<p><span style="color: #ff0000">நீ</span>ரில் கரைந்த </p>.<p>நிலத்தின் மக்கள்</p>.<p>எல்லோரும் எல்லோரிடமும்</p>.<p>ஏதேனும் உதவி வேண்டுமா</p>.<p>என்று கேட்டவண்ணம் இருக்கிறார்கள்</p>.<p>மணி கேட்டால் மணி</p>.<p>சரியாகச் சொல்கிறார்கள்</p>.<p>வழி கேட்டால் வழி</p>.<p>சரியாகச் சொல்கிறார்கள்</p>.<p>கேட்காமலேயே</p>.<p>கை குலுக்குகிறார்கள்</p>.<p>பார்க்கும் முதல் கணத்திலேயே</p>.<p>புன்னகைக்கத் தொடங்குகிறார்கள்</p>.<p>22 வருடங்கள் என்னிடம்</p>.<p>ஒரு வார்த்தை பேசியிராத அண்டைவீட்டான்</p>.<p>இன்று எனக்கு தேநீர் தருகிறான்</p>.<p>யாருக்கும் யாரிடமும்</p>.<p>பயமோ சந்தேகமோ இல்லை</p>.<p>எல்லோர் மீதும்</p>.<p>ஒரு மகத்தான அன்பு ஆட்கொள்கிறது</p>.<p>அது</p>.<p>அழிவின் அன்பு</p>.<p>மரணத்தின் அன்பு</p>.<p>பயத்தின் அன்பு</p>.<p>அது</p>.<p>மீட்சிக்கான அன்பு</p>.<p>திரும்புதலுக்கான அன்பு</p>.<p>தாங்கள் இதுவரை எதுவாக இருந்தோமோ</p>.<p>அதற்காக நாணமுறுகிற அன்பு.</p>.<p><span style="color: #ff0000">பி</span>ரளயம் வடிந்த வீடுகளை</p>.<p>மக்கள் சுத்தப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்</p>.<p>தெருவெங்கும்</p>.<p>சிதைக்கப்பட்ட வீடுகளின்</p>.<p>குப்பைகள் குவிந்துகிடக்கின்றன</p>.<p>உடைந்த பொம்மைகள்</p>.<p>உடைந்த தெய்வப்படங்கள்</p>.<p>உடைந்த கட்டில்கள்</p>.<p>உடைந்த ஃப்ரிட்ஜ்கள்</p>.<p>உடைந்த டி.விக்கள்</p>.<p>உடைந்த மீன்தொட்டிகள்</p>.<p>ஊழியின் காலத்தில்</p>.<p>வீட்டைச் சுத்தப்படுத்துவது</p>.<p>வீட்டை முற்றாக அகற்றுவது</p>.<p>இல்லையா?</p>.<p>நான் இந்த நாட்களில்</p>.<p>யார் கண்களையும் சந்திக்காமல்</p>.<p>தெருக்களை எப்படிக் கடந்து செல்வது</p>.<p>என்பதை முழுமையாகப் பயின்றிருக்கிறேன்.</p>.<p><span style="color: #ff0000">நீ</span>ர் அடித்து</p>.<p>நிலம் விலகிய நகரத்தின்</p>.<p>எந்தத் தெருவிற்குள்</p>.<p>யார் வந்து நின்றாலும்</p>.<p>தெரு நாய்கள்</p>.<p>அவர்கள் பக்கத்தில் வந்து</p>.<p>பிடிவாதமாய் நின்றுகொள்கின்றன</p>.<p>பூனைகள்</p>.<p>தன் பச்சை நிறக் கண்களால்</p>.<p>ஒவ்வொருவரையும் வெறித்துப்பார்க்கின்றன</p>.<p>காக்கைகள் காலி பாலித்தீன் பைகளை</p>.<p>கொத்திப்பார்த்துவிட்டு</p>.<p>கரையக்கூட மனமில்லாமல்</p>.<p>பறந்து செல்கின்றன</p>.<p>அவை மனிதர்களைவிடவும்</p>.<p>மன உறுதிமிக்கவை</p>.<p>அவை சகிப்புடன்</p>.<p>காத்துக்கொண்டிருக்கின்றன.