<p><span style="color: #ff0000">ப</span>தினோரு கூழாங்கற்களை </p>.<p>அடுக்கிவைத்த உயரத்தில் இருந்தாள்</p>.<p>அச்சிறுமி.</p>.<p>சிவனின் மூன்றாம் கண்</p>.<p>மெள்ளத் திறப்பதுபோல</p>.<p>சிரிக்கிறாள் பிச்சை இடுபவரைப் பார்த்து.</p>.<p>பாத்திரத்தின் விளிம்பில் வந்தமரும்</p>.<p>வண்ணத்துப்பூச்சிக்காக</p>.<p>கொஞ்ச நேரம் பிச்சை கேட்காமல் இருக்கிறாள்.</p>.<p>அது பறந்துபோகும் வரை</p>.<p>அவள் பறந்துகொள்கிறாள்.</p>.<p>பறந்துபோனதும்</p>.<p>சில்லறைகளை ஜேப்பில்</p>.<p>நிரப்பிக்கொண்டு நடக்கத் தொடங்குகிறாள்.</p>.<p>பட்டாம்பூச்சி விற்பவனிடம்</p>.<p>சில்லறை எல்லாம் தந்து</p>.<p>நிறைய வாங்கி நிரப்பிக்கொண்டு செல்கிறாள்.</p>.<p>ஆறு மழைத்துளிகளை அடுக்கிவைத்த</p>.<p>உயரத்தில் தவழும்</p>.<p>தன் தங்கையிடம் எல்லா</p>.<p>பட்டாம்பூச்சிகளையும் பறக்கவிட்டுக் காட்டுகிறாள்.</p>.<p>அப்போது அங்கு பெய்யத் தொடங்கிய மழையில்</p>.<p>அமைதிகொண்டன</p>.<p>எல்லாம் எல்லாம்.</p>
<p><span style="color: #ff0000">ப</span>தினோரு கூழாங்கற்களை </p>.<p>அடுக்கிவைத்த உயரத்தில் இருந்தாள்</p>.<p>அச்சிறுமி.</p>.<p>சிவனின் மூன்றாம் கண்</p>.<p>மெள்ளத் திறப்பதுபோல</p>.<p>சிரிக்கிறாள் பிச்சை இடுபவரைப் பார்த்து.</p>.<p>பாத்திரத்தின் விளிம்பில் வந்தமரும்</p>.<p>வண்ணத்துப்பூச்சிக்காக</p>.<p>கொஞ்ச நேரம் பிச்சை கேட்காமல் இருக்கிறாள்.</p>.<p>அது பறந்துபோகும் வரை</p>.<p>அவள் பறந்துகொள்கிறாள்.</p>.<p>பறந்துபோனதும்</p>.<p>சில்லறைகளை ஜேப்பில்</p>.<p>நிரப்பிக்கொண்டு நடக்கத் தொடங்குகிறாள்.</p>.<p>பட்டாம்பூச்சி விற்பவனிடம்</p>.<p>சில்லறை எல்லாம் தந்து</p>.<p>நிறைய வாங்கி நிரப்பிக்கொண்டு செல்கிறாள்.</p>.<p>ஆறு மழைத்துளிகளை அடுக்கிவைத்த</p>.<p>உயரத்தில் தவழும்</p>.<p>தன் தங்கையிடம் எல்லா</p>.<p>பட்டாம்பூச்சிகளையும் பறக்கவிட்டுக் காட்டுகிறாள்.</p>.<p>அப்போது அங்கு பெய்யத் தொடங்கிய மழையில்</p>.<p>அமைதிகொண்டன</p>.<p>எல்லாம் எல்லாம்.</p>