<p><span style="color: #ff0000">அ</span>திர்ந்து பரவும் மருதப் பண்! </p>.<p>குருகு பறந்த மருத வானில் வட்டமடிக்கின்றன பருந்துகள்</p>.<p>கரிமுகனின் குடமுழுக்கின்பொருட்டு</p>.<p> யாழ்மீட்டிய பாணன்கள் சட்டென இசைமீண்டு</p>.<p>கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்கள் நிலை மறந்து</p>.<p>உழத்தியின் கசிந்து செழித்த பசும்வெளி</p>.<p>காலத்தின்கீழ் மிதிபடுகிறது நாதியற்று</p>.<p>நெல்லரிக்கிணை கொட்டிமுழக்கும் மறக்கிழத்திகள்</p>.<p>எல்லாருள்ளும் அமர்ந்திருக்கின்றனர் கனன்றபடி</p>.<p>பரத்தையின் உறவறிந்த தலைவியின் மனமென</p>.<p>கலவரமுறுகின்றன மூதூர் வீதிகள்</p>.<p>வெள்ளத்தனையது மலர்நீட்டம்தான் நாறும் கமலமே</p>.<p>கரைகள் உடையும் வரை அல்லது உடைக்கும் வரை</p>.<p>தவிர</p>.<p>திமிறலும் திமிறல் நிமித்தமுமே இயல்பாய்க்கொண்டதனால்</p>.<p>பசித்த தம் மக்களின் வயிற்றுக்கு</p>.<p>அவர்கள் அவ்வப்போது மாட்டுக்கறி சமைக்கிறார்கள்.</p>.<p><span style="color: #800000">- சச்சின்</span></p>.<p><span style="color: #ff0000">நடு விழா!</span></p>.<p>என்னைக் கொன்று அழைப்பிதழ் அடித்தார்கள்</p>.<p>என்னைக் கொன்று இடம் அமைத்தார்கள்</p>.<p>என்னைக் கொன்று மேடை சமைத்தார்கள்</p>.<p>என்னைக் கொன்று இருக்கை செய்தார்கள்</p>.<p>என்னை நட உன்னை அழைத்தார்கள்!</p>.<p><span style="color: #800000">- சேயோன் யாழ்வேந்தன்</span></p>.<p><span style="color: #ff0000">கேட்கக்கூடாத கேள்வி!</span></p>.<p>நசுக்குவதற்கு முன்</p>.<p>ஒரு முறை கண்காட்சி நடத்துவார் அப்பா</p>.<p>இதுதான் வெள்ளைத் தேளென.</p>.<p>உரலிடுக்குகளில் வாழும்</p>.<p>தவளைகளை கோணியுறைக் கைகளால்</p>.<p>அள்ளி வீசுவாள் பாட்டி.</p>.<p>பூச்சிகளின் குறுகுறு சத்தமில்லா இரவு</p>.<p>கீங்கென்றிருக்கும் எங்கள் காதுகளுக்கு.</p>.<p>சேவல் கோழிகளின் பசி தீர</p>.<p>கம்பு சிதறிக்கிடக்கும் எங்கள் வாசல்கள்.</p>.<p>ஊர் சுற்றி</p>.<p>நேரம் தவறி வரும் வளர்ப்பு நாய்க்கு</p>.<p>'எங்க போயித் தொலஞ்ச?’ என்று</p>.<p>திட்டிக்கொண்டே சோறிடுவாள் அம்மா.</p>.<p>தேடியலையுமென் கண்களுக்கு</p>.<p>டீயாத்தும் அண்ணாச்சி குறிப்பு தருவார்</p>.<p>'மேக்கால மேயுது உங்க கன்னுக்குட்டி...’</p>.<p>அடுக்குச்சுவர் தொடர் வரிசைகளை</p>.<p>ஊரென்று சொல்ல யோசிக்கும்</p>.<p>குடிபெயர்ந்து இதயம்பெயராதவரிடம்</p>.<p>உங்களுக்கு எந்த ஊரென</p>.<p>கேட்டுவிடாதீர்.</p>.<p>வெறும் பெயரோடு</p>.<p>நிறுத்தத் தெரியாது அவருக்கு.</p>.<p><span style="color: #800000">- கனா காண்பவன்</span></p>