</p>.<p><span style="color: #ff0000">ந</span>கரத் தலைவர்</p>.<p>தொலைக்காட்சியில்</p>.<p>சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தார்</p>.<p>'தண்ணீர் சூழ்ந்த இரண்டு நாட்களில்</p>.<p>எல்லோரையும் மீட்டுவிட்டோம்</p>.<p>மக்கள் இப்போது இயல்பாக இருக்கிறார்கள்</p>.<p>இரண்டே நாள் தாமதத்திற்காக</p>.<p>யாரும் எங்களை சிலுவையில் அறைய வேண்டாம்'</p>.<p>அவை காலத்தின்</p>.<p>வெறும் இரண்டு நாட்கள் அல்ல</p>.<p>வெளிச்சமில்லாத இரண்டு நாட்கள்</p>.<p>கழிவறைகள் இல்லாத இரண்டு நாட்கள்</p>.<p>அபயக்குரலுக்குப் பதில் வராத இரண்டு நாட்கள்</p>.<p>எல்லா சாலைகளிலிருந்தும் </p>.<p>துண்டிக்கப்பட்ட இரண்டு நாட்கள்</p>.<p>பசி என்றால் என்னவென்று</p>.<p>அறிந்துகொண்ட இரண்டு நாட்கள்</p>.<p>கைவிடப்படுதல் என்றால் என்னவென்று</p>.<p>அறிந்துகொண்ட இரண்டு நாட்கள்</p>.<p>மாற்றுத்துணி இல்லாத இரண்டு நாட்கள்</p>.<p>குழந்தைகளின் அழுகுரலை எப்படி நிறுத்துவதென்று</p>.<p>தெரியாத இரண்டு நாட்கள்</p>.<p>பிணங்களோடு தூங்கிய இரண்டு நாட்கள்</p>.<p>தனது அறையில் தண்ணீரிலேயே நின்றபடி</p>.<p>கனவு கண்ட இரண்டு நாட்கள்்</p>.<p>குடிக்க தண்ணீர் இல்லாத இரண்டு நாட்கள்்</p>.<p>அழிவுப்பாதையில் இருப்பவர்களின் ஒரு நாள் என்பது</p>.<p>அதற்கு அப்பால் இருப்பவர்களின் ஒரு நாள்் அல்ல</p>.<p>தண்ணீருக்குள் இருப்பவர்களின் கடிகாரங்கள்</p>.<p>தண்ணீருக்கு வெளியே இருப்பவர்களின் கடிகாரங்கள்போல</p>.<p>அத்தனை வேகமாகச் சுழல்வதில்லை</p>.<p>துயரத்தின் ஒரு நாள்் என்பது மிகவும் தூரமானது</p>.<p>ஒரு பிறவியைக் கடந்து செல்வது</p>.<p>எவ்வளவு தூரமோ</p>.<p>அவ்வளவு தூரம்.</p>.<p><span style="color: #ff0000">ஓ</span>ர் இளம் பெண்</p>.<p>சமூக வலைதளங்களில்</p>.<p>ஓர் அறிவிப்பை வெளியிடுகிறாள்:</p>.<p>'எனது அழிந்த நகரத்தை</p>.<p>நான் கைவிட முடியாது</p>.<p>இந்த நகரத்தில் கைவிடப்பட்ட</p>.<p>ஒரு நாய்க்குட்டி இருந்தால்</p>.<p>யாராவது என்னிடம் கொடுங்கள்</p>.<p>நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்'</p>.<p>ஓர் இளைஞன்</p>.<p>ஒரு பத்திரிகைக்கு</p>.<p>ஒரு கடிதம் எழுதுகிறான்:</p>.<p>'எனது ரத்தவகை பி பாசிட்டிவ்</p>.<p>பாதிக்கப்பட்ட யாருக்காவாது</p>.<p>என் ரத்தம் தேவைப்பட்டால்</p>.<p>தர விரும்புகிறேன்</p>.<p>இதை உலகிற்குச் சொல்லுங்கள்</p>.<p>எனது நகரத்திற்குத் தர</p>.<p>என்னிடம் வேறு எதுவும் இல்லை'</p>.