<p><span style="color: #ff0000"><strong>வி</strong></span>ரல்களிலும் இதழ்களிலும் அவளையே மீட்டுகிறாள்</p>.<p>உயிரைப் பைத்தியமாக்கும் இசையினூடே</p>.<p> தந்திகளில் கசிகின்ற நாதங்களினூடே குரலை காற்றிலசையும்</p>.<p>பெருமர இலைகளின் ஓசைகளாக்குகிறாள்.</p>.<p>வற்றியிருக்கிற குளத்தின் மீது மேகங்கள்</p>.<p>கருக்கின்றபொழுது கானங்களிசைக்கின்றாள்</p>.<p>குளத்தில் மீன்குஞ்சுகள் செதில்களின் மகிழ்வில் ஓடியாடுகின்றன</p>.<p>தாகத்திலிருந்தவர்கள் குடங்களில் நீரையள்ளி மழையைப் பாடுகின்றனர்</p>.<p>இலையுதிர்த்த மரம் பசுமையில் நிரம்பி</p>.<p>பூக்களால் நிரம்பி கமழ்கிறது காடெங்கும்.</p>.<p>இருண்ட இரவுகளில் தேய்பிறை முழுநிலவாகிறது</p>.<p>பௌர்ணமியில் காதலர்கள் முத்தங்களை</p>.<p>வாசிக்க எங்கும் படர்கிற மெல்லிய ஓசைகள்.</p>.<p>விளைநிலங்களில் உழவர்களின் கலப்பைகள்</p>.<p>புன்னகையைச் சேர்த்து உழுகின்றன</p>.<p>மழை நிரம்பிய கண்மாய்களின் ஞாபகங்களில்.</p>.<p>ஏழைகளின் வீடுகளில் அடுப்பில் நெருப்பு</p>.<p>எந்நேரமும் எரிந்து பசிப்பொழுதுகள் குளிர்கின்றன.</p>.<p>விழிகளெல்லாம் கண்ணீர் சுரப்பதை மறந்து</p>.<p>ஆனந்தங்களில் அமிழ்கின்றன</p>.<p>வேதனைகள் மறைந்த உலகம் ததும்புகின்றது</p>.<p>திருவிழாக்களினாலும் வேடிக்கைகளினாலும்</p>.<p>கொண்டாட்டங்களினாலும்.</p>.<p>கைகளிலிருந்த கருவியும்</p>.<p>அவள் குரலும் கூட்டிய அரிய கீதங்களில்</p>.<p>கைகூடுகிற அதிசயங்களில்</p>.<p>நானுமிருக்கிறேன் நானில்லாதவாறு.</p>
<p><span style="color: #ff0000"><strong>வி</strong></span>ரல்களிலும் இதழ்களிலும் அவளையே மீட்டுகிறாள்</p>.<p>உயிரைப் பைத்தியமாக்கும் இசையினூடே</p>.<p> தந்திகளில் கசிகின்ற நாதங்களினூடே குரலை காற்றிலசையும்</p>.<p>பெருமர இலைகளின் ஓசைகளாக்குகிறாள்.</p>.<p>வற்றியிருக்கிற குளத்தின் மீது மேகங்கள்</p>.<p>கருக்கின்றபொழுது கானங்களிசைக்கின்றாள்</p>.<p>குளத்தில் மீன்குஞ்சுகள் செதில்களின் மகிழ்வில் ஓடியாடுகின்றன</p>.<p>தாகத்திலிருந்தவர்கள் குடங்களில் நீரையள்ளி மழையைப் பாடுகின்றனர்</p>.<p>இலையுதிர்த்த மரம் பசுமையில் நிரம்பி</p>.<p>பூக்களால் நிரம்பி கமழ்கிறது காடெங்கும்.</p>.<p>இருண்ட இரவுகளில் தேய்பிறை முழுநிலவாகிறது</p>.<p>பௌர்ணமியில் காதலர்கள் முத்தங்களை</p>.<p>வாசிக்க எங்கும் படர்கிற மெல்லிய ஓசைகள்.</p>.<p>விளைநிலங்களில் உழவர்களின் கலப்பைகள்</p>.<p>புன்னகையைச் சேர்த்து உழுகின்றன</p>.<p>மழை நிரம்பிய கண்மாய்களின் ஞாபகங்களில்.</p>.<p>ஏழைகளின் வீடுகளில் அடுப்பில் நெருப்பு</p>.<p>எந்நேரமும் எரிந்து பசிப்பொழுதுகள் குளிர்கின்றன.</p>.<p>விழிகளெல்லாம் கண்ணீர் சுரப்பதை மறந்து</p>.<p>ஆனந்தங்களில் அமிழ்கின்றன</p>.<p>வேதனைகள் மறைந்த உலகம் ததும்புகின்றது</p>.<p>திருவிழாக்களினாலும் வேடிக்கைகளினாலும்</p>.<p>கொண்டாட்டங்களினாலும்.</p>.<p>கைகளிலிருந்த கருவியும்</p>.<p>அவள் குரலும் கூட்டிய அரிய கீதங்களில்</p>.<p>கைகூடுகிற அதிசயங்களில்</p>.<p>நானுமிருக்கிறேன் நானில்லாதவாறு.</p>