<p>மழைத்துளிகளை</p>.<p>பத்திரமாக</p>.<p>தன் புத்தகப்பைக்குள் நிரப்பத் தெரிந்த</p>.<p>பள்ளிச் சிறுமி...</p>.<p>அன்று முதன்முறையாக</p>.<p>வெயிலையும் நிரப்ப முயல்கிறாள்.</p>.<p>நிழல் குவிந்துக்கிடக்கும்</p>.<p>கூடாரத்திலிருந்து</p>.<p>முற்றத்திற்கு ஓடியும்...</p>.<p>மஞ்சள் பூக்கள்</p>.<p>பூத்திருக்கும் மரத்திற்கு கீழிருந்து</p>.<p>நெடுஞ்சாலைக்குத் தாவியும்...</p>.<p>பள்ளியறையிலிருந்து</p>.<p>விளையாட்டு மைதானம் என்றும்</p>.<p>அவளது முயற்சி</p>.<p>கிளைத்து படர்கிறது</p>.<p>ஒவ்வொரு மாலையும்...</p>.<p>இரவும்...</p>.<p>வெயில் தன் புத்தகப்பைக்குள்</p>.<p>இருப்பதாக பெருமிதம் கொள்கிறாள்</p>.<p>அந்தப் பெருமிதத்தோடும்</p>.<p>விளையாடுகிறாள்...</p>.<p>படிக்கிறாள்...</p>.<p>உண்ணுகிறாள்...</p>.<p>உறங்கவும் செய்கிறாள்!</p>.<p>திடீரென</p>.<p>ஒரு பகல் முழுவதும்</p>.<p>அடைமழை</p>.<p>புத்தகப்பையைத் திறந்து</p>.<p>வெயிலை எடுத்தவள்...</p>.<p>பின் மழையோடு குழைத்து</p>.<p>வானவில் செய்யத் தொடங்குகிறாள்..!</p>.<p>அப்படித்தான்</p>.<p>வெண்முகிலும்</p>.<p>விண்மீன்களும்</p>.<p>அவளது புத்தகப்பையிலிருந்து பிறந்தன!</p>
<p>மழைத்துளிகளை</p>.<p>பத்திரமாக</p>.<p>தன் புத்தகப்பைக்குள் நிரப்பத் தெரிந்த</p>.<p>பள்ளிச் சிறுமி...</p>.<p>அன்று முதன்முறையாக</p>.<p>வெயிலையும் நிரப்ப முயல்கிறாள்.</p>.<p>நிழல் குவிந்துக்கிடக்கும்</p>.<p>கூடாரத்திலிருந்து</p>.<p>முற்றத்திற்கு ஓடியும்...</p>.<p>மஞ்சள் பூக்கள்</p>.<p>பூத்திருக்கும் மரத்திற்கு கீழிருந்து</p>.<p>நெடுஞ்சாலைக்குத் தாவியும்...</p>.<p>பள்ளியறையிலிருந்து</p>.<p>விளையாட்டு மைதானம் என்றும்</p>.<p>அவளது முயற்சி</p>.<p>கிளைத்து படர்கிறது</p>.<p>ஒவ்வொரு மாலையும்...</p>.<p>இரவும்...</p>.<p>வெயில் தன் புத்தகப்பைக்குள்</p>.<p>இருப்பதாக பெருமிதம் கொள்கிறாள்</p>.<p>அந்தப் பெருமிதத்தோடும்</p>.<p>விளையாடுகிறாள்...</p>.<p>படிக்கிறாள்...</p>.<p>உண்ணுகிறாள்...</p>.<p>உறங்கவும் செய்கிறாள்!</p>.<p>திடீரென</p>.<p>ஒரு பகல் முழுவதும்</p>.<p>அடைமழை</p>.<p>புத்தகப்பையைத் திறந்து</p>.<p>வெயிலை எடுத்தவள்...</p>.<p>பின் மழையோடு குழைத்து</p>.<p>வானவில் செய்யத் தொடங்குகிறாள்..!</p>.<p>அப்படித்தான்</p>.<p>வெண்முகிலும்</p>.<p>விண்மீன்களும்</p>.<p>அவளது புத்தகப்பையிலிருந்து பிறந்தன!</p>