<p><span style="color: #ff0000"><strong>சி</strong></span>றுமியாய் நகரம் செல்லும் பேருந்தில்</p>.<p>ஜன்னலோர இருக்கை கிடைத்தபோதெல்லாம்</p>.<p>நெடுவகிடாய் நீரோடும் வாய்க்காலின் அக்கரையில்</p>.<p>மண் மெழுகிய திண்ணையின் கட்டைச் சுவற்றில்</p>.<p>வண்ணமடித்து மூங்கில் தட்டிக்கட்டிய</p>.<p>கூரைவீடே என் கனவு வீடானது.</p>.<p>இருபெரும் தூண்களும் கதவுகளில் பூ வேலைப்பாடும்</p>.<p>சிவப்பும் நீலமுமாய் சிமென்ட்பால் பூப்போட்ட</p>.<p>வரவேற்பறை நடுக்கூடம் உள் அறை சமையற்கட்டு</p>.<p>கொல்லைப்புறமுமாய் இருந்த</p>.<p>காந்திமதியின் வீட்டை பார்க்கும்வரை.</p>.<p>உயிர் நடுங்க அழுத்தமாய்க் குரைக்கும்</p>.<p>ஆள் உயர நாய்கள் வாசலில் கட்டப்பட்ட</p>.<p>ஜன்னல் திறக்காத சென்னை மாநகரின்</p>.<p>கடற்கரையோரப் பங்களாக்களுக்கு எதிர்ப்புறத்தில்</p>.<p>நடக்கும் பாதையில் வீடுகளிலிருந்து</p>.<p>ஜாடையாக வெளியேற்றப்படும்</p>.<p>கழிவுநீர் நாற்றம் சூழவாழும் வாடகை வீட்டிலிருந்து,</p>.<p>இப்போது நான் கட்டிக்கொண்டிருக்கும் வீடோ</p>.<p>முற்றிலும் மாறுபட்ட கவிதை இல்லம்.</p>.<p>மாடியில் என் தனியறையில் கடற்காற்று புத்தகங்கள்</p>.<p>நிஜமாய் பூத்த மலர்த்தொட்டிகள், நிலவொளி என</p>.<p>எழுதுவதற்கு மிகவும் வசதியான</p>.<p>தூய நிசப்தத்தின் எழில் கொஞ்சி உறவாட</p>.<p>நாள்தோறும் மனம்பிசைந்து ஞாபகத்தால் இடம் வாங்கி</p>.<p>எண்ணச் செங்கற்கள் எடுத்தடுக்கி எடுத்தடுக்கி</p>.<p>விவரம் தெரிந்த நாளிலிருந்தே</p>.<p>கட்டிக்கொண்டேதான் இருக்கிறேன்</p>.<p>எனக்கான கனவு இல்லத்தை.</p>
<p><span style="color: #ff0000"><strong>சி</strong></span>றுமியாய் நகரம் செல்லும் பேருந்தில்</p>.<p>ஜன்னலோர இருக்கை கிடைத்தபோதெல்லாம்</p>.<p>நெடுவகிடாய் நீரோடும் வாய்க்காலின் அக்கரையில்</p>.<p>மண் மெழுகிய திண்ணையின் கட்டைச் சுவற்றில்</p>.<p>வண்ணமடித்து மூங்கில் தட்டிக்கட்டிய</p>.<p>கூரைவீடே என் கனவு வீடானது.</p>.<p>இருபெரும் தூண்களும் கதவுகளில் பூ வேலைப்பாடும்</p>.<p>சிவப்பும் நீலமுமாய் சிமென்ட்பால் பூப்போட்ட</p>.<p>வரவேற்பறை நடுக்கூடம் உள் அறை சமையற்கட்டு</p>.<p>கொல்லைப்புறமுமாய் இருந்த</p>.<p>காந்திமதியின் வீட்டை பார்க்கும்வரை.</p>.<p>உயிர் நடுங்க அழுத்தமாய்க் குரைக்கும்</p>.<p>ஆள் உயர நாய்கள் வாசலில் கட்டப்பட்ட</p>.<p>ஜன்னல் திறக்காத சென்னை மாநகரின்</p>.<p>கடற்கரையோரப் பங்களாக்களுக்கு எதிர்ப்புறத்தில்</p>.<p>நடக்கும் பாதையில் வீடுகளிலிருந்து</p>.<p>ஜாடையாக வெளியேற்றப்படும்</p>.<p>கழிவுநீர் நாற்றம் சூழவாழும் வாடகை வீட்டிலிருந்து,</p>.<p>இப்போது நான் கட்டிக்கொண்டிருக்கும் வீடோ</p>.<p>முற்றிலும் மாறுபட்ட கவிதை இல்லம்.</p>.<p>மாடியில் என் தனியறையில் கடற்காற்று புத்தகங்கள்</p>.<p>நிஜமாய் பூத்த மலர்த்தொட்டிகள், நிலவொளி என</p>.<p>எழுதுவதற்கு மிகவும் வசதியான</p>.<p>தூய நிசப்தத்தின் எழில் கொஞ்சி உறவாட</p>.<p>நாள்தோறும் மனம்பிசைந்து ஞாபகத்தால் இடம் வாங்கி</p>.<p>எண்ணச் செங்கற்கள் எடுத்தடுக்கி எடுத்தடுக்கி</p>.<p>விவரம் தெரிந்த நாளிலிருந்தே</p>.<p>கட்டிக்கொண்டேதான் இருக்கிறேன்</p>.<p>எனக்கான கனவு இல்லத்தை.</p>