<p>என் துயருற்ற நகரமே</p>.<p>இவ்வளவு துயரத்திலும்</p>.<p>நீ ஏன் இவ்வளவு தித்திக்கிறாய்?!</p>.<p><span style="color: #ff0000">கு</span>ழந்தைகள்</p>.<p>எப்போதும் பள்ளிகளைவிட்டு</p>.<p>ஓடிக்கொண்டே இருந்தார்கள்</p>.<p>பள்ளிகளைக் கைவிட</p>.<p>நீண்ட விடுமுறைக்காக</p>.<p>எப்போதும் காத்திருந்தார்கள்</p>.<p>ஊழியின் தினங்களில்</p>.<p>அவர்களுக்கு நீண்ட விடுமுறைகள் வந்தன</p>.<p>ஒரு நாள் நீர் அகதிகளாக மாறி</p>.<p>அவர்களது பள்ளிகளுக்கே</p>.<p>அனுப்பப்பட்டார்கள்</p>.<p>பள்ளியிலேயே உணவருந்தினார்கள்</p>.<p>பள்ளியிலேயே குளித்தார்கள்</p>.<p>பள்ளியிலேயே தூங்கினார்கள்</p>.<p>பள்ளியிலேயே தூக்கத்தில்</p>.<p>'தண்ணீர்... தண்ணீர்...'</p>.<p>என்று பயந்து அழுதார்கள்</p>.<p>எப்போதும் விடுமுறை முடிந்து</p>.<p>வீடுகளிலிருந்து</p>.<p>பள்ளிக்குத் திரும்புகிறவர்கள்</p>.<p>இந்த முறை</p>.<p>நீர் விடுமுறை முடிந்து</p>.<p>பள்ளியிலிருந்து வீடு திரும்பக்</p>.<p>காத்திருக்கிறார்கள்.</p>.<p><span style="color: #ff0000">நீ</span>ர் சூழ்ந்த தினத்தின்</p>.<p>மறுநாள் காலையில்</p>.<p>மீட்புப் பணியாளர்கள்</p>.<p>தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த</p>.<p>ஒரு மனிதனை</p>.<p>மின்விசிறியிலிருந்து இறக்கினார்கள்</p>.<p>அவனுக்கு அருகில்</p>.<p>ஒரு வழக்கமான பொய்யான</p>.<p>கடிதம் எழுதப்பட்டிருந்தது</p>.<p>'என் சாவுக்கு யாரும் காரணமல்ல'</p>.<p>ஒரு நகரமே</p>.<p>மீட்புக்குப் போராடிக்கொண்டிருந்த நாளில்</p>.<p>உயிர் வாழ்வதற்காக தங்கள் கரங்களை</p>.<p>உயர்த்திக்கொண்டிருந்த நாளில்</p>.<p>எப்படியும் உயிர் வாழ்ந்துவிடுவோம் என்று</p>.<p>கழுத்தளவு தண்ணீரில்</p>.<p>கடைசிக்கணம் வரை</p>.<p>நம்பிக்கொண்டிருந்த நாளில்</p>.<p>யாரோ ஒருவன்</p>.<p>திட்டமிட்டபடி</p>.<p>எந்த சஞ்சலமும் இல்லாமல்</p>.<p>இரண்டு மனம் இல்லாமல்</p>.<p>தன் சாவை நிறைவேற்றுகிறான்</p>.<p>ஒரு நகரத்தை மூழ்கடிப்பதைவிட</p>.<p>வலிமைமிக்க செயல்</p>.<p>ஒருவன் தன்னைத்தானே</p>.<p>மூழ்கடித்துக்கொள்வது</p>.<p>தனக்கு அடுத்த அறையில்</p>.<p>யாரோ காப்பாற்றும்படி அபயக்குரல்</p>.<p>எழுப்பும்போதுகூட</p>.<p>அவன் திரும்பிப்போக விரும்பவே இல்லை</p>.<p>இடுப்பளவு தண்ணீரில்</p>.<p>அவன் உடலைச் சுமந்துசென்றவர்கள்</p>.<p>நினைத்துக்கொண்டார்கள்</p>.<p>'இவன் ஏன்</p>.<p>இவ்வளவு கனமாக இருக்கிறான்?'</p>
