<p><span style="color: rgb(255, 0, 0);">நெல் வயலின் மகசூலை அதிகரிப்பவள்</span> </p>.<p>கம்மாயில் நீர் இறைப்பவர்கள்</p>.<p>பிடித்து கரையில் போட்டிருந்த</p>.<p>வெண் கெண்டைமீன்களைக்</p>.<p>கொத்திப் பறந்த நாரை</p>.<p>நீ களை பறித்த வயலின்</p>.<p>வரப்பில் அமர்ந்தபோது</p>.<p>தலையுயர்த்திப் பார்த்தாய்.</p>.<p>மடை மாற்றி நீர் பாய்ச்ச</p>.<p>அதே வரப்பில் காத்திருந்த நான்</p>.<p>வாய்க்காலில் ஓடும் சிறு மீன்களென</p>.<p>உன் கண்களைச் சந்தித்தேன்.</p>.<p>பச்சைப் பயிர்களுக்கிடையே</p>.<p>ஊடாடும் உன் கைகளில்</p>.<p>மரகதப்பச்சை வளையல்களின் சிணுங்கல்கள்.</p>.<p>சலசலவென நீர் பாயும் பாத்திகளில்</p>.<p>கெண்டைக்கால் வரை சகதியில் மூழ்க</p>.<p>களையெடுப்பில் முந்திப் போகிறாய்.</p>.<p>உன் உரசல் கசியவிடும் சுகத்தில்</p>.<p>பொன்னியின் மகசூல் கூடும் என்பதை</p>.<p>கண்ணெட்டும் தூரம் வரை</p>.<p>பசேலென இருக்கும் வயலுக்கு</p>.<p>யாரும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.</p>.<p>அறுவடைக் காலத்தில்</p>.<p>நீ களை பறித்த வயலைப் பார்ப்பவர்கள்</p>.<p>குமைந்துபோய் நிற்பதை</p>.<p>வயலின் உரிமையாளன்</p>.<p>என்னவென்று புரிந்துகொள்வானோ!</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - மௌனன்</span></p>.<p>யானை நிறத்தவள்</p>.<p>ஒரு பயணத்தின்போது உடனிருந்த அவள்</p>.<p>தூய இருளைப் போலிருந்தாள்</p>.<p>ஆதிக் கருவறையின் நினைவூட்டினாள்</p>.<p>போட்டான்கள் பிறந்தே இருக்காத</p>.<p>பெருவெடிப்பின் முந்தைய நொடியவள்</p>.<p>இரவுக்கடலின் வெள்ளிக் கப்பல்களாய்</p>.<p>அகண்ட இமைகளில் பொதிந்த கண்கள்</p>.<p>வேட்டை விலங்கின் தோலுரிக்கும்</p>.<p>வலிமையான கரங்கள் அவளுக்கு</p>.<p>ஒளியை விழுங்கிச் செரித்திருக்கும்</p>.<p>துங்கக் கரியின் தூய நிறத்தவள்</p>.<p>அதீதமான உதடுகள் உதிர்த்த</p>.<p>அதிர்ந்த சொற்களில் அலட்சிய பாவம்</p>.<p>அழகுப் போட்டிகள் நிராகரிப்பதை</p>.<p>காதல் கவிஞர்களின் புறக்கணிப்பை</p>.<p>திரைப்படங்களின் தீரா அவமதிப்பை</p>.<p>விளம்பரங்கள் விலக்கிவைப்பதை</p>.<p>திருமணங்கள் தள்ளிப்போவதை</p>.<p>மின்னும் பற்களிடையே நிறையப் பேசினாள்</p>.<p>ஒரு கருமாரி அம்மன் கோயில் நிறுத்தத்தில்தான்</p>.<p>இறங்கி கண் நிறைந்துபோனாள்.</p>.<p>- ஷான்</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">ஓ... கேண்டி க்ரஷ் பெண்ணே!</span></p>.<p>வார்த்தைகளை இனிப்பாக்கிக்</p>.<p>கொஞ்சம் வாசமும் சேர்த்துவிடுகிறாள்</p>.<p>பன்னீர் இதழ்கள்கொண்டு</p>.<p>புள்ளிகளுக்குப் பதிலாக</p>.<p>முத்தங்களைத் தூவுகிறாள்</p>.<p>சோகம் இழையோடும் ஸ்டேட்டஸ்களுக்கு</p>.<p>மாற்றாக நேசம் கிளறும் கவிதைகளை</p>.<p>டிஸ்பிளே பிக்சர் ஆக்குகிறாள்</p>.<p>சொர்க்கத்தின் நிறத்தை அப்புகிறாள்</p>.<p>ரிப்ளைகளின் வழியாக</p>.<p>சுவாசங்களின் சத்தங்களைப்</p>.<p>பாடலாகப் பதிவுசெய்கிறாள்</p>.<p>அவ்வப்போது புன்னகைக்கும்</p>.<p>புகைப்படங்களும்கூட தரவிறங்குகிறது</p>.<p>வனாந்திர நிலமாகிக் கிடந்த</p>.<p>எனது வாட்ஸ்அப்</p>.<p>ஸ்மைலிகளின் கூடாகிறது</p>.<p>ஓ... கேண்டி க்ரஷ் பெண்ணே</p>.<p>உன்மீது இப்படித்தான் நான்</p>.<p>காதல்கொண்டேன்!</p>.<p> - விக்னேஷ் சி செல்வராஜ்</p>
