<p><span style="color: rgb(255, 0, 0);">தலைமுறை சாயல்</span> </p>.<p>வழக்கம்போல் எதையேனும் மறந்து</p>.<p>அவசரமாக வீடு திரும்புகையிலும்</p>.<p>மனைவியுடனான முன்கோபச் சண்டையின்போதும்</p>.<p>சிரித்துக்கொண்டே சொல்வார் அம்மா</p>.<p>அப்படியே அப்பாவைப்போல் இருக்கிறேனென்று.</p>.<p>சமயங்களில் தாத்தாவைப் பார்ப்பது,</p>.<p>வயதாகிவிட்ட அப்பாவைப் பார்ப்பதுபோல இருக்கிறது.</p>.<p>நாளை முதல் பள்ளி செல்லவிருக்கும்</p>.<p>என் சிறுவயது மகனைக் காணும்போதெல்லாம் குழந்தையாகிவிட்ட அப்பாவையும் தாத்தாவையும்</p>.<p>ஒருசேரக் காண்பதுபோலிருக்கிறது.</p>.<p>இப்படி போலிருக்கிறது என்பதில்தான்</p>.<p>எல்லாமும் இருக்கிறதுபோல.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - தர்மராஜ் பெரியசாமி</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">ஜொலிக்கும் புன்னகை</span></p>.<p>தொங்கும் நிழலை இழுத்து</p>.<p>வழியும் வெயிலைத் துடைத்து</p>.<p>சுங்கச்சாவடிப் பேருந்துகளைத்</p>.<p>துரத்திக் கூவி விற்கிறாள்</p>.<p>பாலித்தீன் பையில் நட்டமாய் நிற்கும்</p>.<p>நறுக்கிய வெள்ளரிக்காய்களை.</p>.<p>காசை நீட்டியவனுக்கு</p>.<p>காரப்பொடி தடவுவதற்குள்</p>.<p>பேருந்து நகர்ந்தது.</p>.<p>மீண்டும் துரத்தியோடினாள்</p>.<p>பேருந்து ஜன்னலை.</p>.<p>காசை நீட்டியவனுக்கு</p>.<p>வெள்ளரிக்காய் சுவைத்தது.</p>.<p>வெள்ளரிக்காரிக்கும்</p>.<p>புன்னகை ஜொலித்தது.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - பச்சோந்தி</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">கேள்வி</span></p>.<p>யாதும் ஊரே</p>.<p>யாவரும் கேளிர்</p>.<p>எப்படி வந்தது சேரி</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - வாலிதாசன்</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">சிறுமியும்... குழந்தையும்...</span></p>.<p>ஆடு மேய்க்கும் சிறுமி</p>.<p>தடவிப்பார்க்கிறாள்</p>.<p>கம்பளிப் போர்வையை.</p>.<p>விளக்கு ஒளிர்ந்ததும்</p>.<p>அமைதியானது</p>.<p>அழுத குழந்தை.</p>.<p>டே.துளசிராஜா</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">அங்குசம்</span></p>.<p>அங்குசத்தைக் கண்டாலே கொஞ்சம்</p>.<p>பயம்தான் அந்த யானைக்கு.</p>.<p>மெல்லிய மடல்களை அதன் கூர்மை</p>.<p>பதம்பார்த்த வடுக்கள் நிரம்பிக் கிடக்கின்றன.</p>.<p>சுயமறியா யானையின் தூக்கத்தில்</p>.<p>இப்போதெல்லாம் கானகக் கனவுகள்.</p>.<p>பாகன் அருகிலில்லா சமயம்</p>.<p>தரையில் கிடந்த அங்குசத்தை</p>.<p>அச்சத்தோடே தடவிப்பார்த்தது.</p>.<p>அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில்</p>.<p>அதைவைத்தே விளையாடவும் செய்கிறது</p>.<p>பாகன் அறியாவண்ணம்.</p>.<p>தும்பிக்கையில் இலகுவாகப் பிடித்து</p>.<p>காற்றில் சுழற்றிப்பார்க்கிறது.</p>.<p>இப்போது அங்குசம் கையாளக்</p>.<p>கற்றுக்கொண்டுவிட்டது யானை</p>.<p>இனி பாவம்தான்</p>.<p>சின்னக் காதுகளுடைய அந்தப் பாகன்.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - சுந்தர் தர்ஷன்</span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);">தலைமுறை சாயல்</span> </p>.