<p><span style="color: #ff0000">நீ</span>ரில் கரைந்த </p>.<p>நிலத்தின் மக்கள்</p>.<p>எல்லோரும் எல்லோரிடமும்</p>.<p>ஏதேனும் உதவி வேண்டுமா</p>.<p>என்று கேட்டவண்ணம் இருக்கிறார்கள்</p>.<p>மணி கேட்டால் மணி</p>.<p>சரியாகச் சொல்கிறார்கள்</p>.<p>வழி கேட்டால் வழி</p>.<p>சரியாகச் சொல்கிறார்கள்</p>.<p>கேட்காமலேயே</p>.<p>கை குலுக்குகிறார்கள்</p>.<p>பார்க்கும் முதல் கணத்திலேயே</p>.<p>புன்னகைக்கத் தொடங்குகிறார்கள்</p>.<p>22 வருடங்கள் என்னிடம்</p>.<p>ஒரு வார்த்தை பேசியிராத அண்டைவீட்டான்</p>.<p>இன்று எனக்கு தேநீர் தருகிறான்</p>.<p>யாருக்கும் யாரிடமும்</p>.<p>பயமோ சந்தேகமோ இல்லை</p>.<p>எல்லோர் மீதும்</p>.<p>ஒரு மகத்தான அன்பு ஆட்கொள்கிறது</p>.<p>அது</p>.<p>அழிவின் அன்பு</p>.<p>மரணத்தின் அன்பு</p>.<p>பயத்தின் அன்பு</p>.<p>அது</p>.<p>மீட்சிக்கான அன்பு</p>.<p>திரும்புதலுக்கான அன்பு</p>.<p>தாங்கள் இதுவரை எதுவாக இருந்தோமோ</p>.<p>அதற்காக நாணமுறுகிற அன்பு.</p>.<p><span style="color: #ff0000">பி</span>ரளயம் வடிந்த வீடுகளை</p>.<p>மக்கள் சுத்தப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்</p>.<p>தெருவெங்கும்</p>.<p>சிதைக்கப்பட்ட வீடுகளின்</p>.<p>குப்பைகள் குவிந்துகிடக்கின்றன</p>.<p>உடைந்த பொம்மைகள்</p>.<p>உடைந்த தெய்வப்படங்கள்</p>.<p>உடைந்த கட்டில்கள்</p>.<p>உடைந்த ஃப்ரிட்ஜ்கள்</p>.<p>உடைந்த டி.விக்கள்</p>.<p>உடைந்த மீன்தொட்டிகள்</p>.<p>ஊழியின் காலத்தில்</p>.<p>வீட்டைச் சுத்தப்படுத்துவது</p>.<p>வீட்டை முற்றாக அகற்றுவது</p>.<p>இல்லையா?</p>.<p>நான் இந்த நாட்களில்</p>.<p>யார் கண்களையும் சந்திக்காமல்</p>.<p>தெருக்களை எப்படிக் கடந்து செல்வது</p>.<p>என்பதை முழுமையாகப் பயின்றிருக்கிறேன்.</p>.<p><span style="color: #ff0000">நீ</span>ர் அடித்து</p>.<p>நிலம் விலகிய நகரத்தின்</p>.<p>எந்தத் தெருவிற்குள்</p>.<p>யார் வந்து நின்றாலும்</p>.<p>தெரு நாய்கள்</p>.<p>அவர்கள் பக்கத்தில் வந்து</p>.<p>பிடிவாதமாய் நின்றுகொள்கின்றன</p>.<p>பூனைகள்</p>.<p>தன் பச்சை நிறக் கண்களால்</p>.<p>ஒவ்வொருவரையும் வெறித்துப்பார்க்கின்றன</p>.<p>காக்கைகள் காலி பாலித்தீன் பைகளை</p>.<p>கொத்திப்பார்த்துவிட்டு</p>.<p>கரையக்கூட மனமில்லாமல்</p>.<p>பறந்து செல்கின்றன</p>.<p>அவை மனிதர்களைவிடவும்</p>.<p>மன உறுதிமிக்கவை</p>.<p>அவை சகிப்புடன்</p>.<p>காத்துக்கொண்டிருக்கின்றன.