<p><span style="color: rgb(255, 0, 0);">நெல் வயலின் மகசூலை அதிகரிப்பவள்</span> </p>.<p>கம்மாயில் நீர் இறைப்பவர்கள்</p>.<p>பிடித்து கரையில் போட்டிருந்த</p>.<p>வெண் கெண்டைமீன்களைக்</p>.<p>கொத்திப் பறந்த நாரை</p>.<p>நீ களை பறித்த வயலின்</p>.<p>வரப்பில் அமர்ந்தபோது</p>.<p>தலையுயர்த்திப் பார்த்தாய்.</p>.<p>மடை மாற்றி நீர் பாய்ச்ச</p>.<p>அதே வரப்பில் காத்திருந்த நான்</p>.<p>வாய்க்காலில் ஓடும் சிறு மீன்களென</p>.<p>உன் கண்களைச் சந்தித்தேன்.</p>.<p>பச்சைப் பயிர்களுக்கிடையே</p>.<p>ஊடாடும் உன் கைகளில்</p>.<p>மரகதப்பச்சை வளையல்களின் சிணுங்கல்கள்.</p>.<p>சலசலவென நீர் பாயும் பாத்திகளில்</p>.<p>கெண்டைக்கால் வரை சகதியில் மூழ்க</p>.<p>களையெடுப்பில் முந்திப் போகிறாய்.</p>.<p>உன் உரசல் கசியவிடும் சுகத்தில்</p>.<p>பொன்னியின் மகசூல் கூடும் என்பதை</p>.<p>கண்ணெட்டும் தூரம் வரை</p>.<p>பசேலென இருக்கும் வயலுக்கு</p>.<p>யாரும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.</p>.<p>அறுவடைக் காலத்தில்</p>.<p>நீ களை பறித்த வயலைப் பார்ப்பவர்கள்</p>.<p>குமைந்துபோய் நிற்பதை</p>.<p>வயலின் உரிமையாளன்</p>.<p>என்னவென்று புரிந்துகொள்வானோ!</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - மௌனன்</span></p>.<p>யானை நிறத்தவள்</p>.<p>ஒரு பயணத்தின்போது உடனிருந்த அவள்</p>.<p>தூய இருளைப் போலிருந்தாள்</p>.<p>ஆதிக் கருவறையின் நினைவூட்டினாள்</p>.<p>போட்டான்கள் பிறந்தே இருக்காத</p>.<p>பெருவெடிப்பின் முந்தைய நொடியவள்</p>.<p>இரவுக்கடலின் வெள்ளிக் கப்பல்களாய்</p>.<p>அகண்ட இமைகளில் பொதிந்த கண்கள்</p>.<p>வேட்டை விலங்கின் தோலுரிக்கும்</p>.<p>வலிமையான கரங்கள் அவளுக்கு</p>.<p>ஒளியை விழுங்கிச் செரித்திருக்கும்</p>.<p>துங்கக் கரியின் தூய நிறத்தவள்</p>.<p>அதீதமான உதடுகள் உதிர்த்த</p>.<p>அதிர்ந்த சொற்களில் அலட்சிய பாவம்</p>.<p>அழகுப் போட்டிகள் நிராகரிப்பதை</p>.<p>காதல் கவிஞர்களின் புறக்கணிப்பை</p>.<p>திரைப்படங்களின் தீரா அவமதிப்பை</p>.<p>விளம்பரங்கள் விலக்கிவைப்பதை</p>.<p>திருமணங்கள் தள்ளிப்போவதை</p>.<p>மின்னும் பற்களிடையே நிறையப் பேசினாள்</p>.<p>ஒரு கருமாரி அம்மன் கோயில் நிறுத்தத்தில்தான்</p>.<p>இறங்கி கண் நிறைந்துபோனாள்.</p>.<p>- ஷான்</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">ஓ... கேண்டி க்ரஷ் பெண்ணே!</span></p>.<p>வார்த்தைகளை இனிப்பாக்கிக்</p>.<p>கொஞ்சம் வாசமும் சேர்த்துவிடுகிறாள்</p>.<p>பன்னீர் இதழ்கள்கொண்டு</p>.<p>புள்ளிகளுக்குப் பதிலாக</p>.<p>முத்தங்களைத் தூவுகிறாள்</p>.<p>சோகம் இழையோடும் ஸ்டேட்டஸ்களுக்கு</p>.<p>மாற்றாக நேசம் கிளறும் கவிதைகளை</p>.<p>டிஸ்பிளே பிக்சர் ஆக்குகிறாள்</p>.<p>சொர்க்கத்தின் நிறத்தை அப்புகிறாள்</p>.<p>ரிப்ளைகளின் வழியாக</p>.<p>சுவாசங்களின் சத்தங்களைப்</p>.<p>பாடலாகப் பதிவுசெய்கிறாள்</p>.<p>அவ்வப்போது புன்னகைக்கும்</p>.<p>புகைப்படங்களும்கூட தரவிறங்குகிறது</p>.<p>வனாந்திர நிலமாகிக் கிடந்த</p>.<p>எனது வாட்ஸ்அப்</p>.<p>ஸ்மைலிகளின் கூடாகிறது</p>.<p>ஓ... கேண்டி க்ரஷ் பெண்ணே</p>.<p>உன்மீது இப்படித்தான் நான்</p>.<p>காதல்கொண்டேன்!</p>.<p> - விக்னேஷ் சி செல்வராஜ்</p>