<p><span style="color: rgb(255, 0, 0);">1. </span></p>.<p>எட்டிவிடும் தூரம்தான்</p>.<p>மேசையின் மறுபக்கம் அமர்ந்திருந்தாய்</p>.<p>சுவரெல்லாம் சன்னல்கள்கொண்ட அறை அது</p>.<p>மஞ்சள் திரைச்சீலைகளில் கசிந்த மாலை சூரியன்</p>.<p>உன்னை ஒளியால் வரைந்த கோட்டோவியமாக்கியது</p>.<p>நீ அணிந்திருந்த நீல நிறச் சட்டையின் நூலாக</p>.<p>என் இதயம் நெசவுத்தறியில் சுற்றிக்கொண்டிருந்தது</p>.<p>உன் உதடு பிரிந்து மூடுவதை இமை கொட்டாமல் பார்த்திருந்தேன்</p>.<p>நேர்பார்வையில் ஆழ்கடல் தாவரங்கள் நெளிந்தன</p>.<p>வார்த்தைகள் எதுவும் என் காதில் விழவில்லை</p>.<p>காற்றில் சிகை ஒரு கனவுபோல அசைந்தது</p>.<p>ஏதோ நினைத்துக்கொண்டு லேசாய்ச் சிரித்தாய்</p>.<p>அப்படியே அள்ளி அணைத்துக்கொள்ளலாமென</p>.<p>மனம் அடித்துக்கொண்டதில் </p>.<p>தவற விட்டுவிடுவோமென அஞ்சி</p>.<p>இரண்டு கைகளாலும் கோப்பையைத் தாங்கிப்பிடித்து</p>.<p>தேநீரை அலுங்காமல் பருகினேன்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">2.</span></p>.<p>காத்திருக்கிறேன்</p>.<p>காத்திருக்க நேரமே இல்லாதவள்போல</p>.<p>காட்டிக்கொள்ள செய்யும் முயற்சிகளில்</p>.<p>பெரும்பாலும் தோற்றுப்போகிறேன்</p>.<p>சந்திப்பின் ஒரு நொடிகூட</p>.<p>நழுவவிடக் கூடாதென்பதில்</p>.<p>பதற்றமாக இருக்கிறேன்</p>.<p>திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே வருகைதந்து</p>.<p>திட்டமிட்ட இடத்திற்கு சற்று வெளியே உலாத்துகிறேன்</p>.<p>நாளும் பொழுதும் ஒத்திகை பார்த்ததையெல்லாம்</p>.<p>காத்திருக்கும் கணங்களில்</p>.<p>மறந்துப்போய்விடுவது எப்படி</p>.<p>என்பதறியாமல்</p>.<p>என்னையே நொந்துகொள்கிறேன்</p>.<p>கைகளும் கால்களும்</p>.<p>வார்த்தைகளும் பார்வைகளும்</p>.<p>கூந்தலின் அசைவும்</p>.<p>உடையின் சுருக்கங்களும்</p>.<p>அரும்பும் வியர்வையும்</p>.<p>என்னுடையதே ஆயினும்</p>.<p>என் சொல்பேச்சு கேட்பதே இல்லை</p>.<p>சந்திப்பிற்குப் பிறகும்</p>.<p>சந்தித்த இடத்தைவிட்டு அகல முடிவதில்லை</p>.<p>எப்போதும் காத்திருக்கிறவளாகவே இருக்கிறேன்.</p>
<p><span style="color: rgb(255, 0, 0);">1. </span></p>.<p>எட்டிவிடும் தூரம்தான்</p>.<p>மேசையின் மறுபக்கம் அமர்ந்திருந்தாய்</p>.<p>சுவரெல்லாம் சன்னல்கள்கொண்ட அறை அது</p>.<p>மஞ்சள் திரைச்சீலைகளில் கசிந்த மாலை சூரியன்</p>.<p>உன்னை ஒளியால் வரைந்த கோட்டோவியமாக்கியது</p>.<p>நீ அணிந்திருந்த நீல நிறச் சட்டையின் நூலாக</p>.<p>என் இதயம் நெசவுத்தறியில் சுற்றிக்கொண்டிருந்தது</p>.<p>உன் உதடு பிரிந்து மூடுவதை இமை கொட்டாமல் பார்த்திருந்தேன்</p>.<p>நேர்பார்வையில் ஆழ்கடல் தாவரங்கள் நெளிந்தன</p>.<p>வார்த்தைகள் எதுவும் என் காதில் விழவில்லை</p>.<p>காற்றில் சிகை ஒரு கனவுபோல அசைந்தது</p>.<p>ஏதோ நினைத்துக்கொண்டு லேசாய்ச் சிரித்தாய்</p>.<p>அப்படியே அள்ளி அணைத்துக்கொள்ளலாமென</p>.<p>மனம் அடித்துக்கொண்டதில் </p>.<p>தவற விட்டுவிடுவோமென அஞ்சி</p>.<p>இரண்டு கைகளாலும் கோப்பையைத் தாங்கிப்பிடித்து</p>.<p>தேநீரை அலுங்காமல் பருகினேன்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">2.</span></p>.<p>காத்திருக்கிறேன்</p>.<p>காத்திருக்க நேரமே இல்லாதவள்போல</p>.<p>காட்டிக்கொள்ள செய்யும் முயற்சிகளில்</p>.<p>பெரும்பாலும் தோற்றுப்போகிறேன்</p>.<p>சந்திப்பின் ஒரு நொடிகூட</p>.<p>நழுவவிடக் கூடாதென்பதில்</p>.<p>பதற்றமாக இருக்கிறேன்</p>.<p>திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே வருகைதந்து</p>.<p>திட்டமிட்ட இடத்திற்கு சற்று வெளியே உலாத்துகிறேன்</p>.<p>நாளும் பொழுதும் ஒத்திகை பார்த்ததையெல்லாம்</p>.<p>காத்திருக்கும் கணங்களில்</p>.<p>மறந்துப்போய்விடுவது எப்படி</p>.<p>என்பதறியாமல்</p>.<p>என்னையே நொந்துகொள்கிறேன்</p>.<p>கைகளும் கால்களும்</p>.<p>வார்த்தைகளும் பார்வைகளும்</p>.<p>கூந்தலின் அசைவும்</p>.<p>உடையின் சுருக்கங்களும்</p>.<p>அரும்பும் வியர்வையும்</p>.<p>என்னுடையதே ஆயினும்</p>.<p>என் சொல்பேச்சு கேட்பதே இல்லை</p>.<p>சந்திப்பிற்குப் பிறகும்</p>.<p>சந்தித்த இடத்தைவிட்டு அகல முடிவதில்லை</p>.<p>எப்போதும் காத்திருக்கிறவளாகவே இருக்கிறேன்.</p>