</p>.<p><span style="color: #ff0000">ந</span>கரத் தலைவர்</p>.<p>தொலைக்காட்சியில்</p>.<p>சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தார்</p>.<p>'தண்ணீர் சூழ்ந்த இரண்டு நாட்களில்</p>.<p>எல்லோரையும் மீட்டுவிட்டோம்</p>.<p>மக்கள் இப்போது இயல்பாக இருக்கிறார்கள்</p>.<p>இரண்டே நாள் தாமதத்திற்காக</p>.<p>யாரும் எங்களை சிலுவையில் அறைய வேண்டாம்'</p>.<p>அவை காலத்தின்</p>.<p>வெறும் இரண்டு நாட்கள் அல்ல</p>.<p>வெளிச்சமில்லாத இரண்டு நாட்கள்</p>.<p>கழிவறைகள் இல்லாத இரண்டு நாட்கள்</p>.<p>அபயக்குரலுக்குப் பதில் வராத இரண்டு நாட்கள்</p>.<p>எல்லா சாலைகளிலிருந்தும் </p>.<p>துண்டிக்கப்பட்ட இரண்டு நாட்கள்</p>.<p>பசி என்றால் என்னவென்று</p>.<p>அறிந்துகொண்ட இரண்டு நாட்கள்</p>.<p>கைவிடப்படுதல் என்றால் என்னவென்று</p>.<p>அறிந்துகொண்ட இரண்டு நாட்கள்</p>.<p>மாற்றுத்துணி இல்லாத இரண்டு நாட்கள்</p>.<p>குழந்தைகளின் அழுகுரலை எப்படி நிறுத்துவதென்று</p>.<p>தெரியாத இரண்டு நாட்கள்</p>.<p>பிணங்களோடு தூங்கிய இரண்டு நாட்கள்</p>.<p>தனது அறையில் தண்ணீரிலேயே நின்றபடி</p>.<p>கனவு கண்ட இரண்டு நாட்கள்்</p>.<p>குடிக்க தண்ணீர் இல்லாத இரண்டு நாட்கள்்</p>.<p>அழிவுப்பாதையில் இருப்பவர்களின் ஒரு நாள் என்பது</p>.<p>அதற்கு அப்பால் இருப்பவர்களின் ஒரு நாள்் அல்ல</p>.<p>தண்ணீருக்குள் இருப்பவர்களின் கடிகாரங்கள்</p>.<p>தண்ணீருக்கு வெளியே இருப்பவர்களின் கடிகாரங்கள்போல</p>.<p>அத்தனை வேகமாகச் சுழல்வதில்லை</p>.<p>துயரத்தின் ஒரு நாள்் என்பது மிகவும் தூரமானது</p>.<p>ஒரு பிறவியைக் கடந்து செல்வது</p>.<p>எவ்வளவு தூரமோ</p>.<p>அவ்வளவு தூரம்.</p>.<p><span style="color: #ff0000">ஓ</span>ர் இளம் பெண்</p>.<p>சமூக வலைதளங்களில்</p>.<p>ஓர் அறிவிப்பை வெளியிடுகிறாள்:</p>.<p>'எனது அழிந்த நகரத்தை</p>.<p>நான் கைவிட முடியாது</p>.<p>இந்த நகரத்தில் கைவிடப்பட்ட</p>.<p>ஒரு நாய்க்குட்டி இருந்தால்</p>.<p>யாராவது என்னிடம் கொடுங்கள்</p>.<p>நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்'</p>.<p>ஓர் இளைஞன்</p>.<p>ஒரு பத்திரிகைக்கு</p>.<p>ஒரு கடிதம் எழுதுகிறான்:</p>.<p>'எனது ரத்தவகை பி பாசிட்டிவ்</p>.<p>பாதிக்கப்பட்ட யாருக்காவாது</p>.<p>என் ரத்தம் தேவைப்பட்டால்</p>.<p>தர விரும்புகிறேன்</p>.<p>இதை உலகிற்குச் சொல்லுங்கள்</p>.<p>எனது நகரத்திற்குத் தர</p>.<p>என்னிடம் வேறு எதுவும் இல்லை'</p>.