<p><span style="color: #ff0000">அ</span>திர்ந்து பரவும் மருதப் பண்! </p>.<p>குருகு பறந்த மருத வானில் வட்டமடிக்கின்றன பருந்துகள்</p>.<p>கரிமுகனின் குடமுழுக்கின்பொருட்டு</p>.<p> யாழ்மீட்டிய பாணன்கள் சட்டென இசைமீண்டு</p>.<p>கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்கள் நிலை மறந்து</p>.<p>உழத்தியின் கசிந்து செழித்த பசும்வெளி</p>.<p>காலத்தின்கீழ் மிதிபடுகிறது நாதியற்று</p>.<p>நெல்லரிக்கிணை கொட்டிமுழக்கும் மறக்கிழத்திகள்</p>.<p>எல்லாருள்ளும் அமர்ந்திருக்கின்றனர் கனன்றபடி</p>.<p>பரத்தையின் உறவறிந்த தலைவியின் மனமென</p>.<p>கலவரமுறுகின்றன மூதூர் வீதிகள்</p>.<p>வெள்ளத்தனையது மலர்நீட்டம்தான் நாறும் கமலமே</p>.<p>கரைகள் உடையும் வரை அல்லது உடைக்கும் வரை</p>.<p>தவிர</p>.<p>திமிறலும் திமிறல் நிமித்தமுமே இயல்பாய்க்கொண்டதனால்</p>.<p>பசித்த தம் மக்களின் வயிற்றுக்கு</p>.<p>அவர்கள் அவ்வப்போது மாட்டுக்கறி சமைக்கிறார்கள்.</p>.<p><span style="color: #800000">- சச்சின்</span></p>.<p><span style="color: #ff0000">நடு விழா!</span></p>.<p>என்னைக் கொன்று அழைப்பிதழ் அடித்தார்கள்</p>.<p>என்னைக் கொன்று இடம் அமைத்தார்கள்</p>.<p>என்னைக் கொன்று மேடை சமைத்தார்கள்</p>.<p>என்னைக் கொன்று இருக்கை செய்தார்கள்</p>.<p>என்னை நட உன்னை அழைத்தார்கள்!</p>.<p><span style="color: #800000">- சேயோன் யாழ்வேந்தன்</span></p>.<p><span style="color: #ff0000">கேட்கக்கூடாத கேள்வி!</span></p>.<p>நசுக்குவதற்கு முன்</p>.<p>ஒரு முறை கண்காட்சி நடத்துவார் அப்பா</p>.<p>இதுதான் வெள்ளைத் தேளென.</p>.<p>உரலிடுக்குகளில் வாழும்</p>.<p>தவளைகளை கோணியுறைக் கைகளால்</p>.<p>அள்ளி வீசுவாள் பாட்டி.</p>.<p>பூச்சிகளின் குறுகுறு சத்தமில்லா இரவு</p>.<p>கீங்கென்றிருக்கும் எங்கள் காதுகளுக்கு.</p>.<p>சேவல் கோழிகளின் பசி தீர</p>.<p>கம்பு சிதறிக்கிடக்கும் எங்கள் வாசல்கள்.</p>.<p>ஊர் சுற்றி</p>.<p>நேரம் தவறி வரும் வளர்ப்பு நாய்க்கு</p>.<p>'எங்க போயித் தொலஞ்ச?’ என்று</p>.<p>திட்டிக்கொண்டே சோறிடுவாள் அம்மா.</p>.<p>தேடியலையுமென் கண்களுக்கு</p>.<p>டீயாத்தும் அண்ணாச்சி குறிப்பு தருவார்</p>.<p>'மேக்கால மேயுது உங்க கன்னுக்குட்டி...’</p>.<p>அடுக்குச்சுவர் தொடர் வரிசைகளை</p>.<p>ஊரென்று சொல்ல யோசிக்கும்</p>.<p>குடிபெயர்ந்து இதயம்பெயராதவரிடம்</p>.<p>உங்களுக்கு எந்த ஊரென</p>.<p>கேட்டுவிடாதீர்.</p>.<p>வெறும் பெயரோடு</p>.<p>நிறுத்தத் தெரியாது அவருக்கு.</p>.<p><span style="color: #800000">- கனா காண்பவன்</span></p>