<p><span style="color: #ff0000">நா</span>ன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவள் </p>.<p>அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களில் </p>.<p>இடம்பெறாத பிணம் எண் 202</p>.<p>என் புதிய அடையாளம் </p>.<p>கொடுமழைக்குத் தப்பிய கொன்றைமரக் கிளையில் கிடந்த</p>.<p>என் நிஜப்பெயர் தாங்கிய வாக்காளர் அட்டையை </p>.<p>ஆணைக்கிணங்க மெள்ளப் படகுகளில் வந்த</p>.<p>சீருடைப் படைகள் மீட்டெடுத்தன </p>.<p>பட்டத்துராணி முத்திரை ஒட்டப்பட்ட சோற்றுப்பொட்டலம் மற்றும் இத்யாதிகள்</p>.<p>அதற்காக ஒதுக்கப்பட்டு புகைப்படங்களும் களம்கண்டன</p>.<p>தெருப்பெருக்கெடுத்த கழிவுநீர் சுழியில் மிதந்த மஞ்சள் நிறக்</p>.<p>குடும்ப அட்டை சரிபார்க்கப்பட்டு என்னை என் குடும்பத்தோடு இணைத்தனர்</p>.<p>குப்பைமேடாய்ப்போன குடிசையையும் உடைமைகளையும்</p>.<p>கொளுத்துவதற்கும் எரிபொருள் இல்லாமல் திண்டாடியிருந்த தாய்</p>.<p>பள்ளிக்கூடத்தை முகாம் ஆக்கியிருந்ததால் என் வகுப்பிற்கு</p>.<p>முதன்முறையாய் வருகை தந்திருந்த தந்தை</p>.<p>சுடிதார் போட்டிருந்த ஒவ்வொரு முகத்தையும் திரும்பிப் பார்த்து </p>.<p>என்னைத் தேடிக்கொண்டிருந்த தனயன்</p>.<p>வெள்ளத்திற்கு நாங்கள் சாட்சியாகி</p>.<p>எங்களுக்கு வெள்ளம் சாட்சியாகி</p>.<p>நிவாரணத்திற்காக வரிசையில் நிற்கவைக்கப்பட்டோம்</p>.<p>நீந்தத் தெரிந்த எங்கள் நாய்க்குட்டி வீரா மட்டும் கொள்ளைபோனதுபோல</p>.<p>தூரத்தில் பறந்த ஹெலிகாப்டரை நோக்கி</p>.<p>குரைத்துக்கொண்டிருந்தது. </p>
<p><span style="color: #ff0000">நா</span>ன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவள் </p>.<p>அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களில் </p>.<p>இடம்பெறாத பிணம் எண் 202</p>.<p>என் புதிய அடையாளம் </p>.<p>கொடுமழைக்குத் தப்பிய கொன்றைமரக் கிளையில் கிடந்த</p>.<p>என் நிஜப்பெயர் தாங்கிய வாக்காளர் அட்டையை </p>.<p>ஆணைக்கிணங்க மெள்ளப் படகுகளில் வந்த</p>.<p>சீருடைப் படைகள் மீட்டெடுத்தன </p>.<p>பட்டத்துராணி முத்திரை ஒட்டப்பட்ட சோற்றுப்பொட்டலம் மற்றும் இத்யாதிகள்</p>.<p>அதற்காக ஒதுக்கப்பட்டு புகைப்படங்களும் களம்கண்டன</p>.<p>தெருப்பெருக்கெடுத்த கழிவுநீர் சுழியில் மிதந்த மஞ்சள் நிறக்</p>.<p>குடும்ப அட்டை சரிபார்க்கப்பட்டு என்னை என் குடும்பத்தோடு இணைத்தனர்</p>.<p>குப்பைமேடாய்ப்போன குடிசையையும் உடைமைகளையும்</p>.<p>கொளுத்துவதற்கும் எரிபொருள் இல்லாமல் திண்டாடியிருந்த தாய்</p>.<p>பள்ளிக்கூடத்தை முகாம் ஆக்கியிருந்ததால் என் வகுப்பிற்கு</p>.<p>முதன்முறையாய் வருகை தந்திருந்த தந்தை</p>.<p>சுடிதார் போட்டிருந்த ஒவ்வொரு முகத்தையும் திரும்பிப் பார்த்து </p>.<p>என்னைத் தேடிக்கொண்டிருந்த தனயன்</p>.<p>வெள்ளத்திற்கு நாங்கள் சாட்சியாகி</p>.<p>எங்களுக்கு வெள்ளம் சாட்சியாகி</p>.<p>நிவாரணத்திற்காக வரிசையில் நிற்கவைக்கப்பட்டோம்</p>.<p>நீந்தத் தெரிந்த எங்கள் நாய்க்குட்டி வீரா மட்டும் கொள்ளைபோனதுபோல</p>.<p>தூரத்தில் பறந்த ஹெலிகாப்டரை நோக்கி</p>.<p>குரைத்துக்கொண்டிருந்தது. </p>