<p>என் துயருற்ற நகரமே</p>.<p>இவ்வளவு துயரத்திலும்</p>.<p>நீ ஏன் இவ்வளவு தித்திக்கிறாய்?!</p>.<p><span style="color: #ff0000">கு</span>ழந்தைகள்</p>.<p>எப்போதும் பள்ளிகளைவிட்டு</p>.<p>ஓடிக்கொண்டே இருந்தார்கள்</p>.<p>பள்ளிகளைக் கைவிட</p>.<p>நீண்ட விடுமுறைக்காக</p>.<p>எப்போதும் காத்திருந்தார்கள்</p>.<p>ஊழியின் தினங்களில்</p>.<p>அவர்களுக்கு நீண்ட விடுமுறைகள் வந்தன</p>.<p>ஒரு நாள் நீர் அகதிகளாக மாறி</p>.<p>அவர்களது பள்ளிகளுக்கே</p>.<p>அனுப்பப்பட்டார்கள்</p>.<p>பள்ளியிலேயே உணவருந்தினார்கள்</p>.<p>பள்ளியிலேயே குளித்தார்கள்</p>.<p>பள்ளியிலேயே தூங்கினார்கள்</p>.<p>பள்ளியிலேயே தூக்கத்தில்</p>.<p>'தண்ணீர்... தண்ணீர்...'</p>.<p>என்று பயந்து அழுதார்கள்</p>.<p>எப்போதும் விடுமுறை முடிந்து</p>.<p>வீடுகளிலிருந்து</p>.<p>பள்ளிக்குத் திரும்புகிறவர்கள்</p>.<p>இந்த முறை</p>.<p>நீர் விடுமுறை முடிந்து</p>.<p>பள்ளியிலிருந்து வீடு திரும்பக்</p>.<p>காத்திருக்கிறார்கள்.</p>.<p><span style="color: #ff0000">நீ</span>ர் சூழ்ந்த தினத்தின்</p>.<p>மறுநாள் காலையில்</p>.<p>மீட்புப் பணியாளர்கள்</p>.<p>தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த</p>.<p>ஒரு மனிதனை</p>.<p>மின்விசிறியிலிருந்து இறக்கினார்கள்</p>.<p>அவனுக்கு அருகில்</p>.<p>ஒரு வழக்கமான பொய்யான</p>.<p>கடிதம் எழுதப்பட்டிருந்தது</p>.<p>'என் சாவுக்கு யாரும் காரணமல்ல'</p>.<p>ஒரு நகரமே</p>.<p>மீட்புக்குப் போராடிக்கொண்டிருந்த நாளில்</p>.<p>உயிர் வாழ்வதற்காக தங்கள் கரங்களை</p>.<p>உயர்த்திக்கொண்டிருந்த நாளில்</p>.<p>எப்படியும் உயிர் வாழ்ந்துவிடுவோம் என்று</p>.<p>கழுத்தளவு தண்ணீரில்</p>.<p>கடைசிக்கணம் வரை</p>.<p>நம்பிக்கொண்டிருந்த நாளில்</p>.<p>யாரோ ஒருவன்</p>.<p>திட்டமிட்டபடி</p>.<p>எந்த சஞ்சலமும் இல்லாமல்</p>.<p>இரண்டு மனம் இல்லாமல்</p>.<p>தன் சாவை நிறைவேற்றுகிறான்</p>.<p>ஒரு நகரத்தை மூழ்கடிப்பதைவிட</p>.<p>வலிமைமிக்க செயல்</p>.<p>ஒருவன் தன்னைத்தானே</p>.<p>மூழ்கடித்துக்கொள்வது</p>.<p>தனக்கு அடுத்த அறையில்</p>.<p>யாரோ காப்பாற்றும்படி அபயக்குரல்</p>.<p>எழுப்பும்போதுகூட</p>.<p>அவன் திரும்பிப்போக விரும்பவே இல்லை</p>.<p>இடுப்பளவு தண்ணீரில்</p>.<p>அவன் உடலைச் சுமந்துசென்றவர்கள்</p>.<p>நினைத்துக்கொண்டார்கள்</p>.<p>'இவன் ஏன்</p>.<p>இவ்வளவு கனமாக இருக்கிறான்?'</p>