<p>வழக்கம்போல் எதையேனும் மறந்து</p>.<p>அவசரமாக வீடு திரும்புகையிலும்</p>.<p>மனைவியுடனான முன்கோபச் சண்டையின்போதும்</p>.<p>சிரித்துக்கொண்டே சொல்வார் அம்மா</p>.<p>அப்படியே அப்பாவைப்போல் இருக்கிறேனென்று.</p>.<p>சமயங்களில் தாத்தாவைப் பார்ப்பது,</p>.<p>வயதாகிவிட்ட அப்பாவைப் பார்ப்பதுபோல இருக்கிறது.</p>.<p>நாளை முதல் பள்ளி செல்லவிருக்கும்</p>.<p>என் சிறுவயது மகனைக் காணும்போதெல்லாம் குழந்தையாகிவிட்ட அப்பாவையும் தாத்தாவையும்</p>.<p>ஒருசேரக் காண்பதுபோலிருக்கிறது.</p>.<p>இப்படி போலிருக்கிறது என்பதில்தான்</p>.<p>எல்லாமும் இருக்கிறதுபோல.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - தர்மராஜ் பெரியசாமி</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">ஜொலிக்கும் புன்னகை</span></p>.<p>தொங்கும் நிழலை இழுத்து</p>.<p>வழியும் வெயிலைத் துடைத்து</p>.<p>சுங்கச்சாவடிப் பேருந்துகளைத்</p>.<p>துரத்திக் கூவி விற்கிறாள்</p>.<p>பாலித்தீன் பையில் நட்டமாய் நிற்கும்</p>.<p>நறுக்கிய வெள்ளரிக்காய்களை.</p>.<p>காசை நீட்டியவனுக்கு</p>.<p>காரப்பொடி தடவுவதற்குள்</p>.<p>பேருந்து நகர்ந்தது.</p>.<p>மீண்டும் துரத்தியோடினாள்</p>.<p>பேருந்து ஜன்னலை.</p>.<p>காசை நீட்டியவனுக்கு</p>.<p>வெள்ளரிக்காய் சுவைத்தது.</p>.<p>வெள்ளரிக்காரிக்கும்</p>.<p>புன்னகை ஜொலித்தது.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - பச்சோந்தி</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">கேள்வி</span></p>.<p>யாதும் ஊரே</p>.<p>யாவரும் கேளிர்</p>.<p>எப்படி வந்தது சேரி</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - வாலிதாசன்</span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);">சிறுமியும்... குழந்தையும்...</span></p>.<p>ஆடு மேய்க்கும் சிறுமி</p>.<p>தடவிப்பார்க்கிறாள்</p>.<p>கம்பளிப் போர்வையை.</p>.<p>விளக்கு ஒளிர்ந்ததும்</p>.<p>அமைதியானது</p>.<p>அழுத குழந்தை.</p>.<p>டே.துளசிராஜா</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">அங்குசம்</span></p>.<p>அங்குசத்தைக் கண்டாலே கொஞ்சம்</p>.<p>பயம்தான் அந்த யானைக்கு.</p>.<p>மெல்லிய மடல்களை அதன் கூர்மை</p>.<p>பதம்பார்த்த வடுக்கள் நிரம்பிக் கிடக்கின்றன.</p>.<p>சுயமறியா யானையின் தூக்கத்தில்</p>.<p>இப்போதெல்லாம் கானகக் கனவுகள்.</p>.<p>பாகன் அருகிலில்லா சமயம்</p>.<p>தரையில் கிடந்த அங்குசத்தை</p>.<p>அச்சத்தோடே தடவிப்பார்த்தது.</p>.<p>அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில்</p>.<p>அதைவைத்தே விளையாடவும் செய்கிறது</p>.<p>பாகன் அறியாவண்ணம்.</p>.<p>தும்பிக்கையில் இலகுவாகப் பிடித்து</p>.<p>காற்றில் சுழற்றிப்பார்க்கிறது.</p>.<p>இப்போது அங்குசம் கையாளக்</p>.<p>கற்றுக்கொண்டுவிட்டது யானை</p>.<p>இனி பாவம்தான்</p>.<p>சின்னக் காதுகளுடைய அந்தப் பாகன்.</p>.<p><span style="color: rgb(128, 0, 0);"> - சுந்தர் தர்ஷன்</span></p>