிப்பு வருகிறது</p>.<p>எங்கோ இருப்பவன்தான்</p>.<p>இவர்களுக்கு வழங்குகிறான்</p>.<p>அருளையும் ஆசியையும்</p>.<p><span style="color: #ff0000"><strong>8.</strong></span></p>.<p>வரிசையில் நிற்கையில்</p>.<p>நம்மை முந்துவதற்கு ஒருவரை</p>.<p>அனுமதிக்கிறோமா</p>.<p>எனக்குப் பிறகே</p>.<p>எல்லோருமென்ற</p>.<p>பெருமிதம் தேவைப்படுகிறது</p>.<p>வாழ</p>.<p><span style="color: #ff0000"><strong>9.</strong></span></p>.<p>வாசலோடு சிலரை</p>.<p>வரவேற்பறையோடு சிலரை</p>.<p>கூடத்தில் சிலரை</p>.<p>கொல்லை வரை சிலரை</p>.<p>ஆள் பார்த்தே</p>.<p>அரும்புகிறது அன்பு</p>.<p>அவசியம் ஏற்படாத வரை</p>.<p>நம்முடைய இதயங்கள்</p>.<p>யாருக்காகவும் எதற்காகவும்</p>.<p>திறப்பதே இல்லை</p>.<p><span style="color: #ff0000"><strong>10.</strong></span></p>.<p>நடந்ததைப் பேச</p>.<p>நடப்பதை ஆலோசிக்க</p>.<p>ஒருவரைத் தேடுகிறபோது</p>.<p>அவருடைய நேசத்தின்</p>.<p>அளவு புரிகிறது</p>.<p>நெருக்கத்தில் விலகியும்</p>.<p>தயக்கத்தில் பழகியும்</p>.<p>முடியவே முடியாத உறவைத்தான்</p>.<p>காதலென்று சொல்கிறோமா!</p>